Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
இயற்கையோடு இணைந்து.
3 posters
Page 1 of 1
இயற்கையோடு இணைந்து.
பரிணாம ஏணியின் மேல் படியில் இருக்கும் மனிதகுலம் மூட நம்பிக்கைகளிலும் அறியாமையிலும் மூழ்கி, குழந்தை வளர்க்கத் திணறுவது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது.
இயற்கையோடு இணைந்து இயல்பாகக் குழந்தை வளர்ப்பதே சரியான செயல். எல்லா விலங்குகளும் குட்டிகளுக்குத் தாய்ப்பால்தான் தருகின்றன. மனிதர்களும் அதைத்தான் செய்ய வேண்டும். அப்படியின்றி முதலில் சர்க்கரை கலந்த தண்ணீர் புதிதாய்ப் பிறந்த குழந்தைக்குக் கொடுப்பது இயற்கைக்கு மாறானது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் குழந்தை பிறந்தவுடன் கழுதைப்பால் கொடுத்தால் குழந்தைகள் கழுதையைப் போல் குரல் வளத்துடன் வளரும் என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. இது மிகவும் ஆபத்தான செயல். சுகாதாரமின்மை காரணமாக மிகமோசமான வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
அடுத்ததாக, குழந்தைகள் குளிப்பதாலும் தலையில் தண்ணீர் படுவதாலும் சளி பிடிக்கும் என்று பரவலான கருத்து இருக்கிறது. இது அறிவியல் அடிப்படையற்ற மூடநம்பிக்கையாகும். மனிதகுலம் திமிங்கலம், டால்பின், யானை வால்ரஸ் போன்று நீரில் வாழ்ந்து பரிணாம வளர்ச்சியடைந்ததாக அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தினம் தலையுடன் சேர்த்துக் குளிப்பதால் உடல் தூய்மையடையும். தலையில் படும் தண்ணீர் எவ்வகையிலும் தோல், மண்டை ஓடு போன்றவற்றைத் தாண்டி உள்ளே செல்ல முடியாது. ஆகவே குளித்ததனால் தலையில் நீர் இறங்கி விட்டது என்று சொல்வது ஓர் அபத்தமான கருத்தன்றி வேறல்ல. ஆகவே, குழந்தைகள் பிறந்த அடுத்தநாளிலிருந்து தூய்மையான நீரில் தினம் குளிக்க வேண்டும். குளித்தபின் காது, மூக்கு போன்றவற்றில் பெரியவர்கள் வாயினால் ஊதுவது நோய்க்கிருமிகள் தொற்றுவதற்கு வாய்ப்பை உருவாக்குகிறது. இந்தத் தவறான செயலால் தான் குழந்தைகளுக்குக் குளித்தவுடன் சளியும் காதுவலியும் ஏற்படுகிறது. இது போலவே குளித்தவுடன் சாம்பிராணி புகை போடுவதும் தவறு. சாம்பிராணியில் இருக்கும் ரசாயனங்கள் பலவித ஒவ்வாமையை ஏற்படுத்தி ஆஸ்துமா நோய் ஏற்பட வழிவகுக்கிறது.
மேலும் பலர் ஜாதிக்காய், மாசிக்காய், கோரோசனை போன்ற பொருட்களை உரசி சில சொட்டுகள் வாயில் கொடுக்கிறார்கள். இதனால் ஆபத்தான வயிற்றுப்போக்கு ஏற்படும். மாசிக்காய் நீர் புரை ஏறுவதால் நிமோனியா ஏற்பட வாய்ப்பு அதிகம்.
குழந்தைகளுக்குப் பெரியவர்களைவிட உணவு செரிமான சக்தி அதிகம். இதை உணராத பலர் கிரைப் வாட்டர், போனிசான் நூபான் என்று பலவகையான ரசாயனக் கலவைகளை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் மென்மையான வயிற்றைக் கெடுக்கிறார்கள்.
சளி பிடிப்பதைத் தடுக்கும் என்ற தவறான நம்பிக்கையால் பலர் வேப்ப எண்ணெய்யை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறார்கள். இதனால் கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோய் ஏற்பட்டு பல குழந்தைகள் மரணத்தைத் தழுவியுள்ளன.
சளி பிடித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் மெந்தால் மற்றும் கற்பூரத்தைலம் கலந்த வேபோரப் பொருட்களை மூக்கு மற்றும் முதுகில் தடவுவது மிகவும் தவறு. கற்பூரம் மூளையைத் தூண்டி வலிப்பு நோயை ஏற்படுத்தவல்லது.
குழந்தைகளுக்குச் சளி பிடிக்காமலிருக்க நிறைய பழங்கள் கொடுக்க வேண்டும். பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிக்கும் என்பது அறிவியல் அடிப்படையற்றது. மாம்பழம், பப்பாளிப்பழம் போன்றவை சூடு என்றும் ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் குளிர்ச்சி என்றும் அறிவியல் ஆதாரமின்றி பயப்படுகிறார்கள். எல்லா காலநிலைகளிலும் எல்லாவித பழங்களும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
இயற்கையான உணவுகளையும் எளிய வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாகரிக மனிதர்கள் பேபி பவுடர்(Baby Powder) என்றும் பேபி ஆயில்(Baby Oil), பேபி லோஷன்(Baby Lotion) என்றும் பலவித வாசனைப் பொருட்களை போலியான விளம்பரங்களைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் தோலின் ஆரோக்கியம் பாதிப்படைவதுடன் தாய்ப்பால் சுரப்பதும் குறைந்து விடும்.
குழந்தையும், குழந்தையின் தாயும் குறைந்தது ஒரு வருட காலமாவது எவ்வித வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது.
புதிதாகப் பிறந்த குழந்தைக்குச் சில மணி நேரத்திலேயே தனது மோப்ப சக்தியால் தாயை அடையாளம் காணும் திறமையை எலி, பூனை, நாய், மனிதன் உட்பட அனைத்து விலங்குகளுக்கும் இயற்கை அளித்துள்ளது. குழந்தை அல்லது தாய் பவுடர், லோஷன் போடுவதால் குழந்தையின் மோப்ப சக்தி குழப்பமடைந்து அது சரியாகப் பால் குடிப்பதில்லை. இதனால் தாய்ப்பால் சுரப்பது குறைந்து, விரைவில் அதுவும் நின்று விடும். இதனால்தான் விவரமறிந்த நமது முன்னோர்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தலையில் வாசமுள்ள பூ எதுவும் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.
மேலும் பேபி ஆயில், பேபி லோஷன் என்பவை உண்மையில் என்ன என்பதை ஆங்கிலம் படிக்கத் தெரிந்த பெற்றோர்கள் பூதக்கண்ணாடி உதவியுடன் அந்தப் பாட்டில்களில் எழுதியிருப்பதைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும். மிகச் சிறிய எழுத்தில் "மினரல் ஆயில்" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மினரல் ஆயில் என்றால் தமிழில் "மண் எண்ணெய்" என்று பொருள்படும். அதாவது குரூட் ஆயிலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித ரசாயன எண்ணெய். இதனைப் பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்பட்டு தோலின் மிருதுத் தன்மை பாதிக்கப்படும். ஆகவே, பரம்பரை பரம்பரையாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய தேங்காய் எண்ணெயே போதுமானது.
மேலும் தற்போது வெயில் காலம் என்பதால் பலருக்கும் வேர்க்குருவும் கட்டிகளும் ஏற்படும். இதற்கும் பலவித விளம்பரங்களைப் பார்த்து வேர்க்குரு பவுடர்களை குழந்தைகளின் உடல் முழுவதும் பூசிவிடுகிறார்கள். உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்து நம் உடலின் வெம்மையைக் குறைக்க உதவுகிறது. வியர்வைச் சுரப்பிகளின் வாய் தூசி படிந்து அடைத்துக் கொள்வதால் வேர்க்குரு தோன்றுகிறது. வேர்க்குரு சீழ் பிடிப்பதால் கட்டிகள் வருகின்றன. இதைத் தடுப்பதற்குக் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை முகம் கழுவ வேண்டும். இதற்கு மாறாகப் பலவித வேர்க்குரு பவுடர்களையும், கிரீம்களையும் பயன்படுத்துவதால் வியர்வை நாளங்களின் வாய் அடைபட்டு அதிகப்படியான வேர்க்குருவும், வேனல் கட்டிகளும் உருவாகும். ஆகவே, வெயில் காலத்தில் எவ்வித பவுடர்களும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளை இயற்கையோடு இணைந்து வளர்ப்பதே மிகச்சிறந்தது.
இயற்கையோடு இணைந்து இயல்பாகக் குழந்தை வளர்ப்பதே சரியான செயல். எல்லா விலங்குகளும் குட்டிகளுக்குத் தாய்ப்பால்தான் தருகின்றன. மனிதர்களும் அதைத்தான் செய்ய வேண்டும். அப்படியின்றி முதலில் சர்க்கரை கலந்த தண்ணீர் புதிதாய்ப் பிறந்த குழந்தைக்குக் கொடுப்பது இயற்கைக்கு மாறானது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் குழந்தை பிறந்தவுடன் கழுதைப்பால் கொடுத்தால் குழந்தைகள் கழுதையைப் போல் குரல் வளத்துடன் வளரும் என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. இது மிகவும் ஆபத்தான செயல். சுகாதாரமின்மை காரணமாக மிகமோசமான வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
அடுத்ததாக, குழந்தைகள் குளிப்பதாலும் தலையில் தண்ணீர் படுவதாலும் சளி பிடிக்கும் என்று பரவலான கருத்து இருக்கிறது. இது அறிவியல் அடிப்படையற்ற மூடநம்பிக்கையாகும். மனிதகுலம் திமிங்கலம், டால்பின், யானை வால்ரஸ் போன்று நீரில் வாழ்ந்து பரிணாம வளர்ச்சியடைந்ததாக அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தினம் தலையுடன் சேர்த்துக் குளிப்பதால் உடல் தூய்மையடையும். தலையில் படும் தண்ணீர் எவ்வகையிலும் தோல், மண்டை ஓடு போன்றவற்றைத் தாண்டி உள்ளே செல்ல முடியாது. ஆகவே குளித்ததனால் தலையில் நீர் இறங்கி விட்டது என்று சொல்வது ஓர் அபத்தமான கருத்தன்றி வேறல்ல. ஆகவே, குழந்தைகள் பிறந்த அடுத்தநாளிலிருந்து தூய்மையான நீரில் தினம் குளிக்க வேண்டும். குளித்தபின் காது, மூக்கு போன்றவற்றில் பெரியவர்கள் வாயினால் ஊதுவது நோய்க்கிருமிகள் தொற்றுவதற்கு வாய்ப்பை உருவாக்குகிறது. இந்தத் தவறான செயலால் தான் குழந்தைகளுக்குக் குளித்தவுடன் சளியும் காதுவலியும் ஏற்படுகிறது. இது போலவே குளித்தவுடன் சாம்பிராணி புகை போடுவதும் தவறு. சாம்பிராணியில் இருக்கும் ரசாயனங்கள் பலவித ஒவ்வாமையை ஏற்படுத்தி ஆஸ்துமா நோய் ஏற்பட வழிவகுக்கிறது.
மேலும் பலர் ஜாதிக்காய், மாசிக்காய், கோரோசனை போன்ற பொருட்களை உரசி சில சொட்டுகள் வாயில் கொடுக்கிறார்கள். இதனால் ஆபத்தான வயிற்றுப்போக்கு ஏற்படும். மாசிக்காய் நீர் புரை ஏறுவதால் நிமோனியா ஏற்பட வாய்ப்பு அதிகம்.
குழந்தைகளுக்குப் பெரியவர்களைவிட உணவு செரிமான சக்தி அதிகம். இதை உணராத பலர் கிரைப் வாட்டர், போனிசான் நூபான் என்று பலவகையான ரசாயனக் கலவைகளை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் மென்மையான வயிற்றைக் கெடுக்கிறார்கள்.
சளி பிடிப்பதைத் தடுக்கும் என்ற தவறான நம்பிக்கையால் பலர் வேப்ப எண்ணெய்யை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கிறார்கள். இதனால் கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோய் ஏற்பட்டு பல குழந்தைகள் மரணத்தைத் தழுவியுள்ளன.
சளி பிடித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் மெந்தால் மற்றும் கற்பூரத்தைலம் கலந்த வேபோரப் பொருட்களை மூக்கு மற்றும் முதுகில் தடவுவது மிகவும் தவறு. கற்பூரம் மூளையைத் தூண்டி வலிப்பு நோயை ஏற்படுத்தவல்லது.
குழந்தைகளுக்குச் சளி பிடிக்காமலிருக்க நிறைய பழங்கள் கொடுக்க வேண்டும். பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிக்கும் என்பது அறிவியல் அடிப்படையற்றது. மாம்பழம், பப்பாளிப்பழம் போன்றவை சூடு என்றும் ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் குளிர்ச்சி என்றும் அறிவியல் ஆதாரமின்றி பயப்படுகிறார்கள். எல்லா காலநிலைகளிலும் எல்லாவித பழங்களும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
இயற்கையான உணவுகளையும் எளிய வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாகரிக மனிதர்கள் பேபி பவுடர்(Baby Powder) என்றும் பேபி ஆயில்(Baby Oil), பேபி லோஷன்(Baby Lotion) என்றும் பலவித வாசனைப் பொருட்களை போலியான விளம்பரங்களைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் தோலின் ஆரோக்கியம் பாதிப்படைவதுடன் தாய்ப்பால் சுரப்பதும் குறைந்து விடும்.
குழந்தையும், குழந்தையின் தாயும் குறைந்தது ஒரு வருட காலமாவது எவ்வித வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது.
புதிதாகப் பிறந்த குழந்தைக்குச் சில மணி நேரத்திலேயே தனது மோப்ப சக்தியால் தாயை அடையாளம் காணும் திறமையை எலி, பூனை, நாய், மனிதன் உட்பட அனைத்து விலங்குகளுக்கும் இயற்கை அளித்துள்ளது. குழந்தை அல்லது தாய் பவுடர், லோஷன் போடுவதால் குழந்தையின் மோப்ப சக்தி குழப்பமடைந்து அது சரியாகப் பால் குடிப்பதில்லை. இதனால் தாய்ப்பால் சுரப்பது குறைந்து, விரைவில் அதுவும் நின்று விடும். இதனால்தான் விவரமறிந்த நமது முன்னோர்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தலையில் வாசமுள்ள பூ எதுவும் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.
மேலும் பேபி ஆயில், பேபி லோஷன் என்பவை உண்மையில் என்ன என்பதை ஆங்கிலம் படிக்கத் தெரிந்த பெற்றோர்கள் பூதக்கண்ணாடி உதவியுடன் அந்தப் பாட்டில்களில் எழுதியிருப்பதைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும். மிகச் சிறிய எழுத்தில் "மினரல் ஆயில்" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மினரல் ஆயில் என்றால் தமிழில் "மண் எண்ணெய்" என்று பொருள்படும். அதாவது குரூட் ஆயிலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித ரசாயன எண்ணெய். இதனைப் பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்பட்டு தோலின் மிருதுத் தன்மை பாதிக்கப்படும். ஆகவே, பரம்பரை பரம்பரையாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய தேங்காய் எண்ணெயே போதுமானது.
மேலும் தற்போது வெயில் காலம் என்பதால் பலருக்கும் வேர்க்குருவும் கட்டிகளும் ஏற்படும். இதற்கும் பலவித விளம்பரங்களைப் பார்த்து வேர்க்குரு பவுடர்களை குழந்தைகளின் உடல் முழுவதும் பூசிவிடுகிறார்கள். உடலின் வெப்பம் அதிகமாகும்போது வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்து நம் உடலின் வெம்மையைக் குறைக்க உதவுகிறது. வியர்வைச் சுரப்பிகளின் வாய் தூசி படிந்து அடைத்துக் கொள்வதால் வேர்க்குரு தோன்றுகிறது. வேர்க்குரு சீழ் பிடிப்பதால் கட்டிகள் வருகின்றன. இதைத் தடுப்பதற்குக் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை முகம் கழுவ வேண்டும். இதற்கு மாறாகப் பலவித வேர்க்குரு பவுடர்களையும், கிரீம்களையும் பயன்படுத்துவதால் வியர்வை நாளங்களின் வாய் அடைபட்டு அதிகப்படியான வேர்க்குருவும், வேனல் கட்டிகளும் உருவாகும். ஆகவே, வெயில் காலத்தில் எவ்வித பவுடர்களும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளை இயற்கையோடு இணைந்து வளர்ப்பதே மிகச்சிறந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இயற்கையோடு இணைந்து.
சளி பிடித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் மெந்தால் மற்றும் கற்பூரத்தைலம் கலந்த வேபோரப் பொருட்களை மூக்கு மற்றும் முதுகில் தடவுவது மிகவும் தவறு. கற்பூரம் மூளையைத் தூண்டி வலிப்பு நோயை ஏற்படுத்தவல்லது.
://:-: :!@!:
://:-: :!@!:
Re: இயற்கையோடு இணைந்து.
முனாஸ் சுலைமான் wrote:சளி பிடித்தவுடன் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் மெந்தால் மற்றும் கற்பூரத்தைலம் கலந்த வேபோரப் பொருட்களை மூக்கு மற்றும் முதுகில் தடவுவது மிகவும் தவறு. கற்பூரம் மூளையைத் தூண்டி வலிப்பு நோயை ஏற்படுத்தவல்லது.
://:-: :!@!:
நன்றி சார் மறுமொழிக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இயற்கையோடு இணைந்து.
("மினரல் ஆயில்" என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். மினரல் ஆயில் என்றால் தமிழில் "மண் எண்ணெய்" என்று பொருள்படும். அதாவது குரூட் ஆயிலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவித ரசாயன எண்ணெய்- புதியதாக அறிந்து கொண்டேன் .) - நல்ல பகிர்வு பாராட்டுகள்
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Similar topics
» இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.
» இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.01
» இயற்கையோடு இணைந்து வாழ்வோம்
» இயற்கையோடு ஒரு நிமிடம்.
» இயற்கையோடு பழகி வர தேக்கடி
» இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.01
» இயற்கையோடு இணைந்து வாழ்வோம்
» இயற்கையோடு ஒரு நிமிடம்.
» இயற்கையோடு பழகி வர தேக்கடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|