சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

புதுக்கோட்டையில் மணல் கடத்தலை காட்டிக்கொடுத்த அண்ணன்–தம்பி வெட்டி படுகொலை Khan11

புதுக்கோட்டையில் மணல் கடத்தலை காட்டிக்கொடுத்த அண்ணன்–தம்பி வெட்டி படுகொலை

2 posters

Go down

புதுக்கோட்டையில் மணல் கடத்தலை காட்டிக்கொடுத்த அண்ணன்–தம்பி வெட்டி படுகொலை Empty புதுக்கோட்டையில் மணல் கடத்தலை காட்டிக்கொடுத்த அண்ணன்–தம்பி வெட்டி படுகொலை

Post by *சம்ஸ் Sat 5 Oct 2013 - 17:55

புதுக்கோட்டையில் மணல் கடத்தலை காட்டிக்கொடுத்த அண்ணன்–தம்பி வெட்டி படுகொலை 1577128d-9453-4a54-8b27-1e2891db288a_S_secvpf


மாத்தூர், அக். 5–
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் ஊராட்சி அருகே உள்ள செங்களாக்குடியை சேர்ந்தவர் துரைராஜ். நாட்டாமை. இவரது மகன்கள் டிரைவர் கார்த்திக் (வயது 30). ராஜேஷ் (26). இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இவரது உறவினரான ராம்குமார் என்பவர் கார்த்திக்கையும், ராஜேசையும் அருகில் உள்ள கோரையாற்றில் வாகனங்களில் மணல் அள்ளுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். கார்த்திக்கும், ராஜேசும் செங்களாக்குடியில் இருந்து கோரையாற்றுக்கு தனி தனி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் 2 பேரும் கோரையாற்றுக்கு அருகில் சென்றதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடந்து சென்றனர். அப்போது கும்பலாக வந்த சிலர் கார்த்திக்கும், ராஜேசையும் தடுத்து நிறுத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் 2 பேரையும் அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த கார்த்திக்கும், ராஜேசும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர். 
இவர்களை அழைத்து சென்ற ராம்குமாரும், அந்த கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் 2 பேர் படுகாயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ரத்தம் வடிந்த படி கிடந்த அவர்கள் 2 பேர் உடலையும் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொடுர கொலைகள் நடந்தது முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தீவிர விசாரணையில் போலீசார் இறங்கினர்.
அப்போது போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது கொலை செய்யப்பட்ட கார்த்திக்கும், ராஜேசும் கோரையாற்றில் இருந்து மணல் அள்ளி வாகனங்களில் கடத்தப்பட்டது குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்து வந்துள்ளனர். இதில் அதே ஊரை சேர்ந்த அவர்களின் உறவினரான கணேசன் என்பவர் மகன் ராஜேந்திரன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது டெம்போவில் மணல் ஏற்றி செல்லும் போது விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்து போலீசில் ராஜேசும், கார்த்திக்கும் மாட்டி விட்டுள்ளனர். இதில் ராஜேந்திரனுக்கும், கார்த்திக் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் தான் ராஜேந்திரன் (வயது 30), ஜெயராம் (26), முத்தழகு (24)ஆகிய 3 பேரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 
மேலும் கொலையாளிகளை பிடிக்க புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. தலைமையில் மாத்தூர் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, விராலிமலை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் பாலசந்தர், கீரனுர் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் துப்பறியும் நாய் மார்ஷல் புதுக்கோட்டையில் இருந்து வர வழைக்கப்பட்டு துப்பு துலக்கினார்கள். நாய் மார்ஷல் மோப்பம் பிடித்த படி ராஜேந்திரன் வீட்டு முன்பு படுத்துக்கொண்டது.
நள்ளிரவில் நாட்டாண்மை மகன்கள் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால் ஆவூர் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மேலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க ஏராளமான ஆயுதம் தாங்கிய போலீசார் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீவிரமாக அந்த பகுதியில் ரோந்து சுற்றியும் வருகிறார்கள். ஆனாலும் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதுக்கோட்டையில் மணல் கடத்தலை காட்டிக்கொடுத்த அண்ணன்–தம்பி வெட்டி படுகொலை Empty Re: புதுக்கோட்டையில் மணல் கடத்தலை காட்டிக்கொடுத்த அண்ணன்–தம்பி வெட்டி படுகொலை

Post by Muthumohamed Sun 6 Oct 2013 - 21:38

குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் #* #* #* #* #*
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum