சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Yesterday at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Yesterday at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Yesterday at 12:49

» இலங்கை அழகி
by rammalar Yesterday at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Yesterday at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Yesterday at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Yesterday at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Yesterday at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Yesterday at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Yesterday at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Wed 22 May 2024 - 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Wed 22 May 2024 - 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Wed 22 May 2024 - 15:11

» சினி மசாலா
by rammalar Wed 22 May 2024 - 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Wed 22 May 2024 - 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Wed 22 May 2024 - 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Wed 22 May 2024 - 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Wed 22 May 2024 - 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Wed 22 May 2024 - 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Wed 22 May 2024 - 13:16

» நிறை - குறை
by rammalar Wed 22 May 2024 - 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Wed 22 May 2024 - 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........ Khan11

கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........

3 posters

Go down

கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........ Empty கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........

Post by பானுஷபானா Fri 4 Nov 2011 - 15:22

கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........ P35.b5bal8gl8o8t4wc8gs0w84k4o.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

ஆறு வருடங்களுக்கு முன்பு, முன்னூறு மைல்களுக்கு அப்பாலிருந்து நான்
இந்தக் கல்லூரிக்குப் படிக்க வந்த முதல் நாளே தெரிந்துவிட்டது, இந்தக்
கல்லூரியைப் பற்றி வெளியே பரவிக்கிடக்கும் புகழைவிட நூறு மடங்கு அதிகமாக,
இந்தக் கல்லூரிக்குள் உன் புகழ் பரவிக்கிடக்கிறது என்பது.
அதோ மகா வாசல் தெளிக்கிறாடா என்று ஒரு கும்பல் ஓடும். இதோ மகா கோலம்
போடுறாடா என்று இன்னொரு கும்பல் ஓடும். டேய்… மகா ஸ்கூல் கௌம்பிட்டாடா
என்று ஒரு கூட்டம் கூடும். அத்தனை யையும் ஆச்சரியத்தோடு
பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
கல்லூரியெங்கும் அழகழகாய் பெண்கள் சுற்றிக்கொண்டிருக்கையில், இந்தக்
கல்லூரியே ஸ்கூல் படிக்கும் ஒரு பெண் பின்னால் சுற்றுகிறது என்றால்,
அப்படியென்ன கிளியோபாட்ரா அவள்? என்று எனக்குள் கேட்டுக்கொண்டு…
அதையும்தான் பார்த்துவிடுவோமே!ՠஎன்று உன்னைப் பார்க்கக் கிளம்பினேன்.

கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவரின் மகள்தான்
நீ என்பதையும் கல்லூரிக்குள்ளேயேதான் உன் வீடிருக்கிறது என்பதும் தெரிய வர,
நீ ஸ்கூல் கிளம்பும் தரிசனத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த எங்கள்
சீனியர் கூட்டத்துக்குப் பின்னால் ஜூனியர்கள் நாங்கள் சேர்ந்துகொண்டோம்.
உன்னைப் பார்த்தவுடன், எலேய்… இவ வெறும் கிளியோபாட்ரா இல்லடா…
பஞ்சவர்ணக்கிளியோபாட்ரா என்று கிசுகிசுத்தபடி உன் பின்னா லேயே போனது
எங்களில் ஒரு கூட்டம். கிளியா இது? மயில்டா… மயிலோபாட்ரா என்று கிறங்கியபடி
மிச்சக் கூட்டமும் உன் பின் தொடர்ந்தது.

எனக்கும் ஆசை. ஆனால்… ச்சே, இத்தனை பேர் சுற்றும் பெண் பின்னால் நாமும்
சுற்றுவதா என்று ஒரு சின்ன ஈகோ. அதற்காக உன்னைப் பார்க்காமல் இருக்க
முடியுமா என்ன? நீ வரும் போதும் போகும்போதும் ஒன்றும் உன்னைப்
பார்க்கவில்லையே! என்பது மாதிரி உன்னைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.
ஆனால், அன்று திடீரென உன் அம்மா என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
அந்தச் செய்தி கேட்டு கல்லூரியே கொதித்துப் போய்விட்டது. இதுக்குடா?
என்றும் இப்படிடா? என்றும் என்னைக் குடைந்தெடுத்து விட்டார்கள் என்
நண்பர்களும் சீனியர்களும்.
?உன் கையெழுத்து நல்லாருக்குன்றதால தான் உன்னைக் கூப்பிட்டேன். தினமும்
சாயங்காலம் வந்து நான் எழுதற ப்ராஜெக்டைக் கொஞ்சம் காப்பி பண்ணித்
தர்றியாப்பா? என்றார்உன் அம்மா.
மௌனமாகத் தலையாட்டினேன். ஆனால் மனசோ டேய், உன் கையெழுத்து மட்டுமில்ல..
தலையெழுத் தும் நல்லா இருக்கு! என்று குதித்தது. அதன் பிறகு வந்த நாட்கள்…
உன்னை மிக மிக அருகில் பார்த்த நாட்கள்… எல்லாம் காதல் என்னைக் கட்டித் தழுவிய நாட்கள். ஆனால், எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், கழிந்து போயின மூன்று வருடங்கள்.
படிப்பு முடிய முடிய, உன்னைக் காதலித்தவர் களெல்லாம் தங்களின் காதல்களைப்
புதிதாக வந்தவர்களிடம் கொடுத்துவிட்டு வெளியேறி னார்கள். நீ எப்போதும்
போலயாரையும் காதலிக்காமலேயே இருந்தாய். எனக்குப் படிப்பு முடிந்தபோது
எல்லோரையும் போல என்னால் வெளியேறிவிட முடியவில்லை. அங்கேயே தொடர்ந்தேன்.
அங்கேயே ஒரு ஆசிரியர் வேலையும் வாங்கிக்கொண்டேன்.
இடையில் நீயும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு இந்தக் கல்லூரியிலேயே சேர்ந்தாய்.
உன் வீட்டை நான் கடக்கும்போது உன் அம்மா பார்த்துவிட்டால், உள்ளே அழைத்துப் பேசிக்கொண்டிருப்பார். அப்படியே போயின இரண்டு வருடங்கள்.
உனக்குக் கல்லூரிப் படிப்பு முடியப் போகிற ஒரு நாளில், உன் வீட்டுக்கு
வந்து உன் அம்மாவிடம் தயக்கத்துடன் உன்னைப் பெண் கேட்டேன், தன்னந்தனி ஆளாக.
எதுவும் பேசாமல் என்னை ஒரு பார்வை பார்த்த உன் அம்மா, உள்ளே இருந்த உன்னை அழைத்து
உன்னைப் பெண் கேக்கறார்… என்ன சொல்ல? என்றார்.
நீயோ முடியாதுனு சொல்லிடுங்க என்று சட்டென உள்ளே போனாய். அடிபட்ட பறவைபோல
சிறகொடிந்து போனேன். நான் கேட்டது தப்புனா என்னை மன்னிச்சுடுங்க என்று உன்
அம்மாவிடம் சொல்லிவிட்டு எழுந்தேன்.

நில்லுப்பா என்ற உன் அம்மா, என்ன பையன்ப்பா நீ… உன்னை என் பொண்ணு
காதலிக்க ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆகுது. அவளுக்குக் கெடைச்ச டாக்டர்
ஸீட்டைக்கூட வேண்டான்னுட்டு அவ இங்க படிக்கிறதே உனக் காகத்தான்…? என்றார்.
ஒரு கோடி கிதார் நரம்புகள் ஒரே நேரத்தில் மீட்டப்பட்டது போலிருந்தது
எனக்குள். ஏம்மா… அவருக்கும் என்னைப் பிடிக்குமாம்மா..??னு ஆயிரம் தடவைக்கு
மேல எங்கிட்ட கேட்டுட்டா. அவகிட்டே இன்னும் நீ உன் காதலையே சொல்லாம,
திடீர்னு கல்யாணத்தைப் பத்திப் பேச வந்தா, அவளுக்குக் கோபம் வராதா பின்னே?
என்று சிரித்தார் உன் அம்மா.

பரவசமாய் ஓடிவந்து உன் முன் நின்றேன். இத்தனை வருஷமா என்னை ஏன்
தவிக்கவிட்டீங்க? என்று அழுதாய்… அடித்தாய். நான் உன் விரல் பற்றினேன். என்
ஆறு வருடக் காத்திருப்பும் உன் காலடியில் நொறுங்கியது. உன் கண்ணீர் அதை
ஆசீர்வதித்தது!
சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்ளைக் காட்டி
இது எந்த ஊர் ஆப்பிள்?
அது எந்த ஊர் ஆப்பிள்? என்று
கேட்டுக்கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்
கேட்டன
நீ எந்த ஊர் ஆப்பிள்?

தபூ சங்கர்-
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........ Empty Re: கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........

Post by பர்ஹாத் பாறூக் Fri 4 Nov 2011 - 16:08

பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்ளைக் காட்டி
இது எந்த ஊர் ஆப்பிள்?
அது எந்த ஊர் ஆப்பிள்? என்று
கேட்டுக்கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்
கேட்டன
நீ எந்த ஊர் ஆப்பிள்?
கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........ 528804 கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........ 528804
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........ Empty Re: கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........

Post by *சம்ஸ் Fri 4 Nov 2011 - 18:27

அருமையான ஒரு பதிவினை படிக்க உதவியமைக்கு நன்றி பானு பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........ Empty Re: கிளியோபாட்ரா....மயிலோபாட்ரா........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum