Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்
2 posters
Page 1 of 1
இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்
புதுடெல்லி, ஆக. 3-
ம.தி.மு.க.
பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் பிரதமர் மன் மோகன் சிங்கை சந்தித்தார்.
அப்போது அவர் பிரதமரிடம் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:-
முல்லைப்பெரியாறு
அணையை உடைக்க கேரள அரசு திட்டமிடுகிறது. அதற்காகவே, அந்த அணை பலவீனமாக
இருப்பதாகப் பொய்ப் பிரசாரம் செய்கிறது. மத்திய அரசின் நீர்வள ஆணையம்,
நியமித்த வல்லுநர் குழுக்கள், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை
வலுவாகவே இருப்பதாக அறிக்கை கொடுத்து உள்ளன. இந்த வழக்கில் உச்சநீதி
மன்றம், அணை வலுவாக இருப்பதாகவும், நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம்
என்றும், தமிழகத்துக்கு சாதகமாக ஏற்கனவே தீர்ப்பு அளித்து விட்டது.
உச்சமன்றத்
தீர்ப்பை, வலு இழக்கச் செய்வதற்காகவே கேரள மாநில சட்டமன்றத்தில், கேரள
அணைகள் பாதுகாப்பு என்ற ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அதன்படி
தங்கள் மாநில எல்லைக்கு உள்ளே இருக்கின்ற அணைகளைப் பராமரிக்கவும்,
தங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும், இதில் எந்த நீதிமன்றமும் தலையிட
அதிகாரம் இல்லை என்றும் சட்டத் திருத்தம் கொண்டு வந்து உள்ளனர்.எனவே
முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று
கேட்டுக் கொண்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி
கொலை வழக்கில், பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்கு தண்டனையை ரத்து
செய்ய வேண்டும், 2 பேட்டரி செல்களை வாங்கி கொடுத்தார் என்பது தான், அவர்
மீதான குற்றச்சாட்டு, கொலைச் சதியைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.
பேரரறிவாளன்
குற்றம் செய்யவில்லை என்று, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ண அய்யர்
எழுதி உள்ளார். ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்து செய்து உள்ளீர்கள்.
அதுபோல பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய
வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.
அதற்கு பிரதமர் உங்கள் கோரிக்கையை, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னார்.
லட்சக்கணக்கான
ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டு உள்ள அனைத்து
பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும். ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழர்களுக்கு எதிராகவே
இந்தியா செயல்பட்டு இருக்கின்றது. இதைச் சொல்வதற்காக என் மீது வருத்தப்படக்
கூடாது.இனி உலக அரங்கில் இலங்கை அரசுக்குச் சாதகமாக செயல்படக் கூடாது
என்று வைகோ கேட்டுக் கொண்டார்.
அதற்கு பிரதமர், “இலங்கைக்கு நாம் உதவவில்லை என்றால், அங்கே சீனா கால் ஊன்றி விடும்” என்றார்.
அதற்கு
வைகோ ஏற்கனவே இலங்கைக் கடற்படைப்படகுகளில் வந்த சீனக் கடற்படை வீரர்கள்
தமிழக மீனவர்களைத் தாக்கி உள்ளனர். இலங்கை ஒரு போதும் நமக்கு ஆதரவாக
இருக்காது. சீனா, பாகிஸ்தானோடுதான் நட்பாக இருக்கும் என்றார்.
தமிழர்
பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை தடுக்க வேண்டும், அங்கே முகாமிட்டு உள்ள
சிங்கள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும். இனப்படுகொலைக் குற்றங்களுக்காக
பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் என்று இந்தியா
குரல் எழுப்ப வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார். பிரதமரிடம்
கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் வைகோ கொடுத்தார். இந்த சந்திப்பின் போது
கணேசமூர்த்தி எம்.பி. உடன் இருந்தார்.
மாலை மலர்
ம.தி.மு.க.
பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் பிரதமர் மன் மோகன் சிங்கை சந்தித்தார்.
அப்போது அவர் பிரதமரிடம் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:-
முல்லைப்பெரியாறு
அணையை உடைக்க கேரள அரசு திட்டமிடுகிறது. அதற்காகவே, அந்த அணை பலவீனமாக
இருப்பதாகப் பொய்ப் பிரசாரம் செய்கிறது. மத்திய அரசின் நீர்வள ஆணையம்,
நியமித்த வல்லுநர் குழுக்கள், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை
வலுவாகவே இருப்பதாக அறிக்கை கொடுத்து உள்ளன. இந்த வழக்கில் உச்சநீதி
மன்றம், அணை வலுவாக இருப்பதாகவும், நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம்
என்றும், தமிழகத்துக்கு சாதகமாக ஏற்கனவே தீர்ப்பு அளித்து விட்டது.
உச்சமன்றத்
தீர்ப்பை, வலு இழக்கச் செய்வதற்காகவே கேரள மாநில சட்டமன்றத்தில், கேரள
அணைகள் பாதுகாப்பு என்ற ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அதன்படி
தங்கள் மாநில எல்லைக்கு உள்ளே இருக்கின்ற அணைகளைப் பராமரிக்கவும்,
தங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும், இதில் எந்த நீதிமன்றமும் தலையிட
அதிகாரம் இல்லை என்றும் சட்டத் திருத்தம் கொண்டு வந்து உள்ளனர்.எனவே
முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று
கேட்டுக் கொண்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி
கொலை வழக்கில், பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்கு தண்டனையை ரத்து
செய்ய வேண்டும், 2 பேட்டரி செல்களை வாங்கி கொடுத்தார் என்பது தான், அவர்
மீதான குற்றச்சாட்டு, கொலைச் சதியைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.
பேரரறிவாளன்
குற்றம் செய்யவில்லை என்று, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ண அய்யர்
எழுதி உள்ளார். ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்து செய்து உள்ளீர்கள்.
அதுபோல பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய
வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.
அதற்கு பிரதமர் உங்கள் கோரிக்கையை, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னார்.
லட்சக்கணக்கான
ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டு உள்ள அனைத்து
பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும். ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழர்களுக்கு எதிராகவே
இந்தியா செயல்பட்டு இருக்கின்றது. இதைச் சொல்வதற்காக என் மீது வருத்தப்படக்
கூடாது.இனி உலக அரங்கில் இலங்கை அரசுக்குச் சாதகமாக செயல்படக் கூடாது
என்று வைகோ கேட்டுக் கொண்டார்.
அதற்கு பிரதமர், “இலங்கைக்கு நாம் உதவவில்லை என்றால், அங்கே சீனா கால் ஊன்றி விடும்” என்றார்.
அதற்கு
வைகோ ஏற்கனவே இலங்கைக் கடற்படைப்படகுகளில் வந்த சீனக் கடற்படை வீரர்கள்
தமிழக மீனவர்களைத் தாக்கி உள்ளனர். இலங்கை ஒரு போதும் நமக்கு ஆதரவாக
இருக்காது. சீனா, பாகிஸ்தானோடுதான் நட்பாக இருக்கும் என்றார்.
தமிழர்
பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை தடுக்க வேண்டும், அங்கே முகாமிட்டு உள்ள
சிங்கள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும். இனப்படுகொலைக் குற்றங்களுக்காக
பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் என்று இந்தியா
குரல் எழுப்ப வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார். பிரதமரிடம்
கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் வைகோ கொடுத்தார். இந்த சந்திப்பின் போது
கணேசமூர்த்தி எம்.பி. உடன் இருந்தார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசை விசாரிக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்
நல்ல செய்தி தந்த நண்பருக்கு நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
» கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்
» இலங்கை போர்க்குற்றம்-இந்திய பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - நிதின் கட்காரி உறுதி
» இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க முடியாது
» இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியா தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவுள்ளது.
» கே.பியை விசாரிக்க இலங்கை வரும் நெதர்லாந்து நீதிபதிகள்
» இலங்கை போர்க்குற்றம்-இந்திய பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - நிதின் கட்காரி உறுதி
» இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க முடியாது
» இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியா தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவுள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|