சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்  Khan11

நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்

3 posters

Go down

நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்  Empty நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 6:35

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
அல்லாஹ் மறுமைநாளில் கூறுவான்:
""ஆதத்தின் மகனே! நான் நோயுற்றிருந்தேன். நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை,''.
அதற்கு மனிதன் ""என் அதிபதியே! நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும்?
நீ அகிலங்களுக்கெல்லாம் அதிபதியாயிற்றே!'' என்று கேட்பான்.
அதற்கு
இறைவன், ""என்னுடைய இன்ன அடியார் நோயுற்றுக் கிடந்தார். நீ அவரை நலம்
விசாரிக்கவில்லை; நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால், அதன் மூலம்
என்னை அடைந்திருப்பாய் என்று நீ அறிந்திருக்கவில்லையா?'' என்று கூறுவான்.
(முஸ்லிம்)
விளக்கம்: நலம் விசாரித்தல் என்பது ஒரு நோயாளியிடம்
சென்று நலம் விசாரிப்பது மட்டுமன்று. மாறாக, அவர் ஏழையாயின், அவருக்குத்
தேவையான சிகிச்சைக்கும் மருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யவேண்டும்; அவர்
ஏழையல்லர்; ஆனால், மருந்து கொண்டுவரவும் அதனைக் குடிக்கச் செய்யவும்
ஒருவரும் அவருக்கில்லை என்றால், அந்தப் பணிவிடைகளை அவருக்குச் செய்வதில்
கவனம் செலுத்திட வேண்டும். இவைதாம் உண்மையான நலம் விசாரித்தலாகும்.
அறிவிப்பாளர்:
அபூமூஸா(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""நோயாளிகளை நலம் விசாரியுங்கள்;
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; கைதியை
விடுதலை செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.''
(புகாரி)
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)
அண்ணல்
நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு யூதச் சிறுவன் பணிவிடை புரிந்து கொண்டிருந்தான்.
அவன் நோயுற்றவுடன் அண்ணலார் அவனை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவனது
தலைமாட்டில் அமர்ந்து ""நீ இஸ்லாத்தைத் தழுவிவிடு!'' என்று அவனிடம்
கூறினார்கள். அச்சிறுவன் தன் தந்தையைப் பார்த்தான். அவர், ""நீ அபுல்காஸிம்
(அண்ணலார்) சொல்வதைச் செய்!'' என்று கூறினார். எனவே, அவன் இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டான். அதன் பிறகு அண்ணலார், ""அச்சிறுவனை நரகத்திலிருந்து
காபாற்றிவிட்ட அல்லாஹ்விற்கு நன்றி, '' என்று கூறிய வண்ணம் அங்கிருந்து
கிளம்பினார்கள்.
(புகாரி)
விளக்கம்: அண்ணல் நபி(ஸல்)
அவர்களின் தூய நடத்தையை நண்பர், பகைவர் அனைவரும் அறிந்திருந்தனர். யூதர்கள்
அனைவருமே அண்ணலாரின் பகைவர்களாய் இருக்கவில்லை. இந்த யூதருக்கு
அண்ணலாருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பிருந்தது. எனவே, அவர் தன் மகனை
அண்ணலார்(ஸல்) அவர்களின்
பணிவிடைக்காக அனுப்பிவிட்டிருந்தார்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி)
""நோயாளியை
நலம் விசாரிக்கச் செல்லும் போது, கூச்சல் போடாமலிருப்பதும் நோயாளியின்
அருகே சிறிதுநேரமே உட்காருவதும் அண்ணலாரின் நடைமுறை(ஸுன்னத்) ஆகும்.''
(மிஷ்காத்)
விளக்கம்:
இந்த அறிவுரை பொதுவான நோயாளிகளுக்குரியதாகும். ஆனால், ஒருவரின் நெருங்கிய
நண்பர் நோய்வாய்ப்பட்டுவிட்டால், தான் அவரருகே அமர்ந்திருப்பதை
விரும்புகின்றார் என்று அந்நண்பர் உணர்வாராயின் அவர் அதிக நேரமும்
அமர்ந்திருக்கலாம்.
அறிவிப்பாளர்:
அபூஹுரைரா(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
""ஓர்
இறைநம்பிக்கையாளன் மற்றோர் இறைநம்பிக்கையாளனுக்கு கண்ணாடியாவான். ஓர்
இறைநம்பிக்கையாளன் மற்றோர் இறைநம்பிக்கையாளனின் சகோதரன் ஆவான். அவன் தன்
சகோதரனை அழிவிலிருந்து காப்பாற்றுகிறான்; அவனுக்குப் பின்னாலிருந்து அவனைப்
பாதுகாக்கின்றான்.'' (முஸ்லிம்)
விளக்கம்: ஒரு முஸ்லிம் இன்னொரு
முஸ்லிமுக்கு கண்ணாடியாவான் என்பதன் கருத்து: அவனுக்கு நேரும் துன்பத்தை
தனக்கு நேர்ந்து விட்ட துன்பமாகக் கருதுவான்; எப்படி அவன் தன் துன்பத்தால்
துடிக்கிறானோ அதுபோன்று இவனும் துடித்தெழ வேண்டும்; அதனை நீக்கிட
முயலவேண்டும்.
(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்  Empty Re: நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்

Post by புதிய நிலா Thu 22 Sep 2011 - 12:05

நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்  480414 நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்  517195
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்  Empty Re: நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்

Post by இன்பத் அஹ்மத் Thu 22 Sep 2011 - 14:15

சிறந்த ஹதீஸ் தொகுப்பு நன்றி பகிர்ந்தமைக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்  Empty Re: நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum