சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !! Khan11

டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !!

4 posters

Go down

டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !! Empty டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !!

Post by Muthumohamed Fri 21 Mar 2014 - 22:47

டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !! 1920426_721401127911579_1136185319_n


மனிதர்களில் சிலபேர்… எதைச் சொன்னாலும், செய்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கும் நமக்கு.

எனக்குத் தெரிந்த ஒரு கிராமத்துப் பெரியவர் 70 வயது. இன்னும்கூட, கேலிதான், கிண்டல் பாட்டுத்தான்.

ஒரு நாள் அவர் திண்ணையில் உட்கார்ந்து வைத்தியம் சொல்லிக் கொண்டிருந்தார். (அவருக்கு எந்த வைத்தியமும் தெரியாது.

“நான் சொன்னபடியே செய் தண்ணிய மடக் மடக்குன்னு குடி அப்புறம் பாரு என்ன
நடக்குதுண்ணு”. அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை மடாரென்று கீழே “ஓ” வென்று கத்தி அழுதது.

கிழவனார் குழந்தையைப் பார்த்தார். சத்தமான குரலில் “எந்தருச்சுவாடா.. தூக்கி விடுகிறேன்” என்று கத்தினார். குழந்தை அதே வேகத்தில் எழுந்த ஓடி அவரிடத்தில் வந்தது.

“முட்டாப் பயலே.. நீயா எந்திருச்சு வந்தப்பெறுகு நானா தூக்கி விடுவேன் போடா!” குழந்தை குழப்பமாக அவரைப் பார்த்தபடி நின்றது.

புதிதாக வகுப்பிற்கு வந்த ஆசிரியர் வருகைப் பதிவை எடுத்து பெயர் வாசித்தார். பலர் வரவே இல்லை. கோபம் வந்தது அவருக்கு.

“டேய் வராதவனெல்லாம் ஒழுங்கா எந்திரிங்கடா”இருந்த மாணவர்களுக்கெல்லாம் ஒரே குழப்பம்.

என் நண்பர் ஒருவர், தொடர்ந்து எப்பதும் யாராவது ஒருவருக்குத் கடிதம் எழுதிக்கண்டே இருப்பார் பதில் வருமா? வராதா? அதைப் பற்றியெல்லாம் கலைப்படமாட்டார். எல்லாம் எழுதிவிட்டுக் கடைசியில் ஒரு வரி மறக்காமல் எழுதிவிடுவார்.

“இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் உடனே பதில் எழுது” இதற்கு என்ன பொருள் என்று எனக்கு இன்றைக்கும் விளங்கவில்லை.

சிலர் யாரையும் ஏமாற்றப் பார்ப்பார்கள். ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவன் முன்னே தோன்றி “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“பணம், செல்வம், தங்கம், வைரம்!” என்றான் ஏழை ஆசையோடு.
கடவுள் வலது கையின் சுட்டுவிரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமானது.
ஆனால் ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது.

அவன் பேசாமல் இருந்தான். கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் தங்கமாக்கினார். அப்போதும் ஏழை சிரிக்கவில்லை.
சோர்ந்து போன கடவுள் ஏழையிடம் கேட்டார். “இன்னும் உனக்கு என்ன வேண்டும்?” என்று. “அந்த விரல் வேண்டும்” என்றான் ஏழை கடவுள் மயங்கி விழுந்தார்.
ஒரு திருமண வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது என்னோடு வந்த ஒருவர் கவலையோடு என்னிடம் கேட்டார்” உங்களுக்கு ஜிலேபி போட்டார்களா?”
“இல்லையே”என்றேன்.

“நல்லவேளை, எனக்கும் போடல… அதான் கேட்டேன்” திருப்தியாக நடந்து போனார்.
வாசலில் என் செருப்பைத் தேடிக் கொண்டிருந்தேன். அந்த “ஜிலேபி” மீண்டும் வந்தார். “சே – 300, 400 ரூபாய் இருக்கும் புத்தம் புது செருப்பு. சாப்பிட்டு வந்து பார்க்கிறேன் காணம் சார்”

“ஐயோ அப்பறம் என்ன பண்ணீங்க” நான் கவலையோடு கேட்டேன்
.
“அப்புறம் என்ன.. என் செருப்பைத் போட்டுட்டு வந்தேன்… எல்லாம் நேரம் சார் நேரம்!” அவர் பேசிக்கொண்டே போனார். எனக்கு பிறகுதான் புரிந்தது, யாரோ ஒருவருடைய செருப்பை இவர் பார்த்து வைத்து அது கிடைக்காத ஏக்கத்தில் பேசுகிறார் என்று.

“எங்க அப்பா ரெண்டு கையிலேயும் ஒரே தள்ளு…. பஸ் ஓடியே போயிரும்” சொன்னான் ஒரு சிறுவன் பெருமையாக.

“ம்… இதென்ன பெரிசு, எங்கப்பா ஒரே கையில பஸ்ஸைத் தள்ளிருவாரு!” இன்னொரு பையன் சொன்னான்.

மூன்றாவது பையன் சொன்னான்; “எங்கப்பா ஒரு ஊது ஊதுனார்னா போதும் பஸ் ஓடியே போயிரும்”.

ஆமா உங்கப்பா யாரு பயில்வானா?”

“இல்லடா… கண்டக்டரு”

புதுவருட காலண்டரைப் பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய ஆசிரிய நண்பர் மகிழ்ச்சியோடு சொன்னார் “அட, இந்த வருஷமும் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ல தான் வருது… பார்த்தீங்களா?”

இந்த மாதிரித் தொடர் குழப்பங்கள் உங்களுக்கு வந்ததுண்டா?

todayindia
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !! Empty Re: டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !!

Post by rammalar Sat 22 Mar 2014 - 14:01

:/  :/ 
--
ஓ.ஹென்றி நகைச்சுவை சிறுகதை படிச்சிருக்கீங்களா...?
-
அதுல ஒரு கதை...
-
ஜெயிலுக்கு போனா மணி அடிச்சா சாப்பாடு கிடைக்கும்னு
ஆசைப்படறான் ஒருவன்.
-
ஏதாவது தப்பு பண்ணனுமே...!
-
கடைத்தெருவில் ஒரு அழகியின் கையை பிடிக்கிறான்
அவள் கத்தவில்லை
-
அவனுக்குத்தான் அதிர்ச்சியா போயிட்டது...அவள்
சொல்றாள்...
'போலீஸ் பாக்குது,...வா...இந்த சந்து வழியா போயிடலாம்னு..!
-
இரண்டாவது முயற்சியா  குடையை கீழே
வைத்து விட்டு ,சாமான் வாங்கறார் ஒருத்தர்...
அந்த குடையை அவர் பார்க்கிறார் போல தூக்கிக்கிட்டு
வேகமா நடக்கிறான்...
-
அவரும் திருடன் என கத்தவில்லை...அவனை
தொடர்ந்து மெதுவா நடந்து வருகிறார்...
-
அவர் திருடன்னு ஏன் கத்தவில்லை... காரணத்தை அவரிடமே
கேட்கிறான்...
-
அவரோ 'அப்படின்னா இது உங்க குடை இல்லீங்களா'னு
கேட்கிறார்..!
-
அப்புறம் என்ன நடந்தது...??
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !! Empty Re: டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !!

Post by மீனு Sat 22 Mar 2014 - 17:46

எல்லாமே சூப்பரா இருக்கு *_ 
குண்டுப்பையா இது போல் நிறையப் பதிவு போடுங்க )( 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !! Empty Re: டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !!

Post by Nisha Sat 22 Mar 2014 - 22:00

நல்ல நகைச்சுவைகள்

இன்னும் பகிருங்கள்  முத்து!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !! Empty Re: டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !!

Post by Muthumohamed Sat 22 Mar 2014 - 22:05

மீனு wrote:எல்லாமே சூப்பரா இருக்கு *_ 
குண்டுப்பையா இது போல் நிறையப் பதிவு போடுங்க )( 


 )(  )(  )( இன்ஷா அல்லாஹ் பதிய முயற்சி செய்கிறேன் அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !! Empty Re: டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum