Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Today at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49
» இலங்கை அழகி
by rammalar Today at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்
ஆப்பிரிக்கா
கண்டத்தில் உள்ள லிபியா நாட்டின் அதிபராக இருந்தவர் கடாபி. இவர் கடந்த 42
ஆண்டுகளாக அந்த நாட்டின் அதிபராக இருந்தார். அவரது ஆட்சியை எதிர்த்து கடந்த
மார்ச் மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. போராட்டத்தை அடக்கி ஒடுக்க அவர்
ராணுவத்தை பயன்படுத்தினார்.
இதை தொடர்ந்து மக்களின்
புரட்சி படை உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும்
ஐரோப்பிய நாடுகளின் “நேட்டோ” படையும் களத்தில் குதித்தது.
இதை
தொடர்ந்து கடாபியின் ராணுவத்துக்கும், புரட்சிபடைக்கும் இடையே சண்டை
நடந்தது. தொடக்கத்தில் பெங்காசி நகரை கைப்பற்றிய புரட்சிப்படை படிப்படியாக
பல நகரங்களை தங்கள் வசமாக்கியது.
கடந்த மாதம்
தலைநகர் திரிபோலியை பிடித்தது. இதை தொடர்ந்து கடாபி தலைமறைவானார். இறுதியாக
பிடிபடாமல் இருந்த கடாபியின் சொந்த ஊரான சிர்த் பானிவாலிட் ஆகிய 2 இடங்களை
பிடிக்க கடும் சண்டை நடந்தது.
பானி வாலிட்
பிடிபட்ட நிலையில் சிர்த் நகரமும் புரட்சிப்படையிடம் வீழ்ந்தது. அப்போது
ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருந்த கடாபியை புரட்சிப்படையினர்
கண்டுபிடித்தனர். அப்போது அவர் தனது 2 கால்களிலும் காயத்துடன் இருந்தார்.
எனவே அவரை சுட்டுக்கொல்ல புரட்சிப்படையினர் துப்பாக்கியை நீட்டினர். தன்னை
சுட்டுக்கொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் கடாபி கெஞ்சினார்.
ஆனால்
அதை பொருட்படுத்தாமல் அவரை புரட்சி படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த
தகவலை இடைக்கால அரசின் பிரதமர் முகமது ஜிப்ரில் செய்தியாளர்களிடம்
அறிவித்தார். இந்த தருணத்தைதான் நாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தோம் என
தெரிவித்தார்.
இதைதொடர்ந்து சுட்டுக்
கொல்லப்பட்ட கடாபியின் உடல் அல்-அராபியா மற்றும் அல்ஜசீரா டெலிவிஷன்களில்
ஒளிபரப்பப்பட்டது. அப்போது அவர் உடல் முழுவதும் ரத்த வெள்ளமாக இருந்தது.
அவரது உடல் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் மிஸ்ரதா நகருக்கு அருகே எடுத்து செல்லப்பட்டதாக அல்-அரா பியா
டெலிவிஷனில் காட்டப்பட்டது.
கடாபியின் உடல் ஒரு
வாகனத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி மக்கள் கூட்டமாக நின்று
கொண்டு கடாபிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். அவர்
கொல்லப்பட்டதை அடுத்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
கடாபியுடன்
அவரது மகன் முடாசிம் என்பவரும் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல்
மிஸ்ரதாவுக்கு எடுத்து செல்லப்பட்டதாக புரட்சி படை வீரர் முகமது லெய்த்
தெரிவித்தார்.
கடாபி சுட்டுக்கொல்லப்பட்டதை
தொடர்ந்து லிபியாவில் அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் நிலை உள்ளது. அதை தடுக்க
தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால அரசின் தலைவராக
முஸ்தபா அப்துல் ஜலீல் பதவி ஏற்க உள்ளார். அவரே லிபியாவின் இடைக்கால
அதிபராக பதவி ஏற்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று
வெளியாகிறது.
கண்டத்தில் உள்ள லிபியா நாட்டின் அதிபராக இருந்தவர் கடாபி. இவர் கடந்த 42
ஆண்டுகளாக அந்த நாட்டின் அதிபராக இருந்தார். அவரது ஆட்சியை எதிர்த்து கடந்த
மார்ச் மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. போராட்டத்தை அடக்கி ஒடுக்க அவர்
ராணுவத்தை பயன்படுத்தினார்.
இதை தொடர்ந்து மக்களின்
புரட்சி படை உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும்
ஐரோப்பிய நாடுகளின் “நேட்டோ” படையும் களத்தில் குதித்தது.
இதை
தொடர்ந்து கடாபியின் ராணுவத்துக்கும், புரட்சிபடைக்கும் இடையே சண்டை
நடந்தது. தொடக்கத்தில் பெங்காசி நகரை கைப்பற்றிய புரட்சிப்படை படிப்படியாக
பல நகரங்களை தங்கள் வசமாக்கியது.
கடந்த மாதம்
தலைநகர் திரிபோலியை பிடித்தது. இதை தொடர்ந்து கடாபி தலைமறைவானார். இறுதியாக
பிடிபடாமல் இருந்த கடாபியின் சொந்த ஊரான சிர்த் பானிவாலிட் ஆகிய 2 இடங்களை
பிடிக்க கடும் சண்டை நடந்தது.
பானி வாலிட்
பிடிபட்ட நிலையில் சிர்த் நகரமும் புரட்சிப்படையிடம் வீழ்ந்தது. அப்போது
ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருந்த கடாபியை புரட்சிப்படையினர்
கண்டுபிடித்தனர். அப்போது அவர் தனது 2 கால்களிலும் காயத்துடன் இருந்தார்.
எனவே அவரை சுட்டுக்கொல்ல புரட்சிப்படையினர் துப்பாக்கியை நீட்டினர். தன்னை
சுட்டுக்கொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் கடாபி கெஞ்சினார்.
ஆனால்
அதை பொருட்படுத்தாமல் அவரை புரட்சி படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த
தகவலை இடைக்கால அரசின் பிரதமர் முகமது ஜிப்ரில் செய்தியாளர்களிடம்
அறிவித்தார். இந்த தருணத்தைதான் நாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தோம் என
தெரிவித்தார்.
இதைதொடர்ந்து சுட்டுக்
கொல்லப்பட்ட கடாபியின் உடல் அல்-அராபியா மற்றும் அல்ஜசீரா டெலிவிஷன்களில்
ஒளிபரப்பப்பட்டது. அப்போது அவர் உடல் முழுவதும் ரத்த வெள்ளமாக இருந்தது.
அவரது உடல் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் மிஸ்ரதா நகருக்கு அருகே எடுத்து செல்லப்பட்டதாக அல்-அரா பியா
டெலிவிஷனில் காட்டப்பட்டது.
கடாபியின் உடல் ஒரு
வாகனத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி மக்கள் கூட்டமாக நின்று
கொண்டு கடாபிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். அவர்
கொல்லப்பட்டதை அடுத்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
கடாபியுடன்
அவரது மகன் முடாசிம் என்பவரும் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல்
மிஸ்ரதாவுக்கு எடுத்து செல்லப்பட்டதாக புரட்சி படை வீரர் முகமது லெய்த்
தெரிவித்தார்.
கடாபி சுட்டுக்கொல்லப்பட்டதை
தொடர்ந்து லிபியாவில் அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் நிலை உள்ளது. அதை தடுக்க
தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால அரசின் தலைவராக
முஸ்தபா அப்துல் ஜலீல் பதவி ஏற்க உள்ளார். அவரே லிபியாவின் இடைக்கால
அதிபராக பதவி ஏற்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று
வெளியாகிறது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்
கடாபியின் மரணம் சர்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையலாம் ஆனால் அவர் கொல்லப்பட்டவிதம் கொடுமை அதை லிபியர்கள் செய்த விதம் காட்டுமிராண்டித்தனம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்
லிபியர்கள் என்றில்லை அது ஒரு கூலிப்பைடதான் செய்தது காட்டு வாசிகள்தான் அவர்கள்jasmin wrote:கடாபியின் மரணம் சர்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையலாம் ஆனால் அவர் கொல்லப்பட்டவிதம் கொடுமை அதை லிபியர்கள் செய்த விதம் காட்டுமிராண்டித்தனம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» லிபியாவின் அயல் நாடான நைகரில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை
» இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
» இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
» அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி
» சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்: தொழில் அதிபர் சுட்டுக்கொலை
» இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
» இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
» அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் மீது காதல் கொண்டிருந்த லிபிய அதிபர் கடாபி
» சென்னை சவுகார்பேட்டையில் பயங்கரம்: தொழில் அதிபர் சுட்டுக்கொலை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|