சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

கனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமானது: திமுக பொதுக்குழு தீர்மானம் Khan11

கனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமானது: திமுக பொதுக்குழு தீர்மானம்

2 posters

Go down

கனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமானது: திமுக பொதுக்குழு தீர்மானம் Empty கனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமானது: திமுக பொதுக்குழு தீர்மானம்

Post by யாதுமானவள் Sun 24 Jul 2011 - 16:40

கோவை: கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி 20 சதவீத பங்குக்கு உரியவர் என்ற முறையில் அதை ஒரு குற்றமாக கற்பித்து கனிமொழியும், நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஜாமீனில் வருவதைக் கூட சிபிஐ கடுமையான ஆட்சேபித்து, இத்தனை நாட்கள் சிறையிலே வைத்திருப்பது இயற்கை நியதிக்கும், நியாயங்களுக்கும் இந்த வழக்கின் சூழ்நிலைகளுக்கும் புறம்பானது. பாரபட்சமானது என்று திமுக பொதுக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கோவை சிங்காநல்லூரில் திமுக செயற் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இன்று பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட-மாநில செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் செயற் குழுவில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. பின்னர் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

-அதிமுக அரசின் பொய் வழக்குகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.கழகம் அறப்போர் நடத்தும். பொய் வழக்கு போட்டு, பழிவாங்கும் நோக்கோடு செயல்படும் அதிமுக அரசை கண்டித்து ஆகஸ்டு 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தப்படும்.

-மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க வேண்டும்.

-திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை என்று நான்கு இடங்களில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் புதிதாக கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன. ஆனால் திமுக அரசு செய்த அனைத்துப் பணிகளையும் உருவில்லாமல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்படும் அதிமுக அரசு, தேசிய அறிவுசார் ஆணையம் அறிவித்திருக்கும் அடிப்படைப் பரிந்துரைகளுக்கும் மாறாக, அதிக எண்ணிக்கையில் உயர் கல்விக்கான பல்கலைக் கழகங்களைத் தொடங்கி விட்டால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்து விடாது என்று கூறிக்கொண்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாகச்சுமை மிகுந்த பழைய நிலைக்கே கொண்டு வர முடிவெடுத்திருப்பதாகச் சொல்வது மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர் கல்வியின் தரத்தையும், ஆராய்ச்சியின் தரத்தையும் நாசமாக்கி அழித்திடும் தவறான முயற்சி என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

-தமிழக அரசின் சார்பில் விரைவில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில், தமிழக அரசு 4200 கோடி ரூபாய்க்கு புதிய வரிவிதிப்பு செய்ததும், ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தார், ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஒரு காரணத்தைக் காட்டி அதன் மீதான வரியை ரத்து செய்வதாக அறிவித்ததும்- இந்த ஆட்சியாளர்களின் அவசரப்பட்ட முடிவுகள் என்று இப்பொதுக்குழு கண்டிப்பதோடு, எஞ்சியவற்றின் மீது உயர்த்தப்பட்ட வரிகளையும் கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.

-கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் கனிமொழி 20 சதவீத பங்குக்கு உரியவர் என்ற முறையில் அதை ஒரு குற்றமாக கற்பித்து கனிமொழியும், நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஜாமீனில் வருவதைக் கூட சிபிஐ கடுமையான ஆட்சேபித்து, இத்தனை நாட்கள் சிறையிலே வைத்திருப்பது இயற்கை நியதிக்கும், நியாயங்களுக்கும் இந்த வழக்கின் சூழ்நிலைகளுக்கும் புறம்பானது. பாரபட்சமானது.

-ஆ.ராசாவும், தயாநிதி மாறனும் நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று சொல்லி பதவி விலகி இருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு விரைவில் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என பொதுக்குழு நம்புகிறது.

-மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ள கலைஞரின் நிலைப்பாட்டை இப்பொதுக் குழு ஏற்று வலியுறுத்துகிறது.

-புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை பயன்படுத்த வேண்டும். இந்த புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

இவை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமானது: திமுக பொதுக்குழு தீர்மானம் Empty Re: கனிமொழி ஜாமீன் விவகாரம்-சிபிஐ நடவடிக்கை பாரபட்சமானது: திமுக பொதுக்குழு தீர்மானம்

Post by kalainilaa Sun 24 Jul 2011 - 18:06

இது எல்லாம் அரசியலில் சகஜம் .
இது அரசியல் சதுரங்கம்!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum