Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
“கொடை மடம்”
+6
இன்பத் அஹ்மத்
செய்தாலி
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
“கொடை மடம்”
“கொடை மடம்”
நீலவானம் பூநிலத்தில் நீருதிர்க்கப் போவதைக்
கோலமயில் உள்ளுணர்ந்து கார்மேகம் நோக்கியே
நாலுதிசை தான்மறந்து நற்றோகைப் பூவிரித்து
கானகத்தில் ஆடுவதைக் காண்.
ஆடிமகிழ்ந் தங்குமிங்கும் ஆனந்தம் கொண்டுமிக
ஓடிவிரித் தாங்குகளித் தோடியஅத் தோகைக்கே
ஈடில்லா ஓர்துயரம் ஈந்திடத்தான் வீரமுடன்
தேடிவந்தான் மன்னவன் பே கன்.
கொள்ளை அழகுகொண்ட கோலமயில் ஆடுவதை
உள்ளம் பதைபதைக்கப் பார்த்தானம் மாமன்னன்
துள்ளும் மயிலதனைத் தோம்கூதை வாட்டுதென்றே
வள்ளல் வருத்தினனே வந்து.
வேகியாங்கு சென்றேயோர் போர்வை யுடனெடுத்து
மூடிவிட்டான் தோகையை யம்மூடன் தன்செயலை
ஓராம லேமுடித்தான் நன்நடனம் அம்முட்டாள்
ஓவிதுகொ டைமடம் ஆம்.
மழைவரும்கு றிப்பறிந்தே ஆடுமிது வென்றே
அறியாத மூடனவன் எப்படி நா டாண்டான்?
அழகுமயில் ஆட்டத்தில் ஆர்வமற்ற முட்டாள்
தழைத்தகுடி காத்ததெங்கன் கூறு?
ஆடும்தோ கைமூடி ஆட்டம் நிறுத்தியோனை
சூடுமுடி கொண்டவனென் றானதினால்; உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்?
நீலவானம் பூநிலத்தில் நீருதிர்க்கப் போவதைக்
கோலமயில் உள்ளுணர்ந்து கார்மேகம் நோக்கியே
நாலுதிசை தான்மறந்து நற்றோகைப் பூவிரித்து
கானகத்தில் ஆடுவதைக் காண்.
ஆடிமகிழ்ந் தங்குமிங்கும் ஆனந்தம் கொண்டுமிக
ஓடிவிரித் தாங்குகளித் தோடியஅத் தோகைக்கே
ஈடில்லா ஓர்துயரம் ஈந்திடத்தான் வீரமுடன்
தேடிவந்தான் மன்னவன் பே கன்.
கொள்ளை அழகுகொண்ட கோலமயில் ஆடுவதை
உள்ளம் பதைபதைக்கப் பார்த்தானம் மாமன்னன்
துள்ளும் மயிலதனைத் தோம்கூதை வாட்டுதென்றே
வள்ளல் வருத்தினனே வந்து.
வேகியாங்கு சென்றேயோர் போர்வை யுடனெடுத்து
மூடிவிட்டான் தோகையை யம்மூடன் தன்செயலை
ஓராம லேமுடித்தான் நன்நடனம் அம்முட்டாள்
ஓவிதுகொ டைமடம் ஆம்.
மழைவரும்கு றிப்பறிந்தே ஆடுமிது வென்றே
அறியாத மூடனவன் எப்படி நா டாண்டான்?
அழகுமயில் ஆட்டத்தில் ஆர்வமற்ற முட்டாள்
தழைத்தகுடி காத்ததெங்கன் கூறு?
ஆடும்தோ கைமூடி ஆட்டம் நிறுத்தியோனை
சூடுமுடி கொண்டவனென் றானதினால்; உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: “கொடை மடம்”
கொள்ளை அழகுகொண்ட கோலமயில் ஆடுவதை
உள்ளம் பதைபதைக்கப் பார்த்தானம் மாமன்னன்
துள்ளும் மயிலதனைத் தோம்கூதை வாட்டுதென்றே
வள்ளல் வருத்தினனே வந்து.
இலக்கிய நயம் மீண்டும் ஞாபகம் வருவது இப்படியான நேரத்தில்தான் வாழ்த்துக்கள்.தோழிக்கு..
உள்ளம் பதைபதைக்கப் பார்த்தானம் மாமன்னன்
துள்ளும் மயிலதனைத் தோம்கூதை வாட்டுதென்றே
வள்ளல் வருத்தினனே வந்து.
இலக்கிய நயம் மீண்டும் ஞாபகம் வருவது இப்படியான நேரத்தில்தான் வாழ்த்துக்கள்.தோழிக்கு..
Re: “கொடை மடம்”
slmunas wrote:கொள்ளை அழகுகொண்ட கோலமயில் ஆடுவதை
உள்ளம் பதைபதைக்கப் பார்த்தானம் மாமன்னன்
துள்ளும் மயிலதனைத் தோம்கூதை வாட்டுதென்றே
வள்ளல் வருத்தினனே வந்து.
இலக்கிய நயம் மீண்டும் ஞாபகம் வருவது இப்படியான நேரத்தில்தான் வாழ்த்துக்கள்.தோழிக்கு..
நன்றி முனாஸ் ... தங்கள் இலக்கிய ஈடுபாடு கண்டு மகிழ்ச்சி..!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: “கொடை மடம்”
கொடை மடம்
என்றால் என்ன அக்கா?
மீண்டும் கவிதை வரிகளை படிக்கிறேன்
என்றால் என்ன அக்கா?
மீண்டும் கவிதை வரிகளை படிக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: “கொடை மடம்”
கொடை என்றால் தானம்.
நாம் ஒருவருக்கு ஒரு பொருளைத் தானமாக வழங்குகிறோம் என்றால் அதனால் பெறுபவருக்கு உபயோகம் இருக்க வேண்டும்.
அப்படியில்லாமல் அப்பொருளால் அவருக்கு கேடு/தீமை உண்டாகி விடக்கூடாது.
வள்ளல் பேகன் என்பவன் தோகை விரித்தாடும் மயிலுக்கு அது குளிரில் வாடுகின்றதென்று நினைத்து தனது சால்வை (போர்வை) கொடுத்ததால் கடை ஏழு வள்ளல்களில் ஒருவனாக போற்றப்பட்டவன்.
மயில் , மழைவரும்போது தனது தோகையை விரித்தாடும் என்பதைக்கூட அறியாத மூடனா பேகன். அல்லது, தோகைவிரித்தாடும் மயிலின் அழகை ரசிக்கத்தெரியாத மூர்க்கனா ?
அவனை உண்மையில் மூடனென்றோ மூர்கனென்றோதானே கூறியிருக்க வேண்டும்? அரசனாக இருந்ததனால் அவனை வள்ளல் என்று கூறிவிட்டார்களா?
இவனை வள்ளல் எனக் கூறிய அந்த மடையன் யார் ..? என்று கேட்டிருக்கிறேன் :)
நாம் ஒருவருக்கு ஒரு பொருளைத் தானமாக வழங்குகிறோம் என்றால் அதனால் பெறுபவருக்கு உபயோகம் இருக்க வேண்டும்.
அப்படியில்லாமல் அப்பொருளால் அவருக்கு கேடு/தீமை உண்டாகி விடக்கூடாது.
வள்ளல் பேகன் என்பவன் தோகை விரித்தாடும் மயிலுக்கு அது குளிரில் வாடுகின்றதென்று நினைத்து தனது சால்வை (போர்வை) கொடுத்ததால் கடை ஏழு வள்ளல்களில் ஒருவனாக போற்றப்பட்டவன்.
மயில் , மழைவரும்போது தனது தோகையை விரித்தாடும் என்பதைக்கூட அறியாத மூடனா பேகன். அல்லது, தோகைவிரித்தாடும் மயிலின் அழகை ரசிக்கத்தெரியாத மூர்க்கனா ?
அவனை உண்மையில் மூடனென்றோ மூர்கனென்றோதானே கூறியிருக்க வேண்டும்? அரசனாக இருந்ததனால் அவனை வள்ளல் என்று கூறிவிட்டார்களா?
இவனை வள்ளல் எனக் கூறிய அந்த மடையன் யார் ..? என்று கேட்டிருக்கிறேன் :)
Last edited by யாதுமானவள் on Thu 7 Jul 2011 - 17:30; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: “கொடை மடம்”
புரிந்தது அக்கா கொடை என்றால் தானம் மடம் என்றால் முட்டாள் புரிந்தது அக்கா
இலக்கிய தமிழில் அடியேனுக்கு கஸ்டம் அக்கா
நன்றி விரிவான விளக்கத்திற்கு
நன்றியுடன்
நண்பன்
இலக்கிய தமிழில் அடியேனுக்கு கஸ்டம் அக்கா
நன்றி விரிவான விளக்கத்திற்கு
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: “கொடை மடம்”
அழகிய கவிதை ஆற்றலை போற்ற வரிகளில்லை
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்
நன்றி அக்கா பகிர்வுக்கு
முகஸ்துதி என்பது அதுதான் போலும் மன்னன் என்பதால் அவரை குறைகூற முடியாமல் வள்ளல் என்றிருக்கலாம்
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்
நன்றி அக்கா பகிர்வுக்கு
முகஸ்துதி என்பது அதுதான் போலும் மன்னன் என்பதால் அவரை குறைகூற முடியாமல் வள்ளல் என்றிருக்கலாம்
Re: “கொடை மடம்”
அபாரம் அபாரம் தோழி
வரிகளை வாசிக்கையில் கொடையின் பெருமை சொல்லும் மயிலுக்கு போர்வைபோர்த்திய வள்ளல் பற்றிய
சிறுவயதில் படித்த பாடம் ஞாபகம் வந்தது
ஆனால் உங்கள் வரிகளில் மயிலின் அழகிய ஆட்டத்தை இரசிக்க தெரியாத அரசன்
மயிலுக்கு குளிகிறது என்று போர்வை போர்த்தி மயிலாட்டத்தை நிறுத்திய
மன்னன் கொடை வள்ளல் அல்ல மூடன் என்ற உங்கள் வரிகள் ஆச்சிரியம்
சில விஷயங்களில் சில கேள்வி எழும் உண்மைகள் ஒளிந்திருக்கும்
அதனை ஆக்கபூர்வமாக கேட்ட உங்கள் இலக்கிய நடை கவிதை அருமை
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி
வரிகளை வாசிக்கையில் கொடையின் பெருமை சொல்லும் மயிலுக்கு போர்வைபோர்த்திய வள்ளல் பற்றிய
சிறுவயதில் படித்த பாடம் ஞாபகம் வந்தது
ஆனால் உங்கள் வரிகளில் மயிலின் அழகிய ஆட்டத்தை இரசிக்க தெரியாத அரசன்
மயிலுக்கு குளிகிறது என்று போர்வை போர்த்தி மயிலாட்டத்தை நிறுத்திய
மன்னன் கொடை வள்ளல் அல்ல மூடன் என்ற உங்கள் வரிகள் ஆச்சிரியம்
சில விஷயங்களில் சில கேள்வி எழும் உண்மைகள் ஒளிந்திருக்கும்
அதனை ஆக்கபூர்வமாக கேட்ட உங்கள் இலக்கிய நடை கவிதை அருமை
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி
Re: “கொடை மடம்”
நண்பன் wrote:புரிந்தது அக்கா கொடை என்றால் தானம் மடம் என்றால் முட்டாள் புரிந்தது அக்கா
இலக்கிய தமிழில் அடியேனுக்கு கஸ்டம் அக்கா
நன்றி விரிவான விளக்கத்திற்கு
நன்றியுடன்
நண்பன்
நன்றி நண்பன்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: “கொடை மடம்”
செய்தாலி wrote:அபாரம் அபாரம் தோழி
வரிகளை வாசிக்கையில் கொடையின் பெருமை சொல்லும் மயிலுக்கு போர்வைபோர்த்திய வள்ளல் பற்றிய
சிறுவயதில் படித்த பாடம் ஞாபகம் வந்தது
ஆனால் உங்கள் வரிகளில் மயிலின் அழகிய ஆட்டத்தை இரசிக்க தெரியாத அரசன்
மயிலுக்கு குளிகிறது என்று போர்வை போர்த்தி மயிலாட்டத்தை நிறுத்திய
மன்னன் கொடை வள்ளல் அல்ல மூடன் என்ற உங்கள் வரிகள் ஆச்சிரியம்
சில விஷயங்களில் சில கேள்வி எழும் உண்மைகள் ஒளிந்திருக்கும்
அதனை ஆக்கபூர்வமாக கேட்ட உங்கள் இலக்கிய நடை கவிதை அருமை
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி
மிக்க நன்றி செய்தாலி!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: “கொடை மடம்”
:”@: :”@:சாதிக் wrote:அழகிய கவிதை ஆற்றலை போற்ற வரிகளில்லை
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்
நன்றி அக்கா பகிர்வுக்கு
முகஸ்துதி என்பது அதுதான் போலும் மன்னன் என்பதால் அவரை குறைகூற முடியாமல் வள்ளல் என்றிருக்கலாம்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: “கொடை மடம்”
மழைவரும்கு றிப்பறிந்தே ஆடுமிது வென்றே
அறியாத மூடனவன் எப்படி நா டாண்டான்?
அழகுமயில் ஆட்டத்தில் ஆர்வமற்ற முட்டாள்
தழைத்தகுடி காத்ததெங்கன் கூறு?
ஆடும்தோ கைமூடி ஆட்டம் நிறுத்தியோனை
சூடுமுடி கொண்டவனென் றானதினால்; உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்?
செய்கையும் அதன் பின் கொண்ட நிலையும் ,அழகாய் சொல்லி ,
அவனின் ,முட்டாள் எண்ணத்தை,கூறும் பாங்கு அருமை .
தொடருங்கள் உங்கள் ,செந்தமிழை ...!
அறியாத மூடனவன் எப்படி நா டாண்டான்?
அழகுமயில் ஆட்டத்தில் ஆர்வமற்ற முட்டாள்
தழைத்தகுடி காத்ததெங்கன் கூறு?
ஆடும்தோ கைமூடி ஆட்டம் நிறுத்தியோனை
சூடுமுடி கொண்டவனென் றானதினால்; உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்?
செய்கையும் அதன் பின் கொண்ட நிலையும் ,அழகாய் சொல்லி ,
அவனின் ,முட்டாள் எண்ணத்தை,கூறும் பாங்கு அருமை .
தொடருங்கள் உங்கள் ,செந்தமிழை ...!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: “கொடை மடம்”
அப்துல் றிமாஸ் wrote::”@: :”@:சாதிக் wrote:அழகிய கவிதை ஆற்றலை போற்ற வரிகளில்லை
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்
நன்றி அக்கா பகிர்வுக்கு
முகஸ்துதி என்பது அதுதான் போலும் மன்னன் என்பதால் அவரை குறைகூற முடியாமல் வள்ளல் என்றிருக்கலாம்
நன்றி அப்துல் றிமாஸ்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: “கொடை மடம்”
kalainilaa wrote:மழைவரும்கு றிப்பறிந்தே ஆடுமிது வென்றே
அறியாத மூடனவன் எப்படி நா டாண்டான்?
அழகுமயில் ஆட்டத்தில் ஆர்வமற்ற முட்டாள்
தழைத்தகுடி காத்ததெங்கன் கூறு?
ஆடும்தோ கைமூடி ஆட்டம் நிறுத்தியோனை
சூடுமுடி கொண்டவனென் றானதினால்; உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்?
செய்கையும் அதன் பின் கொண்ட நிலையும் ,அழகாய் சொல்லி ,
அவனின் ,முட்டாள் எண்ணத்தை,கூறும் பாங்கு அருமை .
தொடருங்கள் உங்கள் ,செந்தமிழை ...!
nanRi கலை நிலா,
உண்மையில் சொல்வதென்றால், கவிஞர்கள் வட்டத்தில் இது பெரிய எதிர்ப்பினைக் கண்டது. சங்க இலக்கியத்தில் போற்றப்படும் ஒரு புலவனை எப்படி தூற்றி எழுதலாமென்று நிறைய எதிர்ப்புக் குரல்.....
இதுக்கெல்லாம் போயா பயப்படுவா யாதுமானவள் ? புத்தகத்துல publish பண்ணியாச்சு... முதல்ல என்னை திட்டித் திட்டி பார்த்தவங்க... பிறகு அவங்களுக்குள்ள பேசி அடங்கிட்டாங்க...ஹிஹி...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: “கொடை மடம்”
யாதுமானவள் wrote:kalainilaa wrote:மழைவரும்கு றிப்பறிந்தே ஆடுமிது வென்றே
அறியாத மூடனவன் எப்படி நா டாண்டான்?
அழகுமயில் ஆட்டத்தில் ஆர்வமற்ற முட்டாள்
தழைத்தகுடி காத்ததெங்கன் கூறு?
ஆடும்தோ கைமூடி ஆட்டம் நிறுத்தியோனை
சூடுமுடி கொண்டவனென் றானதினால்; உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்?
செய்கையும் அதன் பின் கொண்ட நிலையும் ,அழகாய் சொல்லி ,
அவனின் ,முட்டாள் எண்ணத்தை,கூறும் பாங்கு அருமை .
தொடருங்கள் உங்கள் ,செந்தமிழை ...!
nanRi கலை நிலா,
உண்மையில் சொல்வதென்றால், கவிஞர்கள் வட்டத்தில் இது பெரிய எதிர்ப்பினைக் கண்டது. சங்க இலக்கியத்தில் போற்றப்படும் ஒரு புலவனை எப்படி தூற்றி எழுதலாமென்று நிறைய எதிர்ப்புக் குரல்.....
இதுக்கெல்லாம் போயா பயப்படுவா யாதுமானவள் ? புத்தகத்துல publish பண்ணியாச்சு... முதல்ல என்னை திட்டித் திட்டி பார்த்தவங்க... பிறகு அவங்களுக்குள்ள பேசி அடங்கிட்டாங்க...ஹிஹி...
காய்க்கிற மரத்துக்கு ,கல் அடி வரத்தானே செய்யும்.
நன்றி யாதுமானவள் அவர்களே !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: “கொடை மடம்”
உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்? ம்ம்
தோழி யாதுமவள் இலக்கியவாதிக்கு
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்? ம்ம்
தோழி யாதுமவள் இலக்கியவாதிக்கு
Re: “கொடை மடம்”
kalainilaa wrote:யாதுமானவள் wrote:kalainilaa wrote:
செய்கையும் அதன் பின் கொண்ட நிலையும் ,அழகாய் சொல்லி ,
அவனின் ,முட்டாள் எண்ணத்தை,கூறும் பாங்கு அருமை .
தொடருங்கள் உங்கள் ,செந்தமிழை ...!
நன்றி கலை நிலா,
உண்மையில் சொல்வதென்றால், கவிஞர்கள் வட்டத்தில் இது பெரிய எதிர்ப்பினைக் கண்டது. சங்க இலக்கியத்தில் போற்றப்படும் ஒரு புலவனை எப்படி தூற்றி எழுதலாமென்று நிறைய எதிர்ப்புக் குரல்.....
இதுக்கெல்லாம் போயா பயப்படுவா யாதுமானவள் ? புத்தகத்துல publish பண்ணியாச்சு... முதல்ல என்னை திட்டித் திட்டி பார்த்தவங்க... பிறகு அவங்களுக்குள்ள பேசி அடங்கிட்டாங்க...ஹிஹி...
காய்க்கிற மரத்துக்கு ,கல் அடி வரத்தானே செய்யும்.
நன்றி யாதுமானவள் அவர்களே !
நன்றி கலைநிலா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: “கொடை மடம்”
முனாஸ் சுலைமான் wrote:உள்ளபடி
மூடனென்று கூறாது மாறாக வள்ளலென்று
ஓதியவம் மாமடையன் யார்? ம்ம்
தோழி யாதுமவள் இலக்கியவாதிக்கு
நன்றி முனாஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: “கொடை மடம்”
அக்காலத்தில் , நம்மூர் செந்தில், வடிவேல் போல, மன்னர்களுக்கு இந்த அறிய யோசனைகளை கொடுக்கும் மந்திரிகள் தான் .....
அக்கா.....உங்களின் கவிதை நயம், நாசுக்காய் சாடல், வரித்தொகுப்பு, அருமை...அருமை...
அக்கா.....உங்களின் கவிதை நயம், நாசுக்காய் சாடல், வரித்தொகுப்பு, அருமை...அருமை...
Re: “கொடை மடம்”
யாதுமானவள் உங்கள் அக்காவா :,;: :,;:mravi wrote:அக்காலத்தில் , நம்மூர் செந்தில், வடிவேல் போல, மன்னர்களுக்கு இந்த அறிய யோசனைகளை கொடுக்கும் மந்திரிகள் தான் .....
அக்கா.....உங்களின் கவிதை நயம், நாசுக்காய் சாடல், வரித்தொகுப்பு, அருமை...அருமை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: “கொடை மடம்”
வயதில் பெரியவரோ, சிறியவரோ, அக்கா என்று அழைக்கும்போது ஒரு சொந்த வுறவுடன் பகிர்ந்து கொள்வது போல் .....நண்பா......ஹி...ஹி...
Re: “கொடை மடம்”
அக்கா தம்பி உறவுகள் இருப்பது தெரியாமல் போய் விட்டது என்று நினைத்தேன்mravi wrote:வயதில் பெரியவரோ, சிறியவரோ, அக்கா என்று அழைக்கும்போது ஒரு சொந்த வுறவுடன் பகிர்ந்து கொள்வது போல் .....நண்பா......ஹி...ஹி...
நீங்கள் மரியாதைக்கு சொன்னீர்களா?
எப்படியோ சாமாளிச்சிட்டோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: “கொடை மடம்”
mravi wrote:அக்காலத்தில் , நம்மூர் செந்தில், வடிவேல் போல, மன்னர்களுக்கு இந்த அரிய யோசனைகளை கொடுக்கும் மந்திரிகள் தான் .....
அக்கா.....உங்களின் கவிதை நயம், நாசுக்காய் சாடல், வரித்தொகுப்பு, அருமை...அருமை...
நன்றி ரவி...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: “கொடை மடம்”
என்னவென்று சொலவது அக்கா? அபாரம்..அர்த்தம் பொதிந்த வரிகள் அத்தனையும் அற்புதம்..அழகான சொற்களை கையாண்ட விதம் அருமை..வாழ்த்துக்கள் அக்கா.. :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
Re: “கொடை மடம்”
அபராம் அக்கா அருமையான வரிகள் படிக்கும் போது இலக்கிய நயம் மீண்டும் ஞாபகம் வருவது வாழ்த்து என்று சொன்னால் மட்டும் போதாது அக்கா வாழ்த்த வார்த்தைகள் இல்லை. வாழ்க தமிழ் தொடரட்டும் உங்களின் பயணம் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பேளூர் ராமகிருஷ்ண மடம்
» பேலூர் இராமகிருட்டிண மடம்
» கொடை
» யாழ்ப்பாணம் கன்னியர் மடம் கல்லூரி சம்பியன்
» கற்றாழை எனும் கொடை..
» பேலூர் இராமகிருட்டிண மடம்
» கொடை
» யாழ்ப்பாணம் கன்னியர் மடம் கல்லூரி சம்பியன்
» கற்றாழை எனும் கொடை..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|