சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

பாரதிதாசன் Khan11

பாரதிதாசன்

Go down

பாரதிதாசன் Empty பாரதிதாசன்

Post by ராகவா Mon 16 Sep 2013 - 20:15

பாரதிதாசன் Barathidasan_photo
பாரதிதாசன்

புதுச்சேரியில் வாழ்ந்த செல்வந்தர் குடும்பத்தில் கனகசபை முதலியார், லக்ஷ்மி அம்மாள் எனும் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம். தொடக்கக் கல்வியிலிருந்து தமிழிலக்கியம், இலக்கணம், சைவ சித்தாந்தம் வேதாந்தம் ஆகியவற்றைச் சிறந்த அறிஞர்களிடம் கற்று புலமை பெற்றார். மகாகவி பாரதியாரின் அறிமுகம் இவருக்கு 1909இல் கிடைத்தது. முதல் சந்திப்பிலேயே மகாகவியை இவர் தனது குருநாதராக வரித்துக் கொண்டார். கல்லூரி படிப்புக்குப் பிறகு காரைக்கால் பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இந்திய சுதந்திரப் போரில் இவர் ஈடுபட்டு இந்தியாவில் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், புதுச்சேரி பகுதியை ஆண்டுவந்த பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகவும் தனது பேச்சு, எழுத்துக்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார். இவருடைய இந்த எழுத்துக்களுக்காக பிரெஞ்சு ஆட்சியாளர்கள் இவரை சிறையில் அடைத்தனர். பிற்காலத்தில் இவர் பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய கருத்துக்களால் கவரப்பட்டு அவருடைய அத்தியந்த சீடரானார். அவர் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் இவர் ஒரு தூணாக இருந்து செயல்பட்டார். அதன்பின் சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கமாக உருவெடுத்த பிறகும் இவர் அதிலும் தீவிரமாக ஈடுபட்டார். திராவிட இயக்கத்தார் இவரை பாவேந்தர் என பெயரிட்டுப் பெருமைப் படுத்தினர். சென்னையில் நடைபெற்ற நாத்திகர்கள் மகாநாடொன்றில் தன்னையொரு "நாத்திகன்" எனப் பிரகடனப் படுத்திக் கொண்டு பெருமைப் பட்டார்.

 இவருடைய இந்த கருத்துக்களாலும், பாரதியாரை ஒரு பிராமண சமூகத்தில் பிறந்தவர் என்பதற்காக அவரை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாமலும், அவருக்குப் போட்டியாளரைப் போல திராவிட இயக்கத்தார் இவரைப் போற்றிப் பெருமைப் படுத்தத் தொடங்கினர். ஆனாலும், பாரதிதாசனோ, தன்னுடைய சுப்புரத்தினம் எனும் பெயரை பாரதிதாசன் என்று வைத்துக் கொண்டு தன்னுடைய குரு பக்தியை வெளிப்படுத்தியும், பாரதியை யார் குறை சொன்னாலும், இவர் ஏற்றுக் கொள்ளாததோடு, பாரதியாரின் சீடன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்றும் பெருமையோடு குறிப்பிட்டார். 1950இல் "தினத்தந்தி" பத்திரிகையில் இவர் தன் குரு நாதரின் பெருமையையும், தான் அவரது தாசன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இவர் காலத்தில் அறிஞர் அண்ணாவின் கருத்துக்களோடு ஒத்துப் போய் பல மேடைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆருடனும் இவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. 1954இல் இவர் புதுச்சேரி சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் இவர் சென்னை மருத்துவ மனையொன்றில் காலமாகும் வரை தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இவரது பாடல்கள் பாரதியாரின் அடியொற்றிய அறிவுபூர்வமான எழுத்துக்களாக இன்றும் திகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பாரதியை இவர் பெயர் சொல்லி எழுதுவதோ பேசுவதோ கிடையாது. "ஐயர்" என்றும் "குருநாதர்" என்றே குறிப்பிட்டிருக்கிறார். இவர் "புதுவை கலைமகள்", "தேசோபகாரி", "தேசபக்தன்" போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். பெரியாரின் பக்தர் என்பதால் இவர் பிராமண எதிர்ப்பில் ஊறித்திளைத்தவர் ஆகையால் இவரது எழுத்துக்களில் பிராமண எதிர்ப்பு என்பது வெளிப்படையாகக் காணப்படும். தமிழர்களுக்குள் 'தமிழ் இனம்' என்றும் 'ஆரிய இனம்' என்றும் இனம் பிரித்துப் பார்த்து பிராமணர் பிராமணரல்லாதாரைக் குறிப்பிட்டு வந்ததை கவனிக்கலாம். இவருக்கு "புரட்சிக் கவிஞர்" எனும் பட்டத்தை பெரியார் ஈ.வே.ரா. அளித்தார்.

இவரது அமைதி ஊமை எனும் நாடகத்துக்கு விருது கிடைத்தது. 'பிரிராந்தையார்' எனும் நூலுக்கு இவரது காலத்துக்குப் பிறகு 1970இல் சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது.
பாரதிதாசன் Bharadidasan+%2526+Annadorai

நன்றி :பாரதிபயிலகம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum