Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்ட, சீன இன்ஜினியர்கள்
Page 1 of 1
மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்ட, சீன இன்ஜினியர்கள்
சுரங்கப்பாதை அமைப்பதற்கு, வண்ணாரப்பேட்டை மற்றும் ஷெனாய் நகர், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் (டனல் போரிங் மிஷின்கள்), நேற்று அதிகாலை வந்தடைந்தன.
இம்மிஷின்களை இயக்குவதற்கு, சீனாவிலிருந்து இன்ஜினியர்கள் ஜனவரி மாதம் சென்னை வருகிறார்கள்.
சென்னை மெட்ரோ ரயில் பாதை திட்டத்தில் முதல் கட்டமாக, வண்ணாரப்பேட்டை மற்றும் ஷெனாய் நகர் திரு.வி.க., பூங்கா ரயில் நிலையத்திலிருந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்குகிறது. சுரங்கம் தோண்டுவதற்காக, சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு டனல் போரிங் மிஷின்கள் மற்றும் இணைப்பு உபகரணங்கள், கடந்த வாரம் கப்பலில், சென்னை துறைமுகம் வந்தடைந்தன.இவைகளில் இணைப்பு உபகரணங்கள், மூன்று நாட்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை, ஷெனாய்நகர் நிலையங்களுக்கு கன்டெய்னர்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை துறைமுகத்திலிருந்து இந்த இரண்டு நிலையங்களுக்கும் சுரங்கம் தோண்டும் மிஷின், நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டன. மிஷின் அமைப்பு பெரிய அளவிலும், 170 டன்னுக்கு மேல் இருந்ததால், டிரெய்லர்களில் கொண்டு செல்வது சிரமம் என்பதால், இந்த மிஷின்கள் சீனாவிலிருந்து நான்கு பிரிவுகளாக, "சுரங்கம் தோண்டும் முன்பகுதி, (கட்டர் கெட்), பிரண்ட் சீல்டு பேரிங் மிஷின் பகுதி, மிடில் சீல்டு மோட்டார் பகுதி, சுரங்கம் தோண்டப்பட்ட பிறகு, அதன் மீது கான்கிரிட் வார்ப்புகளை பொருத்தும் மிஷின் பகுதி' என, நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கப்பலில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.இந்த மிஷின்களின் நான்கு பிரிவுகளும், 64 சக்கரங்கள் பொருத்தப்பட்ட எட்டு டிரெய்லர் லாரிகளில் துறைமுகத்திலிருந்து நேற்று, இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 6 மணிக்கு வண்ணாரப்பேட்டை மற்றும் ஷெனாய் நகர் நிலையங்களுக்கு வந்தடைந்தன.
இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறும் போது, ""சுரங்கம் தோண்டும் மிஷின், 170 டன்னுக்கு மேல் எடையுடையதாக இருந்ததால், சீனாவில் தொழிற்சாலையில் இறுதிக்கட்ட சோதனை முடிந்த பிறகு, நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கப்பலில் கொண்டுவரப்பட்டது.துறைமுகத்திலிருந்து இந்த மிஷின்களின் இணைப்பு உபகரணங்கள் சில தினங்களுக்கு முன்பு, வண்ணாரப்பேட்டை மற்றும் ஷெனாய் நகருக்கு வந்தடைந்தன. டனல் போரிங் மிஷின்கள் தற்போது இந்நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த மிஷின்கள் சுரங்கம் தோண்டுவதற்கு ஒவ்வொரு நிலையத்திலும், 200 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 17 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட வேண்டியுள்ளது. இப்பணி முடிவதற்கு, பிப்ரவரி வரை ஆகும்.
பள்ளம் தோண்டும் பணி முடிவடைந்ததும், டனல் போரிங் மிஷின் பள்ளத்தில் இறக்கி வைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும். இம்மிஷின்கள் ஒருங்கிணைக்கப்படும் போது இதன் நீளம், 120 மீட்டர் நீளத்திற்கு அதிகமாக இருக்கும். இம்மிஷின்களை ஒருங்கிணைக்கவும், இயக்கவும் சீனாவிலிருந்து இன்ஜினியர்கள், ஜனவரி மாதம் சென்னை வருகின்றனர்.டனல் போரிங் மிஷினில் உள்ள மண்ணை தோண்டும் "கட்டர்' பகுதி மிகவும் பலம் வாய்ந்தது. பாதையில் மலை குறுக்கிட்டாலும், எளிதாக கட் பண்ணி தூளாக்கி வெளியே அனுப்பிவிடும். இந்த மிஷின் மூலம் ஒரு நாளைக்கு, 15 மீட்டர் தூரம் சுரங்கப்பாதை அமைக்க முடியும்.இவ்வாறு, அதிகாரி கூறினார்.
Similar topics
» சென்னை மண்ணடி பகுதியில் மெட்ரோ ரெயிலுக்கு சுரங்கம் தோண்டியபோது கட்டிடங்களில் திடீர் விரிசல்
» மெட்ரோ ரயில்...!!
» சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - சில தகவல்கள்
» “அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் ஓடும்’
» 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அமித் ஷா இன்று அடிக்கல்
» மெட்ரோ ரயில்...!!
» சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - சில தகவல்கள்
» “அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் ஓடும்’
» 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அமித் ஷா இன்று அடிக்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|