Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
+5
kalainilaa
Atchaya
நண்பன்
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
9 posters
Page 1 of 1
நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
கும்பலாய் வந்தனர்
கூடி நின்று என் அங்கம தொட்டு
அதில் ஒருவன் சொன்னான்
கிழ மரம்...
இது சொன்னவன் கையில்
கோடரி
உயர்த்திறக்கியபோது
பொத்...
ஒரே போடு
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
அங்கங்கள் ஒவ்வொண்ணாய்
அவ்வப்போது தருகிறேனே
எரித்தால்
எரிந்தால் போதாதா...
தலைமையைக் காக்க
உயிரோடு பேருந்துகளும்
தமிழனைக் காக்க
உடனே ஓர் இளம் தளிரும்
மதவெறியைக் காக்க
மலை மலையாய் மனிதஇனமும
வேண்டாத மருமகளை
வீட்டில் கதவடைத்தும்
பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..
தேசத்தின் தலைநகரிலும்
நாசத்தின் வேரூட்டம்
நய வஞ்சக மனித உள்ளம
நரித்தனமாய் ஆடும ஆட்டம்
மானுடங்களுடன்
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
வேண்டுமெனில்....
வேரோடு வருகிறேன்
விடை தருவாயா
இந்த ஐந்தறிவுக் களியாட்டத்திற்கு
இப்போது அவன்
வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
வேதைனையோடு சொல்லும் அழகான வரிகள் நன்றி சார்
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
வேதைனையோடு சொல்லும் அழகான வரிகள் நன்றி சார்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
வேண்டாத மருமகளை
வீட்டில் கதவடைத்தும்
பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..
சமூக சிந்தனைகளடொத்த வரிகள்
பாராட்டுக்கள்
வீட்டில் கதவடைத்தும்
பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..
சமூக சிந்தனைகளடொத்த வரிகள்
பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
தேசத்தின் தலைநகரிலும்
நாசத்தின் வேரூட்டம்
நய வஞ்சக மனித உள்ளம
நரித்தனமாய் ஆடும ஆட்டம்
மானுடங்களுடன்
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
அக்னியில் பிரசவித்த கவிதையை என்ன சொல்லி பாராட்டுவது!
:!+: :!+:
நாசத்தின் வேரூட்டம்
நய வஞ்சக மனித உள்ளம
நரித்தனமாய் ஆடும ஆட்டம்
மானுடங்களுடன்
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
அக்னியில் பிரசவித்த கவிதையை என்ன சொல்லி பாராட்டுவது!
:!+: :!+:
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
காந்தி பிறந்த மண்ணில்
பச்சை மரங்கள் எரிக்கப்பட்டன.
கும்பலாய் வந்து மும்பை
கலவரத்தில் பச்சை மரங்கள்
வெட்டப்பட்டன!
அரசியல்வாதி எரித்த
பேருந்திலும் இளமரம்
எரிந்தது.
வரும் தேர்தலுக்காக,
தலை நகரில் ஒத்திகைப் போராட்டம் ,
இப்படி அவலங்களை ஒன்றின் பின்னால்,
ஒன்றை கொடுத்து ,அதை உங்கள் வழியில்
படைத்து ,மிருக்கத்தை ,காட்டிய நிலை ,
உண்மையின் நிறம்.
இந்தியா என்னும் பச்சைமரத்தில்
நின்றுக்கொண்டே
வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
எரிப்பவன் இருக்குவரை
மரங்கள் ,மடிந்து போகும்.
எரிந்தாலும் ,எரித்தாலும்
இந்த மண்ணுக்கு உரமாக
உருமாறும் ,
உங்கள் ஆவேசம் கண்டு பிரமித்து போனேன் .
பூக்குள் புயலாய் பார்த்தேன் .
இன்னும் இந்த புயல் ,மற்ற அவலங்களை ,
மாறி மாறி ,அடிக்கும் என்ற எண்ணத்தில் காத்திருக்கும்,
உங்கள் மாணவன் .
பச்சை மரங்கள் எரிக்கப்பட்டன.
கும்பலாய் வந்து மும்பை
கலவரத்தில் பச்சை மரங்கள்
வெட்டப்பட்டன!
அரசியல்வாதி எரித்த
பேருந்திலும் இளமரம்
எரிந்தது.
வரும் தேர்தலுக்காக,
தலை நகரில் ஒத்திகைப் போராட்டம் ,
இப்படி அவலங்களை ஒன்றின் பின்னால்,
ஒன்றை கொடுத்து ,அதை உங்கள் வழியில்
படைத்து ,மிருக்கத்தை ,காட்டிய நிலை ,
உண்மையின் நிறம்.
இந்தியா என்னும் பச்சைமரத்தில்
நின்றுக்கொண்டே
வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
எரிப்பவன் இருக்குவரை
மரங்கள் ,மடிந்து போகும்.
எரிந்தாலும் ,எரித்தாலும்
இந்த மண்ணுக்கு உரமாக
உருமாறும் ,
உங்கள் ஆவேசம் கண்டு பிரமித்து போனேன் .
பூக்குள் புயலாய் பார்த்தேன் .
இன்னும் இந்த புயல் ,மற்ற அவலங்களை ,
மாறி மாறி ,அடிக்கும் என்ற எண்ணத்தில் காத்திருக்கும்,
உங்கள் மாணவன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
எரிப்பவன் இருக்குவரை
மரங்கள் ,மடிந்து போகும்.
எரிந்தாலும் ,எரித்தாலும்
இந்த மண்ணுக்கு உரமாக
உருமாறும் ,
சூப்பரான அர்த்தமுள்ள கவிதை தோழருக்கு வாழ்த்துக்கள்.
மரங்கள் ,மடிந்து போகும்.
எரிந்தாலும் ,எரித்தாலும்
இந்த மண்ணுக்கு உரமாக
உருமாறும் ,
சூப்பரான அர்த்தமுள்ள கவிதை தோழருக்கு வாழ்த்துக்கள்.
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:
அருமையான கவிதை அப்துல்லா...
கிழ மரம்...
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
தமிழனைக் காக்க
உடனே ஓர் இளம் தளிரும்
நன்றாக நின்று எரிய கிழமரம்.... எரிக்கப்படுவதோ இளந்தளிர்.... !
மதவெறியைக் காக்க
மலை மலையாய் மனிதஇனமும
வேண்டாத மருமகளை
வீட்டில் கதவடைத்தும்
பச்சை மரங்களன்றோ
பற்றி எரிகின்றன..
மானுடங்களுடன்
பதறி சிதறி நிலைகுலைவது
மரங்கள் நாங்களும் தான்..
எரியும்போது பதறுவது மனிதர்கள் மட்டுமல்ல... மனிதனின் செயலால்... இந்த பச்சை மரங்களும் படும் பாட்டை அழகாக எடுத்துக் காட்டியுள்ளீர்.
வேண்டுமெனில்....
வேரோடு வருகிறேன்
விடை தருவாயா
இந்த ஐந்தறிவுக் களியாட்டத்திற்கு
இப்போது அவன்
வெட்டுப்பட்ட துண்டான
என் அங்கத்திலே
கோடரியின் கூர் தீட்டுகிறான்
அவன் சொன்னான்
வைரம் பாய்ஞ்ச மரம
நல்லா நின்னு எரியும்...
மனிதம் மரத்துவிட்டது.... மரம் மனிதனை வெறுத்துவிட்டது... அருமையான கருவினைக் கொண்டு அர்த்தமுள்ள கவிதையைப் படைத்துள்ளீர் அப்துல்லா.... வாழ்த்துக்கள்....!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
சிறந்த கரு இது போன்ற உணர்வில் பல்லாயிரம் மனிதங்களும் உலவுகின்றது தனிமரமாக்கப்பட்டு பட்டமரமாகி உபயோகம் மாத்திரம் அவர்களிடமிருந்து ஆனால் அவர்கள் எதுவும் பெறுவதில்லை அவர்களுக்காக அருமையான கவிதை ரசித்தேன் அதிகம்
Re: நல்லா நின்னு எரியும் - அப்துல்லாஹ்
நாட்டுப்பற்றும் பொதுநலமும் கலந்து வந்த அருமையான கவிதை
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Similar topics
» `மழை நின்னு போச்சு..!' - மைக்ரோ கதை
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
» நெஞ்சு எரியும் தன்மையா?
» 110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு
» உயிர் எரியும் வீதிகள்
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
» நெஞ்சு எரியும் தன்மையா?
» 110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு
» உயிர் எரியும் வீதிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|