சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

கடாபி ஆதரவுப் படை வசமுள்ள பானி வலீத் நகர் கிளர்ச்சியாளர்களால் முற்றுகை Khan11

கடாபி ஆதரவுப் படை வசமுள்ள பானி வலீத் நகர் கிளர்ச்சியாளர்களால் முற்றுகை

Go down

கடாபி ஆதரவுப் படை வசமுள்ள பானி வலீத் நகர் கிளர்ச்சியாளர்களால் முற்றுகை Empty கடாபி ஆதரவுப் படை வசமுள்ள பானி வலீத் நகர் கிளர்ச்சியாளர்களால் முற்றுகை

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 11:06

கடாபி ஆதரவுப் படை வசமுள்ள பானி வலீத்
நகர் கிளர்ச்சியாளர்களால் முற்றுகை




இரு தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வி

கடாபி ஆதரவுப் படை வசமுள்ள பானி வலீத் பகுதியை சுமுகமாக கைமாற்றுவது குறித்த
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக கிளர்ச்சிப் படை குறிப்பிட்டுள்ளது. எனினும் பானி
வலீத் நகரை மூன்று திசைகளில் இருந்தும் எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
கடாபி ஆதரவுப் படை வசமுள்ள பானி வலீத் நகர் கிளர்ச்சியாளர்களால் முற்றுகை W3லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து தென்கிழக்கில் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள
பானி வலீத் நகரில், ‘வர்பாலா’ என்ற பழங்குடியினர் அதிகளவில் உள்ளனர்.

லிபியாவில்
உள்ள 100க்கும் மேற்பட்ட பழங்குடியினங்களில், ‘வர்பாலா’ இனம் தான் தொகையில் பெரியது.
இந்நகரின் மூன்று புறங்களில் இருந்தும் நகருக்குச் செல்லும் வழிகளை நேற்று முன்தினம்
கிளர்ச்சியாளர்கள் அடைத்தனர். இதனால் பானி வலீத்துக்கும் வெளியுலகுக்குமான தொடர்பு
துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பானி வலீத் நகரில் உள்ள கடாபி ஆதரவாளர்கள் சரணடைவது குறித்து கடந்த ஒரு
சில தினங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக கிளர்ச்சிப் படையின்
பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கிளர்ச்சியாளர்கள் பானி வலீதுக்குள் நிராயுத
பாணியாக நுழையும்படி கடாபி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு
கிளர்ச்சியாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையிலான
பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளது.
இந்நிலையில் பானி வலீதை கைப்பற்றும் விவகாரம் தற்போது கிளர்ச்சிப் படையின் இராணுவ
தளபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேற்படி பேச்சாளர் பி. பி. சி. செய்திச்
சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பானி வலீத் பகுதியிலுள்ள பொதுமக்களை கடாபி ஆதரவுப் படை மனித கேடயங்களாக
பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக கிளர்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கடாபி ஆதரவுப் படையின் கைவசமுள்ள முக்கிய நகர்களில் ஒன்றான பானி வலீத்தில் முஅம்மர்
கடாபி தங்கி இருக்கலாம் என கிளர்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். எனினும்
முஅம்மர் கடாபியின் மகன் சயில் அல் இஸ்லாம் இங்கிருந்து கடந்த சனிக்கிழமை
வெளியேறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று முஅம்மர் கடாபியின் மற்றுமொரு மகன் சாதி கடாபி பானி வலீதிக்கு புறநகரில்
தங்கி இருப்பதாக சி. சி. என். தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். அத்துடன்
கிளர்ச்சியாளர்களுடனான சமாதான பேச்சுவார்த்தையை தனது சகோதரர் சயிப் அல் இஸ்லாம்
குழப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சாதி கடாபி கிளர்ச்சியாளர்களிடம் சரணடைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய
பின்னர்அவரது சகோதரர் சயிப் அல் இஸ்லாம் தொடர்ந்தும் போராடுவதாக அறிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
லிபியாவின் பெரும்பாலான பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில் கடாபி
ஆதரவாளர்கள் வசம் மேலும் நான்கு நகர்கள் எஞ்சியுள்ளன. பானி வலீதுடன் கடாபி
பிறந்தகமான சிர்த், ஜுப்ரா, சபா ஆகிய நகர்களே கடாபி ஆதரவாளர்களின் வசமுள்ளது.
எனினும் இந்த பகுதிகளை அண்டி கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களுடன் தரித்து நிற்கின்றனர்.
கடாபி ஆதரவுப் படைகளுக்கான சரணடையும் காலத்தை கிளர்ச்சியாளர்கள் ஒரு வாரத்திற்கு
நீடித்துள்ளது. இந்த காலக்கெடு முடிவடைந்ததும் மேற்படி நகரங்களை கைப்பற்ற
கிளர்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என தெரிகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum