சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

புலர்காலைப் பொழுது Khan11

புலர்காலைப் பொழுது

+3
ஹாசிம்
*சம்ஸ்
யாதுமானவள்
7 posters

Go down

புலர்காலைப் பொழுது Empty புலர்காலைப் பொழுது

Post by யாதுமானவள் Fri 24 Jun 2011 - 14:38

புலர்கா லைப்பொழு தினிலே பூக்கள் விரிய
பலநிறங்கள் சூடிடவே சோலை யொருங்கும்
இளங்கதிரின் வெம்மை யஞ்சியிந் திரன்வோட
இளங்கன்றும் தாய்மடியை எட்டிப் பிடிக்கும்

வெளிச் சத்தம் கேட்டுயிருட் போர்வை விலக்கி
வெளிச் சத்தைப் பூமகளும் வாங்கிக் கொள்வாள்
கிளிச்சத்தம் எங்கிருந்தோ காதில் கேட்க
எலிகூட எதிர்பாடி கீச்சிட் டோடும்.

சிலகதிர்கள் வேகமுடன் சீறிவரக் கண்டு
இலைநுனியை அச்சத்தோடு யிளம்பனி பற்றும்
சிறிதாகத் தென்னங்கீற் றுதன்னிலை யசைக்க
உறக்கம்விட்டு தேரைகூடத் தன்னிலை மாறும்

கண்விழித்த குஞ்சுகுயில் கூவத்தொடங் குமதைக்
கண்டகாக்கை கோபங்கொண்டு கொத்தித் துரத்தும்
கட்டெறும்பு காலைநடை பழகத் தொடங்கும்
விட்டிடாது ஓணானும் தண்டால் எடுக்கும்.

புல்நுனியில் ஏறிவந்த பச்சைப் புழுவும்
பல்பதித்துத் தளிரிலையை உண்ணத் தொடங்கும்
விட்டுவிட்டு பூவைச்சுற் றும்வண்டு கள்கூட
சொட்டுகின்ற தேனையுண்ண பூக்களைத் தேடும்.

கிணற்று நீரில் மீனினமும் கூடிச் சிரித்து
கணக்கில்லா குட்டிகட்கு நீச்சற் பழக்கும்
கனக்கின்ற ஓட்டுடனே நத்தையும் நகரும்
கனமில்லா அணிற்பிள்ளை பற்கள் கடிக்கும்.

ஒன்றுமுதல் ஐந்தறிவு கொண்டவு யிர்களெல்லாம்
தொன்றுதொட்ட வாழ்க்கையினைத் தொடர்கிறது இன்றும்
கணினிக்குள் கண்பதித்து உறக்கம்தொலைத் தமனிதன்
மணியடித்ததும் உறங்குகிறான் மறுநாளுமிது தொடரும் .
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

புலர்காலைப் பொழுது Empty Re: புலர்காலைப் பொழுது

Post by *சம்ஸ் Fri 24 Jun 2011 - 20:38

சிறந்த வரிகள் வாழத்துகள் அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புலர்காலைப் பொழுது Empty Re: புலர்காலைப் பொழுது

Post by ஹாசிம் Sun 26 Jun 2011 - 12:46

ஒன்றுமுதல் ஐந்தறிவு கொண்டவு யிர்களெல்லாம்
தொன்றுதொட்ட வாழ்க்கையினைத் தொடர்கிறது இன்றும்
கணினிக்குள் கண்பதித்து உறக்கம்தொலைத் தமனிதன்
மணியடித்ததும் உறங்குகிறான் மறுநாளுமிது தொடரும் .


இதுதான் வாழ்வாகிவிட்டது கவிதை அருமை வாழ்த்துகள் அக்கா
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

புலர்காலைப் பொழுது Empty Re: புலர்காலைப் பொழுது

Post by யாதுமானவள் Sun 26 Jun 2011 - 13:30

நன்றி சம்ஸ் மற்றும் ஹாசிம்,
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

புலர்காலைப் பொழுது Empty Re: புலர்காலைப் பொழுது

Post by நண்பன் Sun 26 Jun 2011 - 13:33

உண்மைதான் அக்கா மிகவும் அழகாக வரைந்துள்ளீர்கள் கவிதையை வாழ்த்துக்கள்
//ஒன்றுமுதல் ஐந்தறிவு கொண்டவு யிர்களெல்லாம்
தொன்றுதொட்ட வாழ்க்கையினைத் தொடர்கிறது இன்றும்
கணினிக்குள் கண்பதித்து உறக்கம்தொலைத் தமனிதன்
மணியடித்ததும் உறங்குகிறான் மறுநாளுமிது தொடரும் //


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலர்காலைப் பொழுது Empty Re: புலர்காலைப் பொழுது

Post by Atchaya Sun 26 Jun 2011 - 13:58

சிந்தனை ஓட்டம் தெளிவாய் உள்ளது. பிரமாதமாக கவிதை வரிகளினை தொடுத்து இருப்பது சிறப்பு.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

புலர்காலைப் பொழுது Empty Re: புலர்காலைப் பொழுது

Post by யாதுமானவள் Sun 26 Jun 2011 - 14:09

நன்றி நண்பன் மற்றும் ரவி. :)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

புலர்காலைப் பொழுது Empty Re: புலர்காலைப் பொழுது

Post by புதிய நிலா Sun 26 Jun 2011 - 14:12

எவ்வளவு திறமையானவர்களுக்கு மத்தியில் நானும் பயணிக்கிறேன் மகிழ்வைத்தருகிறது
கவிதை அழகாக வரைகிறீர்கள் அக்கா
வாழ்த்துக்கள்
#heart
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

புலர்காலைப் பொழுது Empty Re: புலர்காலைப் பொழுது

Post by யாதுமானவள் Sun 26 Jun 2011 - 14:38

புதிய நிலா wrote:எவ்வளவு திறமையானவர்களுக்கு மத்தியில் நானும் பயணிக்கிறேன் மகிழ்வைத்தருகிறது
கவிதை அழகாக வரைகிறீர்கள் அக்கா
வாழ்த்துக்கள்
புலர்காலைப் பொழுது 2737039178

உன்திறமை உன்னுடைய இந்த வாழ்த்தில் தெரிகிறது . பாராட்டுக்கள்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

புலர்காலைப் பொழுது Empty Re: புலர்காலைப் பொழுது

Post by kalainilaa Tue 28 Jun 2011 - 0:24

ஒன்றுமுதல் ஐந்தறிவு கொண்டவு யிர்களெல்லாம்
தொன்றுதொட்ட வாழ்க்கையினைத் தொடர்கிறது இன்றும்
கணினிக்குள் கண்பதித்து உறக்கம்தொலைத் தமனிதன்
மணியடித்ததும் உறங்குகிறான் மறுநாளுமிது தொடரும் .


உண்மையின் எண்ணம் ,

உள்ளதை சொல்லும்,

உங்கள் கை வண்ணம்.பாராட்டுக்கள் தோழியே .தொடருங்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

புலர்காலைப் பொழுது Empty Re: புலர்காலைப் பொழுது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum