சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு Khan11

தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு

3 posters

Go down

தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு Empty தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு

Post by ராகவா Mon 23 Jun 2014 - 23:42

தமிழ்மொழி அழிந்தால், தமிழ் இனம் அழிந்து விடும்,'' என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழ.கருப்பையா பேசினார்.

சென்னை பல்கலை நுாற்றாண்டு மண்டபத்தில், தினமணி நாளிதழ் சார்பில், இரண்டாம் நாள் இலக்கியத் திருவிழா நடந்தது. இதில், சமயமும் தமிழும் என்ற தலைப்பில் நடந்த அமர்விற்கு, சுதா சேஷய்யன் தலைமை வகித்தார்.

இனத்தின் அடையாளம்:அப்போது, என்னை செதுக்கிய இலக்கியம் என்ற தலைப்பில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பழ.கருப்பையா பேசியதாவது:தமிழ்மொழி தனித்து நிற்கிறது. அது தான், தமிழின் வளர்ச்சிக்கு காரணம். தமிழகத்தில், பக்தி இலக்கியங்களால், மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டது. பிரிந்து இருந்த சமுதாயங்களை ஒன்றிணைத்தது பக்தி இலக்கியங்களே.

தமிழ் சமுதாயத்தை ஒருங்கிணைத்ததில், ஞானசம்பந்தர், உ.வே.சாமிநாத அய்யர், பரிதிமாற்கலைஞரின் பங்கு முக்கியம்; மற்றவர்கள் வேதாந்தத்தை தோற்றுவித்த காலத்தில், ராமலிங்க அடிகளார் தமிழின் தனித்தன்மையை பாதுகாக்க போராடினார்.

மொழி என்பது ஒலி வடிவம் அல்ல. அது ஒரு இனத்தின் முகம், இனத்தின் அடையாளம். தமிழின் உயிர்ப்பு எழுத்தில் இல்லை. தமிழ் வரி வடிவங்களுக்கு பலர் மாற்றம் தந்துள்ளனர். எத்தனை முறை வரி வடிவத்தை மாற்றினாலும், தமிழின் சிறப்பு மங்கவில்லை.தமிழின் உயிர்ப்பு ஒலி வடிவங்களில் தான் உள்ளது. அயல் மொழியின் ஒலியை உள்வாங்கினால், தமிழ் மொழியின் ஒலி அழிந்து, தமிழ்மொழி வளர்ச்சி பாதிக்கப்படும். தமிழ்மொழி அழிந்தால், தமிழ் இனம் அழிந்து விடும்.இவ்வாறு, பழ.கருப்பையா பேசினார்.

வாசிப்பும், பழக்கம் என்ற அமர்விற்கு, ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:மனித நேயத்தை நிலைநாட்டும் ஆற்றல் இலக்கியத்திற்கு உள்ளது. எல்லாம் மாறிக் கொண்டிருக்கும்; என்பது மட்டும் மாறாது என்ற வரிகள் என்னை செதுக்கியது. இந்தியை திணிக்கும் முடிவிலும் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, திருமாவளவன் பேசினார்.

மிகவும் கவர்ந்ததுஅடுத்த அமர்வில், என்னை கவர்ந்த காப்பியம், சிலப்பதிகாரமே என்ற தலைப்பில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:தமிழில் வெளியான ஏராளமான நுால்களில், சிலப்பதிகாரம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. உலகில் எந்த ஒரு மொழியிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், தன் மண்ணில் வாழும் சாதாரண குடிமக்களை பற்றி யாரும் காப்பியங்கள் படைக்கவில்லை.

எல்லோரும் சட்டத்தின் முன் சமம் என்று, சில நுாறு ஆண்டுகளுக்கு முன், பிற நாடுகள் சட்டத்தை இயற்றி இருக்கலாம். ஆனால், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நீதியை கொண்டு வந்தது தமிழ் சமுதாயம்.சிலப்பதிகாரத்தில், சில தவறுகள் இருக்கலாம். ஆனால், சமுதாயத்திற்கு எது தேவையோ, எது நன்மை தருமோ அதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலப்பதிகாரத்தில் வஞ்சி காண்டத்தில் உள்ளது போல், மான உணர்ச்சிமிக்க இளைஞர்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் பெண்கள் உருவாக வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில்,வேர்களைத் தேடி கலைகள் என்ற தலைப்பில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி பேசும்போது, இயல், இசை, நாடகம் மூன்றையும் அறிந்தோரே தமிழை முழுயைாக அறிந்தவர்கள் என, சிலப்பதிகாரம் கூறுகிறது. பண்டைய மரபுப்படி இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும், படிக்கும் சான்றோர் உருவாக வேண்டும், என்றார்.

நிறைவு விழாவில், கவர்னர் ரோசய்யா, நீதிபதி ராமசுப்ரமணியம், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமங்களின் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் ஆகியோர் பங்கேற்றனர்.

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு Empty Re: தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:56

தினமலருக்கும்...நாம் நேசிக்கும் ராகவனுக்கும் ...

மனமார்ந்த நன்றிகள்......

காலம் அறிந்தும்...காலத்தால் அழியாததுமான ...

தகவல் பதிவுகள்...

நன்றிகள் மீண்டுமொரு முறை.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு Empty Re: தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு

Post by rammalar Tue 24 Jun 2014 - 7:00

தமிழினம் அழியாது...!
-
காலத்திற்கேற்ப பிற மொழிச் சொற்களை
தன்மயமாக்கி தமிழ் வளரும், தமிழுனும்
வாழ்வான்..!
-
தமிழர் கலாச்சாரம் என்ற ஒன்றைப்பற்றி
பேசுபவர்கள், அக்காலத்தில் இருந்தது போல்
கணிகையர் வீதி இருக்க வேண்டும் என்கிறார்களா..?
-
அக்காலத்திலும் குடிப்பழக்கம் இருந்தது...!
இப்போது மட்டும் ஏன் மதுவிலக்கு வேண்டும்
என்கிறாரகள்..?
-
முரணான பேச்சுக்களை பேசிப் பேசியே
மக்களை மயக்கும் கூட்டம் ...
பழமை பேசியே இளைஞர்களை கெடுக்கும்
ஒரு கூட்டம்...
-
யதார்த்தம் புரியாமல் நடைமுறைக்கு ஏற்ற
கருத்துகளை சொல்வது எப்போது?
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு Empty Re: தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum