Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பொண்ணு பிடிச்சிருக்கு!
5 posters
Page 1 of 1
பொண்ணு பிடிச்சிருக்கு!
பெண் பார்க்கும் படலம். பெற்றோருடன் போயிருந்தான் மோகன்.
எல்லோருக்கும் காபி கொடுத்து விட்டுப் பெற்றோர் பக்கத்தில் அடக்க ஒடுக்கமாய் நின்றிருந்தாள் ரேகா.
எங்களுக்கு பெண்ணை பிடிச்சிருக்கு...! மோகன் அப்பா அம்மா வாய் மலர்ந்தார்கள்.
அந்த நேரம், தாயை தனியே அழைத்துப் போனான் மோகன்.
அம்மா ஏன் அவசரப் படறே? ஊருக்குப் போய் போன்ல முடிவு சொல்றோம்ன்னு கழட்டி விட்டுட்டுக் கிளம்பு
ஏண்டா உனக்குப் பிடிக்கலியா? இவளுக்கென்னடா குறைச்சல்
அதெல்லாம் ஊர்ல பேசிக்கலாம்! முதல்ல இங்கிருந்து கிளம்புவோம்
கோமதிக்குக் கோபத்தில் தலையே வெடித்து விடும் போலிருந்தது. வீட்டுப் படியேறியதுமே, மகன் மோகனைப் பிலுபிலுன்னு பிடித்தாள் தாய் கோமதி!
ஏண்டா, உன் மனசுல என்னதான் இருக்கு? அந்த ரேகா அழகா, அடக்க ஒடுக்கமா தானே இருக்கா? எம்.ஏ., பி.எட். படிச்சவ. அரசாங்க பள்ளியில் வேலையும் கிடைச்சிப் போச்சாம்! அவளுக்கு என்ன குறை? பிடிக்கலேன்னு ஏன் சொல்றே?
புரியாம கேள்வி கேட்கறியேம்மா! ஒருநாள் பஸ் ஸ்டாண்டில யாரோ ஒரு பையன்கிட்ட காரசாரமா சண்டை போடற மாதிரி பேசிக்கிட்டிருந்தா. ஒருவேளை காதல் தோல்வியில அவனுக்கு சாபம் கொடுத்தாளோ என்னவோ...அவளே எனக்கு மனைவியா வந்தா நாளைக்கு எதாவது பிரச்சினை வந்திராது?
டேய்.. ஒரு பொண்ணை பார்த்ததுமே தப்பா கணிச்சிடக்கூடாதுடா...ரேகாவை பார்த்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி தெரியலடா..
நீ பார்த்த லட்சணம் அப்படி. அப்ப அன்னிக்கு நான் பார்த்தது பொய்யா?
என்னவோ போடா...முதன்முதலா பொண்ணு பார்க்கப்போன வீட்டுல பொண்ணோட தங்கையை பிடிச்சிருக்குன்னு சொன்னே... இரண்டாவது இடம் பார்த்தப்போ பெண்ணை விட அவகூட இருந்த தோழி தான் அழகா, அம்சமா இருக்கா. அதனால அவ தான் வேணும்ன்னே! இப்போ மூணாவது இடம் ரேகா! காதல் சமாசாரம் அதுஇதுன்னு சொல்லி இதையும் தட்டிக் கழிக்கிறே. இனி எங்க கண்டிஷனுக்கு நீ ஒத்து வரணும்! அப்பத்தான் இனி பார்க்கப் போற, நாலாவது இடமாவது உனக்கு அமையும்! என்ன சொல்றே?
உம் என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கினான் மோகன்.
பெண் வீடு.
காபி கொடுக்கும் போது, இது தான் பெண்ணு.பேர் திகா. நல்லா பார்த்துக்க, மோகன் என்றாள் தாய் கோமதி.
பார்த்தான். பதில் சொல்வதற்குள் திடீரென்று ராதிகா, நான் இவரோடு கொஞ்சம் பேசணும் என்றாள்.
அடுத்த நிமிடத்தில் பக்கத்து அறைக்குள் ராதிகாவும் மோகனும்.
இதுக்கு முன்னால நீங்க பொண்ணு பார்த்த என் காலேஜ்மேட் ரேகா என்னை விட அழகு! அவளைப் பிடிக்கலைன்னு சொன்னீங்களாமே, ஏன்?
விடுங்களேன். அதான் முடிஞ்சு போச்சே...அப்புறம் என்ன?
மொட்டையாய் சொல்லி தப்பிக்கப் பார்த்தான்.
ஆனால் அவள் விடவில்லை. ரேகா மாதிரி ஒரு தோழி கிடைக்க கொடுத்து வைக்கணுங்க. என்கிட்ட
ஒரு பையன் விடாம லவ் புரபோஸ் பண்ணினான். பதிலுக்கு நான் லவ் சொல்றவரைக்கும் அவன் விடலை. அப்புறமா ஒருநாள் சினிமா தியேட்டருக்கு கூப்பிட்டான். தியேட்டர் இருட்டுல அவனோட திடீர் சில்மிஷம் என்னை வெறுப்பேத்த, போடா இன்டீசன்ட்பெல்லோன்னு திட்டிட்டு அதோட அவனை கட் பண்ணிட்டேன். தற்செயலா இந்த விஷயம் ரேகாவுக்கு தெரிஞ்சிருக்கு. ஒருநாள் பஸ்டாண்ட்ல அவனை பார்த்ததும் டென்ஷனாகி, ஏண்டா பொறுக்கி... பொது இடத்துல லவ்வர் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியாத உனக்கெல்லாம் எதுக்கடா லவ்வு? ன்னு கேட்டு கிழிகிழின்னு அவ கிழிச்சதுல ஓடிப்போனவன் தான். இன்னும் கூட அவன் எங்க கண்ணுல மாட்டலை. பிரண்ட்ஸ் எங்களுக்கு ஒண்ணுன்னா அப்படி ஓடிவர்ற நல்ல டைப்புங்க அவ...
ராதிகா சொல்லிக் கொண்டே போக, மோகனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.
அ.சி.மணியன்
எல்லோருக்கும் காபி கொடுத்து விட்டுப் பெற்றோர் பக்கத்தில் அடக்க ஒடுக்கமாய் நின்றிருந்தாள் ரேகா.
எங்களுக்கு பெண்ணை பிடிச்சிருக்கு...! மோகன் அப்பா அம்மா வாய் மலர்ந்தார்கள்.
அந்த நேரம், தாயை தனியே அழைத்துப் போனான் மோகன்.
அம்மா ஏன் அவசரப் படறே? ஊருக்குப் போய் போன்ல முடிவு சொல்றோம்ன்னு கழட்டி விட்டுட்டுக் கிளம்பு
ஏண்டா உனக்குப் பிடிக்கலியா? இவளுக்கென்னடா குறைச்சல்
அதெல்லாம் ஊர்ல பேசிக்கலாம்! முதல்ல இங்கிருந்து கிளம்புவோம்
கோமதிக்குக் கோபத்தில் தலையே வெடித்து விடும் போலிருந்தது. வீட்டுப் படியேறியதுமே, மகன் மோகனைப் பிலுபிலுன்னு பிடித்தாள் தாய் கோமதி!
ஏண்டா, உன் மனசுல என்னதான் இருக்கு? அந்த ரேகா அழகா, அடக்க ஒடுக்கமா தானே இருக்கா? எம்.ஏ., பி.எட். படிச்சவ. அரசாங்க பள்ளியில் வேலையும் கிடைச்சிப் போச்சாம்! அவளுக்கு என்ன குறை? பிடிக்கலேன்னு ஏன் சொல்றே?
புரியாம கேள்வி கேட்கறியேம்மா! ஒருநாள் பஸ் ஸ்டாண்டில யாரோ ஒரு பையன்கிட்ட காரசாரமா சண்டை போடற மாதிரி பேசிக்கிட்டிருந்தா. ஒருவேளை காதல் தோல்வியில அவனுக்கு சாபம் கொடுத்தாளோ என்னவோ...அவளே எனக்கு மனைவியா வந்தா நாளைக்கு எதாவது பிரச்சினை வந்திராது?
டேய்.. ஒரு பொண்ணை பார்த்ததுமே தப்பா கணிச்சிடக்கூடாதுடா...ரேகாவை பார்த்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி தெரியலடா..
நீ பார்த்த லட்சணம் அப்படி. அப்ப அன்னிக்கு நான் பார்த்தது பொய்யா?
என்னவோ போடா...முதன்முதலா பொண்ணு பார்க்கப்போன வீட்டுல பொண்ணோட தங்கையை பிடிச்சிருக்குன்னு சொன்னே... இரண்டாவது இடம் பார்த்தப்போ பெண்ணை விட அவகூட இருந்த தோழி தான் அழகா, அம்சமா இருக்கா. அதனால அவ தான் வேணும்ன்னே! இப்போ மூணாவது இடம் ரேகா! காதல் சமாசாரம் அதுஇதுன்னு சொல்லி இதையும் தட்டிக் கழிக்கிறே. இனி எங்க கண்டிஷனுக்கு நீ ஒத்து வரணும்! அப்பத்தான் இனி பார்க்கப் போற, நாலாவது இடமாவது உனக்கு அமையும்! என்ன சொல்றே?
உம் என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கினான் மோகன்.
பெண் வீடு.
காபி கொடுக்கும் போது, இது தான் பெண்ணு.பேர் திகா. நல்லா பார்த்துக்க, மோகன் என்றாள் தாய் கோமதி.
பார்த்தான். பதில் சொல்வதற்குள் திடீரென்று ராதிகா, நான் இவரோடு கொஞ்சம் பேசணும் என்றாள்.
அடுத்த நிமிடத்தில் பக்கத்து அறைக்குள் ராதிகாவும் மோகனும்.
இதுக்கு முன்னால நீங்க பொண்ணு பார்த்த என் காலேஜ்மேட் ரேகா என்னை விட அழகு! அவளைப் பிடிக்கலைன்னு சொன்னீங்களாமே, ஏன்?
விடுங்களேன். அதான் முடிஞ்சு போச்சே...அப்புறம் என்ன?
மொட்டையாய் சொல்லி தப்பிக்கப் பார்த்தான்.
ஆனால் அவள் விடவில்லை. ரேகா மாதிரி ஒரு தோழி கிடைக்க கொடுத்து வைக்கணுங்க. என்கிட்ட
ஒரு பையன் விடாம லவ் புரபோஸ் பண்ணினான். பதிலுக்கு நான் லவ் சொல்றவரைக்கும் அவன் விடலை. அப்புறமா ஒருநாள் சினிமா தியேட்டருக்கு கூப்பிட்டான். தியேட்டர் இருட்டுல அவனோட திடீர் சில்மிஷம் என்னை வெறுப்பேத்த, போடா இன்டீசன்ட்பெல்லோன்னு திட்டிட்டு அதோட அவனை கட் பண்ணிட்டேன். தற்செயலா இந்த விஷயம் ரேகாவுக்கு தெரிஞ்சிருக்கு. ஒருநாள் பஸ்டாண்ட்ல அவனை பார்த்ததும் டென்ஷனாகி, ஏண்டா பொறுக்கி... பொது இடத்துல லவ்வர் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியாத உனக்கெல்லாம் எதுக்கடா லவ்வு? ன்னு கேட்டு கிழிகிழின்னு அவ கிழிச்சதுல ஓடிப்போனவன் தான். இன்னும் கூட அவன் எங்க கண்ணுல மாட்டலை. பிரண்ட்ஸ் எங்களுக்கு ஒண்ணுன்னா அப்படி ஓடிவர்ற நல்ல டைப்புங்க அவ...
ராதிகா சொல்லிக் கொண்டே போக, மோகனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.
அ.சி.மணியன்
Re: பொண்ணு பிடிச்சிருக்கு!
அடடா மிகவும் அருமையாக இருந்தது ஆனால் முடிவு என்னவென்று சொல்லாமல் போய் விட்டீர்கள் முஹம்மட் :/ :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொண்ணு பிடிச்சிருக்கு!
முடிவை படிப்பவர்கள் ஊகத்துக்கே
விடப்படுகிறது...!!
-
விடப்படுகிறது...!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: பொண்ணு பிடிச்சிருக்கு!
@.rammalar wrote:முடிவை படிப்பவர்கள் ஊகத்துக்கே
விடப்படுகிறது...!!
-
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» இன்று முகநூலில் இருந்து... பிடிச்சிருக்கு...
» முக நூலில்... ரசித்தது...பிடிச்சிருக்கு...(பகுத்தறிவு)
» உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!
» எனக்கு செவ்வாய் கிரகம்தான் பிடிச்சிருக்கு...! - மொக்க ஜோக்
» சின்னப் பொண்ணு...!!
» முக நூலில்... ரசித்தது...பிடிச்சிருக்கு...(பகுத்தறிவு)
» உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!
» எனக்கு செவ்வாய் கிரகம்தான் பிடிச்சிருக்கு...! - மொக்க ஜோக்
» சின்னப் பொண்ணு...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|