Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அகில இலங்கை இந்து மாமன்றம் வழங்கும் தைப்பொங்கல் செய்தி
2 posters
Page 1 of 1
அகில இலங்கை இந்து மாமன்றம் வழங்கும் தைப்பொங்கல் செய்தி
வையகத்தை வாழவைக்கும் தெய்வமாக விளங்கும் சூரிய பகவானை போற்றித் துதித்து வழிபாடு செய்யும் பாரம்பரியமிக்க திருநாளாக தைப்பொங்கல் அமைகிறது. இந்து மக்களின் தனித்துவமிக்க பண்டிகையாக முக்கியத்துவம் பெறும் இந்நாள் தைமாதப் பிறப்பாகவும் தமிழர் திருநாளாகவும் சிறப்பு பெறுகிறது.
“தை பிறந்தால் வழிபிறக்கும்” என்ற பாரம்பரிய சொற்றொடரின்படி பலவித எதிர்பார்ப்புக்களையும், நம்பிக்கைகளையும் வைத்து தைத்திங்கள் வரவேற்கப்படுகிறது. அந்த வகையில் மக்களது வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் மலரும் வகையில் தைத்திங்கள் அமையவேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பமாகும்.
கடந்த பல வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்து வந்த வேதனைகளும், சோதனைகளும் வார்த்தைகளால் சொல்லமுடியாது. அத்தகைய துரதிர்ஸ்டவசமான நிலைமைகளின் தாக்கம் இன்னமும் முழுமையாக நீங்காத நிலையில், மழை வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் மேலும் அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டு வருவது உண்மையிலே வருத்தத்திற்குரியது.
இத்தகைய நிலைமையில் எங்கள் உடன் பிறப்புகளுக்கு உதவவேண்டியது எங்கள் கடமையாகும். கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக எங்கள் சகோதர சகோதரிகள் பலவித இன்னல்களை அனுபவித்து வந்தபோது அகில இலங்கை இந்து மாமன்றம் இயன்றவரையிலான நிவாரண உதவிகளை வழங்கி வந்திருப்பதுடன், அவர்களுக்காக மாமன்றத்தின் சார்பாக தயங்காது குரல்கொடுத்தும் வந்திருக்கிறோம்.
இத்தகைய சமூகநலப் பணிகளை இனிவரும் காலங்களிலும் மாமன்றம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். சூரியோதயம் காணும் கிழக்கில் இன்று வெள்ள அனர்த்தங்களினால் மக்கள் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நிவாரணங்களை வழங்கி உதவிக் கொண்டிருக்கிறோம்.
ஆலயங்களும், இந்து நிறுவனங்களும், இந்து மக்களும் தங்களால் இயன்ற வகையில் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு உதவ வேண்டும் எனவும் இச்சந்தர்ப்பத்தில் அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஏற்கனவே கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் என்பவற்றின் அறங்காவலர்களும், மனிதநேய அறநிதியம், உலகச் சைவப் பேரவை போன்ற சமூக நிறுவனங்களும் உதவியிருக்கிறார்கள்.
இங்கிருந்து அனுப்பப்படும் நிவாரணங்களை கிழக்கிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில் மாமன்றத்தின் அங்கத்துவ சங்கங்களான மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம், ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றம் என்பன முன்னெடுத்துச் செல்கின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் சகோர சகோரிகளின் துயரங்கள் முற்றாகவே நீங்கி, எந்தவிதமான அனர்த்தங்களினாலும் பாதிக்கப்படாத வகையில் நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்படவேண்டும் என்பதற்காக தைப்பொங்கல் நாளில் இறையருள் வேண்டிப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு மாமன்றம் இந்து மக்களைக் கேட்டுக் கொள்கிறது.
எங்களது மக்கள் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி பொங்கும் வகையிலான ஒளிமயமான எதிர்காலம் உதயமாகவேண்டும். என அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானைப் பிரார்த்திக்கிறோம்.
வி.கயிலாசபிள்ளை
தலைவர்
கந்தையா நீலகண்டன்
பொதுச் செயலாளர்
அகிலஇலங்கை இந்து மாமன்றம் - கொழும்பு
“தை பிறந்தால் வழிபிறக்கும்” என்ற பாரம்பரிய சொற்றொடரின்படி பலவித எதிர்பார்ப்புக்களையும், நம்பிக்கைகளையும் வைத்து தைத்திங்கள் வரவேற்கப்படுகிறது. அந்த வகையில் மக்களது வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் மலரும் வகையில் தைத்திங்கள் அமையவேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பமாகும்.
கடந்த பல வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்து வந்த வேதனைகளும், சோதனைகளும் வார்த்தைகளால் சொல்லமுடியாது. அத்தகைய துரதிர்ஸ்டவசமான நிலைமைகளின் தாக்கம் இன்னமும் முழுமையாக நீங்காத நிலையில், மழை வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களால் மேலும் அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டு வருவது உண்மையிலே வருத்தத்திற்குரியது.
இத்தகைய நிலைமையில் எங்கள் உடன் பிறப்புகளுக்கு உதவவேண்டியது எங்கள் கடமையாகும். கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக எங்கள் சகோதர சகோதரிகள் பலவித இன்னல்களை அனுபவித்து வந்தபோது அகில இலங்கை இந்து மாமன்றம் இயன்றவரையிலான நிவாரண உதவிகளை வழங்கி வந்திருப்பதுடன், அவர்களுக்காக மாமன்றத்தின் சார்பாக தயங்காது குரல்கொடுத்தும் வந்திருக்கிறோம்.
இத்தகைய சமூகநலப் பணிகளை இனிவரும் காலங்களிலும் மாமன்றம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். சூரியோதயம் காணும் கிழக்கில் இன்று வெள்ள அனர்த்தங்களினால் மக்கள் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நிவாரணங்களை வழங்கி உதவிக் கொண்டிருக்கிறோம்.
ஆலயங்களும், இந்து நிறுவனங்களும், இந்து மக்களும் தங்களால் இயன்ற வகையில் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு உதவ வேண்டும் எனவும் இச்சந்தர்ப்பத்தில் அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஏற்கனவே கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் என்பவற்றின் அறங்காவலர்களும், மனிதநேய அறநிதியம், உலகச் சைவப் பேரவை போன்ற சமூக நிறுவனங்களும் உதவியிருக்கிறார்கள்.
இங்கிருந்து அனுப்பப்படும் நிவாரணங்களை கிழக்கிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில் மாமன்றத்தின் அங்கத்துவ சங்கங்களான மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம், ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றம் என்பன முன்னெடுத்துச் செல்கின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் சகோர சகோரிகளின் துயரங்கள் முற்றாகவே நீங்கி, எந்தவிதமான அனர்த்தங்களினாலும் பாதிக்கப்படாத வகையில் நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்படவேண்டும் என்பதற்காக தைப்பொங்கல் நாளில் இறையருள் வேண்டிப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு மாமன்றம் இந்து மக்களைக் கேட்டுக் கொள்கிறது.
எங்களது மக்கள் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி பொங்கும் வகையிலான ஒளிமயமான எதிர்காலம் உதயமாகவேண்டும். என அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத நடராஜப் பெருமானைப் பிரார்த்திக்கிறோம்.
வி.கயிலாசபிள்ளை
தலைவர்
கந்தையா நீலகண்டன்
பொதுச் செயலாளர்
அகிலஇலங்கை இந்து மாமன்றம் - கொழும்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
» அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள்
» அகில இலங்கை சமாதான நீதிவானாக எஸ்.எல்.முனாஸ் சத்திய பிரமானம்
» அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட போட்டி; நீர்கொழும்பு மேரிஸ் கல்லூரி அணி சம்பியன்
» அஸாத் சாலியின் விடுதலைக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் - அகில இலங்கை உலமா கவுன்சில்
» அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள்
» அகில இலங்கை சமாதான நீதிவானாக எஸ்.எல்.முனாஸ் சத்திய பிரமானம்
» அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட போட்டி; நீர்கொழும்பு மேரிஸ் கல்லூரி அணி சம்பியன்
» அஸாத் சாலியின் விடுதலைக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் - அகில இலங்கை உலமா கவுன்சில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|