Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
+4
jasmin
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
kalainilaa
8 posters
Page 1 of 1
மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
சிவகங்கை,பனையூர்
வீரத்தின் முகவரியாய்,
முன்மொழிந்தது!
பலவகை,விளையாட்டுக்களில்,
தான்,தகுதிப் பெற்றாலும்
ஈர்த்தது போர் வீரனாய்,
கான்ஷாகிப்பை!
இந்த வீரத்துடனே
மருத நாயகம் என்ற
பெயரில் வெற்றி நாயகனாய்,
பவனிவந்தார்!
மராட்டிய மன்னனின்
ராணுவத்தில் தன்னை இணைத்து,
முதல் ராணுவ அனுபவத்தை கொண்டு
பின் .....
பிரெஞ்சுப் படையின்
போர் புலியாய்,அவதரித்து,
முக்கிய பதவிகளில்
அடைக்கலமானார்!
காலத்தின் சூறவெளி,
கருத்து வேறு பாடுகளால்,
இவரையும்,திசை மாற்ற,
ஆங்கிலேயே சூழ்ச்சிக்கு,
இரையானார்!
ஆங்கிலேயப் படையில்
இணைந்தவுடனே,
ராபர்ட் கிளை அனுமதியுடன்
மைசூர் சிங்கத்துடன்,
இந்த சிங்கத்தை,மோதவிட்டு
தனது ராஜதந்திரத்தை,
செய்வனே செய்தனர் ஆங்கிலேயர்கள்!
நாவப் கொண்ட துரோகத்தோடு
திட்டமிட்ட சதியில்,
திண்டுக்கலில் ,சிங்கம் ஒன்று,
தோற்றது!
மருத நாயகம் சிங்கம் வெல்ல,
ஆங்கில சூழ்ச்சிகள் சிரித்தன!
சூழ்ச்சிகள் தொடர,
புலித் தேவனுக்கு போர்தொடுக்க,
தோல்வி கொண்ட சிங்கத்தை,
சீண்டிப் பார்த்ததால்,
மீண்டும் போர்,
நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு
பூலித்தேவனை வென்றார்.
தன்னை ஆதரித்த
பிரஞ்சு படையே தோற்க
செய்த வல்லமையைக் கண்டு,
கவர்னராக நியமித்தனர்.
ஆங்கிலயேர்!
பொறமை இங்கு எட்டிப்பார்த்து,
நாவப் மனதில்.
எனக்கு சமமாய்,
எனது படையில் இருதவனுக்கு
பதவியா என்ற நிலையில்.
பனிப்போர் நடக்க,
சமயம் பார்த்த ஆங்கிலேர்கள்,
தீமுட்ட ,இன்னும் பரவியது.
மருதநாயகம் ,தனது தவறை
இது காரணமாய் ,அறிய ,
காட்சி மாறியது ,களம் மாறியது!
நாவப்க்கும் ,ஆங்கிலேயர்களுக்கும்,
கப்பம் கட்ட மறுக்க,
விவேகம் பெற்றது வீரம்!
கோவத்தின் உதயம்
ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டு
மஞ்சள் கொடி பறக்கப்பட்டது!
விவேகமும் அங்கு கைகொடுக்க
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற
கொள்கையை கையாள,
மஞ்சள் கொடியோடு
பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும்
பறக்க விட்டார் !
நவாப்பின் கோபம் சினம்கொள்ள
அடுத்து அடுத்து போர்,
எல்லாம் ஆங்கிலேயர் ,
புறமுதுகிட்டு ஓட
சிங்கம் ஒன்னு புறப்பட்டதே
வெற்றிக்கு என்ற கர்ஜனையோடு,
நடமாட்டம்!
வாள்கள்,பேசப்பட்டன,
மருத நாயகத்தின் கையில்.
முன்னால் நண்பன்,
ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன்
சுடப்பட்டு படுகாயமடைந்தார்.
பின்னர் உயிர் துறந்தார்.
ஆங்கிலேயர்களை
எதிர்த்து போரிடும் செய்தியும்,
அதன் வெற்றிகளும், மைசூர் சிங்கம்
ஹைதர் அலி அறியவே
பழைய பகையை மறந்தார்.
மண்ணுரிமை போரில்,
தனது நிலைக்கு மருதநாயகம்
வந்ததை வரவேற்று
சிங்கம் ஒன்று சிங்கத்துக்கு
வாழ்த்து செய்தி அனுப்பியது!
தந்திரமும்,வஞ்சகமும்
கைகுலுக்க,
சிவகங்கை சீமையின்
விஷமியான தாண்டவராயன்
விலாசத்துடன்,களமிறங்கியது!
இன்று நடக்கும் போரில்
பொருளாதார தடைகள்போல,
திட்டமிட்டு மதுரை போர்
ஆங்கிலேயர்களால்,
மருதநாயகத்தின் கோட்டை,
நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது,!
உணவு,ஆயுதங்கள், மருந்துகள்
கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது.
நானும், நீயும் வேறல்ல.
நமது படையும், நாடும் வேறல்ல”
என்று சகோதர உணர்வோடு
ஹைதர் அலி கடிதம் எழுதி
தனது ஆதரவை வழங்கினார்.
போரில் வெற்றி மறக்கப்பட்ட
நிலையில் வழக்கம்போல்
ஆங்கிலேயே எண்ணம்
தந்திரத்திலும்,அதன் மூலம்,
வஞ்சம் தீர்க்க திட்டமிட்டது!
தாண்டவராயன்,உதவியோடு,
கான்சாஹிபின் அமைச்சர்களில்
ஒருவரான சீனிவாசராவை
வலையில் வீழ்த்தினர்.
கட்சி மாற காட்சியும் மாறியது,
மெய்க்காவலர்களான பாபாசாஹிப்,
சேகுகான் உள்ளிட்டோரையும்,
பிரதான தளபதியும், பிரெஞ்சு
அதிகாரியுமான மார்ச்சந்த்தையும்
துரோக வலையில் இணைத்தனர்.
நண்பர்கள் ,துரோகியாய்,
மாறியது தெரியாமல்
ரமலான் மாதம்,தொழுத நிலையில்,
துரோகிகள் சிங்கத்தை சிறைப்பிடித்தனர்!
காரணம் அறிந்து சிங்கம்
வேண்டுகோள் அறிவித்தது,
எதிரிகளிடம் ஒப்படைக்காமல்
நண்பர்களே ,உங்களால்
இறப்பது எனக்கு சுகம்,
என்னை கொல்லுங்கள்,என்று,
வேண்டுகோள் கொடுத்தது!
கோழைகள் ஒன்று சேர்ந்து,
சிங்கத்தை ,படியவைக்க
கட்டப்பட்ட நிலையில்,
பட்டினி போட்டு
படிய சொன்னது,
மன்னிப்புக் கேட்க சொன்னது.
வீரம் மனம் மறுக்க
வழக்கம்போல ஆங்கிலேய
மனம் வஞ்சகம் தீட்ட ,
இவருக்கு தண்டனையில்லை
நவாப் முன்னிலையில் சொல்ல
நவாப்பை கோவம் கொள்ள...
தூக்கு தண்டனை என்று
சொல்ல செய்தது!
மதுரைக்கு மேற்கே
சம்மட்டிபுரத்தில் உள்ள
ஒரு மாமரத்தில் சிங்கம்
தூக்கிலிட கொண்டுவரப்பட்டார்,
அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,
தூக்கிலிடப்பட்டதும்
அவர் மரணிக்கவில்லை.
கயிறும் ,மருதநாயகத்தின்,
இறப்பை ஏற்காமல்,
அறுந்து விழுந்தது!
புதிய கயிறு கட்டப்பட்டது
மீண்டும் தூக்கிலிடப்பட்டார்,
அப்போதும் உயிர் பிரியவில்லை.
நான் யோகாசனம் பயின்றவன்.
கழுத்தை உப்ப வைத்து,
பல மணிநேரம் மூச்சை அடக்கும்
ஆற்றல் கொண்டவன் என்று
அந்த நிமிடமும்
தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம்.
எதிரிகள் குலை நடுங்கினர்.
வஞ்சகம் வெற்றி பெற
இறுதில் மருதநாயகம்
மரணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மருதநாயகம் ,இறந்த பின்னும்
துரோகிககளின் தூக்கத்தில்
கனவிலில் கூட
மருநாயகம் போர்தொடுக்க,
எங்கே மீண்டும் உயிர் பெற்று
விடுவாரோ என்ற அச்சநிலை....
தலை, கால், கை என
பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட
சிங்கத்தின் உடல் பல்வேறு
ஊர்களுக்கு தனித்தனியாக
அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது.
ஆம், செத்த பிறகும்
வீரன் மருதநாயகத்தின்
உடலை கண்டு ஆங்கிலேயர்களும்,
துரோகி ஆற்காடு நவாப்...
முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர்.
வீரனின் உடல்
தமிழக முழுதும்
வீரத்தின் வீரியம்
விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்திருக்கு!
இவரை போன்ற
மாவீரனின் உடலால்,
உதிரத்தால் இன்னும் வீரம்
மறையவில்லை தான்
இந்த மண்ணில் இன்னும் ...!
வீரத்தின் முகவரியாய்,
முன்மொழிந்தது!
பலவகை,விளையாட்டுக்களில்,
தான்,தகுதிப் பெற்றாலும்
ஈர்த்தது போர் வீரனாய்,
கான்ஷாகிப்பை!
இந்த வீரத்துடனே
மருத நாயகம் என்ற
பெயரில் வெற்றி நாயகனாய்,
பவனிவந்தார்!
மராட்டிய மன்னனின்
ராணுவத்தில் தன்னை இணைத்து,
முதல் ராணுவ அனுபவத்தை கொண்டு
பின் .....
பிரெஞ்சுப் படையின்
போர் புலியாய்,அவதரித்து,
முக்கிய பதவிகளில்
அடைக்கலமானார்!
காலத்தின் சூறவெளி,
கருத்து வேறு பாடுகளால்,
இவரையும்,திசை மாற்ற,
ஆங்கிலேயே சூழ்ச்சிக்கு,
இரையானார்!
ஆங்கிலேயப் படையில்
இணைந்தவுடனே,
ராபர்ட் கிளை அனுமதியுடன்
மைசூர் சிங்கத்துடன்,
இந்த சிங்கத்தை,மோதவிட்டு
தனது ராஜதந்திரத்தை,
செய்வனே செய்தனர் ஆங்கிலேயர்கள்!
நாவப் கொண்ட துரோகத்தோடு
திட்டமிட்ட சதியில்,
திண்டுக்கலில் ,சிங்கம் ஒன்று,
தோற்றது!
மருத நாயகம் சிங்கம் வெல்ல,
ஆங்கில சூழ்ச்சிகள் சிரித்தன!
சூழ்ச்சிகள் தொடர,
புலித் தேவனுக்கு போர்தொடுக்க,
தோல்வி கொண்ட சிங்கத்தை,
சீண்டிப் பார்த்ததால்,
மீண்டும் போர்,
நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு
பூலித்தேவனை வென்றார்.
தன்னை ஆதரித்த
பிரஞ்சு படையே தோற்க
செய்த வல்லமையைக் கண்டு,
கவர்னராக நியமித்தனர்.
ஆங்கிலயேர்!
பொறமை இங்கு எட்டிப்பார்த்து,
நாவப் மனதில்.
எனக்கு சமமாய்,
எனது படையில் இருதவனுக்கு
பதவியா என்ற நிலையில்.
பனிப்போர் நடக்க,
சமயம் பார்த்த ஆங்கிலேர்கள்,
தீமுட்ட ,இன்னும் பரவியது.
மருதநாயகம் ,தனது தவறை
இது காரணமாய் ,அறிய ,
காட்சி மாறியது ,களம் மாறியது!
நாவப்க்கும் ,ஆங்கிலேயர்களுக்கும்,
கப்பம் கட்ட மறுக்க,
விவேகம் பெற்றது வீரம்!
கோவத்தின் உதயம்
ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டு
மஞ்சள் கொடி பறக்கப்பட்டது!
விவேகமும் அங்கு கைகொடுக்க
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற
கொள்கையை கையாள,
மஞ்சள் கொடியோடு
பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும்
பறக்க விட்டார் !
நவாப்பின் கோபம் சினம்கொள்ள
அடுத்து அடுத்து போர்,
எல்லாம் ஆங்கிலேயர் ,
புறமுதுகிட்டு ஓட
சிங்கம் ஒன்னு புறப்பட்டதே
வெற்றிக்கு என்ற கர்ஜனையோடு,
நடமாட்டம்!
வாள்கள்,பேசப்பட்டன,
மருத நாயகத்தின் கையில்.
முன்னால் நண்பன்,
ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன்
சுடப்பட்டு படுகாயமடைந்தார்.
பின்னர் உயிர் துறந்தார்.
ஆங்கிலேயர்களை
எதிர்த்து போரிடும் செய்தியும்,
அதன் வெற்றிகளும், மைசூர் சிங்கம்
ஹைதர் அலி அறியவே
பழைய பகையை மறந்தார்.
மண்ணுரிமை போரில்,
தனது நிலைக்கு மருதநாயகம்
வந்ததை வரவேற்று
சிங்கம் ஒன்று சிங்கத்துக்கு
வாழ்த்து செய்தி அனுப்பியது!
தந்திரமும்,வஞ்சகமும்
கைகுலுக்க,
சிவகங்கை சீமையின்
விஷமியான தாண்டவராயன்
விலாசத்துடன்,களமிறங்கியது!
இன்று நடக்கும் போரில்
பொருளாதார தடைகள்போல,
திட்டமிட்டு மதுரை போர்
ஆங்கிலேயர்களால்,
மருதநாயகத்தின் கோட்டை,
நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது,!
உணவு,ஆயுதங்கள், மருந்துகள்
கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது.
நானும், நீயும் வேறல்ல.
நமது படையும், நாடும் வேறல்ல”
என்று சகோதர உணர்வோடு
ஹைதர் அலி கடிதம் எழுதி
தனது ஆதரவை வழங்கினார்.
போரில் வெற்றி மறக்கப்பட்ட
நிலையில் வழக்கம்போல்
ஆங்கிலேயே எண்ணம்
தந்திரத்திலும்,அதன் மூலம்,
வஞ்சம் தீர்க்க திட்டமிட்டது!
தாண்டவராயன்,உதவியோடு,
கான்சாஹிபின் அமைச்சர்களில்
ஒருவரான சீனிவாசராவை
வலையில் வீழ்த்தினர்.
கட்சி மாற காட்சியும் மாறியது,
மெய்க்காவலர்களான பாபாசாஹிப்,
சேகுகான் உள்ளிட்டோரையும்,
பிரதான தளபதியும், பிரெஞ்சு
அதிகாரியுமான மார்ச்சந்த்தையும்
துரோக வலையில் இணைத்தனர்.
நண்பர்கள் ,துரோகியாய்,
மாறியது தெரியாமல்
ரமலான் மாதம்,தொழுத நிலையில்,
துரோகிகள் சிங்கத்தை சிறைப்பிடித்தனர்!
காரணம் அறிந்து சிங்கம்
வேண்டுகோள் அறிவித்தது,
எதிரிகளிடம் ஒப்படைக்காமல்
நண்பர்களே ,உங்களால்
இறப்பது எனக்கு சுகம்,
என்னை கொல்லுங்கள்,என்று,
வேண்டுகோள் கொடுத்தது!
கோழைகள் ஒன்று சேர்ந்து,
சிங்கத்தை ,படியவைக்க
கட்டப்பட்ட நிலையில்,
பட்டினி போட்டு
படிய சொன்னது,
மன்னிப்புக் கேட்க சொன்னது.
வீரம் மனம் மறுக்க
வழக்கம்போல ஆங்கிலேய
மனம் வஞ்சகம் தீட்ட ,
இவருக்கு தண்டனையில்லை
நவாப் முன்னிலையில் சொல்ல
நவாப்பை கோவம் கொள்ள...
தூக்கு தண்டனை என்று
சொல்ல செய்தது!
மதுரைக்கு மேற்கே
சம்மட்டிபுரத்தில் உள்ள
ஒரு மாமரத்தில் சிங்கம்
தூக்கிலிட கொண்டுவரப்பட்டார்,
அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,
தூக்கிலிடப்பட்டதும்
அவர் மரணிக்கவில்லை.
கயிறும் ,மருதநாயகத்தின்,
இறப்பை ஏற்காமல்,
அறுந்து விழுந்தது!
புதிய கயிறு கட்டப்பட்டது
மீண்டும் தூக்கிலிடப்பட்டார்,
அப்போதும் உயிர் பிரியவில்லை.
நான் யோகாசனம் பயின்றவன்.
கழுத்தை உப்ப வைத்து,
பல மணிநேரம் மூச்சை அடக்கும்
ஆற்றல் கொண்டவன் என்று
அந்த நிமிடமும்
தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம்.
எதிரிகள் குலை நடுங்கினர்.
வஞ்சகம் வெற்றி பெற
இறுதில் மருதநாயகம்
மரணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மருதநாயகம் ,இறந்த பின்னும்
துரோகிககளின் தூக்கத்தில்
கனவிலில் கூட
மருநாயகம் போர்தொடுக்க,
எங்கே மீண்டும் உயிர் பெற்று
விடுவாரோ என்ற அச்சநிலை....
தலை, கால், கை என
பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட
சிங்கத்தின் உடல் பல்வேறு
ஊர்களுக்கு தனித்தனியாக
அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது.
ஆம், செத்த பிறகும்
வீரன் மருதநாயகத்தின்
உடலை கண்டு ஆங்கிலேயர்களும்,
துரோகி ஆற்காடு நவாப்...
முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர்.
வீரனின் உடல்
தமிழக முழுதும்
வீரத்தின் வீரியம்
விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்திருக்கு!
இவரை போன்ற
மாவீரனின் உடலால்,
உதிரத்தால் இன்னும் வீரம்
மறையவில்லை தான்
இந்த மண்ணில் இன்னும் ...!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,
வாவ் சூப்பரா மருத நாயகத்தின் கதை புதுக்கவிதையாய் தோழர் கலை நிலாவிடம் இருந்து வாழ்த்துக்கள் தோழரே :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: #heart #heart
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,
வாவ் சூப்பரா மருத நாயகத்தின் கதை புதுக்கவிதையாய் தோழர் கலை நிலாவிடம் இருந்து வாழ்த்துக்கள் தோழரே :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: #heart #heart
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
இவ்வளவு சீக்கிரத்தில் அருமையான கவிதையாக்கிவிட்ட்டீர்களே கலை நிலா...
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
அழகிய வரலாற்றை அற்புதமான கவிதையில் படைத்து விட்டீர்கள் மருத நாயகத்தின் கதையை திரைப்படமாகக்க முற்பட்ட கமலுக்கு இன்றுவரை முட்டுக்கட்டை வாழ்த்துகள் கலை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
வாவ் அருமை வரிகள் வரலாற்றை கவிபாடிய தோழருக்கு வாழ்த்துகள். தொடரட்டும் கவிப்பணம் :!@!:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
முனாஸ் சுலைமான் wrote:அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,
வாவ் சூப்பரா மருத நாயகத்தின் கதை புதுக்கவிதையாய் தோழர் கலை நிலாவிடம் இருந்து வாழ்த்துக்கள் தோழரே :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: #heart #heart
தோழர் அப்துல்லாவின் கட்டுரை என்னை ஈர்த்தது .இதுக்கு புதுக்கவிதையில் தொகுத்தால் என்ற கேள்வி வரவே ,நான் பதித்த கட்டுரைக்கு ,அந்த கதைக்கு
இந்த கவிதை .,நன்றி தோழரே உங்களது ஊக்கமான மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
யாதுமானவள் wrote:இவ்வளவு சீக்கிரத்தில் அருமையான கவிதையாக்கிவிட்ட்டீர்களே கலை நிலா...
வாழ்த்துக்கள்
நன்றி .உங்களைபோன்ற நல உள்ளத்தின் ஊக்கமே ,எனது,ஆக்கமாய் ....!நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
கொஞ்சம் தாமதமாகத்தான் கவனிக்க நேர்ந்தது. மன்னியுங்கள். அருமையான ஆக்கம்.
சிங்கத்தின் வரலாற்றை சிந்தையைக் கவரும் வண்ணம் கவியாக்கிய கலைநிலா சிறகடிக்கிறார் நம் இதய வானில்....
இங்கே தங்களின் எழுதுகோல் விதைத்த வீரிய வித்துக்கள் விளைந்திடும்போது விண்ணை முட்டட்டும் மனித நேயமும் மாண்புறு முகமதிய கலாச்சாரத்தின் மகோன்னதமும்...வீரனின் உடல்
தமிழக முழுதும்
வீரத்தின் வீரியம்
விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்திருக்கு!
இவரை போன்ற
மாவீரனின் உடலால்,
உதிரத்தால் இன்னும் வீரம்
மறையவில்லை தான்
இந்த மண்ணில் இன்னும் ...!
சிங்கத்தின் வரலாற்றை சிந்தையைக் கவரும் வண்ணம் கவியாக்கிய கலைநிலா சிறகடிக்கிறார் நம் இதய வானில்....
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
முகம்மது யூசுப்கான் சாஹிப்
மருதுநாயகம்,கான்சாஹிப்,
மருதநாயகம் முகம்மது கான் சாஹிப்
என பல பெயர்களில் மக்களால்
போற்றப்பட்ட புகழப்பட்ட ஒரு மா மனிதனின்
முழுமையான கட்டுரை படுத்தேன்
அதே கையோடு சிறப்பான தொரு கவிதையும் படித்தேன்
மிக மிக சிறப்பான வரலாற்று சாண்று மிக்க ஒரு வல்லவனின்
சிறப்பம்சங்கள் தாங்கிய இந்த கவிதை வரிகள் வரலாற்றில் ஓர் ஏடுதான் வாழ்த்துக்கள் மாஸ்டர் உங்கள் கவிதைகளில் இதுவும் என்னை மிகவும் கவர்ந்த கவிதை வாழ்த்துக்கள்
ரோமம் சிலிர்க்கும் வரிகள் இவைகள்
அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,
தூக்கிலிடப்பட்டதும்
அவர் மரணிக்கவில்லை.
கயிறும் ,மருதநாயகத்தின்,
இறப்பை ஏற்காமல்,
அறுந்து விழுந்தது!
சுப்ஹானல்லாஹ்
நன்றி மாஸ்டர் வாழ்த்துக்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
மருதுநாயகம்,கான்சாஹிப்,
மருதநாயகம் முகம்மது கான் சாஹிப்
என பல பெயர்களில் மக்களால்
போற்றப்பட்ட புகழப்பட்ட ஒரு மா மனிதனின்
முழுமையான கட்டுரை படுத்தேன்
அதே கையோடு சிறப்பான தொரு கவிதையும் படித்தேன்
மிக மிக சிறப்பான வரலாற்று சாண்று மிக்க ஒரு வல்லவனின்
சிறப்பம்சங்கள் தாங்கிய இந்த கவிதை வரிகள் வரலாற்றில் ஓர் ஏடுதான் வாழ்த்துக்கள் மாஸ்டர் உங்கள் கவிதைகளில் இதுவும் என்னை மிகவும் கவர்ந்த கவிதை வாழ்த்துக்கள்
ரோமம் சிலிர்க்கும் வரிகள் இவைகள்
அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,
தூக்கிலிடப்பட்டதும்
அவர் மரணிக்கவில்லை.
கயிறும் ,மருதநாயகத்தின்,
இறப்பை ஏற்காமல்,
அறுந்து விழுந்தது!
சுப்ஹானல்லாஹ்
நன்றி மாஸ்டர் வாழ்த்துக்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
jasmin wrote:அழகிய வரலாற்றை அற்புதமான கவிதையில் படைத்து விட்டீர்கள் மருத நாயகத்தின் கதையை திரைப்படமாகக்க முற்பட்ட கமலுக்கு இன்றுவரை முட்டுக்கட்டை வாழ்த்துகள் கலை
மல்லிகையின் மறுமொழி ,பூக்க்களின் மனமாய் ..... :”@: :”@: :!@!:
ஊக்கத்தின் மரமாய் ...... :”@: :”@: :”@:
என்னை வளர செய்யும் .நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
அருமை....பெருமையாக உள்ளது...தொடரட்டும் பொங்கட்டும் எழுச்சிமிகு கவிதை பூக்கள்..... :!+: :!+:
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
@. @.அட்சயா wrote:அருமை....பெருமையாக உள்ளது...தொடரட்டும் பொங்கட்டும் எழுச்சிமிகு கவிதை பூக்கள்..... :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
நன்றி தோழரே .*சம்ஸ் wrote:வாவ் அருமை வரிகள் வரலாற்றை கவிபாடிய தோழருக்கு வாழ்த்துகள். தொடரட்டும் கவிப்பணம் :!@!:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
அப்துல்லாஹ் wrote:கொஞ்சம் தாமதமாகத்தான் கவனிக்க நேர்ந்தது. மன்னியுங்கள். அருமையான ஆக்கம்.இங்கே தங்களின் எழுதுகோல் விதைத்த வீரிய வித்துக்கள் விளைந்திடும்போது விண்ணை முட்டட்டும் மனித நேயமும் மாண்புறு முகமதிய கலாச்சாரத்தின் மகோன்னதமும்...வீரனின் உடல்
தமிழக முழுதும்
வீரத்தின் வீரியம்
விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்திருக்கு!
இவரை போன்ற
மாவீரனின் உடலால்,
உதிரத்தால் இன்னும் வீரம்
மறையவில்லை தான்
இந்த மண்ணில் இன்னும் ...!
சிங்கத்தின் வரலாற்றை சிந்தையைக் கவரும் வண்ணம் கவியாக்கிய கலைநிலா சிறகடிக்கிறார் நம் இதய வானில்....
உங்களுக்கு தான் முதலில் நன்றி சொல்லணும் ,அருமயான பதிப்பை அறிய தந்த
உங்களுக்கு நன்றி .உங்கள் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன் . :”@: :”@: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
நண்பன் wrote:முகம்மது யூசுப்கான் சாஹிப்
மருதுநாயகம்,கான்சாஹிப்,
மருதநாயகம் முகம்மது கான் சாஹிப்
என பல பெயர்களில் மக்களால்
போற்றப்பட்ட புகழப்பட்ட ஒரு மா மனிதனின்
முழுமையான கட்டுரை படுத்தேன்
அதே கையோடு சிறப்பான தொரு கவிதையும் படித்தேன்
மிக மிக சிறப்பான வரலாற்று சாண்று மிக்க ஒரு வல்லவனின்
சிறப்பம்சங்கள் தாங்கிய இந்த கவிதை வரிகள் வரலாற்றில் ஓர் ஏடுதான் வாழ்த்துக்கள் மாஸ்டர் உங்கள் கவிதைகளில் இதுவும் என்னை மிகவும் கவர்ந்த கவிதை வாழ்த்துக்கள்
ரோமம் சிலிர்க்கும் வரிகள் இவைகள்
அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,
தூக்கிலிடப்பட்டதும்
அவர் மரணிக்கவில்லை.
கயிறும் ,மருதநாயகத்தின்,
இறப்பை ஏற்காமல்,
அறுந்து விழுந்தது!
சுப்ஹானல்லாஹ்
நன்றி மாஸ்டர் வாழ்த்துக்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
உங்கள் மறுமொழிகள் என்னை உற்சாகப்படுத்தும்.
நன்றி தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
இன்று அன்னாரின் நினைவு நாள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
நண்பன் wrote:இன்று அன்னாரின் நினைவு நாள்
அறிய தந்தமைக்கு நன்றி உறவே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )
வீரனின் உடல்
தமிழக முழுதும்
வீரத்தின் வீரியம்
விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்திருக்கு!
இவரை போன்ற
மாவீரனின் உடலால்,
உதிரத்தால் இன்னும் வீரம்
மறையவில்லை தான்
இந்த மண்ணில் இன்னும் ...!
இன்று நினைவு நாள் கண்ணீர் அஞ்சலி :silent: :silent:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|