Latest topics
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!by rammalar Today at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
கண்களை விற்றுத் தான் ஓவியமா? மரக்கன்றுகள் நட காடு அழிப்பு: வனத்துறையினர் விபரீத முயற்சி
2 posters
Page 1 of 1
கண்களை விற்றுத் தான் ஓவியமா? மரக்கன்றுகள் நட காடு அழிப்பு: வனத்துறையினர் விபரீத முயற்சி
பெ.நா.பாளையம்: பாலமலை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில், மரக்கன்றுகளை நட, 'பொக்லைன்' இயந்திரம் கொண்டு வனவளம் அழிக்கப்படுவதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் வனவளத்தை பெருக்க, வனத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மலையில் வசிக்கும் மலைவாழ் மக்களை பயன்படுத்தி, மரக்கன்றுகளை நடும் திட்டத்தையும், மழைக்காலத்தில் விதைகளை துாவுதல் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதனால், மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுவதோடு, வனவளமும் பெருகிறது. இத்திட்டங்களின் ஒரு பகுதியாக, ஜப்பான் நாட்டின் நிதியுதவியோடு, மலைகளில் மரங்களை வளர்க்கும் திட்டம் பாலமலை வனப்பகுதியில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி, 3 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு அடி ஆழத்தில் மலைப்பகுதியில் குழி வெட்டி அதில் வேப்பமரம், புளியமரம், வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படும். மழைக்காலத்தில் பெய்யும் நீர், அக்குழியில் தேங்கி, மரங்கன்று தொடர்ந்து வளர உதவும்.
இப்பணியில் மலைவாழ் மக்களை மட்டுமே பயன்படுத்தி, அவர்களது உடல் உழைப்பால் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது. ஆனால், பாலமலை வனப்பகுதியில் இயந்திரங்களை கொண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளது. வனத்துறையின் இச்செயலுக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாலமலை இயற்கை: வள பாதுகாப்பு சங்க செயலாளர் சின்னராஜ் கூறியதாவது: பாலமலை வனப்பகுதியில், கடந்த சில நாட்களாக முன் மரக்கன்றுகளை நட மலைவாழ் மக்களை பயன்படுத்தி, குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், அதற்கான கூலியை வனத்துறையினர் தரவில்லை. கூலி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் வனத்துறையினர் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, குழிகளை தோண்டியுள்ளனர்.வனங்களில் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என விதி இருந்தும், அதை மீறி, வனத்துறை செயல்பட்டுள்ளது. இதனால், வனங்களில் குறிப்பாக நீரோடைகளையும், சிற்றோடைகளையும் உருவாக்கும் இலை, தழைகளான மலையின் மடி அநியாயமாக அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதியில் உள்ள மரங்கள், சிறு செடி, கொடிகளும் அழிக்கப்பட்டு இருப்பது வேதனையாக உள்ளது. இச்செயலை வனத்துறை உடனடியாக நிறுத்த வேண்டும்.இவ்வாறு, சின்னராஜ் கூறினார்.
வனத்துறையினர் கூறுகையில், “குழி தோண்ட அரசு தரப்பில் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 130 ரூபாய் மட்டுமே கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை. அதனால், பொக்லைன் பயன்படுத்தி, குழி தோண்டப்படுகிறது. நிலுவை கூலித் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றனர்.
நன்றி:தினமலர்
மேற்கு தொடர்ச்சி மலையில் வனவளத்தை பெருக்க, வனத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மலையில் வசிக்கும் மலைவாழ் மக்களை பயன்படுத்தி, மரக்கன்றுகளை நடும் திட்டத்தையும், மழைக்காலத்தில் விதைகளை துாவுதல் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதனால், மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுவதோடு, வனவளமும் பெருகிறது. இத்திட்டங்களின் ஒரு பகுதியாக, ஜப்பான் நாட்டின் நிதியுதவியோடு, மலைகளில் மரங்களை வளர்க்கும் திட்டம் பாலமலை வனப்பகுதியில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி, 3 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு அடி ஆழத்தில் மலைப்பகுதியில் குழி வெட்டி அதில் வேப்பமரம், புளியமரம், வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படும். மழைக்காலத்தில் பெய்யும் நீர், அக்குழியில் தேங்கி, மரங்கன்று தொடர்ந்து வளர உதவும்.
இப்பணியில் மலைவாழ் மக்களை மட்டுமே பயன்படுத்தி, அவர்களது உடல் உழைப்பால் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது. ஆனால், பாலமலை வனப்பகுதியில் இயந்திரங்களை கொண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளது. வனத்துறையின் இச்செயலுக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாலமலை இயற்கை: வள பாதுகாப்பு சங்க செயலாளர் சின்னராஜ் கூறியதாவது: பாலமலை வனப்பகுதியில், கடந்த சில நாட்களாக முன் மரக்கன்றுகளை நட மலைவாழ் மக்களை பயன்படுத்தி, குழிகள் தோண்டப்பட்டன. ஆனால், அதற்கான கூலியை வனத்துறையினர் தரவில்லை. கூலி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் வனத்துறையினர் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, குழிகளை தோண்டியுள்ளனர்.வனங்களில் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என விதி இருந்தும், அதை மீறி, வனத்துறை செயல்பட்டுள்ளது. இதனால், வனங்களில் குறிப்பாக நீரோடைகளையும், சிற்றோடைகளையும் உருவாக்கும் இலை, தழைகளான மலையின் மடி அநியாயமாக அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதியில் உள்ள மரங்கள், சிறு செடி, கொடிகளும் அழிக்கப்பட்டு இருப்பது வேதனையாக உள்ளது. இச்செயலை வனத்துறை உடனடியாக நிறுத்த வேண்டும்.இவ்வாறு, சின்னராஜ் கூறினார்.
வனத்துறையினர் கூறுகையில், “குழி தோண்ட அரசு தரப்பில் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 130 ரூபாய் மட்டுமே கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை. அதனால், பொக்லைன் பயன்படுத்தி, குழி தோண்டப்படுகிறது. நிலுவை கூலித் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றனர்.
நன்றி:தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கண்களை விற்றுத் தான் ஓவியமா? மரக்கன்றுகள் நட காடு அழிப்பு: வனத்துறையினர் விபரீத முயற்சி
தகவல் பகிர்வுக்கு நன்றி
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|