Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
குஜராத் மின்சாரத்தின் உண்மை நிலை.
4 posters
Page 1 of 1
குஜராத் மின்சாரத்தின் உண்மை நிலை.
குஜராத் மின்சாரத்தின் உண்மை நிலை..
இந்தியாவிலேயே மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள மாநிலம் , மின் இணைப்பு தடங்கள் இல்லாத மாநிலம் , மேலும் மோடி கூறும் பொது நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின்கட்டணம் குஜராத்தில் உயர்தபடவே இல்லை என்று மோடியால் , ஊடகங்களால் புகழப்படும் குஜராத் ..இது உண்மை தானா என்று பார்த்தல் நிட்சயம் உண்மை இல்லை என்பதே உண்மை..கடந்த 2012 ஆம் ஆண்டின் தேசிய மக்கள் தொகைகணக்கெடுப்பின் படி குஜராத்தில் மின்சாரம் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை என்பது கிட்டத்தட்ட 11 இலட்சம் .அதை போல குஜராத்தில் 14 மணி நேரமாவது விவசாயிகளுக்கு மின்சாரம் கொடுக்கப்படும் என்பது அரசின் உறுதிமொழி .அதுவும் மின்சாரம் இலவசமாக இல்லை .அதிக அளவு கட்டணத்துடன் மோடி அரசு சொல்வதை போல மின்சாரம் பெரும்பாலும் பல விவசாயிகளுக்கு 6 மணி நேரம் கூட விவசாய பாசனத்திற்கு கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை..குஜராத்தின் விவசாயத்தின் வளர்சி நிலையை நாட்டின் மற்ற மாநிலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போதே உண்மை நிலையை தெரிந்து கொள்ளலாம்..
இந்தியாவில் முக்கிய 20 மாநிலங்களில் மின்சாரத்தின் தொடக்க விலை அதிகமாக உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று . Planning Commission அறிக்கையின் படி நாட்டிலேயே குறைந்த விலையில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் மாநிலம் ஜார்கண்ட் தான் இங்கு ஒரு யூனிட்டுக்கு 1.03 மட்டுமே..இந்த பட்டியலில் குஜராத் பிடித்துள்ள இடம் என்பது 13ஆம் இடம் மட்டுமே குஜரத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை என்பது வீடுகளுக்கு 3.73 ரூபாய்கள் ஆகும்..அடுத்து விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கும் முக்கிய 20 மாநிலங்களில் தமிழகம் மற்றும் ஹிமாச்சம் பிரதேசம் மட்டும் தான் இலவசமாக மின்சாரத்தை வாங்குகின்றன.. மற்ற மாநிலங்களில் மின்சாரத்தை விலைக்கு விற்கும் மாநிலங்களில் குஜராத் பெற்றுள்ள இடம் என்பது 11 ஆகும்..குஜாரத்தில் ஒரு யூனிட் விவசாயத்திற்கான மின்சாரத்தின் விலை என்பது 1.76 ரூபாய் ஆ கும்..இதே குஜராத்தில் 2007-08 காலகட்டத்தில் விவசாய மின் கட்டணம் என்பது ஒரு யூனிட்டுக்கு 1.20 ரூபாய் என்ற விலையில் இருந்து 2012 ஆம் காலகட்டத்தில் 1.76 என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது..மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கிட்டதட்ட ஆறு முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதே வேதனையான உண்மை.அதுவும் 2000 க்கு முந்தைய காலகட்டத்தில் குஜராத்தில் மின் கட்டணம் என்பது முதல் 20 யூனிட்டுக்கு வெறும் 68 பைசா மட்டுமே..ஆனால் இன்று இதே இணைப்பிற்கு பல மடங்கு உயர்ந்துள்ளது .எல்லாம் கார்பரேட் விரும்பும் விலை ஏற்றம் தான்..ஒட்டுமொத்தத்தில் குஜர்த்தின் மின்சாரத்தின் விலை என்பது மேற்கூறப்பட்ட முக்கிய 20 மாநிலங்களின் தேசிய சராசரியை விட அதிகம் தான்.ஒருபுறம் மின்சாரத்தின் விலை அதிகம் என்றால் மறுபுறம் குஜராத்தின் தொழிலாளர்களின் ஊதிய நிலையும் கூட தேசிய அளவில் மோசம் தான்...
அடுத்து உபரியாக உற்பத்தி செய்யப்படும் மாநிலம் என்று கூறப்படும் குஜராத்தின் உண்மை நிலை என்பது அரசு மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறைவுதான்..மாறாக தனியார் தொழில் நிறுவங்களின் மூலமாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஊக்குவித்து வருகிறது..இதன் காரணமாக அரசு வாங்கும் மின்சாரத்தின் விலையில் கூட அதிக அளவு இழப்பு தான்..மேலும் 2011-12 ஆண்டை கணக்கில் கொள்ளும் போது 2012-13 ஆம் ஆண்டில் குஜராத் அரசிற்கு சொந்தனமான மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கிட்டத்தட்ட 30% குறைந்துள்ளது..மேலும் மத்திய அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டுக்கு 2.78 ரூபாய் என்ற அளவில் உற்பத்தி செய்யப்பட்டு குஜராத் அரசிற்கு இதே மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு 3.30 ரூபாய் என்ற அளவில் விற்கும் போது குஜராத் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யபப்டும் மின்சாரத்தின் விலை என்பது ஒரு யூனிட்டுக்கு 3.82 என்ற அதிக அளவு கட்டணமாக உள்ளது..இதில் வேடிக்கை என்னவெனில் குஜராத்தின் மின்சார் தேவை என்பதை பூர்திசெய்ய பெருமளவில் தனியார் மற்றும் மத்திய அரசை தான் சார்ந்துள்ளது .
மோடி ஆட்சிக்கு வந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தின் மின்சார உற்பத்தி ஆண்டுக்கு 1000 மெகாவாட் குஜராத் மின்சாரத்துறை மூலம் (GEB) உயர்த்தப்படும் என்று உறுதியளித்தார்..அப்படியானால் கடந்த 10ஆண்டுகலில் மோடியின் கணக்கின் படி 10000 மெகா வாட்களாவது உற்பத்தி செய்திருக்க வேண்டும் . ஆனால் உண்மையில்கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 200 மெகாவாட் மட்டும் தான் (GEB) மூலம் உயர்த்தப்பட்டுள்ளது .அடுத்து மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்றுவரை குஜராத்தின் மாநில அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் 26 என்ற எண்ணிக்கையில் பல மின் நிலையங்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டுள்ளது..மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2002-2012 ஆம் ஆண்டுவரை தனியார் மின் உற்பத்தி என்பது 26% அதிகரித்துள்ளது..ஆனால் அதே நேரத்தில் மாநில அரசிற்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து பெறப்படும் மின் உற்பத்தியின் அளவு என்பது வெறும் 0.9% மட்டும் தான் அதிகரித்துள்ளது,மேலும் சோலார் தொழில் நிட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு 15 ரூபாயிக்கு வாங்கி வெறும் 6 ரூபாயிக்கு விற்கும் ஒரே மாநிலம் குஜராத் மட்டும் தான்.இதை போன்ற பல சர்சையான கேள்விகள் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது .தனியாரிடம் இருந்து வாங்கும் மின்சாரத்தின் விலை எந்த அளவு உயர்வாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.இதற்காக தான் போலும் கார்பரேட் நிறுவனங்கள் மோடியை தலையில் வைத்துக்கொண்டு பாராட்டுகிறது போலும்.குஜராத்தின் வளர்சி என்ற மீடியாக்களின் விளம்பரம் போல மின்சாரத்தின் நிலையிலும் பல உண்மைகள் மறைக்கப்பட்டு தான் மீடியாக்களில் வெளியிடப்படுகிறது .உண்மையில் குஜர்த்தின் வளர்ச்சி என்பது வெறும் எமற்றுவேலைகள் மட்டுமே..சுகபோக வாழ்க்கை என்பது பாமர குஜராத்திகளுக்கு இல்லை..மாறாக கார்பரேட் முதலைகளுக்கு மட்டும் தான் .
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: குஜராத் மின்சாரத்தின் உண்மை நிலை.
இந்த கட்டுரை என்ன சொல்ல வருகிறது...?
-
இதையும் படிங்க..
-
AHMEDABAD: While people in almost half of India had to spend two dark nights after the northern power grid tripped in July last year, the Gujarat government was on a different trip. It was selling its surplus power to states like Rajasthan, Haryana, Punjab, Delhi and Maharashtra, earning a profit of around Rs 1,800 crore.
-
இதையும் படிங்க..
-
AHMEDABAD: While people in almost half of India had to spend two dark nights after the northern power grid tripped in July last year, the Gujarat government was on a different trip. It was selling its surplus power to states like Rajasthan, Haryana, Punjab, Delhi and Maharashtra, earning a profit of around Rs 1,800 crore.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|