சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

ஓணம் திருவிழா - வரலாறு Khan11

ஓணம் திருவிழா - வரலாறு

2 posters

Go down

ஓணம் திருவிழா - வரலாறு Empty ஓணம் திருவிழா - வரலாறு

Post by rammalar Fri 13 Sep 2013 - 4:54

-

கேரள தேசத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி
அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், அவனது நல்லாட்சி,
தேவர்களுக்கு மேலானவனாக அவனை சீர்தூக்கி விட்டிருந்தது.
-
இந்த நிலையில் நாட்டின் நலன் கருதி வேள்வி ஒன்றை
நடத்த முன்வந்தான் மகாபலி சக்கரவர்த்தி. அந்த வேள்வியின்
நடுவில் தானம் கேட்டு வரும் அனைவருக்கும் கேட்டதை தரும்
சிறப்பான தருமத்தை செய்யவும் அவன் முடிவு செய்திருந்தான்.
-
இதை அறிந்த தேவர்கள் கலங்கிப் போனார்கள்.
ஏற்கனவே பல நற்காரியங்கள் செய்ததன் காரணமாக
தேவர்களைப் போன்ற உயர்ந்த நிலைக்கு
மகாபலி சக்கரவர்த்தி வந்து விட்டான். தற்போது
அவன் நடத்தப் போகும் வேள்வியும், அதில் கொடுக்கப்
போகும் தான தர்மங்களும் மூவுலகையும் ஆட்சி செய்யும்
 தகுதியை அவனுக்கு பெற்றுத் தந்துவிடும்.
மூன்று உலகங்களிலும் அவனை வெல்ல எவராலும் முடியாது
என்ற நிலை உருவாகி விடும். இதனால் தங்களின் பதவிக்கு
ஆபத்து ஏற்பட்டு விடுமே என்று அஞ்சினர் தேவர்கள்.
-
இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் தங்களை
காத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் போய் நின்றனர்.
-
தேவர்களை காப்பது தன் கடமை என்பதால் அவர்களுக்கு
உதவ முன்வந்தார்,மகாவிஷ்ணு
அதே நேரத்தில் மகாபலியின் சிறப்பை உலகம் அறியச்
செய்யவும் அவர் சித்தம் கொண்டார்
-
வேள்வி நிறைவடையும் தறுவாயில வாமனர் (குள்ளமான
உருவம்) வடிவில் வந்து அரசனிடம், ''
''என் உயரத்தை போன்றே இந்த உலகில் மூன்று அடி மண்
கொடுத்தால் போதும்’ என்று தானம் கேட்டார்.
-
அவனது குரு சுக்கிராச்சாரியாருக்கு தெரிந்து விட்டது,
வந்திருப்பது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பது. அதனால்
தானம் தர வேண்டாம் என தடுத்தார்.
-
மகிழ்ச்சியில் திளைத்தான் மகாபலி. ‘குருவே! என்னிடம்
தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால்,
இதைவிட பெரிய பேறு எனக்கு என்ன இருக்கப் போகிறது!’
என்று கூறியவன், அத்துடன் நில்லாமல், கமண்டலத்தை
எடுத்து நீர் வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான்.
-
இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து
முதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம்
அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார். பின்னர்
மகாபலியிடம், ‘சக்கரவர்த்தியே! நான் இரு உலகங்களையும்
இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எ
ங்கே வைப்பது’ என்று கேட்டார்.
-
‘இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்’
என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான்.
 மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின்
தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார்.
-
சிறப்பு பெற்ற மகாபலி
-
தொடர்ந்து ‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டை
 வளம் பெறச் செய்தாய். அதனால் நீ பெற்ற பலன்கள் அனைத்தும்
உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கிய
தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று
இருப்பாய்’ என்று அருளினார்.
பாதாளத்திற்கு சென்ற மகாபலி சக்கரவர்த்தி, ‘திருமாலே!
நான் என் நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் மிகுந்த
பற்று வைத்திருக்கிறேன். அதைத் தாங்களும் அறிவீர்கள்.
எனவே வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நான் என் நாட்டிற்கு
வந்து என் மக்களின் சிறந்த வாழ்க்கையை பார்க்க அனுமதிக்க
வேண்டுகிறேன்’ என்றான்.
-
‘அப்படியே ஆகட்டும்’ என்று ஒப்புதல் அளித்தார் மகாவிஷ்ணு.
-
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண
நட்சத்திரத் திருநாள் அன்று மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய
 நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருகிறார்.
அவரை வரவேற்கும் விதமாகவே கேரள மக்கள் 10 நாட்கள்
திருவிழாவாக ஓணம் பண்டிகையை நடத்துகின்றனர்.
-
===============================================
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஓணம் திருவிழா - வரலாறு Empty Re: ஓணம் திருவிழா - வரலாறு

Post by ராகவா Fri 13 Sep 2013 - 14:25

இதை எங்கிருந்து எடுத்தீர்கள் அவர்களுக்கு ஒரு நன்றியே சொல்லாமே..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஓணம் திருவிழா - வரலாறு Empty Re: ஓணம் திருவிழா - வரலாறு

Post by ராகவா Sun 15 Sep 2013 - 10:34

ஓணம் திருவிழா - வரலாறு TN_130913173308000000
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஓணம் திருவிழா - வரலாறு Empty Re: ஓணம் திருவிழா - வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum