Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்
2 posters
Page 1 of 1
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்
""தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருப்பதை நான் விரும்பவில்லை; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்; காங்., தலைமையில் முதல்வர் பதவிக்கு வர வேண்டும்; அதற்கு கிராம அளவில் காங்கிரசை பலப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்,'' என காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் யோசனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், நேற்று இரண்டாவது நாளாக திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி ஆகிய ஊர்களில் நடந்த இளைஞர் காங்., ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டங்களில் ராகுல் பேசியதாவது: காங்., பேரியக்கம், 125 ஆண்டு கால வரலாறு மிக்க மாபெரும் இயக்கம். கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பில் இல்லை. தமிழகத்தில் காங்., ஆட்சியமைக்கும் வலுவான நிலையை ஏற்படுத்த வேண்டும். தன்னிச்சையாக அது அமையாமல், காங்., ஆட்சியை ஏற்படுத்தும் வகையில், நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தமிழகம், இளைய தலைமுறையின் கைகளுக்கு வர வேண்டும். அப்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் நிச்சயம் ஏற்படும்.
தமிழகத்தில் இரண்டாம் நிலையில் காங்., இருப்பதை நான் விரும்பவில்லை. காங்., தலைமையில் முதல்வர் வர வேண்டும். தமிழக அரசியலில், சட்டசபை, லோக்சபா பொறுப்புகளில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், மிக முக்கியமான கிராமங்களில், ஊராட்சிகளில் நாம் கவனம் செலுத்த தவறிவிட்டோம். தமிழகத்தில் அனைத்து மக்களிடத்திலும், எல்லா இடங்களிலும் காங்கிரஸ் என்ற நிலையை ஏற்படுத்தினால், அதற்கேற்ப செயல்பட்டால் தான் ஆட்சிக்கு வர முடியும். கிராமப்புற மக்களுக்காக பாடுபட வேண்டும்; அவர்களின் பிரச்னைகளை கையில் எடுத்து போராட வேண்டும். அப்படிபட்ட நிலையில் மக்களின் ஆதரவை பெற்றால், ஆட்சிப் பொறுப்பை மற்ற யாராலும் வெல்ல முடியாது. அடுத்த கட்டமாக, ஊராட்சிகளில், வார்டுகளில் இளைஞர் காங்கிரசார் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் ஊராட்சிகளில் தலைமை பொறுப்புகளுக்கு வர வேண்டும். அப்படிபட்டவர்களுக்கு சட்டசபை, லோக்சபா மற்றும் தமிழக அளவில் முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகளைத் தருவது என் வேலை.
காந்திஜி, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை நினைவு கூர்வது மட்டும் போதாது; அத்தலைவர்களின் கடமைகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களோடு ஒன்று கலந்து வாழ்ந்தனர். நேற்றிரவு, கக்கன் வாழ்ந்த சிறிய வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவரது வாழ்க்கை வரலாறு தெரிந்தது. காமராஜர் பற்றி சினிமா, புத்தகத்தில் தான் அறிந்திருக்கிறோம். அந்த மாபெரும் தலைவர் இறந்தபோது, அவரிடம் 132 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. அப்படிபட்ட தியாக வரலாறாக, அவர்களது வாழ்க்கை இருந்திருக்கிறது. தமிழகத்தில் ஊராட்சி பொறுப்புகளில் நாம் வெற்றி பெற்றால், அடுத்த கட்டமாக முதல்வர் பதவி நம்மை தேடி வரும். இக்கூட்டத்துக்கு பெண்கள் குறைவாக வந்துள்ளனர்; அடுத்த முறை பெண்கள் கூட்டம் சரி பாதியாக இருக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார். இரண்டு நாட்களாக எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை, ஆறு ஊர்களில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் சந்தித்து பேசினார். நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்றார். ராகுலின் இந்த இரண்டு நாள் பயணத்தால் தமிழக காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இரண்டு நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், நேற்று இரண்டாவது நாளாக திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி ஆகிய ஊர்களில் நடந்த இளைஞர் காங்., ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டங்களில் ராகுல் பேசியதாவது: காங்., பேரியக்கம், 125 ஆண்டு கால வரலாறு மிக்க மாபெரும் இயக்கம். கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ், ஆட்சிப் பொறுப்பில் இல்லை. தமிழகத்தில் காங்., ஆட்சியமைக்கும் வலுவான நிலையை ஏற்படுத்த வேண்டும். தன்னிச்சையாக அது அமையாமல், காங்., ஆட்சியை ஏற்படுத்தும் வகையில், நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தமிழகம், இளைய தலைமுறையின் கைகளுக்கு வர வேண்டும். அப்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், அரசியல் மாற்றமும் நிச்சயம் ஏற்படும்.
தமிழகத்தில் இரண்டாம் நிலையில் காங்., இருப்பதை நான் விரும்பவில்லை. காங்., தலைமையில் முதல்வர் வர வேண்டும். தமிழக அரசியலில், சட்டசபை, லோக்சபா பொறுப்புகளில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், மிக முக்கியமான கிராமங்களில், ஊராட்சிகளில் நாம் கவனம் செலுத்த தவறிவிட்டோம். தமிழகத்தில் அனைத்து மக்களிடத்திலும், எல்லா இடங்களிலும் காங்கிரஸ் என்ற நிலையை ஏற்படுத்தினால், அதற்கேற்ப செயல்பட்டால் தான் ஆட்சிக்கு வர முடியும். கிராமப்புற மக்களுக்காக பாடுபட வேண்டும்; அவர்களின் பிரச்னைகளை கையில் எடுத்து போராட வேண்டும். அப்படிபட்ட நிலையில் மக்களின் ஆதரவை பெற்றால், ஆட்சிப் பொறுப்பை மற்ற யாராலும் வெல்ல முடியாது. அடுத்த கட்டமாக, ஊராட்சிகளில், வார்டுகளில் இளைஞர் காங்கிரசார் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் ஊராட்சிகளில் தலைமை பொறுப்புகளுக்கு வர வேண்டும். அப்படிபட்டவர்களுக்கு சட்டசபை, லோக்சபா மற்றும் தமிழக அளவில் முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகளைத் தருவது என் வேலை.
காந்திஜி, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை நினைவு கூர்வது மட்டும் போதாது; அத்தலைவர்களின் கடமைகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களோடு ஒன்று கலந்து வாழ்ந்தனர். நேற்றிரவு, கக்கன் வாழ்ந்த சிறிய வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவரது வாழ்க்கை வரலாறு தெரிந்தது. காமராஜர் பற்றி சினிமா, புத்தகத்தில் தான் அறிந்திருக்கிறோம். அந்த மாபெரும் தலைவர் இறந்தபோது, அவரிடம் 132 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. அப்படிபட்ட தியாக வரலாறாக, அவர்களது வாழ்க்கை இருந்திருக்கிறது. தமிழகத்தில் ஊராட்சி பொறுப்புகளில் நாம் வெற்றி பெற்றால், அடுத்த கட்டமாக முதல்வர் பதவி நம்மை தேடி வரும். இக்கூட்டத்துக்கு பெண்கள் குறைவாக வந்துள்ளனர்; அடுத்த முறை பெண்கள் கூட்டம் சரி பாதியாக இருக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார். இரண்டு நாட்களாக எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களை, ஆறு ஊர்களில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் சந்தித்து பேசினார். நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்றார். ராகுலின் இந்த இரண்டு நாள் பயணத்தால் தமிழக காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: மத்திய மந்திரி நெப்போலியன் பேச்சு
» அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு: காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்; சீமான் ஆவேச பேச்சு
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை
» ஓய்வு பெற்ற பின்னரே பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்-ராகுல்
» அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு: காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்; சீமான் ஆவேச பேச்சு
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» ஐகோர்ட்டு தீர்ப்பு நகல்களை மாநில மொழியில் அளிக்க வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் யோசனை
» ஓய்வு பெற்ற பின்னரே பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்-ராகுல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|