Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு
ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு
தனி நாட்டுக் கோரிக்கைக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க அழுத்தம்
ஐ. நா. தனிநாட்டு கோரிக்கைக்கு இன்னும் இருவாரங்களுக்குள் முடிவு கிடைக்க வேண்டும் என பலஸ்தீன நிர்வாகம் கெடு விதித்துள்ளது.
ஐ. நா. வின் 194 ஆவது அங்கத்துவ நாடாக உறுப்புரிமை பெறும் விண்ணப் பத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பம் பாதுகாப்புச் சபையின் வாக்கெடுப்பிற்காக விடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்தும் பாதுகாப்புச் சபை அதன் மீது வாக்கெடுப்பு நடத்தவுள்ளது. எனினும் இன்னும் இரு வாரங்களுக்குள் பலஸ்தீன அங்கத்துவம் குறித்து முடிவு கிடைக்க வேண்டும் என ஐ. நா. விடம் பலஸ்தீன் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
“பாதுகாப்புச் சபை முடிவு கிடைக்க பலஸ்தீன நிர்வாகம் இன்னும் இரு வாரங்கள் காத்திருக்கும்” என பதா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் அஸ்ஸாம் அல் அஹ்மட் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ¤ம் வலியுறுத்தியுள்ளார். மாத காலங்கள் நீடிக்காமல், இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பலஸ்தீனின் விண்ணப்பம் குறித்து பாதுகாப்புச் சபையில் இன்று விவாதிக்கவுள்ளதாக பாதுகாப்புச் சபையின் லெபனான் நாட்டுக்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புச் சபையின் தலைவராக இருக்கும் நவாஸ் சலாம் கூறும் போது, “பலஸ்தீனின் விண்ணப்ப கடிதம் பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்துக்கும் வழங்கப்பட் டுள்ளது. இது குறித்து திங்கட்கிழமை (இன்று) மாலை மூன்று மணிக்கு பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படும்” என தெரிவித்தார்.
“உலகின் 127 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை ஐ. நா. தன் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த வெள்ளிக் கிழமை ஐ. நா. பொதுச் சபை கூட்டத் தில் கோரிக்கை விடுத்தார். அவருக்குப் பின் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நெதன் யாஹு , தீர்மானங்கள் போடுவதைத் தவிர்த்து விட்டு, பேச்சு உவார்த்தைக்கு வரும்படி பலஸ்தீனத்துக்கு அழைப்பு விடுத்தார்.
பொதுச் சபையில் பேசிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூறியதாவது:- கடந்த 1967 க்கு முன்பிருந்த எல்லைகளுடன் கூடிய பாலஸ்தீன நாட்டை, பாதுகாப்புச் சபை அங்கீகரிக்க வேண்டும். இதுவரை பலஸ்தீனத்தை ஏற்றுக் கொள்ளாத நாடுகள், இனி மேலாவது அதை ஒரு நாடாக ஏற்க வேண்டும்.
பல ஆண்டுகளாக, நாடோடிகளாகத் திரிந்து, காலனி ஆதிக்கத்தில் அவதிப்பட்ட எமது மக்கள், பூமியில் உள்ள மற்றவர்களைப் போல விடுதலை பெற்ற நிலத்தில் இறையாண்மையோடு வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு அப்பாஸ் கூறினார்.
அப்பாஸ் பேசிக் கொண்டிருந்த போதே பல நாடுகளின் உறுப்பினர்கள் அவரது பேச்சை அங்கீகரித்து, எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
இதையடுத்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, “இஸ்ரேல் அமைதியையே விரும்புகிறது. ஐ. நா. வில் தீர்மானம் போடுவதால், அந்த அமைதியைக் கொண்டு வர முடியாது. பேச்சுவார்த்தையின் மூலமாகவே அதை சாதிக்க முடியும்” என்றார். பாலஸ்தீன கோரிக்கை குறித்து இரு நாட்கள் முன்னர், ஐ. நா. பொதுச் சபையில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, “பலஸ்தீன விடுதலைக்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது.
பேச்சு வார்த்தைகள் மூலமே அது சாத்தியம்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பி டத்தக்கது. பலஸ்தீன ஜனாதிபதி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பேச்சுக்களுக்குப் பின், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ. நா. ஆகியவை இணைந்து விடுத்த அறிக்கையில், “இன்னும் ஒரு மாதத்திற்குள் இரு தர ப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை ஆரம்பி ப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். எல்லை மற்றும் பாதுகாப்பு குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம், 2012 கடைசிக்குள் ஓர் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்து ள்ளன.
ஐ. நா. பாதுகாப்புச் சபையில் உள்ள 15 நாடுகளில், ஒன்பது நாடுகள், ஒரு நாட்டை அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரித்த போதும், அமெரிக்கா உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள், தங்கள் மறுப்பாணையை (வீட்டோ) பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால், பாலஸ்தீன கோரிக்கை மீது தனது மறுப்பாணையை பயன்படுத்தப் போவதாக ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறிவிட்டார்.
தனி நாட்டுக் கோரிக்கைக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க அழுத்தம்
ஐ. நா. தனிநாட்டு கோரிக்கைக்கு இன்னும் இருவாரங்களுக்குள் முடிவு கிடைக்க வேண்டும் என பலஸ்தீன நிர்வாகம் கெடு விதித்துள்ளது.
ஐ. நா. வின் 194 ஆவது அங்கத்துவ நாடாக உறுப்புரிமை பெறும் விண்ணப் பத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பம் பாதுகாப்புச் சபையின் வாக்கெடுப்பிற்காக விடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்தும் பாதுகாப்புச் சபை அதன் மீது வாக்கெடுப்பு நடத்தவுள்ளது. எனினும் இன்னும் இரு வாரங்களுக்குள் பலஸ்தீன அங்கத்துவம் குறித்து முடிவு கிடைக்க வேண்டும் என ஐ. நா. விடம் பலஸ்தீன் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
“பாதுகாப்புச் சபை முடிவு கிடைக்க பலஸ்தீன நிர்வாகம் இன்னும் இரு வாரங்கள் காத்திருக்கும்” என பதா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் அஸ்ஸாம் அல் அஹ்மட் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ¤ம் வலியுறுத்தியுள்ளார். மாத காலங்கள் நீடிக்காமல், இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பலஸ்தீனின் விண்ணப்பம் குறித்து பாதுகாப்புச் சபையில் இன்று விவாதிக்கவுள்ளதாக பாதுகாப்புச் சபையின் லெபனான் நாட்டுக்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புச் சபையின் தலைவராக இருக்கும் நவாஸ் சலாம் கூறும் போது, “பலஸ்தீனின் விண்ணப்ப கடிதம் பாதுகாப்புச் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்துக்கும் வழங்கப்பட் டுள்ளது. இது குறித்து திங்கட்கிழமை (இன்று) மாலை மூன்று மணிக்கு பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படும்” என தெரிவித்தார்.
“உலகின் 127 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை ஐ. நா. தன் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த வெள்ளிக் கிழமை ஐ. நா. பொதுச் சபை கூட்டத் தில் கோரிக்கை விடுத்தார். அவருக்குப் பின் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நெதன் யாஹு , தீர்மானங்கள் போடுவதைத் தவிர்த்து விட்டு, பேச்சு உவார்த்தைக்கு வரும்படி பலஸ்தீனத்துக்கு அழைப்பு விடுத்தார்.
பொதுச் சபையில் பேசிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூறியதாவது:- கடந்த 1967 க்கு முன்பிருந்த எல்லைகளுடன் கூடிய பாலஸ்தீன நாட்டை, பாதுகாப்புச் சபை அங்கீகரிக்க வேண்டும். இதுவரை பலஸ்தீனத்தை ஏற்றுக் கொள்ளாத நாடுகள், இனி மேலாவது அதை ஒரு நாடாக ஏற்க வேண்டும்.
பல ஆண்டுகளாக, நாடோடிகளாகத் திரிந்து, காலனி ஆதிக்கத்தில் அவதிப்பட்ட எமது மக்கள், பூமியில் உள்ள மற்றவர்களைப் போல விடுதலை பெற்ற நிலத்தில் இறையாண்மையோடு வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு அப்பாஸ் கூறினார்.
அப்பாஸ் பேசிக் கொண்டிருந்த போதே பல நாடுகளின் உறுப்பினர்கள் அவரது பேச்சை அங்கீகரித்து, எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
இதையடுத்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, “இஸ்ரேல் அமைதியையே விரும்புகிறது. ஐ. நா. வில் தீர்மானம் போடுவதால், அந்த அமைதியைக் கொண்டு வர முடியாது. பேச்சுவார்த்தையின் மூலமாகவே அதை சாதிக்க முடியும்” என்றார். பாலஸ்தீன கோரிக்கை குறித்து இரு நாட்கள் முன்னர், ஐ. நா. பொதுச் சபையில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, “பலஸ்தீன விடுதலைக்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது.
பேச்சு வார்த்தைகள் மூலமே அது சாத்தியம்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பி டத்தக்கது. பலஸ்தீன ஜனாதிபதி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பேச்சுக்களுக்குப் பின், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ. நா. ஆகியவை இணைந்து விடுத்த அறிக்கையில், “இன்னும் ஒரு மாதத்திற்குள் இரு தர ப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை ஆரம்பி ப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். எல்லை மற்றும் பாதுகாப்பு குறித்து மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம், 2012 கடைசிக்குள் ஓர் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்து ள்ளன.
ஐ. நா. பாதுகாப்புச் சபையில் உள்ள 15 நாடுகளில், ஒன்பது நாடுகள், ஒரு நாட்டை அங்கீகரிக்க வேண்டும். அப்படி அங்கீகரித்த போதும், அமெரிக்கா உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள், தங்கள் மறுப்பாணையை (வீட்டோ) பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால், பாலஸ்தீன கோரிக்கை மீது தனது மறுப்பாணையை பயன்படுத்தப் போவதாக ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறிவிட்டார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு
இது எல்லாம் தெரிந்தும் உலக நாடுகள் மௌனம் தான் என்ன வென்று காரணம் தெரியவில்லை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு
kalainilaa wrote:இது எல்லாம் தெரிந்தும் உலக நாடுகள் மௌனம் தான் என்ன வென்று காரணம் தெரியவில்லை .
@. @.
Similar topics
» ஐக்கிய நாடுகள் சபையிலும் ஊடகப் புறக்கணிப்பு
» ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாதுகாப்புக் கவுன்சிலில் உரை
» ஐக்கிய நாடுகள் தூதுவராக பதவி பெற்றவர்
» சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்
» இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் ஆராய்வு
» ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாதுகாப்புக் கவுன்சிலில் உரை
» ஐக்கிய நாடுகள் தூதுவராக பதவி பெற்றவர்
» சிரியாவில் போராட்டக்காரர்கள் கொலை ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்
» இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் ஆராய்வு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|