சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்: தொழில் அதிபர் சுட்டுக்கொலை Khan11

சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்: தொழில் அதிபர் சுட்டுக்கொலை

2 posters

Go down

சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்: தொழில் அதிபர் சுட்டுக்கொலை Empty சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்: தொழில் அதிபர் சுட்டுக்கொலை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Aug 2011 - 14:56

சென்னை சவுகார்பேட்டை திருப்பள்ளிதெரு, வெங்கடமேஸ்திரி லேனை சேர்ந்தவர் சுதிர்குமார் சர்மா (வயது52). வட மாநிலத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான இவர் இங்கு குடும்பத்துடன் தங்கி எலக்ட்ரிகல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மம்தா.

இவர்களுக்கு மேகா என்ற பட்டதாரி மகளும், பிரசாந்த் என்ற மகனும் உள்ளனர். மம்தாவின் அண்ணன் மகன் ஆசிஷ் சர்மா (22) உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வசிக்கிறார். பூஜை மற்றும் கலைப்பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். வியாபார விஷயமாக அடிக்கடி இவர் சென்னை வந்து செல்வார். அப்போது இவருக்கு சுதிர்குமார் சர்மா ரூ.8 லட்சம் கடன் கொடுத்து இருந்தார்.

அதை திரும்ப கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கலைப்பொருட்கள் விற்பனை செய்வதற்காக ஆசிஷ்சர்மா தனது மனைவியுடன் சென்னை வந்திருந்தார். சவுகார்பேட்டையில் பெருமாள் முதலிதெருவில் வட மாநிலத்தவர் தங்கும் விடுதியில் முதல் மாடியில் 22-ம் எண் அறையில் தங்கி இருந்தார்.

இதை அறிந்த சுதிர்குமார் கொடுத்த கடனை திரும்ப கேட்டதற்காக நேற்று இரவு 11.30 மணி அளவில் தங்கும் விடுதிக்கு வந்தார். அப்போது ஆசிஷ் சர்மாவின் மனைவி சமையல் செய்வதற்காக மொட்டை மாடிக்கு சென்றிருந்தார். ஆசிஷ் சர்மா மட்டும் அறையில் இருந்தார். அவரிடம் சுதிர்குமார் கடனை திருப்பி கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆசிஷ்சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுதிர்குமார் தலையில் சுட்டார்.

இதில் அவரது நெற்றியில் குண்டு பாய்ந்து மற்றொருபுறம் வெளியே வந்தது. உட்கார்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சுதிர்குமார் அதே இடத்தில் பலியானார். உடனே ஆசிஷ்சர்மா தப்பி ஓடுவதற்காக வெளியே வந்தார். இந்த சமயத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு விடுதியின் 2-வது மாடியில் இருந்த காவலாளி மல்லையா ஓடி வந்தார்.

சுதிர்குமார் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தப்பி ஓட முயன்ற ஆசிஷ்சர்மாவை அறையில் தள்ளி பூட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில் வடசென்னை இணை கமிஷனர் செந்தாமரைக் கண்ணன், பூக்கடை துணை கமிஷனர் அன்பு, உதவிகமிஷனர் குமார், யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஆசிஷ் சர்மாவிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். அங்கு அலமாரியில் இருந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றினர். அது 7.62 எம்.எம்.பிஸ்டல் ஆகும். கொலையாளியை அறையில் தள்ளி பூட்டிய காவலாளி, அவரது மனைவி லட்சுமி, மகள் பத்மா ஆகியோரிடம் நடந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கொலை நடந்த தங்கும் விடுதியின் கீழ் தளத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. முதல் மாடியிலும், 2-வது மாடியிலும் தனித்தனி அறைகளும், அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக பெரிய ஹாலும் உள்ளது. காலை முதல் இரவு 11 மணி வரை எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும்.

அதன் பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இந்த கொலை நடந்துள்ளது. கைதான கொலையாளியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள். சுட்டு கொல்லப்பட்ட சுதிர்குமார் சர்மாவின் மகள் மேகாவுக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. திருமண செலவுக்கு பணம் தேவைப்படுவதால்தான் கொடுத்திருந்த கடனை திருப்பி கேட்டபோது தகராறு ஏற்பட்டு சுதிர்குமார் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொலை நடந்த விடுதியில் வடமாநிலத்தவர் மட்டுமே தங்குவார்கள். மற்ற இடங்களில் தங்குவதற்கு அதிக வாடகை என்பதால் இங்கு குறைந்த வாடகையில் அறைகள் கொடுக்கப்படும். இதனால் வட மாநிலத்தவர்கள் சென்னை வரும்போது இந்த தர்மசாலா என்ற விடுதியில்தான் தங்குவது வழக்கம். அவர்கள் மாடியில் தனியாக ஸ்டவ் வைத்து அவர்களே சமைத்து சாப்பிடுவார்கள். ஓட்டலில் சாப்பிடுவது கிடையாது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்: தொழில் அதிபர் சுட்டுக்கொலை Empty Re: சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்: தொழில் அதிபர் சுட்டுக்கொலை

Post by jasmin Tue 2 Aug 2011 - 14:59

இவர்களுக்கு இந்த துப்பாக்கி எப்படி கிடைக்கிறது ...உடனே இவர்களை தூக்கில் போட வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்: தொழில் அதிபர் சுட்டுக்கொலை Empty Re: சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்: தொழில் அதிபர் சுட்டுக்கொலை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Aug 2011 - 15:05

jasmin wrote:இவர்களுக்கு இந்த துப்பாக்கி எப்படி கிடைக்கிறது ...உடனே இவர்களை தூக்கில் போட வேண்டும்

நல்லது தல நீங்க சொன்னா சரிதான்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்: தொழில் அதிபர் சுட்டுக்கொலை Empty Re: சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்: தொழில் அதிபர் சுட்டுக்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum