சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 11:24 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 11:20 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

நபிமொழிகள்........ Khan11

நபிமொழிகள்........

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நபிமொழிகள்........ Empty நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:45 pm

அல்லாஹ்வின் தூதர் உங்களிடம் கொண்டு வந்திருப்பதை
எடுத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 59:07)

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவனே அகிலத்தின்
அதிபதி. ஆகாயம், பூமி இவைகளின் நிரந்தர பாதுகாவலன். படைக்கப்பட்டவர்களi பாதுகாப்பவன்.
பராமரிப்பவன். இறக்கச் செய்பவன். இறைவனின் வழிகாட்டுதலை வழங்குவதற்காகவும் இறைச் சட்டத்தை
தாங்கள் வழிகாட்ட வந்த மக்களுக்கு எடுத்துச் சொல்லிடவும், தெளிவான
அத்தாட்சிகளைத் தந்திடவும். இறை-தூதர்களை (அலலாஹ்வின் ஆசியும், அருளும், சாந்தியும்
சமாதானமும் இறைத்தூதர்கள் அனைவர் மீதும் உண்டாவதாகுக) அனுப்பியவன். அல்லாஹ் அருளிய
கிருபைகளுக்கு அவனையே புகழ்கிறேன். அவன் தனது அருட்கொடைகளை இன்னும் அதிகப்படுத்திட
அவனிடம் இறைஞ்சுகிறேன்.

அல்லாஹ்வைத் தவித வேறு இறைவன் இலi;ல
என்று நான் சாட்சியம் கூறுகிறேன். அவன் ஒருவனே, அவனுக்கு
இணையில்லை. அவனே படைத்தவன், பரிபாலிப்பவன், பாதுகாப்பவன், போஷிப்பவன், அவன்
அருளாளன், மன்னிப்பவன். நமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் அந்த ஏக இறைவனின் நல்லடியாராவார்கள், அவனது
தூதராவார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அன்புக்கும் அருளுக்கும், பாத்திரமானவர்கள்.
படைப்பினங்களிலெ;லாம் உயர்ந்தவராவார்கள். அவர்கள், வாழும் அற்புதமாகிய திருக்குர்அனால்
பெருமைப்படுத்தப்பட்டவராவார்கள். நமது தலைவர் பெருமானார் (ஸல்) அவர்கள் சுருக்கமாகவும், விளக்கமாகவும்
பேசுபவர்களாக இருந்தார்கள். (இறைவனின் ஆசியும், அருளும், சாந்தியும், சமாதானமும்
இறைவனின் தூதர் அவர்கள்மீதும், இன்னும் ஏனைய இறைத்தூதர்கள்
மீதும், இறைவனின் நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக!)

அலி இப்னு அபீதாலிப் (ரலி), அப்துல்லா
இப்னு மஸ்ஊது (ரலி), முஆது இப்னு ஜபல் (ரலி), அபுதர்தா (ரலி), இப்னு
உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி),
அனஸ் இப்னு மாலிக் (ரலி), அபூஹ{ரைரா
(ரலி), அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) ஆகியோரின் ஆதாரங்களோடு பின்வரும் நபிமொழி நமக்குக் கிட்டியுள்ளது.
அதாவது, பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் :

''என்னுடைய உம்மத்துக்களுக்காக மார்க்கம் சம்பந்தப்பட்ட நாற்பது ஹதீதுகளை எவர் மனனம்
செய்துப் பாதுகாத்து வைக்கின்றாரோ அவரை அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் மார்க்க அறிஞர்கள்
சட்ட வல்லுநர்கள் ஆகியோர்களின் கூட்டத்தில் எழச் செய்வான்"".


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:45 pm

பிரிதொரு நபிமொழியில் ''அல்லாஹ்
அவனை மார்க்க அறிஞனாகவும்,
மார்க்க சட்ட வல்லுநனாகவும் எழச் செய்வான்""
எனச் சொல்லப்பட்டுள்ளது.

அபுத்தர்தா அவர்களின் வார்த்தையில், ''இறுதித்
தீர்ப்பு நாளில் நான் அவருக்கு (நாற்பது நபிமொழிகளை மனனம் செய்து ஏனையோருக்கு தெரிவிப்பவர்)
சாட்சியாகவும், பரிந்துரை செய்பவராகவும் இருப்பேன்"", இப்னு
மஸ்ஊது (ரலி) அவர்களின் வார்த்தையில், நாற்பது நபிமொழிகளை மனனம் செய்து
எனது மக்களுக்காக சேகரித்து வைப்பவர்களிடம் ''சுவர்க்கத்தில் நீங்கள் விரும்பும்
வாசல் வழியே நுழையுங்கள் என்றும் சொல்லப்படும்"". இப்னு உமர் (ரலி) அவர்களின்
வார்த்தையில், ''அவர் (நாற்பது நபிமொழிகளை மக்களுக்கு சேகரித்து வைப்பவர்) மார்க்க அறிஞர்கள் கூட்டத்தில்
குறித்து வைக்கப்படுவார்,
மேலும் அவர் இறைவனின் பாதையில் மடிந்த தியாகிகளின்
வரிசையில் எழுப்பப்படுவார்"" என்றும் வருகிறது. (எனினும் இந்த கடைசி ஹதீதுக்கு
ஆதாரங்கள் தரப்பட்டிருப்பினும் அது பலவீனமான ஹதீதுகளின் பட்டியலில் இடம் பெறுவதாக அறிஞர்கள்
ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர்).

நபிமொழிகளை தொகுத்துத் தருவதில் எண்ணற்ற மார்க்க
அறிஞர்கள் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கின்றார்கள். எனினும் எனக்குத் தெரிந்தவரை இந்தப்
புனிதப்பணியை முதன் முதலாகச் செய்தவர்கள் அப்துல்லா இப்னு அல் முபாரக் ஆவார்கள். தொடர்ந்து
இறைஞான அறிஞராக இப்னு அஸ்லாம் அத்-தூஸி, பின்னர் அல் ஹஸன் இப்னு சுஃப்யான்-அன்
நஸயீ, அபூபக்ருல் ஆஜுரி,
அபூபக்ரு முஹம்மத் இப்னு இப்ராஹீம் அல் அஸ்ஃபஹானி, அத்-தாரகுத்னீ, அல்
ஹாக்கிம், அபூநுஐம், அபூஅப்துற்றஹ்மான் அஸ்சுலமீ, அபூ சயீதுல் மாலீனீ, அபூ
உத்மான் அஸ்-சாபூனி, அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் அல் அன்சாரி, அபூபக்ரு அல்பைய்ஹக்கீ போன்ற
முற்காலத்தவரும், பிற்காலத்தவருமான எண்ணற்றொரும் இப் பணியைச் செய்திருக்கிறார்கள்.

இந்த நாற்பது நபிமொழிகளையும் மார்க்க அறிஞர்கள், இஸ்லாத்தின்
காவலர்கள் ஆகியோர் ஆக்கி வண்ணம், தொகுத்திட நான் இறைவனின் துணையைத்
தேடியிருக்கிறேன். நல்லவைகளை செய்வதைப் பொறுத்தவரை பலவீனமான நபிமொழியை செயல்படுத்துவதும்
அனுமதிக்கப்பட்ட ஒன்றேயென்று மார்க்க அறிஞர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இருந்த போதிலும் நான் மேலே குறிப்பிட்ட பலவீனமாக
நபிமொழிகளில் முற்றாகச் சார்ந்திருக்கவில்லை.

''உங்களில் எவர் இங்கே என்னுடைய சாட்சியாக இருக்கின்றார்களோ அவர்கள் இங்கே இல்லாதவர்களுகு;கு
எடுத்துச் சொல்வீர்களாக"" என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் மொழியின் மீதும், ''நான்
சொன்னவைகளைச் கேட்டு அவைகளை மனனம் செய்து, அவைகளை அப்படியே அடுத்தவர்களுக்குகம்
சொல்லுகின்றவர்களின் முகத்தை இறைவன் பிரகாசம் மிக்கதாக ஆக்குவானாக!"" எனற
நபிமொழியின் மீதும் ஆதரவு வைத்தே நான் இதனைத் தொகுத்திருக்கிறேன்.

இதைப் போலவே பல மார்க்க அறிஞர்கள் மார்க்கத்தில்
பல்வேறு பொருள்கள் குறித்தும் நாற்பது நபிமொழிகளை தொகுத்துத் தந்துள்ளார்கள். உதாரணமாக, அறப்போர்
(ஜிஹாத்), இறைநம்பிக்கை, நல்லொழுக்கம் இவைகள் ஒவ்வொன்றும் குறித்து நாற்பது நபிமொழிகள் கொண்ட தொகுப்புகள்
வெளிவந்துள்ளதைக் குறிப்பிடலாம். இவைகள் அனைத்தும் இறைவனின் பாதையில் மேற்கொள்ளப்பட்ட
அரிய முயற்சிகளேயாகும். இறைவன் இவர்கள் அனைவருக்கும் நற்கூலியைத் தந்தருள்வானாக.

நான் இவைகளை விட முக்கியமான, இவையனைத்தையும்
பிரதிபலிக்கும் நாற்பது நபிமொழிகளைத் தொகுத்துத் தருவது சிறப்பான செயலாகும் என்று கருதினேன்.
'மார்க்கத்தின் அச்சாணி என்றும், இஸ்லாத்தின் பகுதி"என்றும்
அதில் 'மூன்றிலொரு பகுதி" என்றும் இன்னும் இதுபோல மார்க்க அறிஞர்களால் உயர்ந்தனவாகக்
கருதப்பட்ட நாற்பது நபிமொழிகளையே தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளேன். இந்த நாற்பது நபிமொழிகளையும்
பலமான நல்ல நபிமொழிகள் என்றே கொள்ள வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:46 pm

இவைகளில் பெரும்பாலானவை ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ்
முஸ்லிம் ஆகிய நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.

மனனம் செய்து கொள்வதற்கு எளிதாக இருக்கவும் நிறைவான
பலன்களை அடைந்திடவும் ஆதாரங்களின் தொடர்ச்சியை சுருக்கமாகவும் தந்திருக்கிறேன்.

இறைவனுக்கு அடிபணிவது குறித்து இந்த நபிமொழிகள்
தரும் வழிகாட்டுதல்களுக்காகவும், இந்த நபிமொழிகள் தரும் வழிகாட்டுதல்களின்
முக்கியத்துவத்திற்காகவும் இவைகள் மறுமைப் பேற்றை விரும்பும் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க
வேண்டியது அவசியமாகும்.

இறைவனிடமிருந்தே நான் உதவி தேடுகின்றேன். அவனையே
நான் சார்ந்திருக்கின்றேன். அவனிடமே நான் அடைக்கலம் தேடுகின்றேன். எல்லாப் புகழும்
அவனுக்கே உரியது. வெற்றியும் பாதுகாவலும் அவனிடமே இருக்கின்றது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:46 pm

நபிமொழி – 1
அபூ ஹப்ஸ் உமர் இப்னுல் கத்தாப் 1 (ரலி)
அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாகச் சொல்கிறார்கள்.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான். ஆகவே ஒருவர் இறைவனுக்காகவும்
அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத்2 செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும்
அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும். ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக
என்றால், அல்;லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார்.
(புகாரீ, முஸ்லிம்)

இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா (ஆட்சித்தலைவர்)
ஆவார்கள்
ஏதேனும் ஒரு இலட்சியத்திற்காக ஒரு இடம் விட்டு
இன்னொரு இடத்திற்குச் செல்வது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:47 pm

நபிமொழி – 2
உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்
ஒருநாள் நாங்கள் எல்லோரும் இறைத்தூதர் முஹம்மத்
(ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார்.
அவருடைய ஆடைகள் மிகைத்த வெளுமையுடன் காணப்பட்டன. அவருடைய தலைமுடி மிகைத்த கருமை நிறத்துடன்
காணப்பட்டது. பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில்
யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று பெருமானர் (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார்.
அவரது முழங்கால்களை பெருமானார் (ஸல்) அவர்களின் முழங்கால்களுக்கு எதிராகவும் கைகளைக்
கால்களின் மீதும் வைத்து அமர்ந்தார். பின்னர் பெருமானார் (ஸல்) அவர்களை நோக்கி 'முஹம்மதே, இஸ்லாத்தைப்
பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் 'இஸ்லாம்
என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது
இறைவனின் தூதர் என்று சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது. ஜகாத்2 கொடுப்பது, ரமலான்
மாதத்தில் நோன்பு நோற்பது,
உங்களால் முடிந்தால் ஹஜ் (இறைவன் இல்லத்திற்கு
புனிதப் பயணம் மேற்கொள்வது) செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே
சொன்னீர்கள் என்றார். நாங்கள் அவர் அப்படி வினவியது குறித்தும் அ வரே உண்மைப்படுத்தியது
குறித்தும் ஆச்சரியம் கொண்டோம். பின்னரவர் ஈமான்3 குறித்து
எனக்குச் சொல்லுங்கள் என்றார். ''அது அல்லாஹ்வின் மீதும் அவனது
வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின்
நாட்டப்படியே நடக்கும் என்று நம்புவதுமாகும்"" என்பதாக பெருமானார் (ஸல்)
அவர்கள் பதில் தந்தார்கள். இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே பேசினீர்கள் என்றார்.
தொடர்ந்து அவர் இஹ்ஸான்4
(நல்ல செயல்கள்) பற்றி எனக்;குச்
சொல்லுங்கள் என்றார்.
''நீங்கள் அல்லாஹ்வை பார்க்காத போதும் அவனை நேரில் பார்த்து தொழுவது போல் தொழுவதாகும்.
நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டு தான்
இருக்கின்றான்"" எனச் சொன்னார்கள். பின்னர் அவர் எனக்கு அந்த நேரம் (நியாயத்
தீர்ப்பு நாள்) குறித்துச் சொல்லுங்கள் என்றார். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் 'இந்தக்
கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்" என்றார்கள். (அல்லாஹ்
அதை அறிவான் என்பது கருத்து). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள்
என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாவது, ''அடிமைப்பெண்
தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள்5. அப்போது காலணிகளில்லாத, ஆடைகளற்ற, ஆதரவற்ற
கூட்டத்தினர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப்
பார்ப்பீர்கள். பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன். பிறகு பெருமானார்
(ஸல்) அவாகள், 'உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா" எனக் கேட்டார்கள்.
'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்" என்றேன் நான். பெருமானார் (ஸல்)
அவர்கள், அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக
வந்தார்"" என்று கூறினார்கள். - முஸ்லிம்
அடிக்குறிப்புகள் :
உமர் : இஸ்லாத்தின் இரண்டாவது கலீபாவான உமர் இப்னுல்
கத்தாப் (ரலி) அவர்களைக் குறிக்கும்.
ஜகாத் : இந்தச் சொல் ஏழைவரி என்று பொதுவாக தமிழில்
மொழி பெயர்க்கப்படுகின்றது. இஃது சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரியாகும். இந்த
வரி ஏழைகளுக்கும பகிர்ந்திளிக்கப்பட வேண்டியதாகும்.
இந்தச் சொல் இஸ்லாத்தின் அடிப்படையோடு சம்பந்தப்பட்ட
சொல்லாகும். ஆகவே இதனை தமிழில் மொழிபெயர்க்காமல் அரபி மூலத்தை அப்படியே கையாண்டிருக்கிறோம்.
இதற்கு 'அடிப்படை நம்பிக்கை" 'விசுவாசம்" 'உண்மை"
என்ற பொருள்களும் உண்டு.
இஹ்ஸான் : இந்தச் சொல்லுக்கு ஒரு சிறப்பான முக்கியத்துவம்
உண்டு. இந்தச் சொல்லை இங்கே ஒரே வார்த்தையில் மொழியாக்கம் செய்வது இந்தச் சொல்லின்
நிறைவான பொருளைத் தராது. இந்தச் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் : நன்னடத்தை, நல்லமல்கள், நன்மைகள், நல்லவைகள், நல்ல
தொண்டுகள், செயல்களின் சிறப்பு,
செய்யும் செயல்களில் தேர்ச்சி என்பவைகளாகும்.

இச்சொல்லின் வேர்ச் சொல்லுக்கு, ஒரு
செயலில் சிறந்த திறமையைப் பெறுதல் என்று பொருள். இந்த தொகுப்பின் 17 வது
நபிமொழியல் இந்த பொருளில் தான் இந்தச் சொல்லை அணுக வேண்டும்.

அடிமைப் பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள்
: என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருக்கின்றன. அன்-நவவி அவர்கள் தந்த விளக்கங்களில்
ஒன்று அடிமைப்பெண்கள் மகன்களையும், மகள்களையும் பெற்றார்கள். அந்தக்
குழந்தைகள் விடுதலை பெறுவார்கள் என்பதாகும். 'அமா"
என்ற அரபிச் சொல்லைப் பொதுவாக 'அடிமைப் பெண்கள்" என்று மொழி பெயர்ப்பது
வழக்கம். இஃது எல்லாப் பெண்களையும் கூட குறிக்கலாம். அதாவது நாமெல்லோரும் இறைவனின்
அடிமைகள் என்ற முறையில்,
அடிமைப் பெண்கள் என்ற சொல் எல்லாப் பெண்களையும்
குறிக்கலாம். இதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம் : ''ஒரு
பெண் தனது எஜமானனை பெற்றெடுக்கின்ற நாள்"" அதாவது ஒருநாள் வரும் அதில் குழந்தைகள்
தங்களைப் பெற்ற தாயை மதிக்க மாட்டார்கள். குழந்தைகள் தங்களைப் பெற்றெடுத்து தாயை ஏவலாட்கள்
போலவே நடத்துவார்கள். இந்த நபிமொழிக்கு விளக்கம் தருகின்ற போது மார்க்க அறிஞர்கள் எஜமானி
என்பது எஜமானன் என்றும் பொருள்படும் என்று கூறுகின்றார்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:47 pm

நபிமொழி – 3
இஸ்லாத்தின் தூண்கள்
உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களின் மகன் அபூஅப்துர்
ரஹ்மான் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள் :
ஒருமுறை இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள்
பின்வருமாறு கூறினார்கள் :


''இஸ்லாம் ஐந்து தூண்களின்1 மீது நிறுவப்பட்டுள்ளது. அவை, அல்லாஹ்வைத்
தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் ஆவார்கள் என்றும்
சான்று பகர்தல், தொழுகையை நிலைநாட்டுதல், ஜகாத் கொடுத்தல், ஹஜ்
செய்தல், ரமலான் மாத நோன்பு நோற்றல் ஆகியவையாகும்"". - புகாரி, முஸ்லிம்


தூண்கள் என்ற சொல் அரபு மூலத்தில் இடம் பெறவில்லை.
தூண்கள் என்ற பொருள்படக் கூடிய ''அர்கான்"" என்ற சொல்
இதை விளக்கக் கூடிய ஒன்றாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:48 pm

நபிமொழி – 4


அபூஅப்துர் ரஹ்மான் அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி)
அவர்கள் சொன்னதாவது : இறைவனின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எங்களுக்கு இவ்வாறு அறிவித்தார்கள்
:


''நிச்சயமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் விதையின்
வடிவிலும், பின்னர் இதே கால அளவிற்கு ஒரு துண்டு சதையாகவும் இருந்தீர்கள். பின்னர் உங்களுள்
ஆவியை ஊதி உயிர் தரக் கூடிய வானவர் அனுப்பப்படுகிறார். அவர் நான்கு விஷயங்கள் குறித்து
கட்டளையிடுகின்றார். உங்களது வாழ்க்கைத் தேவைகளை தேடிக் கொள்ளும் வழிகள், உங்களது
ஆயுட்காலம், உங்களது செல்கள்,
உங்களது வாழ்க்கை நல்ல முறையில் அமையுமா அல்லது
துன்பகரமாக அமையுமா? எவனையன்று வணக்கத்திற்குரியவர் எவருமில்லையோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக உண்மையிலேயே
உங்களில் ஒருவர் சுவர்க்கத்திற்கும் அவருக்குமிடையில் ஒரு கை அளவு தூரமே இருக்கின்ற
வகையில் சுவர்க்க வாசியைப் போல் நடந்து கொள்வார். ஆனால் அவருக்காக எழுதப்பட்டிருப்பது
அவரை முந்திக் கொள்கிறது. ஆதலால் அவர் நரக வாசியைப் போல் நடந்து கொள்ள ஆரம்பித்து, அதனால்
அவர் நரகத்தில் நுழைகின்றார்.





இன்னும் உங்களில் ஒருவர் நரகத்திற்கும் அவருக்குமிடையில்
ஒரு கையளவு தூரமே இருக்கும் வகையில் நரக நெருப்புக்கு இரையாகும் விதத்தில் நடந்து கொள்கிறார்.
ஆனால் அவருக்காக எழுதப்பட்டிருப்பது அவரை முந்திக் கொள்கிறது. இதனால் அவர் சுவர்க்கவாசியைப்
போல் நடக்க ஆரம்பித்து அவர் சுவர்க்கத்தில் நுழைகின்றார். - புகாரி, முஸ்லிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:48 pm

நபிமொழி - 5


பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக நம்பிக்கையாளர்களின்
தாயான1 உம்மு, அப்துல்லா ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.


நம்முடைய விஷயத்தில் (தீனில்) அதில் இல்லாததை
நுழைப்பவர்களின் செயலானது நிராகரிக்கப்படுவதாகும்.


இந்த நபிமொழி புகரீ, முஸ்லிம்
ஆகய இரு நபிமொழி தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது.


முஸ்லிம் என்ற நபிமொழி தொகுப்பில் பின்வருமாறு
இடம் பெற்றுள்ளது.


நம்முடைய விஷயத்தோடு (மார்க்கப் போதனைகளோடு) ஒத்துப்
போகாத ஒரு செயலை எவராவது செய்யின் அது ஏற்றுக் கொள்ளப்படாது ஒதுக்கப்படும்.


பெருமானார் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு தரப்படும்
சிறப்புப் பெயராகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:49 pm

நபிமொழி - 6



பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஅப்துல்லாஹ்
அன்நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்.



ஹலாலும் (ஆகுமானவை) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்)
தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே இவை ஹலாலானவையா, அல்லது
ஹராமானவையா என்ற சந்தேகத்திற்கிடமான காரியங்களுமுண்டு. அவற்றை அநேகர் அறிந்து கொள்ள
மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கிடமான காரியங்களிலிருந்து ஒதுங்கி இருக்கின்றாரோ, அவர்
தனது தீனையும், கண்ணியத்தையும், மரியாதையையும் காப்;பாற்றிக் கொண்டவராவார். மேலும் எவர் சந்தேகத்திற்கிடமானவற்றில் வீழ்ந்து விடுகிறாரோ
அவர் ஹராமில் வீழ்ந்து விட்டவராவார். அனுமதிக்கப்படாத ஒரு மேய்ச்சல் நிலத்தின் அருகில்
தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் அவை தடுக்கப்பட்ட அம்மேய்ச்சல் நிலத்தில்
சென்று மேய்ந்து விடக் கூடிய அச்சத்திற்கு எந்நேரமும் ஆளாகிக் கொண்டிருக்கும் ஓர் மேய்ப்பவனுக்கு
அவர் ஒப்பாவார். ஒவ்வோர் அரசனுக்கும் சொந்தமான ஒரு மேய்ச்சல் நிலம் உண்டு. அல்லாஹ்வுக்குச்
சொந்தமான மேய்ச்சல் நிலம் (ஹிமா), அவன் (அனுமதிக்காத) (ஹராமான)
காரியங்களாகும்.





உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால்
உடல் முழுவதும் செம்மையாகி விடுகின்றது. அது கெட்டு விடுமாயின் உடல் முழுவதும் கெட்டு
விடுகின்றது. அந்த சதைப் பகுதி இதயமாகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:50 pm

நபிமொழி - 7



பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்ததாக அபூ ருக்கையா
தமீம் இப்னு அவ்ஸ் அத்-தாரீ (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் :


மார்க்கம் என்பது உண்மையுடையதாகும்.1 யாரிடம்? என
வினவிய போது பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : அல்லாஹ், அவனது
வேதம், அவனது தூதர், முஸ்லிம்களின் தலைவர் இன்னும் முஸ்லிம் பொதுமக்கள் ஆகியோரிடம் உண்மையுடன் இருத்தலாகும்.
- முஸ்லிம்


1. உண்மையுடைமை ('நஸீஹா") என்ற அரபிச் சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் இருக்கின்றன. அவைகளில்
வழக்கமாகக் கொள்வது 'நற்போதனை" என்பதாகும். இங்கே இந்தப் பொருளை கொள்வது பொருத்தமாக அமையாது.


குறிப்பிட்ட ஒரு மனிதனுக்கு அல்லது சூழ்நிலையில்
நியாயத்தை நிலைநாட்டுதல் என்றும் பொருள்படும்.


நாணயம், 'விசுவாசம்" என்பவை இதன்
இதர பொருள்களாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:50 pm

நபிமொழி - 8


பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக உமர் (ரலி)
அவர்கள் சொல்கிறார்கள் :


அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்
முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் உறுதி கூறும் வரையிலும் தொழுகையை நிலைநாட்டி
ஜகாத்தை கொடுக்கும் வரையிலும் நான் (இறைமறுப்பாளர்களை) எதிர்த்துப் போராடும்படி1 கட்டளையிடப்பட்டுள்ளேன்.
இவைகளை நிறைவேற்றுபவர்கள் இஸ்லாத்தின் சட்டப்படி தண்டனைக்குரிய செயல்களைச் செய்யாதவரை
அவர்கள் தங்களது உயிர்,உடமை ஆகியவைகளுக்கு என்னிடம் பாதுகாப்பு பெறுவார்கள். அவர்களைப் பற்றி கணிப்பு
எல்லாம் வல்ல அல்லாஹ்வினிடத்தே இருக்கின்றது.



இஸ்லாத்தை நன்றாகப் புரிந்து கொண்டு அதனை தங்களது
வாழ்வின் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும்படி பிறருக்கு மனதில் பதியச் செய்ய வேண்டிய
முயற்சிகளை மேற்கொள்வது பற்றியே குறிப்பிடப்படுகின்றது. புனித திருமறை 'மார்க்கத்தில்
கட்டாயமில்லை" என அறிவிக்கின்றது.



பிரிதோர் இடத்தில் இறைவன் சொல்லுகின்றான். 'அறிவார்ந்த
விவாதத்தைக் கொண்டும்,
(இறைவனின் எச்சரிக்கைகளை எடுத்துச் சொல்லியும்
இறைவனின் பாதையில் மக்களை அழையுங்கள்". சில குறிப்பிட்ட மக்களை மட்டும் தான் எதிர்த்துப்
போராடும்படி முஸ்லிம்கள் பணிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் : இஸ்லாமிய நாட்டைத் தாக்கிடுவோர், இஸ்லாத்தை
அமைதியான வழியில் போதிப்பதையும், பரப்புவதையும் தடுப்பவர்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:51 pm

நபிமொழி - 10


பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக அபூஹ{ரைரா
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


அல்லாஹ் தூயவன், அவன்
தூயவைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் தனது தூதர்களிடம் எதைச் செய்யும்படி
பணித்தானோ, அதையே நம்பிக்கையாளர்களையும் செய்யும்படி கட்டளையிட்டுள்ளான். ''தூதர்களே!
தூயவைகளிலிருந்தே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்"".1 எல்லாம்
வல்ல அல்லாஹ் ''நம்பிக்கையாளர்களே! நான் உங்களுக்குத் தந்துள்ள தூயவைகளிலிருந்து உண்ணுங்கள்""2 என்றும்
கூறியுள்ளான். பின்னர் பெருமானர் (ஸல்) அவர்கள் அதிக தூரம் பயணம் செய்த ஒரு மனிதரைப்
பற்றிச் சொன்னார்கள். தலைவிரிகோலமாக – மாசு படிந்தவராக அவர் தனது
கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தி ''இறைவனே இறைவனே!""
என கதறுகிறார். ஆனால் அவர் தனது உணவைப் பெறும் வழி தடுக்கப்பட்டதாக (ஹராமானதாக) இருக்கின்றது, அவர்
அருந்தும் பானம் தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது உடை தடுக்கப்பட்டதாக இருக்கின்றது.
அவரது மொத்த வாழ்க்கையே ஹராமான வழியில் தான் இருக்கின்றது. இந்த நிலையில் அவர் எவ்வாறு
இறைவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்க முடியும். - புகாரி, முஸ்லிம்


அல்குர்ஆன் அத்தியாயம் எண் 23, வசன
எண்:51


அல்குர்ஆன் அத்தியாயம் எண் 2, வசன
எண்:172


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:52 pm

நபிமொழி - 11

பெருமானார் (ஸல்) அவர்களின் பேரரும் பெருமானார்
(ஸல்) அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவருமான அலி இப்னு அபூதாலிப் அவர்களின் மகன் அபூ
முஹம்மது அல் ஹஸன் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.

நான் இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு
சொல்லக் கேட்டு நினைவில் இருத்திக் கொண்டேன் :

உங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றை
விட்டு விட்டு அதற்குப் பதிலாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்

அத்திர்மிதி, அன்-நசயீ1, இஃதொரு
ஆதாரப்பூர்வமான சிறப்புமிகு நபிமொழி என்று அத்திர்மிதீ கூறினார்கள்.

1. அத்திர்மிதி, அன்நசயீ, இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நபிமொழித் தொகுப்பாளர்களில் இடம் பெறுவோராவர். நபிமொழிகளில்
இதர தொகுப்பாளர்கள் அல்புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், இப்னு
மாஜா ஆகியோராவர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:54 pm

நபிமொழி - 12


பெருமானார் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அபூஹ{ரைரா
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


ஒருவர் நல்ல முஸ்லிமாய் இருப்பதன் ஒரு பகுதி அவர்
தனக்குச் சம்பந்தமில்லாததை விட்டு விடுவதாகும்.


அத்திர்மிதி (ரஹ்) அவர்களும் இன்னும் பல நபி மொழி
தொகுப்பாளர்களும் இதே போல் அறிவித்துள்ளார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:55 pm

நபிமொழி - 13
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹம்ஸா
அனஸ் இப்னு மாலிக்1 (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
தனக்கென விரும்புவதை, தனது
சகோதரருக்கும் விரும்பாவரை உங்களில் எவரும் உண்மையான நம்பிக்கையாளராக மாட்டார். - அல்
புகாரீ, முஸ்லிம்.
1. அன்ஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் தனது இளம் வயதிலேயே பெருமானார் (ஸல்) அவர்களின்
பணியாளராக இருந்து வந்தார்கள். இந்த வகையில் எண்ணற்ற நபி மொழிகளுக்கு இவர் ஆதாரமாக
விளங்குகிறார்.
இவரை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பணியாள் என்றும்
தோழரென்றும் குறிப்பிடப்படுவதுண்டு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:55 pm

நபிமொழி - 14
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு மஸ்ஊது
(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
திருமணமாகியும் விபச்சாரத்தில் ஈடுபடக் கூடிய
மனிதன், ஒரு உயிருக்கு உயிர்1,
மார்க்கத்தைத் துறந்து விட்டு சமுதாயத்தை புறக்கணித்து
விடுபவர் ஆகிய மூன்று சூழ்நிலைகளைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் ஒரு முஸ்லிமின்
இரத்தம் சட்டபூர்வமாக சிந்தப்படலாகாது. - புகாரீ, முஸ்லிம்
1. ஒரு முஸ்லிமின் உயிரை அநியாயமாகப் பறித்து விடுபவரின் உயிர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:56 pm

நபிமொழி - 15


இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக
அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் நல்லவற்றையே
பேசட்டும் அல்லது எதையும் பேசாமலிருப்பாராக. அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறவர்
தனது அண்டை வீட்டாருடன் மிகவும் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும்
இறுதி நாளையும் நம்புகிறவர் தனது விருந்தினரோடு மிகவும் தாராளமாக நடந்து கொள்ளட்டும்.
- முஸ்லிம், புகாரீ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:57 pm

நபிமொழி - 16


அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


பெருமானார் (ஸல்) அவர்களிடம் 'எனக்கு
நல்லுபதேசம் செய்யுங்கள்" என ஒரு மனிதர் சொன்னார். இறைவனின் தூதர் அவர்கள், 'கோபப்படாதீர்கள்"1 என
பதில் தந்தார்கள். அம்மனிதர் மீண்டும், மீண்டும் முறையிட்டார். பெருமானார்
(ஸல்) அவர்கள் 'கோபப்படாதீர்கள்" என்றே கூறினார்கள். - அல்-புகாரீ


1. இமாம் நவவீ தமது விளக்கவுரையில், 'கோபம் கொள்வது இயற்கையான மனித
சுபாவம் என்பதால், 'கோபமாக இருக்கும் நிலையில் ஒருவர் செயல்படுவது கூடாது" என்றே இந்த நபிமொழிக்குப்
பொருள் கொள்ளப்பட வேண்டும்" என்று கூறுகிறார்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:58 pm

நபிமொழி - 17


அபு யஃலா ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் :


நிச்சயமாக அல்லாஹ், செய்வனவற்றை
திருந்தச் செய்யும்படி பணித்திருக்கின்றான். ஆகவே நீங்கள் கொன்றால், நன்றாகக்
கொல்லுங்கள். நீங்கள் அறுத்தால் நன்றாக அறுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் தங்களது கத்தியை
கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்குங்கள்
(குறையுங்கள்). - முஸ்லிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:58 pm

நபிமொழி - 18


அபூதர் ஜுன்துப் இப்னு ஜுனாதா (ரலி) அவர்கள் அபூ
அப்துற் ரஹ்மான் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களும் பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்ததாக
அறிவிக்கின்றார்கள்.


நீங்கள் எங்கே இருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
தீய செயல் ஒன்றைச் செய்து விட்டால் தொடர்ந்து நல்ல செயல் ஒன்றையும் செய்து விடுங்கள்.
இந்த நல்ல செயல் அந்த தீய செயலைத் துடைத்து விடும். இன்னும் மக்களிடம் அழகிய முறையில்
நடந்து கொள்ளுங்கள்.


- அத்-திர்மதியின் நபிமொழித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இது ஒரு சிறப்பு மிக்க ஹதீது
என அத் தொகுப்பாளராலேயே வர்ணிக்கப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:59 pm

நபிமொழி - 19
அபுல் அப்பாஸ் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் சொல்கிறார்கள் :

ஒருநாள் நான் பெருமானார் (ஸல்) அவர்களன் பின்னால்
அமர்ந்திருந்தேன்.! அப்போது அவர்கள் என்னிடம் இளைஞனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத்
தருகின்றேன் என்று சொன்னார்கள் :

அல்லாஹ்வை நீ மனதிற் கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான்.
அல்லாஹ்வை மனதிற் கொள். நீ அவனை உன் முன் காண்பாய். நீ இறைஞ்சும் போது அல்லாஹ்விடமே
இறைஞ்சு. நீ உதவி தேடுவதாக இருந்தால் இறைவனிடமே தேடு. இந்த உலகமே ஒன்று திரண்டு வந்து
உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் அது உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக்
காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் செய்திட முடியாது. இன்னும் இந்த உலகமே ஒன்று திரண்டு
வந்து எதையேனும் கொண்டு உனக்கு ஊறுவிளைவித்திட முயன்றாலும், அது
அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் கெடுதலையும் செய்திட
முடியாது. (உனக்கு உரியவற்றை) விதிப்பதற்காக எழுதுகோல்கள் எடுக்கப்பட்டு விட்டன. எழுதப்பட்ட
பக்கங்கள் உலர்ந்தும் விட்;டன.2
இந்த நபிமொழி அத்-திர்மிதி எனும் நபிமொழித் தொகுப்பில்
இடம் பெற்றுள்ளது. ஆதாரப்பூர்வமானதும் சிறப்புமிக்கதும் ஆகும்.
திர்மிதி அல்லாத பிறிதொரு நபிமொழித் தொகுப்பில்
பின்வருமாறு இடம் பெற்றுள்ளது :

அல்லாஹ்வை மனதிற் கொள்ளுங்கள். நீங்கள் அவனை உங்கள்
முன் காண்பீர்கள். நீங்கள் செழிப்பாக இருக்கும் போது அல்லாஹ்வை நினையுங்கள். அவன் நீங்கள்
கஷ்டத்தில் இருக்கும் போது உங்களை நினைவு கூர்வான். அறிந்து கொள்வீர்களாக : உங்களுக்குக்
கிட்டாமல் சென்றவைகள் உங்கள் மீது உங்களுக்கு விதிக்கப்படவில்லை. உங்களுக்குக் கிட்டியவைகள்
உங்களைக் கடந்து சென்று விடும்படி விதிக்கப்படவில்லை.





பொறுமைக்குப் பின் தான் வெற்றி. துன்பத்திற்குப்
பின் தான் இன்பம். கடின உழைப்பிற்குப் பின் தான் ஓய்வு என்று அறிந்து கொள்ளுங்கள்.

பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து
சவாரி செய்து கொண்டிருந்தார்.

அதாவது ஏற்கனவே இறைவன் விதித்து விட்டதை வேறு
எவரும் மாற்றி அமைக்க முடியாது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:59 pm

நபிமொழி - 20
அபூமஸ்ஊத் உக்பா இப்னு அம்ர் அல்-அன்ஸாரீ அல்-பத்ரி
(ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக கூறுகின்றார்கள்.
முந்திய இறைதூதர்களிடமிருந்து1 பெற்ற
வசனங்களில் ஒன்று, 'உங்களுக்கு வெட்கம் ஏற்படவில்லையென்றால் நீங்கள் விரும்புவது போல் செயல்படலாம்".2 - அல்-புகாரீ
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வந்த இறைத்தூதர்களைக்குறிக்கும்
இந்த நபிமொழிக்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்
என அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
· ஒருவர், தான் வெட்கப்படாதவரை தனது மனசாட்சிப்படி செயல்படலாம்.
· ஒருவர் எதைப் பற்றியும் வெட்கப்படவில்லையென்றால் அவர் மனம் போனபடி தீய செயல்களைச்
செய்வதிலிரந்து அவரைத் தடுப்பது எதுவுமில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 5:59 pm

நபிமொழி - 21


அபூ அம்ரு (அபூ அம்ரா என்றும் குறிப்பிடப்படுகிறார்).
சுப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்


''அல்லாஹ்வின் தூதரவர்களே! இனி வேறு யாரிடத்தும் கேட்கத் தேவையில்லாத வகையில் இஸ்லாத்தைப்
பற்றி எனக்குச் சொல்லுங்கள்"" என்று நான் கேட்டேன்.


''அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறேன் என்று மொழிந்து அதன் மீதே நிலைத்திருப்பீராக!""
என அவர்கள் கூறினார்கள். - முஸ்லிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 6:00 pm

நபிமொழி - 22


அப்துல்லா-அல்-அன்ஸாரி (ரலி) அவர்களின் மகன் அபூ
அப்துல்லாஹ் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


ஒரு மனிதர் இறைவனின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்.


''நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றுகின்றேன், ரமலானில்
நோன்பு நோற்கின்றேன்,
சட்டப்படி அனுமதிக்கப்பட்டவைகளை ஏற்று நடக்கிறேன், சட்டப்படி
தடுக்கப்பட்டவற்றை வெறுத்து ஒதுக்குகின்றேன். இதற்கு மேல் நான் எதுவும் செய்யவில்லை.
இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?""


பெருமானார் (ஸல்) அவர்கள் ''ஆம்!""
என்று பதில் தந்தார்கள். - முஸ்லிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by நண்பன் Sun Jan 09, 2011 6:01 pm

நபிமொழி - 23


பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றதாக, அபூ
மாலிக் அல் ஹாரித் இப்னு ஆசிம் அல்-அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :


தூய்மை ஈமானின் ஒரு பாதியாகும். 'அல்-ஹம்துலில்லாஹ்"
(எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கே) என்பது மீஸானின் நன்மையின் தட்டை நிறைக்கின்றது.
'சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் குறைகளுக்கு அப்பாற்பட்டவன்) 'அல்ஹம்துலில்லாஹ்"
(எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அலல்hஹ்வுக்கே) ஆகிய இரண்டுமோ அல்லது ஒவ்வொன்றோ, வானத்திற்கும்
பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகம், பொறுமை
வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்.
தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை பேரத்தில் ஈடுபடுத்துகிறான்.
ஒன்று அதன் விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றான் அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றான்.
- முஸ்லிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நபிமொழிகள்........ Empty Re: நபிமொழிகள்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum