சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா Khan11

கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா

2 posters

Go down

கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா Empty கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா

Post by *சம்ஸ் Tue 2 Apr 2013 - 7:59

கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா F719be29-8099-47e1-8f52-a0ae90c6aac7_S_secvpf
திருவனந்தபுரம், ஏப் 2-
கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் (பி) கட்சியும் இடம் பெற்றுள்ளது. இக்கட்சியின் நிறுவனர் பாலகிருஷ்ண பிள்ளையின் மகனும், நடிகருமான கணேஷ்குமார் கூட்டணி அரசில் வனம், சினிமா மற்றும் விளையாட்டுத்துறையின் மந்திரியாக உள்ளார்.

கணேஷ்குமார் பதவிக்கு வந்த பின்பு அவருக்கும் அவரது தந்தை பாலகிருஷ்ண பிள்ளைக்கும் இடையே தகராறு மூண்டது. கணேஷ் குமாரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டுமென முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கு கணேஷ்குமாரின் தந்தை பாலகிருஷ்ணபிள்ளை கோரிக்கை விடுத்தார். இதனை உம்மன் சாண்டி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கணேஷ்குமார் பதவியில் நீடித்தார்.

இந்நிலையில் கணேஷ் குமாருக்கும் ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், கணேஷ்குமார் வீடு புகுந்து கள்ளக்காதலியின் கணவர் தாக்கியதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் பரபரப்பு புகார் கிளம்பியது.

இதனை கணேஷ்குமார் மறுத்தார். தனது இலாகாவில் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி புகார் கிளப்புவதாகவும், இதற்கு பின்னணியில் குடும்ப அங்கத்தினர்கள் சிலர் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

கணேஷ்குமாரின் இந்த சமாளிப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கணேஷ்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் இதனால் தன்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதாக அவரது மனைவி டாக்டர் யாமினி தங்கச்சி பரபரப்பு புகார் கூறினார். இதனை முதல்-மந்திரி உம்மன் சாண்டியை சந்தித்து மனுவாகவும் கொடுத்தார்.

இதனால் கணேஷ்குமாருக்கு நெருக்கடி அதிகரித்தது. நேற்று அவர் திடீரென திருவனந்தபுரம் குடும்ப நலக்கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கக் கேட்டு மனு கொடுத்தார்.

அதில், மனைவி யாமினி தங்கச்சி தன்னை தாக்கியதாகவும், அவரோடு வாழ்க்கை நடத்த முடியாது என்றும் எனவே தனக்கு விவாகரத்து வழங்க வேண்டுமென்றும் கூறி இருந்தார். இதற்காக மகள் பெயரில் ஒரு வீடும் ரூ.75 லட்சமும் வழங்க தயாராக இருப்பதாகவும், குறிப்பிட்டு இருந்தார். மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு இது தொடர்பான விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

கணேஷ்குமார் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்ததை அறிந்த அவரது மனைவி யாமினி நேற்று மாலை நிருபர்களை அழைத்து பரபரப்பு பேட்டி அளித்தார்.

அதில், தன்னை கணேஷ்குமார் தாக்கியதாகவும், அவருக்கும் தனது தோழிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாகவும் கூறினார். கள்ளக்காதலியின் கணவரிடம் இருந்து கணேஷ்குமார் அடி வாங்கியதை பார்த்ததாகவும் தெரிவித்தார். யாமினியின் பேட்டி உடனடி யாக ஊடகங் களில் வெளியானது. இதை பார்த்ததும் நேற்றிரவு 11.40-மணிக்கு கணேஷ்குமார் முதல்- மந்திரி உம்மன்சாண்டியின் வீட்டுக்கு சென்றார். அங்கு மந்திரி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

பின்னர் முதல்- மந்திரி உம்மன்சாண்டியின் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது மனைவி யாமினி வேண்டுமென்றே பொய் புகார் கூறுகிறார். அவர்தான் என்னை அடித்து உதைத்தார். எனது கன்னத்தில் காயம் இருப்பதையும், ரத்தம் வழிந்திருப்பதையும் பாருங்கள். திருமணம் முடிந்த நாள் முதல் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இதை உறவினர்கள் சிலர் வேண்டுமென்றே பெரிதுப்படுத்தி விரிசலை ஏற்படுத்திவிட்டனர். கட்சிக்குள் இருக்கும் எதிரிகளும் எனக்கு இடைஞ்சலை கொடுத்தனர். எனவேதான் யாமினி என் மீது புகார் கொடுத்துள்ளார். அதன் மீது உரிய விசாரணை நடத்த எனது மந்திரி பதவி தடையாக இருக்கக்கூடாது. எனவே பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அதே நேரம் எம்.எல்.ஏ. பொறுப்பில் தொடர்ந்து இருப்பேன். முதல்- மந்திரி உம்மன் சாண்டிக்கும் ஆதரவாக இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மந்திரியை தாக்கிய கள்ளக்காதலியின் கணவர்

போலீசில் புகார் கொடுத்த பின்பு யாமினிதங்கச்சி தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கணேஷ்குமார் பெண்கள் விஷயத்தில் மோசமாக நடந்து கொள்வார். எனது மகனின் தோழன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். இதில் அவரது தாயாருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரும் அவ்வப்போது வீட்டுக்கு வருவார். இதில் எனது கணவரையும் அவருக்கு தெரியும். இருவரும் அடிக்கடி சகஜமாக பேசிக்கொள்வார்கள். இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் அந்த பெண்ணின் கணவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் என்னிடம் கணேஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதை கூறினார். இதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது கணேஷ்குமார் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் அந்த பெண்ணின் கணவர் சத்தம் போட்டார். உடனே கணேஷ்குமார் அவரை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த பெண்ணின் கணவரின் காலில் விழுந்து தன்னை மன்னித்துவிடும்படி கெஞ்சினார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை இன்னொருவர் அடிப்பதை ஒரு பெண் கண்ணால் பார்க்கும் துர்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டது. அதன் பிறகுதான் முதல்-மந்திரி உம்மன்சாண்டியை சந்தித்து கணேஷ்குமார் பற்றி புகார் செய்தேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தந்தை ஸ்தானத்தில் இருந்து இப்பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்று எண்ணினேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். கணேஷ்குமாருக்கு சாதகமாக நடந்து கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா Empty Re: கள்ளக்காதல் விவகாரம்: கேரளா மந்திரி கணேஷ்குமார் ராஜினாமா

Post by Muthumohamed Tue 2 Apr 2013 - 12:08

இருவரையும் நினைத்தால் அழுகை :!#: :!#: :!#:

இருவரைப்பற்றியும் இறைவனுக்கு வெளிச்சம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை ஸ்ரீவித்யா சொத்துக்கள் கலாசேத்ராவிடம் ஒப்படைக்கப்படும்; கேரள மந்திரி கணேஷ்குமார் தகவல்
» கள்ளக்காதல் விவகாரம்: வாலிபரை குத்தி கொன்ற கணவன்- மனைவி கைது
» முல்லைப் பெரியாறு விவகாரம்: கேரளா மந்திரிகள் உண்ணாவிரதம்
» முல்லை பெரியாறு விவகாரம் : மீண்டும் தன்னிச்சையாக ஆய்வு நடத்திய கேரளா! _
» டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum