Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
தலைவர் பதவியைக் கோரும் ஸ்டாலின்-எதிர்க்கும் அழகிரி-கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி
2 posters
Page 1 of 1
தலைவர் பதவியைக் கோரும் ஸ்டாலின்-எதிர்க்கும் அழகிரி-கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி
தலைவர் பதவியை இப்போதே தனக்குத் தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோருகிறாராம். ஆனால் தலைவர் பதவியை யாருக்கும் தரக் கூடாது. கடைசி வரை கருணாநிதிதான் தலைவராக நீடிக்க வேண்டும் என்று மு.க.அழகிரி கோரி வருகிறாராம். இதுதொடர்பாகத்தான் தற்போது கருணாநிதி குடும்பத்தில் சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கதையாக தனது இரு மகன்களை வளர்த்து வந்த திமுக தலைவர் கருணாநிதி அதற்குரிய பலனை தற்போது அனுபவித்து வருவதாக திமுகவின் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள்.
கருணாநிதி போட்ட கணக்கு இன்று தப்புக் கணக்காகி அவரையே பதம் பார்க்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்படி என்னதான் திமுகவில் பிரச்சினை?
இதை திமுகவின் பிரச்சினை என்று கூற முடியாது. மாறாக, வாரிசுரிமை கோரி நடந்து வரும் குடும்பச் சண்டை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியும், இளைய மகன் ஸ்டாலினும் ஆரம்பத்திலிருந்தே எலியும், பூணையுமாகத்தான் இருந்தனர். ஆரம்பத்திலிருந்தே ஸ்டாலின் நிதானமானவராக நடந்து வந்தார். ஆனால் அழகிரி சற்று முரட்டுத்தனமானவர். இதனால்தான் ஸ்டாலினுக்குப் பின்னால் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக முரசொலிப் பத்திரிக்கையை பார்த்துக் கொள்வதற்காக என்று கூறி அவரை மதுரைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.
மேலும் ஸ்டாலினுக்கு எதிராக யாரும் வராமல் மிகவும் கவனத்துடன் நடந்து வந்தார் கருணாநிதி. அதன் கடும் பாதிப்புதான் வைகோ போன்ற மாபெரும் தொண்டர்களை திமுக இழந்தது.
ஸ்டாலினுக்கு கிட்டத்தட்ட போட்டியே இல்லாமல் காய்களை நகர்த்தி வந்தார் கருணாநிதி. ஆனால் கருணாநிதியே எதிர்பாராத வகையில் தென் மாவட்ட திமுகவில் அழகிரி எடுத்த விஸ்வரூபம் அமைந்தது. தன்னைத் தாண்டி தென் மாவட்ட திமுகவில் ஈ எறும்பு கூட நகர முடியாத அளவுக்கு தனது நிலையை ஸ்திரமாக்கிக் கொண்டார் அழகிரி.
இதனால் அவருக்கு புதிதாக தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியைக் கொடுத்தார் கருணாநிதி. அத்தோடு நிற்கவில்லை அழகிரி, ஸ்டாலினுக்கு முக்கியப் பொறுப்பை கொடுக்க முடிவு செய்தால், தனக்கும் அவருக்கு நிகரான பொறுப்பைத் தர வேண்டும் என்று கருணாநிதிக்கு கண்டிஷன் போட ஆரம்பித்தார்.
இதையடுத்து அவரை சமாளிக்க மத்திய அமைச்சர் பதவியையும் கொடுத்தார் கருணாநிதி. ஆனாலும் அழகிரி சமாதானமாகவில்லை.
ஒரு கட்டத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே ஸ்டாலினை கட்சித் தலைவராக்க கருணாநிதி திட்டமிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து நேரடியாக சென்னை சென்று கருணாநிதியிடமே எச்சரிக்கை விடுத்தார் அழகிரி. இதனால் அந்தத் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடந்த கடும் வாக்குவாதம் திமுகவினரை நிலை குலைய வைத்துள்ளது.
திமுகவில் மிகப் பெரிய அளவில் வாரிசுப் போர் மூண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்டாலின் கோருவது என்ன?
துணை முதல்வர் பதவி வரை அரசுப் பதவியிலும், பொருளாளர் என்ற நிலைக்கு கட்சிப் பதவியிலும் உயர்ந்த ஸ்டாலின் தற்போது கருணாநிதியிடம் கோருவது திமுக தலைவர் பதவியை என்கிறார்கள்.
கருணாநிதி தனது காலத்திலேயே தலைவர் பதவிக்கு அடுத்து வருவது யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் உறுதியாக கூறி வருகிறாராம். மேலும், கோவையில் நடைபெறவுள்ள செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்திலேயே அதை அவர் அறிவிக்க வேண்டும் என்று அவர் கருணாநிதியிடம் கூறினாராம். இதனால்தான் வார்த்தை தடித்து இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாக கூறுகிறார்கள்.
அழகிரி சொல்வது என்ன?
அதேசமயம், தலைவர் பதவிக்கு அடுத்து இன்னொருவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடைசி வரை கருணாநிதி மட்டுமே தலைவராக இருக்க வேண்டும். அவருக்குப் பிறகு ஏற்படும் நிலை குறித்து அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்று கூறி வருகிறாராம் அழகிரி.
ஒருவேளை மீறி அடுத்த தலைவர் யார் என்பதை கருணாநிதி அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால் தான் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும். அது கட்சிக்கு நல்லதல்ல என்று கருணாநிதியிடம் அழகிரி எச்சரித்துள்ளதாக தெரிகிறது.
இப்படி இரு பிள்ளைகளும் கடுமையாக மோதி வருவதைக் கண்டு கருணாநிதி மனம் உடைந்து போயுள்ளதாக தெரிகிறது.
மேலும், கனிமொழிக்கு இனியும் கட்சியில் முக்கியத்துவம் தரக் கூடாது என்றும் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் வற்புறுத்தி வருகிறார்களாம். இதை ஏற்க கருணாநிதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
கோவை பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த கோஷ்டிப் பூசல் மிகப் பெரிய அளவில் வெடிக்கப் போகிறது என்றும் திமுகவின் விவகாரங்கள் அறிந்தவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
தட்ஸ் தமிழ்
ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கதையாக தனது இரு மகன்களை வளர்த்து வந்த திமுக தலைவர் கருணாநிதி அதற்குரிய பலனை தற்போது அனுபவித்து வருவதாக திமுகவின் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள்.
கருணாநிதி போட்ட கணக்கு இன்று தப்புக் கணக்காகி அவரையே பதம் பார்க்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்படி என்னதான் திமுகவில் பிரச்சினை?
இதை திமுகவின் பிரச்சினை என்று கூற முடியாது. மாறாக, வாரிசுரிமை கோரி நடந்து வரும் குடும்பச் சண்டை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியும், இளைய மகன் ஸ்டாலினும் ஆரம்பத்திலிருந்தே எலியும், பூணையுமாகத்தான் இருந்தனர். ஆரம்பத்திலிருந்தே ஸ்டாலின் நிதானமானவராக நடந்து வந்தார். ஆனால் அழகிரி சற்று முரட்டுத்தனமானவர். இதனால்தான் ஸ்டாலினுக்குப் பின்னால் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக முரசொலிப் பத்திரிக்கையை பார்த்துக் கொள்வதற்காக என்று கூறி அவரை மதுரைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.
மேலும் ஸ்டாலினுக்கு எதிராக யாரும் வராமல் மிகவும் கவனத்துடன் நடந்து வந்தார் கருணாநிதி. அதன் கடும் பாதிப்புதான் வைகோ போன்ற மாபெரும் தொண்டர்களை திமுக இழந்தது.
ஸ்டாலினுக்கு கிட்டத்தட்ட போட்டியே இல்லாமல் காய்களை நகர்த்தி வந்தார் கருணாநிதி. ஆனால் கருணாநிதியே எதிர்பாராத வகையில் தென் மாவட்ட திமுகவில் அழகிரி எடுத்த விஸ்வரூபம் அமைந்தது. தன்னைத் தாண்டி தென் மாவட்ட திமுகவில் ஈ எறும்பு கூட நகர முடியாத அளவுக்கு தனது நிலையை ஸ்திரமாக்கிக் கொண்டார் அழகிரி.
இதனால் அவருக்கு புதிதாக தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியைக் கொடுத்தார் கருணாநிதி. அத்தோடு நிற்கவில்லை அழகிரி, ஸ்டாலினுக்கு முக்கியப் பொறுப்பை கொடுக்க முடிவு செய்தால், தனக்கும் அவருக்கு நிகரான பொறுப்பைத் தர வேண்டும் என்று கருணாநிதிக்கு கண்டிஷன் போட ஆரம்பித்தார்.
இதையடுத்து அவரை சமாளிக்க மத்திய அமைச்சர் பதவியையும் கொடுத்தார் கருணாநிதி. ஆனாலும் அழகிரி சமாதானமாகவில்லை.
ஒரு கட்டத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே ஸ்டாலினை கட்சித் தலைவராக்க கருணாநிதி திட்டமிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து நேரடியாக சென்னை சென்று கருணாநிதியிடமே எச்சரிக்கை விடுத்தார் அழகிரி. இதனால் அந்தத் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடந்த கடும் வாக்குவாதம் திமுகவினரை நிலை குலைய வைத்துள்ளது.
திமுகவில் மிகப் பெரிய அளவில் வாரிசுப் போர் மூண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்டாலின் கோருவது என்ன?
துணை முதல்வர் பதவி வரை அரசுப் பதவியிலும், பொருளாளர் என்ற நிலைக்கு கட்சிப் பதவியிலும் உயர்ந்த ஸ்டாலின் தற்போது கருணாநிதியிடம் கோருவது திமுக தலைவர் பதவியை என்கிறார்கள்.
கருணாநிதி தனது காலத்திலேயே தலைவர் பதவிக்கு அடுத்து வருவது யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் உறுதியாக கூறி வருகிறாராம். மேலும், கோவையில் நடைபெறவுள்ள செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்திலேயே அதை அவர் அறிவிக்க வேண்டும் என்று அவர் கருணாநிதியிடம் கூறினாராம். இதனால்தான் வார்த்தை தடித்து இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாக கூறுகிறார்கள்.
அழகிரி சொல்வது என்ன?
அதேசமயம், தலைவர் பதவிக்கு அடுத்து இன்னொருவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடைசி வரை கருணாநிதி மட்டுமே தலைவராக இருக்க வேண்டும். அவருக்குப் பிறகு ஏற்படும் நிலை குறித்து அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்று கூறி வருகிறாராம் அழகிரி.
ஒருவேளை மீறி அடுத்த தலைவர் யார் என்பதை கருணாநிதி அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால் தான் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும். அது கட்சிக்கு நல்லதல்ல என்று கருணாநிதியிடம் அழகிரி எச்சரித்துள்ளதாக தெரிகிறது.
இப்படி இரு பிள்ளைகளும் கடுமையாக மோதி வருவதைக் கண்டு கருணாநிதி மனம் உடைந்து போயுள்ளதாக தெரிகிறது.
மேலும், கனிமொழிக்கு இனியும் கட்சியில் முக்கியத்துவம் தரக் கூடாது என்றும் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் வற்புறுத்தி வருகிறார்களாம். இதை ஏற்க கருணாநிதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
கோவை பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த கோஷ்டிப் பூசல் மிகப் பெரிய அளவில் வெடிக்கப் போகிறது என்றும் திமுகவின் விவகாரங்கள் அறிந்தவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
தட்ஸ் தமிழ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தலைவர் பதவியைக் கோரும் ஸ்டாலின்-எதிர்க்கும் அழகிரி-கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி
அடுத்த தலைமைக்கு தகுதியானவர் தளபதியே !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|