சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பேல் பூரி Khan11

பேல் பூரி

2 posters

Go down

பேல் பூரி Empty பேல் பூரி

Post by Muthumohamed Tue 4 Dec 2012 - 14:42

கண்டது

(விளாத்திகுளம் பேருந்துநிலையம் அருகில் தேங்காய்ப் பால் விற்பனை வண்டியில்)

அன்னையின் பால் அன்புக்கு

தென்னையின் பால் தெம்புக்கு



(செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

பெரும் புகை




(பெரியகுளத்தில் ஆட்டோ ஒன்றின் பின்புறம்)

சிறுபறவைக்கு பறக்க ஆசை

சிறுவனுக்கு மண் வீடு கட்ட ஆசை

எனக்கோ உன் இதயத்தில்

குடியிருக்க ஆசை



(கும்பகோணம் நால்ரோட்டில் நின்றிருந்த லாரியின் பின்னால்)

மப்பில ஓட்டாதே

தப்புல மாட்டாதே




(திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூரில் சிக்கன் கடையின் பெயர்)

மக்கள்திலகம்




கேட்டது

(பந்தநல்லூர் கடைவீதியில்)

போஸ்ட்மேன்: பாலு, உனக்கு 100 ரூபாய் மணியார்டர் வந்திருக்கு

பாலு: யாரு அனுப்பியிருக்கா சொல்லுங்க?

போஸ்ட்மேன்: மூதேவி... நேத்து நீ உங்க அக்காவுக்கு பணம் அனுப்புனியே, பெறுநர் முகவரியில உங்க அக்கா பேரைப் போடாம உன் பேரைப் போட்டுருக்கே. அந்தப் பணம்தான் வந்திருக்கு!




(குத்தாலம் ஆரம்பப் பள்ளியொன்றில் மாணவர்களிடம் வகுப்பாசிரியை)

சத்தம் போடாதே

கையைக் கட்டு

வாயைப் பொத்து



தமிழ் புத்தகத்தை எடுத்து

எல்லாரும் படிங்க...



(கும்பகோணம் சாக்கோட்டை வீடு ஒன்றில்)

கணவன்: குழந்தை அழுதா அழட்டும். தயவுசெய்து நீ தாலாட்டுப் பாடாதே

மனைவி: ஏங்க?

கணவன்: ரெண்டு பேரும் சேர்ந்து அழற மாதிரி கேக்குது!



(வேலூர் தேநீர் கடையில் நண்பர்கள்)

""மச்சான்... நான் பணத்தைவிட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் தெரியுமா? ''

""மச்சி... ரொம்ப சந்தோஷம்டா... உங்கிட்டேயிருந்து இப்படியொரு டயலாக்கை நான் எதிர்பார்க்கலைடா... இனிமேல் நீ ஏங்கிட்ட கடனாக் கொடுத்த ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கேக்க மாட்டேன்னு சொல்லு''!




(தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெருவில் நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்த நண்பர்களிருவர்)

""டேய் மச்சான் ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டிருந்தியே... அந்த லவ் இப்ப எப்படி போயிட்டிருக்கு?''

""நாளைக்குக் கல்யாணம்டா''

""என்னடா சொல்லற... எனக்குப் பத்திரிகையே வைக்கலை''

""எனக்கே அவ வைக்கலை''




மைக்ரோ கதை

கேக்கை இரண்டாக விண்டதில் ஒரு பாதி பெரியதாகவும், மற்றொரு பாதி சிறியதாகவும் அமைந்துவிட்டது. ஜான் பெரிய பகுதியை எடுத்துக் கொண்டு, சிறிய பகுதியைத் தனது அக்காவுக்குக் கொடுத்தான்.

""நானாக இருந்தால் பெரியதை உனக்குக் கொடுத்துவிட்டு, சிறியதை நான் எடுத்துக் கொள்வேன்'' என்றாள் அக்கா.

""இப்போது மட்டுமென்ன? அப்படித்தானே ஆகியிருக்கிறது. இதற்காக ஏன் வருத்தப்படுகிறாய்?'' என்றான் ஜான்.


ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. நிறைய வருமானம் வந்தது. ஆனால் அவருக்கு ஒரு பிரச்னை. தூக்கம் வருவதில்லை.

ஒருநாள் பணக்காரர் தனது தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது ஒரு மரத்தடியில் அவருடைய வேலைக்காரன் வெறும் தரையில் துண்டை விரித்து மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

பணக்காரருக்குப் பொறாமையாக இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவனை ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். மறுநாள் அவனை வீட்டுக்கு வரவழைத்தார்.

""எனக்கோ ஏகப்பட்ட சொத்துக்களிருக்கு. எந்தவிதத்திலும் குறைவில்லை. ஆனா படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது. ஆனால் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லாத உனக்கு அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வருது. அது எப்பிடி?'' என்று கேட்டார்.

அதற்கு வேலைக்காரன், "" ஐயா, உங்களை மாதிரி பணக்காரங்க எல்லாரும் நல்லாத் தூங்க ஒரே வழிதான் இருக்கு'' என்று சொன்னான்.

""என்ன செய்யணும்னு சொல்லு. எவ்வளவு செலவானாலும் செஞ்சிடுறேன்'' என்றார் ஆர்வத்துடன்.

""உங்க சொத்து சுகங்களைத் தான தர்மம் செஞ்சிட்டு, என்னை மாதிரி ஏழையாகி நல்லா உழைங்க. தூக்கம் தானா வரும்'' என்றான் வேலைக்காரன்.

தினமணி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by ahmad78 Wed 5 Dec 2012 - 17:36

""உங்க சொத்து சுகங்களைத் தான தர்மம் செஞ்சிட்டு, என்னை மாதிரி ஏழையாகி நல்லா உழைங்க. தூக்கம் தானா வரும்''


பேல் பூரி 800522


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Muthumohamed Tue 11 Dec 2012 - 17:41

கண்டது

(சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடையில்)

வாய்ப்புகளை உருவாக்கு

வாழ்க்கையை உயர்வாக்கு





(பட்டுக்கோட்டை அருகே உள்ள இரு ஊர்களின் பெயர்கள்)

எழுத்தாணி வயல்

எண்ணாணி வயல்





(ஒச்சேரியில் இருந்து பனப்பாக்கத்துக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

தர்மநீதி




(திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் - பெருந்துறை பாதையில் ஓர் உணவகத்தின் பெயர்)

கும்பிடு குருசாமி ஹோட்டல்





(சென்னை கிரீன்வேஸ் சாலையில் முட்டை ஏற்றிச் சென்ற வாகனத்தில்)

நலமுடன் வாழ...

நாளொரு முட்டை






(கிருஷ்ணகிரி கடைவீதியில் இரு தோழிகள்)

""தனியா இருந்தேன்னா, நான் பாட ஆரம்பிச்சிடுவேன்''

""நாலு பேர் இருக்கும்போது பாட ஆரம்பிச்சா கூட ஆட்டோமேடிக்காக நீ தனியாயிடுவே ''



(உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கல்லூரி வாசலில் இரு மாணவர்கள்)

""ஒரு FIGURE - ஐக் கரெக்ட் பண்ண 4 டிப்ஸ்''

""தெய்வமே... சொல்லுடா''

""ERASER, PENCIL, SCALE, PAPER. நான் சொன்னது DIAGERAM -ஐ. போய்ப் படிக்கிற வேலையைப் பாருடா''



(சென்னை கிழக்குத் தாம்பரம் மளிகைக் கடை ஒன்றில்)

""ஏம்ப்பா... நாட்டுப் பூண்டு கேட்டா, சைனாப் பூண்டு கொடுத்திட்டியே''

""சைனாவைப் பாத்தா உங்களுக்கு நாடாத் தெரியலியா? என்ன?''




மைக்ரோ கதை

ஓர் ஊரில் ஒவ்வோர் ஆண்டும் வெள்ளம் வந்து, ஊர் மக்களைப் பாடாய்ப்படுத்தி வந்தது. வழக்கம்போல அந்த ஆண்டும் மழைக்காலத்தில் திடீரென வெள்ளம் வந்துவிட்டது. மக்கள் உயிர் பிழைக்க "குய்யோ முறையோ'வென்று கத்திக் கொண்டு, மேட்டுப் பகுதியை நோக்கி ஓடினார்கள். குழந்தைகளையும், முதியவர்களையும் வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற அந்த ஊர் இளைஞர்கள் தீவிரமாக உதவிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஊரில் பழனி என்ற படித்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் மட்டும் யாருக்கும் உதவாமல், ஓர் உயரமான பாறையின் மீது ஏறி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த எல்லாருக்கும் தாங்க முடியாத கோபம் வந்தது.

"இவன்லாம் படிச்சவனா? ஊரே வெள்ளத்தால் கஷ்டப்படுது. இவன் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கான்' என்று அவனைத் திட்டிக் கொண்டே இருந்தனர்.

மூன்று நாட்களில் வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது.

ஊரில் உள்ள பெரிய மனிதர்கள், இளைஞர்கள் எல்லாரும் கூடினர். பழனியைக் குற்றவாளியாக்கி நிறுத்தினர்.

"நீயெல்லாம் படித்தவனா?' என்ற கோபக்குரல் கூட்டத்தின் எல்லாத் திசைகளிலும் இருந்து கேட்டது.

ஆனால் பழனி எதற்கும் அசையாமல் புன்முறுவலுடன் இருந்தான்.

அதற்குப் பிறகு சொன்னான்:

""ஒவ்வொரு வருஷமும் வெள்ளம் வருது. அதை எப்படித் தடுத்து நிறுத்துவதுன்னுதான் பாறை மேல் நின்னு பார்த்துக்கிட்டிருந்தேன். காட்டாறை வேற பக்கமாத் திசை திருப்பிவிட்டா வெள்ளம் வரவே வராது'' என்றான்.

அவன் சொன்ன ஐடியா சரி என்று பட்டது ஊர் மக்களுக்கு.

""அதுக்குத்தான்யா நாலெழுத்துப் படிச்சிருக்கணும்ங்கிறது.''



ஒரு சிறுவன் தெருவில் அழுது கொண்டிருந்தான்.

""ஏம்ப்பா அழுவுற?'' ஒரு பெரியவர் கேட்டார்.

""நான் ஒரு ரூபா வச்சிருந்தேன். அதை இங்கே தொலைச்சிட்டேன்''

""சரி... சரி... அழாதே... நான் பத்து ரூபா தர்றேன்''

பெரியவர் கொடுத்த பத்து ரூபாயை வாங்கிக் கொண்ட சிறுவன் மீண்டும் அழுதான்.

""ஏம்ப்பா அழுகுற?'' பெரியவர் கேட்டார்.

""நான் தொலைச்ச ஒரு ரூபாயும் இருந்தா, என் கிட்டே 11 ரூபாய் இருக்குமே. இப்ப 10 ரூபாய்தானே இருக்கு''

கதிர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேல் பூரி Empty Re: பேல் பூரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum