Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
2 posters
Page 1 of 1
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
கு.க., அறுவைக்குப் பின், குழந்தை பெற்ற பெண்ணுக்கு ரூ.1.08 லட்சம் இழப்பீடு வழங்க,
கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பை, கோவை விரைவு கோர்ட் ரத்து செய்தது. பொள்ளாச்சி, கோட்டூரைச் சேர்ந்தவர் நடராஜ், 38; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி, 32. இரண்டாவது பிரசவத்துக்காக 1997, டிச., 22ல் கோட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே சுகப்பிரசவமாகி, பெண் குழந்தை பிறந்தது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் பெண்ணாக பிறந்ததால், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்தார் சுமதி. பரிசோதனைகளுக்குப் பின், 1997, டிச., 25ல் சுமதிக்கு கு.க., அறுவை செய்யப்பட்டது. இதன்பின், 1999ல் சுமதி மீண்டும் கர்ப்பமானார். கு.க., செய்த பின்பும் கர்ப்பமானதால் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும், கர்ப்பத்தை கலைக்கவில்லை. 2000, மார்ச் 3 அன்று அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.
"கு.க., அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கர்ப்பம் அடைந்ததற்கு டாக்டரின் தவறான சிகிச்சையே காரணம். இத்தவறுக்கு இழப்பீடாக மூன்று லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, பொள்ளாச்சி சார்பு கோர்ட்டில் சுமதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக தலைமைச் செயலர், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர், கோட்டூர் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர், கு.க., அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் மாரியம்மாள் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டனர்.
வழக்கை விசாரித்த கோர்ட், " கு.க., அறுவை சிகிச்சையில் தவறு நடந்துள்ளது. எனவே, மீண்டும் கர்ப்பம் அடைந்த சுமதிக்கு 1.08 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, தீர்ப்புக் கூறியது. இத்தீர்ப்பை எதிர்த்து, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு, இரண்டாவது விரைவு கோர்ட் நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் அரசு பிளீடர் அருள்மொழி ஆஜராகி, "இரண்டாவது குழந்தைக்குப் பின் கு.க., அறுவை செய்து கொண்ட சுமதி, அரசு வழங்கிய ஊக்கத் தொகை மற்றும் பரிசுப் பொருள்களை பெற்றுள்ளார். இரு பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் பரிசுத்தொகை 5,000 ரூபாயையும் பெற்றுள்ளார். மூன்றாவது குழந்தை தேவை இல்லை என அவர் முடிவு செய்திருந்தால், 20 வாரங்களில் கருவை கலைத்திருக்கலாம். இதற்கு சட்டம் இடம் கொடுக்கிறது. அதையும் செய்யவில்லை.
கு.க., சிகிச்சையில் 5 சதவீதம் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. உடலில் ஏற்படும் வளர்ச்சி காரணமாக, கு.க., அறுவைக்குப் பின்னும், கருக்குழாய் வளர்ச்சிக்கு வாய்ப்பு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, டாக்டர்கள் மீது நேரடியாக வழக்கு தொடர முடியாது. மெடிக்கல் போர்டுக்கு அனுப்பி முடிவு கிடைத்த பிறகே, வழக்கு தொடர முடியும். இந்த வழக்கில் அந்த நடைமுறை காணப்படவில்லை. கு.க., செய்வதன் மூலம் அரசு தரும் சலுகைகளை பெற்றுக் கொண்டு, அரசு மருத்துவத்துறை மீது புகார் தெரிவிப்பது நியாயமில்லை' என, வாதிட்டார். நீதிபதி அலமேலு நடராஜன், இரு தரப்பு வாதத்தைக் கேட்டு, கீழ் கோர்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Re: குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
சரி தவறு நடந்து விட்டது விட்டு விட்டு அழகான ஆண் குழந்தை கிடைத்த தருணத்தை சந்தோசமாக எடுத்துக்கொள்ளட்டும் மூத்த இரு பெண் குளந்தைகளுக்கும் உதவியாக இருக்கட்டும்
தகவலுக்கு நன்றி சாதிக்
தகவலுக்கு நன்றி சாதிக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» நெருக்கமாக உள்ளவர்கள், வாழ்க்கைத் துணை கூட சைக்கோவாக இருக்க வாய்ப்பு உள்ளது ?
» ராஜீவ் கொலை கைதிகளின் தூக்கு தண்டனையை நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது: வக்கீல் புகழேந்தி பேட்டி
» தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» நெருக்கமாக உள்ளவர்கள், வாழ்க்கைத் துணை கூட சைக்கோவாக இருக்க வாய்ப்பு உள்ளது ?
» ராஜீவ் கொலை கைதிகளின் தூக்கு தண்டனையை நிறுத்த இன்னும் வாய்ப்பு உள்ளது: வக்கீல் புகழேந்தி பேட்டி
» தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|