சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

  பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு Khan11

பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு

Go down

  பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு Empty பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு

Post by ராகவா Mon 9 Sep 2013 - 17:40

ஒரிசா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளாசியைப் பெறுவார்கள்.

இதற்கான ஏற்பாடுகள் பல நாட்களுக்கு முன்பே துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது. அந்த கோயிலின் அமைப்பு மற்றும் தேர் பவனியின் வரலாறும் என்ன வென்று ஆராய்ந்தோம்.

அதன்படி ஒரிசா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதர் கோயிலின் ரத யாத்திரை கடந்த 2,000 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வருகிறது.

ஸ்ரீஜகந்நாதர் அவருடைய சகோதரர் ஸ்ரீபலராமர் மற்றும் சகோதரி சுபத்ரா தேவியாருடன் பவனி வந்து மக்களுக்கு அருளாசி வழங்குவது தொன்று தொட்டு நடந்து வரும் கோலாகலமான விழாவாகும்.

ஒரிசா மாநிலத்தின் தலைநகருக்கு அருகே உள்ள பூரி நகரமே ஸ்ரீ §க்ஷத்ரா என்றழைக்கப்படுகிறது. சங்கு போன்ற வடிவில் உள்ள இந்நகரத்தின் மையப்பகுதியில் ராமகிருஷ்ணபுரம் என்ற நகரை அமைத்து விஷ்ணுபக்தரான அரசர் இந்திரத்யும்னன் ஸ்ரீ ஜகந்நாதருக்கு கோயிலை கட்டினார்.

  பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு Img1080705007_1_4
PTI PhotoPTI
கோயிலின் உச்சியில் கலசமும் அதன் மேல் சக்கரமும் அமைக்கப்பெற்றது. கோயிலை தங்க ஆபரணங்களால் அலங்கரித்தார்.

இந்த கோயிலின் முக்தி மண்டபத்தில் இருக்கும் நரசிம்மரின் மூர்த்தி பிரம்மாவால் யாகம் செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

அந்த கோயிலில் இருக்கும் சாமி சிலைகள் முழு உருவம் அடையாமல் இருக்கும். அதற்கு ஒரு வரலாறு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, கடலில் மிதந்து வந்த மரத்திம்மையில் நான் பரிபூரணமாய் இருக்கிறேன் என்று ஸ்ரீ ஜகந்நாதர் இந்திரத்யும்னனிடம் கனவில் கூறினார்.


அதன்படி அந்த மரத்திம்மையில் இருந்த ஸ்ரீ ஜகந்நாதரின் உருவத்தை செதுக்கி உருவாக்க, அரசன் சிற்பிகளை நியமித்தான். ஆனால் சிற்பிகளால் எதுவும் செதுக்க முடியாமல் உளிகள் உடைந்தன. அப்போது கடவுளே அனந்தரானா என்ற சிற்பியின் வடிவில் அந்தப் பணிகளை முடிக்க வந்தார்.

  பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு Img1080705007_2_1
PTI PhotoPTI
ஆனால் அவர் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது 3 தேர்களை மற்ற சிற்பிகள் செய்ய வேண்டும். கடவுளின் சிலைகளை மட்டும் வயதான சிற்பி மூடிய கோயிலுக்குள் இருந்தபடி 21 நாட்களுக்குள் செய்து முடிப்பார். இதனிடையில் யாரும் கோயிலைத் திறக்கக் கூடாது என்று கூறினார்.

அதற்கு அரசனும் ஒப்புக் கொண்டார். சிலைகளை செய்யும் பணி துவங்கியது. 14 நாட்கள் சென்ற பின்னர் உள்ளே சிற்பியின் செதுக்கும் ஓசை கேட்காததால் சந்தேகம் அடைந்த அரசனும், அரசியும் கோயிலைத் திறந்து பார்க்க உத்தேசித்தனர்.

அரசன் கொடுத்த வாக்கை மீறி கோயிலின் கதவைத் திறந்து பார்த்தான். அப்போது 3 சிலைகளும் முழுவதுமாக வடிவமைக்கப்படாமல் கை, கால்கள் இன்றி இருந்தது. சிற்பியையும் அங்கு காணவில்லை.

அப்போது சிற்பியாக வந்தது கடவுள்தான், நாம் வாக்கை மீறியதால் கடவுள் மறைந்துவிட்டார் என்று இந்திரத்யும்னனிடம் அமைச்சர் விளக்கினார்.

தன் தவறை உணர்ந்த மன்னர் குற்றத்திற்காக தனது உயிரை விட எண்ணினார். அப்போது அரசனின் கனவில் தோன்றிய கடவுள், தான் தரு-பிரம்மனாக நீலாசல் என்ற இடத்தில் நித்தியமாக இருக்கிறேன். இவ்வுலகில் அர்ச்சாவதாரமாக இருக்கிறேன். எனக்கு புறவுலக கைகளோ, கால்களோ தேவையில்லை. இவைகள் இல்லாமலே என்னால் எல்லா வற்றையும் உணர்ந்து அனுபவிக்க முடியும் என்று வேதங்களில் குறிப்பிட்டிருப்பதை உணர்த்தவே இந்த அவதாரத்தை எடுத்துள்ளேன். இதுவும் எனது லீலைகளில் ஒன்றுதான் என்று கூறி மறைந்தார்.

அதன்படிதான் கோயிலில் இருக்கும் சிலைகள் முழு உருவம் பெறாமல் இருக்கின்றன.

  பூரி ஸ்ரீ ஜகந்நாத‌ர் ரத யாத்திரையின் வரலாறு Img1080705007_1_4
PTI PhotoPTI
இப்படி ஸ்ரீ ஜகந்நாதர் அவதரித்து தன்னை நாடி தம் கோயிலுக்கு வர முடியாத பக்தர்களும் தன்னை கண்டு அருள்பாலிக்க வகை செய்யும் வகையில்தான் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ஜகந்நாதர் தேரில் பவனி வருகிறார்.

நன்றி:வெப்தூனியா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum