Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
பித்தம் தணிக்கும் இலந்தை!
Page 1 of 1
பித்தம் தணிக்கும் இலந்தை!
எனக்கு இலந்தைப் பழமும் பேரீச்சம் பழமும் சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆனால் அவற்றின் மருத்துவகுணங்கள் தெரியவில்லை. அவை பற்றிய ஆயுர்வேத கருத்துகள் எவை?
சீமை இலந்தை (ராஜபதரம்), நாட்டு இலந்தை (பதரம்), காட்டு இலந்தை (க்ஷýத்ர பதரம்) என்று பழத்தின் உருவத்தைக் கொண்டு இலந்தைப் பழம் மூன்று வகையில் கிடைக்கின்றது. உருவத்தில் பெரிதான சீமை இலந்தை இரான், ஆப்கானிஸ்தான், சீனா , இந்தியாவில் காஷ்மீர், பாகிஸ்தானில் பலுசிஸ்தானம் ஆகிய இடங்களில் நிறைய விளைகிறது. வெளிநாடுகளிலிருந்து வருவதால் அதற்குச் சீமை இலந்தை என்று பெயர். ருசியில் நல்ல இனிப்பானது.
புளிப்புத் தூக்கலான இனிப்புடன் கூடியது நாட்டு இலந்தை. துவர்ப்பும் புளிப்பும் மிக்கது காட்டு இலந்தை. அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால், உணவாக அதிகம் பயன்படுவதில்லை.
பிடித்திருக்கிறது என்ற காரணத்தினால் இலந்தைப் பழத்தை அதிகம் சாப்பிட்டால் பசி மந்தமாகிவிடும். அதற்குக் காரணம் அதிலுள்ள நெய்ப்பும் பிசுபிசுப்பும்தான். காய் கனிந்து பழமாகிவிட்டால் அதன் சுவை கூடிவிடும். அதைச் சாப்பிட்டால் பித்தம் தணிந்துவிடும். நன்றாகப் பழுத்திருந்தால் அதிலுள்ள விதையை நீக்கிவிட்டு, தோலையும் பழச் சதையையும் உலர்த்தி வைத்துக் கொண்டு, தொண்டை நுரையீரல் பகுதிகளில் கபம் உறைந்து வெளியே வராமல் வறட்டிருமல் ஏற்படும் போது இதைச் சாப்பிட கபம் இளகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும்.
தொண்டை எரிச்சல் குறையும். விக்கலைப் போக்கி, பசியை நன்றாகத் தூண்டிவிடும், நீரிழிவு நோயில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், அடிக்கடி போகும் சிறுநீரின் அளவைக் குறைக்கவும் இது உதவும். குடலில் தேங்கும் மலத்தை இளக்கி வெளியேற்றிக் குடலுக்கு வலுவூட்டும்.
சிலருக்குப் பசி மந்தமாகி ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அந்த நிலையில் இலந்தை வற்றலுடன் மிளகும் இந்துப்பும் சேர்த்துத் தூளாக்கி, சிறிது சூடான தண்ணீருடன் காலையில் சாப்பிட, பசி மந்தம் நீங்கி, ஜீரண சக்தி அதிகமாகும். பொதுவாக புளிப்பு கெடுதல். ஆனால் புளிப்பான இலந்தை வற்றலைச் சேர்த்துப் பச்சடி செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் களைப்பை நீக்கி, உடலுக்குப் புஷ்டி, பலமளிப்பதில் சீமை இலந்தைப் பழம் நல்ல உணவாகும்.
பேரீச்சம்பழம், சிற்றீச்சை (கர்ஜுரம்), பேரீச்சை (பிண்டகர்ஜுரம்) என இரண்டு வகை. இதில் பேரீச்சையில் பழமாகப் பாடம் செய்யப்பட்டது பேரீச்சம் பழமென்றும், உலர வைத்து பேரீச்சங்காய் என்றும் கிடைக்கிறது.
நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடிய பேரீச்சம் பழத்தில் பிசுபிசுப்பும் இனிப்பும் உண்டு. பலம் புஷ்டி, பசி தரக்கூடியது. மலத்தை இளக்கி வெளியாக்கும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். தொண்டை மார்பில் கட்டிள்ள கபத்தை இளக்கி, வெளியே கொண்டுவரும்.
பேரீச்சங்காய் வாயில் அதிகமாக ஊறும் எச்சிலைத் தடுக்கும். பேதி, சீதபேதி, ரத்த பேதி போன்றவற்றை நிறுத்தும். காயைச் சாப்பிட்டுவிட்டுப் பால் அருந்தலாம்.
பேரீச்சங்காய் கஷாயம் சாப்பிட கபஜ்வரம், பிதற்றலுடன் கூடிய காய்ச்சல், வறட்டிருமலால் விலாவலி, பசியின்மை, மலச்சிக்கல் போன்றவை நீங்கும்.
தேனில் ஊறிய பேரீச்சம்பழத்தை ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, விந்தணுக்கள் வளரும். ரத்தத்தையும் பித்தத்தையும் தெளிவாக்கும்.
நன்றி தினமணி
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது..!
» பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!
» பித்தம் தனிக்கும் கொத்தமல்லி.
» வெப்பத்தை தணிக்கும் வெட்டி வேர்
» உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்.
» பித்தம் நீக்கும் அகத்திக்கீரை!
» பித்தம் தனிக்கும் கொத்தமல்லி.
» வெப்பத்தை தணிக்கும் வெட்டி வேர்
» உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|