சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

சுபாவ வளர்ச்சி Khan11

சுபாவ வளர்ச்சி

Go down

சுபாவ வளர்ச்சி Empty சுபாவ வளர்ச்சி

Post by Atchaya Wed 20 Jul 2011 - 16:30

சுபாவ வளர்ச்சிக்கு முக்கியமாக வேண்டியது போற்றக்கூடிய குணங்கள். அதாவது “சாந்தம், ஸமாதானம், பொறுமை, தன்னம்பிக்கை, தைர்யம், ச்ரத்தை, கடமை உணர்ச்சி, விடாமுயற்சி, மனோ நியந்தரணம், ஸூக்ஷ்ம புத்தி, பாசம், வினயம், அன்பு, பக்தி, தயை, கருணை, ஒற்றுமை உணர்ச்சி, பரோபகாரக் கொள்கை, ஸாமுதாயிக மனப் பான்மை, தன்னலமற்ற சுபாவம், வாழ்வின் லக்ஷியம்” எனப்படும். என்ன? இவைகளைக் கேட்டதும் மலைப்பாக இருக்கிறதா? பயப்படாதீர்கள். ஓவ்வொன்றையும ஆராய்ந்து பார்ப்போம்.
சாந்தம்: (Calm & Quiet)
எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் பதட்டமில்லாமலும், எந்த இக்கட்டைச் சந்திக்க நேர்ந்தாலும் அதிர்ச்சியடையாமலும், தெளிவான மனத்துடனும் நம்மை நோக்கி நிற்கும் காரியத்தை ஆராய்து பணிபுரியும் தன்மைக்குப் பெயர் “சாந்தம்”. அதாவது நமது மனம் அலைபாயாது ஒரு நிலைப்பட்டுத் தெளிவாக இருப்பது எனப் பொருள்.
ஸமாதானம்: (Peace)
நாம் எடுத்துக்கொண்ட அல்லது நினைத்த காரியத்தில், யாதொரு சிக்கல் வந்தாலும், எந்தவித எதிர்ப்பு வந்தாலும் அல்லது தடங்கல் வந்தாலும், சண்டை சச்சரவில் ஈடுபடாமல் அந்தக் காரியத்தை ஸுலபமாக, யாருக்கும் ஒரு தீங்கும் ஏற்படாமல் செய்யும் ஆற்றலுக்குப் பெயர் “ஸமாதானம்”. அதாவது நாம் செய்யும் காரியங்களில் பதட்டமில்லாமல், யாருக்கும் தீங்கிழைக்காமல் செயல்புரிவது எனப் பொருள்.
பொறுமை: (Patience)
நாம் எடுத்துக்கொள்ளும் காரியங்கள் தடங்கலை எதிரிடலாம், முடிவு நினைத்தபடி அமையாமல் போகலாம், அல்லது நினைத்த நேரத்தில் நிகழாமல் போகலாம், அல்லது எதிர்ப்புகள் காரணம் தாமதமாக முடியலாம், மற்றவுர் ஒத்துழைப்பு நினைத்தபடி அமையாமல் ஆகலாம். ஆனாலும் எப்பொழுதும் நாம் நிலை குலயாமல் திடமாக இருப்பதற்குப் பெயர்தான் “பொறுமை”. அதாவது எந்த நிலையிலும் நாம் சஹிப்புத் தன்மை உள்ளவர்காளாகத் திகழ வேண்டும் எனப் பொருள்.
தன்னம்பிக்கை: (Self-Confidence)
எத்தருணத்திலும், எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அதை நம்மால் விஜயகரமாக முடிக்க முடியும், அதற்கு வேண்டிய உழைப்பு நம்மால் தர முடியும், அதற்கு வேண்டிய சாமார்த்தியம் நம்மிடம் இருக்கிறது என்ற நம் மேல் நமக்கிருக்கும் நம்பிக்கைக்குப் பெயர்தான் “தன்னம்பிக்கை”. அதாவது நம் கழிவாற்றலில் நமக்கு இருக்கும் அசைக்க முடியாத அபிப்பிராயம் எனப் பொருள்.
தைர்யம்: (Courage)
ஒரு காரியத்தைச் செய்யும் முன் அதன் பலாபலன்களைச் சிந்திக்கும் பொழுதும், அதன் விளைவில் பயன் இல்லாமல் போகும்பொழுதும், எந்த ஒரு இக்கட்டான தருணம் வந்தாலும் அதைக் கலங்காமலும் மன உறுதியுடனும் எதிர்கொண்டு செயல் புரிவது, அதன் விளைவுகளைத் துணிவுடன் எதிர்கொள்ளுதல் போன்ற தன்மை நம்மை ஊக்குவிக்க வேண்டும். அதுதான் “தைர்யம்” எனப்படும். அதாவது எததருணத்திலும் மனம் தளர்ச்சியடையாமல் உறுதியுடன் செயல் படுவது எனக் கருத்து.
ச்ரத்தை: (Attentive)
நாம் செய்யும் காரியத்தில் அல்லது நாம் கிரஹிக்கும் விஷயங்களில் மிக உன்னிப்பாக கவனம் செலுத்துதல், அதன் பொருளை நன்றாக உணர்ந்து செயல்படுதல், செய்யும் அல்லது கிரஹிக்கும் விஷயங்களை நன்றாக ஞாபகத்தில் வைத்தல் போன்ற தன்மையை உருவாக்கிக்கொள்வதற்குப் பெயர் “ச்ரத்தை” எனப்படும். அதாவது நம் கவனததைச் செலுத்தும் காரியத்தில் அல்லது கிரஹிக்கும் விஷயத்தில் ஏக மனதாக நிலை நாட்டுவது எனப் பொருள்.
கடமை உணர்ச்சி: (Duty Bound)
எந்த ஒரு பணியில் ஈடுபடும்போதும் அது நமது கடமை அல்லது அது நம்மால் ஆக வேண்டிய ஒரு பணி, அல்லது அது நம்மால் செய்யப்பட வேண்டிய ஒரு கர்மம் அல்லது அது நம்மைச் சார்ந்த ஒரு வேலை, நாம் அதைச் செய்யவில்லையானால் அது மற்றவருக்குச் சாதகமாக அமையாமல் விரோதமாக அமையும் என்ற உணர்வுக்குப் பேர் “கடமை உணர்ச்சி” அதாவது அது நம்மைச் சார்ந்த ஒரு பொறுப்பு என்ற பாவனை எனப் பொருள்.
விடாமுயர்ச்சி: (Stead Fastness)
ஒகு பணியில் ஈடுபடும்பொழுது இடையில வரும் இக்கட்டுகளை வென்று, மனம் தளராமல், நம் கடமையிலிருந்து பின்வாங்காமல் உறுதியுடனும், ஊக்கத்துடனும், கருத்துடனும் செயல் புரிந்து காரியத்தில் வெற்றி பெற நாம் புரியும் சாதனைக்குப் பெயர்தான் “விடாமுயற்சி” எனப்படுகிறது. அதாவது, தோல்வியைக் கண்டும்கூட மனம் தளராமல், மீண்டும் வெற்றிக்காகப் போராடுவது எனக் கொள்ளலாம்.
மனோ நியந்த்ரணம்: (Mind Control)
சராசரி மனிதர்கள் மனம் போன போக்குப்படி செயல் புரிபவர்கள். ஆனால் மனதை நம் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். அதெப்படி? ஆசா பாசங்கள், ஸுக துக்கங்கள், திடுக்கிடும் சைய்திகள் முதலியன நம் மனதை ஆட்கொள்ள இடம் தராது, அத்தருணங்களில் புத்திபூர்வமாகச் சிந்தித்து மனம் போன போக்கில் நமது விசாரங்களின் பிடியில் அகப்படாது செயல் புரிந்தால் “மனோ நீயந்த்ரணம்” ஆகிவிடும், அதாவது, மனம் நம் சொற்படிச் செயல் படுவது எனப் பொருள். மேலே கூறின குணங்கள் நமக்கு இருந்தால் மனோ நியந்தரணம் தானே வரும்.
ஸூக்ஷ்ம புத்தி: (Sharp Intellect)
விசாரங்கள் மனதில் உதிக்கின்றன. அவைகளைத் தரம் பிரித்து அதற்குத் தகுந்த செயல் புரிய நாம் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். நம் புத்தி நமக்குச் செயல் பட வழி காட்டியாக இருக்கும் ஓர் உறுப்பு. கிடைத்த விஷயத்தை நன்றாகச் சிந்தித்துப் பார்த்து நம் கொள்கைக்கு உகந்தபடி செயல் புரியத் தூண்டுவது புத்தி. இந்த புத்தி நாம் கற்கும் ஞானத்தால் மிகவும் கருத்துடனும் உஷாராகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் இதுதான் “ஸூக்ஷ்ம புத்தி” எனக் கூறப்படுகிறது. அதாவது, நம் புத்தியை தீக்ஷ்ணமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனப் பொருள்.

மேற்கூறிய அடிப்படைக் கோப்புகளுடன் நமது மனம் அமைய வேண்டும் என எடுத்துக்காட்டுகிற்து. அதெப்படி முடிய்ம்? இவை நாம் சிறு வயதிலிருந்தே கற்க வேண்டிய விஷயங்கள். நம் மாதாபிதாக்கள், குருநாதர்கள், பந்துக்கள், சினேகிதர்கள் முதலியோரிடம் பழகும்பொழுது நம் மன அமைபபை இந்த விதம் உருவாக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். இது ஸ்வயம் ப்ரயத்தினத்தால் தான் இயலும்.

நன்றி...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum