சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வளர்ப்புக் குழந்தைகள் விஷயத்தில் இஸ்லாமின் நிலைப்பாடு! Khan11

வளர்ப்புக் குழந்தைகள் விஷயத்தில் இஸ்லாமின் நிலைப்பாடு!

Go down

வளர்ப்புக் குழந்தைகள் விஷயத்தில் இஸ்லாமின் நிலைப்பாடு! Empty வளர்ப்புக் குழந்தைகள் விஷயத்தில் இஸ்லாமின் நிலைப்பாடு!

Post by *சம்ஸ் Sat 12 Feb 2011 - 13:42

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான். இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர். (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை. ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:4, 5)

''வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்து அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (33:5வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ஸைத் பின் முஹம்மத் - முஹம்மதின் புதல்வர் ஸைத் என்றே அழைத்து வந்தோம். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 4782, முஸ்லிம் 4808, திர்மிதீ, அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை மீள் பிரச்சாரம் செய்யும் காலத்திற்கு முந்திய அறியாமை காலத்தில், வளர்ப்புப் பிள்ளைகளைச் சொந்தப் பிள்ளைகளாகவேக் கருதி வளர்ப்பு மகனை வளர்த்தவருடன் இணைத்து இன்னார் மகன் இன்னார் என்றே அழைத்து வந்தனர். வளர்த்தவர் மரணித்து விட்டால் அவரின் சொத்துக்கு வளர்ப்பு மகன் வாரிசாகி விடுவதும் நடைமுறையில் இருந்தன.

இதனடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் நபித்துவ வாழ்வுக்கு முன்னர், தம்மிடம் அடிமையாக இருந்த ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை தமது வளர்ப்பு மகனாக அறிவித்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்டு, ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த பின்னரும் இதே நிலை நீடித்தது. வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையின் பெயருடனேயே சேர்த்து அழையுங்கள் என்கிற திருக்குர்ஆன் 33:5வது வசனம் அருளப்பட்ட பின்னர் வளர்ப்பு மகன் குறித்து அறியாமை காலத்தில் இருந்து வந்த நடைமுறைகள் கைவிடப்பட்டன.

வளர்ப்புப் பிள்ளைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து மேல்கண்ட இறைமறை வசனங்களிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டலிலும் இந்த உம்மத்தினருக்கு நடைமுறை விளக்கம் கிடைக்கின்றன. வளர்ப்புப் பிள்ளைகளை வளர்க்க ஆர்வமுள்ள தம்பதியர் இவற்றைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்!

பெற்றோரும், வளர்த்தோரும்.

வளர்ப்புப் பிள்ளைகளைக் குறித்தான இஸ்லாமிய சட்டம் என்ன? என்றே தெரியாமல் பெற்றப் பிள்ளையை வளர்ப்புப் பிள்ளையாகப் பிறருக்குக் கொடுத்துவிட்டு பிந்நாளில் சங்கடமான நிலையைச் சந்திக்கும் தம்பதியர்களை இன்று நேரில் கண்டுவருகிறோம்.

அதாவது, வளர்ப்புப் பிள்ளையை வளர்ப்பதற்குப் பொறுப்பேற்றவர் குழந்தையை கல்விக்கூடத்தில் சேர்க்கும்போதும் அரசு சம்பந்தமான ஆவணங்களைப் பதிவுசெய்யும் போதும் பெற்றெடுத்தத் தந்தையின் பெயர் எழுதப்பட வேண்டிய இடத்தில் வளர்ப்பவரின் பெயரை தந்தையின் பெயராகப் பதிவுசெய்யப்படுகிறது. இவை இவ்வாறு தொடர்ந்து வாலிப வயதில் மணமுடிக்கும் காலத்திலும் திருமண அழைப்பிதழில் வளர்த்தவரின் பெயரே தந்தையின் பெயராக அச்சிடப்படுகின்றன!

இஸ்லாமியப் பார்வையில் இவை அநீதியாகும் என்று எடுத்துச் சொன்னால் பெற்றோரும், வளர்த்தோரும் குர்ஆன் வசனத்துக்கு முக்கியத்துவம் வழங்காமல், ''இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இப்போது எப்படி மாற்றுவது?'' என்று சங்கடத்தில் நெளிந்து தமக்குத் தாமே சமாதானம் செய்துகொள்கின்றனர்.

ஆகவே, இஸ்லாம் மார்க்கத்தை வாழ்க்கை நெறியென ஏற்றிருக்கும் முஸ்லிம்கள், வளர்ப்புக் குழந்தை விஷயத்தில் இஸ்லாமின் நிலைப்பாடு என்ன? என்பதையறிந்து பின்பற்றவும்!

(அல்லாஹ் மிக அறிந்தவன்).


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum