சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

பாலியல் வன்முறை என்றால் என்ன? Khan11

பாலியல் வன்முறை என்றால் என்ன?

Go down

பாலியல் வன்முறை என்றால் என்ன? Empty பாலியல் வன்முறை என்றால் என்ன?

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 20:44

பாலியல் வன்முறை என்றால் என்ன? Child%20sexual%20abuse-jpg-1078
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்றால், குடும்பத்தில் உள்ள ஒருவரோ, அல்லது வேறு யாரேனுமோ, தன் பாலுணர்வைத் திருப்திப்படுத்திக் கொள்ள குழந்தையைப் பயன்படுத்துதல். இளம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினரும் இதற்கு ஆளாகக்கூடும். பாலியல் வன்முறை என்பது உடல்ரீதியான, வாய்மொழியான அல்லது உணர்வுரீதியானதாக இருக்கலாம்; கீழ்க்கண்டவையும் இதில் அடங்கும்...

* பாலியல் நோக்குடன் தொடுதல் அல்லது தடவுதல்
* பெரியவர்களின் பாலுறவுச் செயல்கள் அல்லது பாலுறவுப் படங்களைக் காட்டுதல்
* படம் எடுப்பதற்கோ அல்லது நேரடியாகப் பார்க்கவோ குழந்தைகளை ஆடை களைய வைத்தல் அல்லது பாலியல் செயல் செய்து காட்டச் செய்தல்
* குளியலறை, படுக்கையறையில் குழந்தை இருக்கும் போது மறைந்திருந்து பார்த்தல்
* பாலியல் பலாத்காரம் செய்தல் அல்லது அதற்கு முயற்சி செய்தல்

குற்றம் புரிபவர் மிரட்டியோ, ஏமாற்றியோ, மிட்டாய் போன்றவற்றைக் கொடுத்தோ இவ்வாறு ஒரு குழந்தையைப் பயன்படுத்தக்கூடும். இவ்வாறு செய்பவர்கள் குழந்தைகளை அடித்து மிரட்ட வேண்டிய தேவை அரிதுதான். ஏனெனில், குழந்தைகள் எப்போதுமே பெரியவர்களின் அன்புக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்குகிறார்கள். பெரியவர்கள் செய்வது சரியாக இருக்கும் என்றே கருதுவார்கள். வன்முறையாளர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

பாலியல் வன்முறையின் அறிகுறிகள் யாவை?

குற்றம் புரிந்தவரிடம் பயப்படுவதால், தாம் அனுபவித்த வன்முறையை குழந்தைகள் பொதுவாகக் கூறமாட்டார்கள். யாரிடமாவது சொன்னால் அதற்கு அல்லது அதன் வீட்டில் உள்ளவருக்கு ஏதேனும் தீங்கு செய்து விடுவேன் என்று குற்றவாளி பயமுறுத்தலாம். குற்றம் புரிபவர் குழந்தைக்குத் தெரிந்தவராக இருந்தால், தமக்குள் இருக்கும் 'சிறு ரகசியத்தை' யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லக்கூடும்.

பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரியும். எனவே பெற்றோரும், கவனிப்பாளர்களும் இவற்றை விழிப்புடனிருந்து கவனிக்க வேண்டும்.

* உறக்கத்தில் பாதிப்புகள்
* பள்ளியில் பிரச்சினைகள்
* குடும்பம், நண்பர்கள் அல்லது வழக்கமான செயல்களிலிருந்து விலகியிருத்தல்.

மற்ற பிரச்சினைகள்:

மன அழுத்தம், பதற்றம், கவலை, ஒழுக்கத்தில் பிரச்சினை, போதை மருந்து அல்லது மதுப் பழக்கங்கள், கோபம், எரிச்சல், முரட்டுத்தனம், பாதிக்கப்பட்ட சிலர் வீட்டை விட்டு ஓடி விடுதல் ஆகியவை.

அடிக்கடி பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள், அந்த வயதிற்கும் மீறிய பாலியல் பற்றிய தகவல் அல்லது நடத்தையை வெளிக்காட்டுவார்கள். பெரியவர்களின் பாலியல் நடத்தைகளை செய்துகாட்டுவர். வாயில் விளக்கமுடியாத வலி, வீக்கம், எரிச்சல், இரத்தம் கசிதல்; சிறுநீர் உறுப்புகளில் தொற்று, மற்றும் பால்வினை நோய் தொற்றுகள் இருக்கும்.

பாதிக்கப்படும் குழந்தையின் உணர்ச்சி எவ்வாறு இருக்கும்?

பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைக்கு பலவித உணர்ச்சிகள் இருக்கும். குற்றம் செய்தவர் மீதான பயம்; மற்றவர்களிடமிருந்து தான் வேறுபட்டதான உணர்வு; தன்னை பாதுகாக்கவில்லை என்பதற்காக தன்னை சுற்றியுள்ளோர் மீது கோபம்; தனிமை, கவலை, குற்ற உணர்வு, குழப்பம், மற்றும் அவமான உணர்வு.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

அக்கறையுள்ள பெற்றோரான நீங்கள் கீழ்க்கண்ட சிலவற்றைச் சொல்லிக் கொடுக்கலாம்:

* அவர்கள் நேசிக்கப்படுகிறார்கள், மதிக்கப்படுகிறார்கள், மிக அருமையானவர்கள் என்பதை சொல்ல வேண்டும்.
* சரியான மற்றும் தவறான தொடுதல் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குதல்.
* அவர்களுடைய உடல் அவர்களுக்கே சொந்தம், யாருக்கும் அதை பயன்படுத்தவோ, தீங்கு செய்யவோ உரிமை இல்லை என்பதைக் கூற வேண்டும்.
* அசௌகரியம் ஏதும் இருந்தால் எல்லாவற்றையும் பெற்றோருக்குத் தெரிவிக்கக் கூறுதல்.
* குழந்தை பெற்றோரின்மீது நம்பிக்கை வைத்து சம்பவத்தைப் பற்றி பேசும்போது, பெற்றோர் அவர்களுக்குத் தேவையான நல்ல ஆதரவை அளிக்கவேண்டும்.

செய்ய வேண்டியவை:

* அமைதியாக இருங்கள்.
* குழந்தையை நம்புங்கள்.
* 'உன்னால் தடுக்க முடியவில்லை என்பது எனக்குப் புரிகிறது', 'நீ என்னை நம்புவதைப் பற்றி எனக்குப் பெருமையாக இருக்கிறது' என்பது போலக்கூறி நம்பிக்கை ஊட்டுங்கள்.
* குழந்தையின் அந்தரங்கத்தை மதிக்க வேண்டும், வேற்று நபர்கள் முன் அதைப் பற்றிப் பேச வேண்டாம்.
* எந்த நிரந்தர பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்ய ஒரு மருத்துவரிடம் காட்டவும்.

செய்யக்கூடாதவை:

* பீதியடைவதோ அல்லது அளவுக்கதிக எதிர்வினை காட்டுவதோ கூடவே கூடாது. குழந்தைக்குக் கஷ்டமான இந்த நேரத்தில் உதவியும் ஆதரவும் தேவை.
* குழந்தையின் முன்னிலையில் குற்றம் புரிபவரை கண்டிக்க வேண்டாம்.
* பாலியல் வன்முறை ஒருபோதும் குழந்தையின் குற்றமாகாது, எனவே குழந்தை மேல் குற்றம் சுமத்த வேண்டாம்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum