Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அன்பை வெளிப்படுத்துவது ஒரு குற்றமா?.....
+2
Muthumohamed
gud boy
6 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
அன்பை வெளிப்படுத்துவது ஒரு குற்றமா?.....
சம்பவம் 01
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் மகன் ,பக்கத்தில் தாயும் தந்தையும் புளகாங்கிதத்துடனும் பூரிப்புடனும் நின்றிருக்கின்றனர்.பட்டம் பெற்ற மகனைப் பாராட்டிஇரண்டு வார்த்தை பேச முடியாமல் உதடுகள் மெளனிக்கின்றன. மகனுக்கோ பெற்றோரைக்கட்டியணைக்க வேண்டும் போல் பொங்கிவரும் உணர்ச்சிகள் ஏனோ நீர் தெளித்த பாலாய் அடங்கிப்போகின்றன.
சம்பவம் 02
ஆஸ்பத்திரியில் பார்வையாளர் நேரம்.தன் சகோதரியின் கட்டிலருகே ஓடோடி வரும் சகோதரன். சிறிது நேரம் தாமதித்து, கொண்டு வந்த உணவுப்பாத்திரத்தை கையில் கொடுத்து சுகம் விசாரிக்கிறார். தலை தடவி விட வேண்டும் போல குறுகுறுத்த கையை மெல்ல இழுத்துக்கொண்டு விடுகின்றது ஏதோவொன்று.
சம்பவம் 03
மனைவிக்குப் பிரசவம், சுற்றிய பூப்பந்தாய் ஒரு குழந்தை அருகில்.குழந்தையைக் கொஞ்சும் கணவனுக்கு மனைவியின் கை தடவி தன் அன்பைப் பகிர மிகுந்த கஷ்டமாயிருக்கின்றது.
சம்பவம் 04
தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான ஓர் ஆங்கிலத்திரைப்படம். தாய் தந்தையுடன் அமர்ந்து பார்க்கும் ஒர் ஒன்பது வயதுச் சிறுமி மற்றும் ஐந்து வயதுச் சிறுவன். படத்தில் தாயைக் கட்டியணைத்து ‘ஐ லவ் யூ’ என்று சொல்கிறான் ஒரு சிறுவன். பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கோ வெட்கம் வந்து விடுகிறது,ஓரக்கண்ணால் தாயையும் தந்தையையும் நோக்குகிறாள்.சிறுவனுக்கோ பெரும் சந்தேகம் “ஏன் என் தாய்,தந்தையர் அவ்வாறு என்னிடம் சொல்வதோ,கட்டியணைப்பதோ இல்லை’
அன்பை வெளிப்படுத்துவதை ஒரு குற்றமாகப்பார்க்கும் நம் சமூகத்தின் நிலையின் ஒரு சில துளிகளே மேலே கண்டவை.
கண்ட கண்ட இடத்தில் கண்களே கூசுமளவுக்கு ஆபாசமாக அன்பை வெளிப்படுத்தும் மேலைத்தேய வழக்கம் ஒரு புறம்; மறுபுறம் அன்பை வெளிப்படுத்துவதை ஆபாசக்கண் கொண்டு நோக்கி பதுங்கிக் கொள்ளும் கீழைத்தேய சமூகம்.
உங்கள் சகோதரருடன் உங்களுக்கிருக்கும் அன்பை வார்த்தைகளாலும் பகிரங்கப்படுத்துங்கள் என்ற நபிவழி வந்த வாரிசுகள் நாம்.ஆனால் இன்று சமூகத்தின் வரட்டு வேதாந்தங்களுக்கு செவிசாய்த்ததன் விளைவாகவும், வழமைக்கு மாறாக எந்த புதுவித வித்தியாசத்தினையும் செய்யக்கூடாது அது நன்மையாக இருந்த பட்சத்திலும் கூட, என்ற அதீத பிடிவாதத்தின் காரணமாகவும் நாம் நடந்து வந்த சுவடுகளை மறந்து விட்டிருக்கிறோம்.
மனிதனின் புலன்களில் தொடுகை என்ற உணர்வு பிரதானமான ஒன்று. ஆயிரம் வார்த்தைகளால் தர முடியாத ஆறுதலை ஒரு அழுத்தமான தழுவலால் தர முடியும்.
சில நேரங்களில் வார்த்தைகள் கட்டாய மெளனத்துக்குள்ளாகின்றன; அப்போதெல்லாம் உடல்களுக்கிடையிலான தொடர்பாடல் தான் சாத்தியப்படுகிறது. இதனால் தான் சமூக விஞ்ஞானத்திலும் உளவியலிலும் உடல் மொழி எனப்படுகின்ற Body Language க்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
எமது கலாச்சாரத்தில் இந்த அன்பை மொழிமூலம் வெளிப்படுத்துவதும் தொடுகை மூலம் வெளிப்படுத்துவதும் வெட்கம் தரக்கூடிய விடயமாகவும் சமயங்களில் தரக்குறைவான அம்சமாகவும் பார்க்கப்படுகின்றது.
இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில், காதல் அல்லது அன்பைக்குறிக்கும் லவ் என்ற ஆங்கிலச்சொல் முடியுமான அனைத்து வகையிலும் வர்த்தகமயமாகிவிட்டது. ஆண் பெண் இடையில் துளிர்த்து வளரும் எதிர்பால் ஈர்ப்பையே இங்கு அந்தச் சொல் அர்த்தப்படுத்துகின்றது என்பதே அனேகரின் அகராதி. நான் உங்களை மிகவும் விரும்புகிறேன் அல்லது ஐ லவ் யூ என்ற வார்த்தைகளை உதடுகளால் நம் பெற்றோர்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு உணர்ச்சிபூர்வமாக எம்மால் ஏன் உச்சரிக்க முடியாதுள்ளது?
அன்பை பரிமாறுவதை அதை வாய் விட்டு உரியவருக்குத் தெரிவிப்பதை உற்சாகப்படுத்தும் இஸ்லாத்தின் பெயரைக்கூறிக் கொண்டே அதை நாம் ஒரு வெறுக்கத்த விடயமாக மாற்றியிருக்கிறோம்.
இன்று விரிசலடையும் குடும்ப உறவுகளை மீள இணைக்கும் வல்லமை வாய்ந்த அன்பின் தொடர்ச்சியிலான அரவணைப்பு, ஆறுதலளிக்கும் தொடுகைகள் ஆரோக்கியமானவை.உடலுக்கும் உள்ளத்துக்கும் சந்தோசத்தையும் சாந்தியையும், நெருக்கத்தையும் இறுக்கமான பிணைப்புக்களையும் வலுப்படுத்தும் அன்பின் வெளிப்பாடுகள் அத்தியாவசியமானவை.
சில நிமிடங்கள் சிந்தியுங்கள், இன்று உங்கள் அன்பை வேண்டி நிற்கும் அரவணைப்பைத் தேடி நிற்கும் உள்ளங்கள் எவை;தயங்காது அன்பை வெளிப்படுத்துங்கள்.இந்தப் பயணத்தின் முதலடி உங்கள் பாதங்களே.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் மகன் ,பக்கத்தில் தாயும் தந்தையும் புளகாங்கிதத்துடனும் பூரிப்புடனும் நின்றிருக்கின்றனர்.பட்டம் பெற்ற மகனைப் பாராட்டிஇரண்டு வார்த்தை பேச முடியாமல் உதடுகள் மெளனிக்கின்றன. மகனுக்கோ பெற்றோரைக்கட்டியணைக்க வேண்டும் போல் பொங்கிவரும் உணர்ச்சிகள் ஏனோ நீர் தெளித்த பாலாய் அடங்கிப்போகின்றன.
சம்பவம் 02
ஆஸ்பத்திரியில் பார்வையாளர் நேரம்.தன் சகோதரியின் கட்டிலருகே ஓடோடி வரும் சகோதரன். சிறிது நேரம் தாமதித்து, கொண்டு வந்த உணவுப்பாத்திரத்தை கையில் கொடுத்து சுகம் விசாரிக்கிறார். தலை தடவி விட வேண்டும் போல குறுகுறுத்த கையை மெல்ல இழுத்துக்கொண்டு விடுகின்றது ஏதோவொன்று.
சம்பவம் 03
மனைவிக்குப் பிரசவம், சுற்றிய பூப்பந்தாய் ஒரு குழந்தை அருகில்.குழந்தையைக் கொஞ்சும் கணவனுக்கு மனைவியின் கை தடவி தன் அன்பைப் பகிர மிகுந்த கஷ்டமாயிருக்கின்றது.
சம்பவம் 04
தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான ஓர் ஆங்கிலத்திரைப்படம். தாய் தந்தையுடன் அமர்ந்து பார்க்கும் ஒர் ஒன்பது வயதுச் சிறுமி மற்றும் ஐந்து வயதுச் சிறுவன். படத்தில் தாயைக் கட்டியணைத்து ‘ஐ லவ் யூ’ என்று சொல்கிறான் ஒரு சிறுவன். பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கோ வெட்கம் வந்து விடுகிறது,ஓரக்கண்ணால் தாயையும் தந்தையையும் நோக்குகிறாள்.சிறுவனுக்கோ பெரும் சந்தேகம் “ஏன் என் தாய்,தந்தையர் அவ்வாறு என்னிடம் சொல்வதோ,கட்டியணைப்பதோ இல்லை’
அன்பை வெளிப்படுத்துவதை ஒரு குற்றமாகப்பார்க்கும் நம் சமூகத்தின் நிலையின் ஒரு சில துளிகளே மேலே கண்டவை.
கண்ட கண்ட இடத்தில் கண்களே கூசுமளவுக்கு ஆபாசமாக அன்பை வெளிப்படுத்தும் மேலைத்தேய வழக்கம் ஒரு புறம்; மறுபுறம் அன்பை வெளிப்படுத்துவதை ஆபாசக்கண் கொண்டு நோக்கி பதுங்கிக் கொள்ளும் கீழைத்தேய சமூகம்.
உங்கள் சகோதரருடன் உங்களுக்கிருக்கும் அன்பை வார்த்தைகளாலும் பகிரங்கப்படுத்துங்கள் என்ற நபிவழி வந்த வாரிசுகள் நாம்.ஆனால் இன்று சமூகத்தின் வரட்டு வேதாந்தங்களுக்கு செவிசாய்த்ததன் விளைவாகவும், வழமைக்கு மாறாக எந்த புதுவித வித்தியாசத்தினையும் செய்யக்கூடாது அது நன்மையாக இருந்த பட்சத்திலும் கூட, என்ற அதீத பிடிவாதத்தின் காரணமாகவும் நாம் நடந்து வந்த சுவடுகளை மறந்து விட்டிருக்கிறோம்.
மனிதனின் புலன்களில் தொடுகை என்ற உணர்வு பிரதானமான ஒன்று. ஆயிரம் வார்த்தைகளால் தர முடியாத ஆறுதலை ஒரு அழுத்தமான தழுவலால் தர முடியும்.
சில நேரங்களில் வார்த்தைகள் கட்டாய மெளனத்துக்குள்ளாகின்றன; அப்போதெல்லாம் உடல்களுக்கிடையிலான தொடர்பாடல் தான் சாத்தியப்படுகிறது. இதனால் தான் சமூக விஞ்ஞானத்திலும் உளவியலிலும் உடல் மொழி எனப்படுகின்ற Body Language க்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
எமது கலாச்சாரத்தில் இந்த அன்பை மொழிமூலம் வெளிப்படுத்துவதும் தொடுகை மூலம் வெளிப்படுத்துவதும் வெட்கம் தரக்கூடிய விடயமாகவும் சமயங்களில் தரக்குறைவான அம்சமாகவும் பார்க்கப்படுகின்றது.
இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில், காதல் அல்லது அன்பைக்குறிக்கும் லவ் என்ற ஆங்கிலச்சொல் முடியுமான அனைத்து வகையிலும் வர்த்தகமயமாகிவிட்டது. ஆண் பெண் இடையில் துளிர்த்து வளரும் எதிர்பால் ஈர்ப்பையே இங்கு அந்தச் சொல் அர்த்தப்படுத்துகின்றது என்பதே அனேகரின் அகராதி. நான் உங்களை மிகவும் விரும்புகிறேன் அல்லது ஐ லவ் யூ என்ற வார்த்தைகளை உதடுகளால் நம் பெற்றோர்களுக்கு அல்லது குழந்தைகளுக்கு உணர்ச்சிபூர்வமாக எம்மால் ஏன் உச்சரிக்க முடியாதுள்ளது?
அன்பை பரிமாறுவதை அதை வாய் விட்டு உரியவருக்குத் தெரிவிப்பதை உற்சாகப்படுத்தும் இஸ்லாத்தின் பெயரைக்கூறிக் கொண்டே அதை நாம் ஒரு வெறுக்கத்த விடயமாக மாற்றியிருக்கிறோம்.
இன்று விரிசலடையும் குடும்ப உறவுகளை மீள இணைக்கும் வல்லமை வாய்ந்த அன்பின் தொடர்ச்சியிலான அரவணைப்பு, ஆறுதலளிக்கும் தொடுகைகள் ஆரோக்கியமானவை.உடலுக்கும் உள்ளத்துக்கும் சந்தோசத்தையும் சாந்தியையும், நெருக்கத்தையும் இறுக்கமான பிணைப்புக்களையும் வலுப்படுத்தும் அன்பின் வெளிப்பாடுகள் அத்தியாவசியமானவை.
சில நிமிடங்கள் சிந்தியுங்கள், இன்று உங்கள் அன்பை வேண்டி நிற்கும் அரவணைப்பைத் தேடி நிற்கும் உள்ளங்கள் எவை;தயங்காது அன்பை வெளிப்படுத்துங்கள்.இந்தப் பயணத்தின் முதலடி உங்கள் பாதங்களே.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அன்பை வெளிப்படுத்துவது ஒரு குற்றமா?.....
:/:/:/
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அன்பை வெளிப்படுத்துவது ஒரு குற்றமா?.....
நாம் குறைந்தது அரபு மக்கள் செய்வது போல ,கைகளிலாவது முத்தமிட்டு அன்பை வெளிக்காட்டுவோம்.
அவர்கள் கன்னத்தோடு,கன்னம் வைத்து முத்தமிடுவது,மூக்குடன்,மூக்கு உரசி,முத்தமிடுவது இதையெல்லாம் பாருக்கும் போது நமக்கும் ஆசையாக இருக்கும்..
நாம் கை குலுக்குவதொடு நிறுத்திக் கொள்கிறோம்.
அவர்கள் கன்னத்தோடு,கன்னம் வைத்து முத்தமிடுவது,மூக்குடன்,மூக்கு உரசி,முத்தமிடுவது இதையெல்லாம் பாருக்கும் போது நமக்கும் ஆசையாக இருக்கும்..
நாம் கை குலுக்குவதொடு நிறுத்திக் கொள்கிறோம்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அன்பை வெளிப்படுத்துவது ஒரு குற்றமா?.....
அருமையான பகிர்வு நன்றீ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பை வெளிப்படுத்துவது ஒரு குற்றமா?.....
அன்பை பரிமாற பார்வை என்ற ஒரு
அம்பு போதும்
அம்மிக்கல் போன்ற மனதுக்கு
கும்மியடித்தாலும் பாசம் புரியாது
ஒரு விவசாயி அறுவடையின் போது
பதர்களுக்கும் சிலவு செய்திருப்பான்
புதர்ளுக்குள்ளே சில பதர்களும் உண்டு
அதுதான் வாழ்க்கை
அம்பு போதும்
அம்மிக்கல் போன்ற மனதுக்கு
கும்மியடித்தாலும் பாசம் புரியாது
ஒரு விவசாயி அறுவடையின் போது
பதர்களுக்கும் சிலவு செய்திருப்பான்
புதர்ளுக்குள்ளே சில பதர்களும் உண்டு
அதுதான் வாழ்க்கை
Re: அன்பை வெளிப்படுத்துவது ஒரு குற்றமா?.....
!_gud boy wrote:நாம் குறைந்தது அரபு மக்கள் செய்வது போல ,கைகளிலாவது முத்தமிட்டு அன்பை வெளிக்காட்டுவோம்.
அவர்கள் கன்னத்தோடு,கன்னம் வைத்து முத்தமிடுவது,மூக்குடன்,மூக்கு உரசி,முத்தமிடுவது இதையெல்லாம் பாருக்கும் போது நமக்கும் ஆசையாக இருக்கும்..
நாம் கை குலுக்குவதொடு நிறுத்திக் கொள்கிறோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
» கருக்கலைப்பு செய்வது குற்றமா?
» பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
» அன்பை அபகரி..........
» கணவரின் அன்பை பெற வழிகள்.....
» கருக்கலைப்பு செய்வது குற்றமா?
» பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்
» அன்பை அபகரி..........
» கணவரின் அன்பை பெற வழிகள்.....
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|