Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
முருகனுக்கு முதல் காவடி எடுத்தவன்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
முருகனுக்கு முதல் காவடி எடுத்தவன்!
–
தமிழகத்தைப் பொறுத்தவரை காவடி எடுத்து நேர்த்திக் கடனைச்
செலுத்துவதற்கு எத்தனையோ முருகன் கோயில்கள் இருந்தாலும்,
பழநிதான் பிரசித்தம். இங்கு அனுதினமும் காவடி எடுத்து வந்து
தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிற திரளான பக்தர்களே
இதற்கு சாட்சி.
-
பழநி திருத்தலத்தில் காவடி பிரசித்தமாக இருப்பதற்கு காரணம்.
முதல் முதலில் காவடி எடுத்த நிகழ்வு நடந்த திருத்தலம் இதுதான்.
-
முருகப் பெருமானுக்கு முதன் முதலில் காவடி எடுத்து வணங்கியவன்
இடும்பன் என்கின்றன புராணங்கள். ஆனால், காவடியாக இடும்பன்
சுமந்து வந்தது பாலையோ தேனையோ அல்ல. இரு மலைகளை!
-
பழநி மலையும் இடும்பன் மலையும் சிவகிரி, சக்திகிரி என்ற
பெயர்களில் கயிலாயத்தில் இருந்தன. இந்த இரு மலைகளையும்
அகத்தியருக்குக் கொடுத்தார் சிவபெருமான். “இவற்றைத் தென்
பொதிகைக்கு சுமந்து வா’ என்று இடும்பனுக்கு உத்தரவிட்ட
அகத்தியர் அஷ்ட நாகங்களைக் கயிறாகவும், பிரம்ம தேவனின்
தண்டத்தைத் தடியாகவும் தந்தார்.
-
அஷ்ட நாகங்களைக் கயிராகப் பயன்படுத்தி இருமலைகளையும்
பிரம்ம தண்டத்தில் கட்டி, (ஒரு காவடி போல்) தோளில் சுமந்தான்
இடும்பன். முருகப் பெருமானது திருநாமங்களைச் சொல்லிக்
கொண்டே சென்றான்.
-
பயண வழியில் ஓரிடத்தில் ஓய்வெடுப்பதற்காக இரு மலைகளையும்
கீழே இறக்கி வைத்தான் இடும்பன். முருகன் கருணையினாலும்
கனுக்ரஹத்தாலும் அந்த இரண்டு மலைகளும் அங்கேயே
பொருந்திவிட்டன. ஆனால், “அகத்தியரின் ஆணைக்கு பங்கம்
ஏற்பட்டு விட்டதே’ என்று இடும்பனுக்குக் கோபம் தலைதூக்கியது.
-
இந்த இரு மலைகளும் இங்கே சட்டென்று நிலை கொள்ள என்ன
காரணம்? என்று யோசித்தபடியே இடும்பன் அண்ணாந்து
பார்த்தபோது சிவகிரியின் மீது முருகப் பெருமான் ஒரு சிறுவனாக -
சிரித்த வண்ணம் காட்சி தந்தான்.
-
இரு மலைகளும் இங்கே நிலை கொள்ள இந்தச் சிறுவன்தானா
(முருகன் என்பதை அவன் அப்போது அறியவில்லை) காரணம்?
என்று வெகுண்ட இடும்பன், அவனுடன் போரிடத் துவங்கினான்.
போரின் இறுதியில் இடும்பன் அழிந்தான்.
இதனால் சோகமான இடும்பி (இடும்பனின் மனைவி), தன் கணவனை
உயிர்ப்பித்துத் தருமாறு சிறுவனிடம் வேண்ட… இடும்பன் உயிர்
பெற்றான்.
-
குழந்தையாக வந்து அருளாடல் நிகழ்த்தியது யார் என்பதைப்
பிறகு புரிந்துகொண்ட இடும்பனும் இடும்பியும் அவனை வணங்கி
நின்றனர். அப்போது இரு வரங்களை கேட்டுப் பெற்றான் இடும்பன்.
முதல் வரம் – பழநி மலைக் கோயிலின் துவக்கத்தில் தனக்கு
ஒரு சன்னதி அமைய வேண்டும்; இரண்டாவது வரம் – இரு
மலைகளைக் காவடி போல்தான் சுமந்து வநதது மாதிரி, காவடி
எடுத்து வரும் பக்தரகளின் கோரிக்கைகளை முருகப் பெருமான்
நிறைவேற்றி, அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்.
-
இரு வரங்களையும் கேட்ட முருகப் பெருமான், “அப்படியே ஆகட்டும்’
என அருளினார். எனவேதான், காவடிப் பிரார்த்தனைக்குப் பழநியில்
பக்தியும் அதிகம்; சக்தியும் அதிகம்.
-
ஸ்ரீதண்டாயுதபாணி மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில்
இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. சக்திகிரி, சிவகிரி என்னும்
இரண்டு மலைகளைச் சுமந்து வந்த கோலத்தில் காட்சி தருகிறான்
இடும்பன்.
-
இடும்பனுக்கு பூஜை செய்த பின்பே மலைக் கோயிலில் முருகனுக்கு
பூஜை நடக்கிறது. காவடி சுமந்து செல்லும் பக்தர்கள் முதலில்
இடும்பனது சன்னிதியில் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
-
=============================================
>பிரிய மதுரா
நன்றி: மங்கையர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முருகனுக்கு “சாக்லெட் பூஜை’
» பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» வின் வெளியில் முதல் முதல் கால்வைத்தவர்
» முதல் காதல் - முதல் காதலி
» பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» வின் வெளியில் முதல் முதல் கால்வைத்தவர்
» முதல் காதல் - முதல் காதலி
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|