சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

.மரங்கொத்தி பறவை  Khan11

.மரங்கொத்தி பறவை

Go down

.மரங்கொத்தி பறவை  Empty .மரங்கொத்தி பறவை

Post by Atchaya Sun 24 Jul 2011 - 18:59

அந்த வனாந்தரத்தில் ஒரு கர்ம யோகியை போல அது அமர்ந்திருக்கிறது. அதன் பார்வை வானத்தின் மீதே பதிந்திருக்கிறது. என்றாலும், ஒன்றும் தெரியாத வெற்றுப் பார்வையல்ல. காவல் நாயை போன்ற விழிப்புணர்வோடு அது வானத்தை கண்காணித்தபடி, காட்சிகளை விழுங்கி கொண்டி ருக்கிறது.
.
அந்த காட்சிகளில் என்றேனும் ஒருநாள் ஒரு அதிசயம் பிடிபட லாம் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் நிறை வேறுமா? என்பது தெரியாது. கடைசியில் ஏமாற்றமே மிஞ்சலாம். இருந்தாலும், மாபெரும் தேடல் முயற்சி அது. மனிதர்களால் முடியாத முயற்சி. அதனால்தான், அந்த கர்மயோகியை உருவாக்கி காட்டின் நடுவே உட்கார வைத்திருக்கின்றனராம்.

அதுவும் ஒரு விஸ்வா சமான வேலைக் காரனை போல. என் கடன் கிளிக் செய்து கிடப்பதே என்று விண்ணில் தெரியும் காட்சிகளை எல்லாம் கிளிக் செய்து கொண்டே இருக்கிறது.

அந்த இடம் அமெரிக்காவின் அர்கான் சாஸ் மாகாணத்தில் உள்ள தேசிய வன விலங்கு சரணாலயம். அதில் பணியில் ஈடுபட்டிருக்கும் கர்மயோகி, தானியங்கி பறவை பார்வையாளர். அதாவது ரோபோ பேர்ட் வாட்சர்.

பறவை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் துறை பறவையியல், அதாவது ஆர்னிதோலாஜி என்று குறிப்பிடப் படுகிறது. பறவைகளை ஆய்வு செய்யும் நிபுணர் களுக்கு ஆர்னிதோலாஜிஸ்ட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதையே தொழிலாக அல்லாமல் பொழுதுபோக்காக மிகுந்த ஈடு பாட்டோடு செய்து வருபவர்களும் இருக்கிறார்கள்.
பேர்ட் வாட்சர், அதாவது பறவை பார்வை யாளர்கள் என்று அவர்கள் பிரபலமாக குறிப்பிடப்படுகின்றனர்.

இவர்கள் பறவைகளையே உலகமாக நினைத்து கொண்டிருக்கும் அற்புதமான மனிதர்கள். அன்புக் குரியவரை எதிர் பார்த்து நிற்பதுபோல புதிய பறவைகளை பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருந்து அவற்றை கண்டதும் ஒரு மாணவனின் உற்சாகத்தோடு குறிப்புகள் எடுப்பதே இவர்களின் வழக்கம்.

புதிய அல்லது அரிய பறவைகளை பார்க்க முடிவதை விட பறவை பார்வையாளர் களுக்கு சந்தோஷம் தரக் கூடிய விஷயம் வேறு எதுவுமில்லை. எண்ணற்ற பறவைகளை பார்த்து ரசிக்க முடிந்தாலும் அரிய ரகமாக கருதப்பட்ட மரங்கொத்தி பறவையை பார்க்க முடிய வில்லை எனும் ஏக்கம் இவர்களில் பலருக்கு உண்டு.

சாதாரண மரங்கொத்தி அல்ல, தங்க கழுத்து கருடனை போல தந்தத்தின் நிறம் கலந்த மரங்கொத்தி பறவை.

கியூபாவிலும், அமெரிக்காவின் தெற்கு பகுதியிலும் ஒரு காலத்தில் சுற்றித் திரிந்த இந்த அபூர்வ மரங்கொத்தி காடுகள் அழிக் கப்பட்ட தால் காணாமல் போய் விட்டன.
அதன் பிறகு அழிந்து போன பறவையின மாக கருதப்பட்ட இவை நடுவில் ஒன்றிரு முறை பறவையியல் நிபுணர்கள் சிலரது கண்ணில் பட்டதாக கூறப் படுகிறது.

அதன் விளைவாக அந்த பறவை இன்றும் கூட எங்கேனும் மறைந்திருக் கலாம் எனும் நம்பிக்கையில் அதனை கண்டுபிடித்து, அந்த இனம் அழிந்து போகால் காப்பாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. எனவேதான், இவை கண்ணில் பட்டதாக கூறப்படும் அர்கான் சாஸ் தேசிய வன விலங்கு சரணாலயத்தில் மாபெரும் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

மிசிசிபி ஆற்றங்கரையில் படுகையில் அமைந்திருக்கும் இந்த செழிப்பான வனப்பகுதியில், காணாமல் போய் விட்ட ஒரு பறவையை தேடுவது எளிதான செயல் அல்ல. பறவை எங்கிருக்கிறது என்று தெரியாது. எப்போது வரும் என்று தெரியாது.

இந்நிலையில், கொடிய வன விலங்கு களும், கண்ணுக்கு தெரியாத ஆபத்துக்க ளும் சூழ்ந்திருக்கும் இடத்தில், மனிதர்கள் பொழு தெல்லாம் அமர்ந்து பறவை வருமா என்று பார்த்திருக்க முடியாது. அப்படியே யாராவது ஒருவர் துணிவுடன் ஈடுபட்டா லும், மனித நடமாட்டம் பறவையை விலக செய்து விடலாம்.

இந்த காரணங்களால்தான், மரங் கொத்தி பறவையை தேடுவதற்காக என்று ஒரு தானியங்கி பறவை பார்வையாளரை உருவாக்கி இருக்கின்றனர்.

மரங்கொத்தி பறவையின் உலகை விட்டே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அரிய ரக மரங்ககொத்தி பறவையை இன்ன மும் இருப்பதாக சொல்லப்படு வதை உறுதி செய்து கொள்வ தற்காக காட்டின் நடுவே அவற் றின் இருப்பை கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும் பொறுப்பு ரோபோ பேர்ட் வாட்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ரோபோ பேர்ட் வாட்சர், அடிப்படையில் பார்த்தால் டிஜிட் டல் கேமராவும், அதனை இயக்கக் கூடிய சாப்ட்வேரும் தான்.பறவையியல் பார்வையாளர் செய்யக் கூடிய விஷயத்தை இந்த ரோபோ கண்ணும், கருத்துமாக நிறைவேற்றும் திறன் படைத்தது.
அதாவது, மரங்கொத்தி பறவை கண்ணில் படுகிறதா என்று சதா சர்வ காலம் பார்த்தபடி, காட்சி களை கேமராவில் பதிவு செய்து கொண்டே இருக்கும்.
இப்படி பதிவாகும் காட்சிகளில், மரங் கொத்தி பறவை என்றோ ஒரு நாள் சிக்கக் கூடும் என்பது நம்பிக்கை.

இதற்காகத்தான் அந்த ரோபோ வானத் தையே பார்த்துக் கொண்டிருக்கிறது. பறவை பறந்து செல்லக் கூடிய பாதையை கேமரா கண்களால் விழுங்கி கொண்டே இருக்கிறது.
இப்படி பதிவாகும் காட்சிகளில் பறவை தென்படுகிறதா என்பதை பார்த்து அதை மட்டும் சேமித்து வைத்துக் கொள்ளும் புத்திசாலித் தனம் அதற்கு உண்டு. மற்ற காட்சி களையெல்லாம் கழித்து கட்டி விடும்.

இப்படி பத்தா யிரத்தில் ஒரு படத்தை தான் அது பழுதில்லா தது என கருதி தன்னுள்ளே சேர்த்து வைக்கும். மனிதர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும்போது அசந்த ஒரு நொடியில் பறவை கண்ணில் படாமல் தப்பிவிடும் அபாயம் இந்த ரோபோவிடம் கிடையாது.
24மணிநேரமும் அது ஓய் வில்லாமல் உன்னிப்பாக கவனித் துக்கொண்டே இருக்கம். ஆனால் இந்த ரோபோவிடம் உள்ள ஒரே ஒரு குறை அதனால் மனிதர்க ளைப்போல அது மரக்கிளை களுக்கு நடுவே பறவை அமர்ந் திருக்கும்போது சலசலப்பை வைத்து அதன் இருப்பை உணர்ந்து கொள்ள இதனால் முடியாது.

இப்போதைக்கு வானத்தை பார்த்தபடி இருந்து அதன் நடுவே பறவை வந்தால் மட்டுமே கண்டு கொள்ளும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. இதுவரை வாத்து கள், கழுகுகள் போன்ற பறவை களை இந்த ரோபோ சிறைப்பிடித்து தந்திருக்கிறது.

மரங்கொத்தி பறவை இதன் பார்வையில் படும் பட்சத்தில் அந்த காட்சியும் பதிவாகி விடும் என்று நிபுணர் கள் எதிர்பார்த்து காத்திருக் கின்றனர். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் கென் கோல்டுபர்க் எனும் பேராசிரியர் இந்த ரோபோவை வடிவமைத்து இருக்கிறார்.

பொதுவாக மனிதர்களால் முடியாத காரியத்தை, ரோபோ வால் சீரும், சிறப்புமாக செய்ய முடியும் என்று ஒரு கருத்து இருக் கிறது. சலிப்போ, களைப்போ இல்லாமல் இடை விடாமல் செய் யக் கூடிய பணிகளை ரோபோவை விட சிறப்பாக மனிதர்களால் செய்து விட முடியாது. அந்த வகையில் தான் மரங்கொத்தி பறவையை தேடிப் பிடிக்க இந்த ரோபோவுக்கு பேராசிரியர் கோல்டு பர்க் உயிர் கொடுத்து இருக்கிறார்.

இந்த தேடல் வெற்றியை தந்து மரங் கொத்தி பறவை உலகின் பார்வைக்கு கொண்டு வரப்பட லாம். இல்லை அபூர்வ மரங் கொத்தி பறவையின் காலம் முடிந்து விட்டது என்று சந்தேகத் திற்கு இடமில்லா மல் முடிவு செய்து கொண்டு விடலாம்.

அது மட்டுமல்லாமல் இந்த தேடல் ரோபோ மற்ற தேடல் பணிகளுக்கான முன்மாதிரியாக வும் அமையலாம். அடுத்தகட்டமாக அழியும் நிலையில் இருக்கும் கரடி, கொரில்லா போன்ற விலங்கு களை கண் காணிக்கவும் இத்தகைய ரோபோக்களை களத்தில் இறக்க லாம். விமான நிலையங்கள் போன்றவற்றில் வெடி மருந்து பொருட்களை கண்டு பிடிக் கும் பணியிலும் ஈடுபடுத் தப்படலாம்.

ரோபோ ஆய்வு மற்றும் செயல் பாட்டில் இந்த பறவை பார்வையா ளர் மிகவும் முக்கியமா னதாக கருதப்படுகிறது.

நன்றி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum