சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

சிந்திப்போமா ? Khan11

சிந்திப்போமா ?

3 posters

Go down

சிந்திப்போமா ? Empty சிந்திப்போமா ?

Post by Nisha Mon 30 Jun 2014 - 1:45

சிந்திப்போமா ?

உண்மை எப்போதும் நம் அருகில் தான் உள்ளது. நம் கண்களுக்கு எதிரே கைகளுக்குப் பக்கத்தில் தொட்டுவிடக்கூடிய தூரத்தில் நிஜம் இருந்தாலும் நம்மில் பலரும் உணர்வதில்லை. காரணம் உண்மையை நாம் வெளியே தேடிக் கொண்டிருப்பது தான்.

புழுதி அடர்ந்த தெருவில் குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள் ஒரு கிழவி.

"என்ன தேடுகிறீர்கள் ?" என்றான் எதிரில் வந்த இளைஞன்.

"பெட்டிச் சாவியைத் தொலைத்து விட்டேன். தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றாள் கிழவி.

"அடடா... சாவி தெருவில் விழுந்துவிட்டதா ?"

"இல்லை... வீட்டில்தான் தொலைத்து விட்டேன்"

"வீட்டில் தொலைத்த சாவியைத் தெருவில் வந்து தேடுகிறீர்களே ?"

"வீட்டில் வெளிச்சம் இல்லை... வெளியில்தான் நிலா காய்கிறது" என்றாள் கிழவி.

இது கேரளத்து நாட்டுப்புறக் கதை. நாமும் அந்தக் கிழவியைப் போலத்தான் இருக்கிறோம். நம் சந்தோஷங்களை எங்கேங்கோ தொலைத்துவிட்டு வெளியில் தேடிக் கொண்டிக்கிறோம்.

ஆனால் அதை மீட்டெடுக்க எங்கே தொலைத்தோமோ அங்கே தேடாமல் நமக்கு சௌகர்யமான இடங்களில் தேடித்தேடி விரக்தி அடைகிறோம். விரக்தி அதிகரிக்க அதிகரிக்க வெறுப்புதான் மிஞ்சுகிறது. நம் மீதே நமக்கு வெறுப்பு. நம் கையாலாகாத்தனத்தின் மீதொரு கசப்பு.

உண்மையில் நாம் சந்தோஷம் காண முயல்வதில்லை. அதற்கு மாறாக சின்னச்சின்ன பொய்களில் கிடைக்கும் தற்காலிக சந்தோஷங்கள் நம்மை திருப்திப்படுத்தி விடுகின்றன.

உண்மையைக் காண்பது எளிது என்றாலும் நாம் அதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. பார்ப்பது, உணர்வது என எல்லாமே நேரடியான விஷயங்கள். எண்ணுதல் என்பது நேரடியாக நிகழக்கூடியதல்ல. அதற்கு மனம், மனம் வைக்க வேண்டும்.

அன்பை உணர்ந்தவர்கள் உண்மையையும், உணர இயலும். உண்மையைப் பற்றி சிந்திப்பது மட்டுமே அதை உணர போதுமானது அல்ல. சிந்தனை சரியானதாக இருக்க வேண்டும். எண்ணம் சரியானால் எல்லாம் சரியாகும்.

சரி... சிந்தனை சரியானதாக இல்லையெனில் என்னவாகும் ? முட்டாள்தனமான செயல் என்று நம் சிந்தனைக்கு பெயர் கிடைக்கும். இதுதான் இயல்பில் நடக்கக்கூடியது.

யூத தத்துவ அறிஞர் ஒருவர் இருந்தார். ‘யாசல்‘ என்ற பெயர். மிகப்பெரிய தத்துவ மேதை சிந்தனாவாதி. எல்லா தத்துவயியலாளர் போலவே ‘யாசல்‘ வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த நேரமின்றி சிந்திக்க மட்டுமே செய்து வந்தார்.

ஒருமுறை அருகில் இருந்த ஊரின் சந்தைக்கு தனது நிலத்தில் விளைந்த கோதுமையை விற்பதற்காக எடுத்துக்கொண்டு கிளம்பினார் யாசல். தனது மனைவியிடம் "நான் கோதுமையை விற்றதும் எப்போது திரும்புகிறேன் என்று தந்தி கொடுக்கிறேன்" என்றார்.

சந்தைக்குச் சென்று நல்ல லாபத்திற்கு கோதுமையை விற்ற யாசல் தனது மனைவிக்கு தந்தி தருவதற்காக அஞ்சல் நிலையம் வந்தார்.

"கோதுமை நல்ல லாபத்திற்கு விற்றுவிட்டது. நாளை வருகிறேன். அன்பு முத்தங்களுடன்.. யாசல்"என்று தந்தி எழுதினார்.

அதன் பிறகுதான் அவர் சிந்திக்கத் தொடங்கினார். என் மனைவி என்னை மூடன் என்றல்லவா நினைத்துக் கொள்வாள்...

கோதுமையை நல்ல லாபத்திற்கு விற்காமல் நஷ்டத்திற்கா நான் விற்றிருப்பேன் ? என்று யோசித்த யாசல் தந்தியிலிருந்த நல்ல லாபத்திற்கு என்ற வார்த்தைகளை அடித்தார்.

மறுபடியும் தந்தியைப் படித்து விட்டு யாசல் கோதுமை விற்க நாம் வந்ததுதான் மனைவிக்குத் தெரியுமே... பிறகு ஏன் அந்த வார்த்தைகள் ? என்று நினைத்து கோதுமை விற்று விட்டது என்ற வார்த்தை இரண்டையும் எடுத்துவிட்டு மறுபடியும் தந்தியின் வாசகங்களைப் படித்துப் பார்த்தார்.

அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. நாம் நாளைதான் போய்விடப் போகிறோமே... எதற்கு நாளை வருகிறேன் என்ற வார்த்தைகள் என்ற எண்ணத்தில் அவற்றை அடித்தார். அடுத்ததாக யோசித்து நம் மனைவிக்கு அன்பு முத்தங்கள் என்றைக்கும் உரிமையானதுதானே ? அதை வேறு ஏன் எழுத வேண்டும். என்று அந்த இரண்டு வார்த்தைகளையும் எடுத்தார்.

இறுதியாக தந்தியில் யாசல் என்ற பெயர் மட்டும் இருந்தது. எனக்கென்ன பைத்தியமா பிடித்து விட்டது ? என் மனைவிக்குத் தான் என் பெயர் தெரியுமே ? என்று அதையும் அடித்து தந்தியைக் கிழித்து விட்டு கிளம்பிவிட்டார்.

முறையற்ற சிந்தனையின் விளைவுகள் அபத்தமானதாக இருக்கும். இது எப்படி நிகழ்கிறது ? எது தேவை எது தேவையில்லை. என்று உணராமல் தேர்ந்தெடுக்காமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதே இதன் காரணம்.

தேவையற்ற எண்ணங்களாக முழு வாழ்க்கையும் வீணடிக்கப் பட்டு விடுகிறது. எல்லாவற்றையும் கடந்து இறுதியில் வாழ நினைக்கிற போது இறுதிக் கட்டத்தில் வாழ்வின் விளிம்பில் நிற்கிறோம் நாம்.

நம்மில் பலரிடமும் சிந்தித்ததை செயல்படுத்த இயலாத நிலை நிலவுகிறது. யோசித்துக் கொண்டிருப்பவர்கள் யோசித்துக் கொண்டும் யோசிக்காதவர்கள் செயல்பட்டுக் கொண்டும் இருக்கின்ற நிலையை நாம் காணலாம்.

யோசிக்காமல் இறங்கி விட்டேன். என்று கூறுபவர்கள் பலரை நாம் சந்தித்திருப்போம். அதற்காக இவர்களெல்லாம் யோசிக்கவே இல்லை என்று கூறிவிட முடியாது. வேகமான முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர்கள் இவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

திட்டமிடப்படாத எந்தவொரு செயலும் முழுமையான பலனைத் தருவதில்லை. ஹிட்லர், நெப்போலியன், மாவோ என்ற செயலை மட்டுமே நம்பி இறங்கியவர்கள் வரலாற்றில் இடம் பெற்றாலும் திட்டமிடப்படாத வெற்றிகள் அவர்களுக்கே எதிர் விளைவாக அமைந்ததை நாம் அறிவோம்.

அரிஸ்டாட்டில், கந்த், அல்லது ஹெகல் என சிந்தனையாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்களின் சிந்தனை அடிப்படையில்தான் இன்றும் எண்ணம் தொடர்கிறது.

எண்ணத்துடன் எச்சரிக்கையோடு அணுகும் செயல்திறன் தான் நாம் அடைய விரும்புவது. எண்ணம் ஒரு நிலை வரை மட்டுமே தொடர வேண்டும். பிறகு செயல்படத் தொடங்கிவிட வேண்டும். மாறாக தொடர்ந்து சிந்தனையை மட்டும் வளர்த்துக் கொண்டு செயல்படாமல் போய்விட்டால் சிந்தித்ததற்கு அர்த்தமின்றி போய் விடுகிறது.

ஒரு பெரிய கோட்டை சிறிய கோடாக்குவது எப்படி சுலபமோ அதுபோல சிந்தித்ததை செயல்படுத்துவதும் சுலபம்தான். பிறகு ஏன் நாம் சிந்தித்தலையே தொடர விரும்புகிறோம் ?

காரணம் சிந்தித்தல் போதை போன்றது. கனவில் சுகம் காண்பது போல வெறும் யோசித்தலே நம்மை திருப்தியடையச் செய்து மேற்கொண்டு செயல்வடிவம் கொடுக்க விடாமல் செய்து விடுகிறது.

நம்முடைய செயல்கள் எல்லாமே நம் கட்டுப்பாட்டில் சுய நினைவில் இருக்கும்போது நிகழ்பவைதான். ஆனாலும் ஏன் நம்மையும் மீறி விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன ?

எண்ணம் வரையறை இல்லாதது. எப்படி அழகு என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை வரையறுக்க முடியாதோ அதுபோலத் தான் மனதின் எண்ணங்களும்.

எண்ணங்கள் செயலுருவாகும் போது முழுமையான ஈடுபாடு அளிக்கப்பட வேண்டியது அவசியம். துக்கம், சந்தோஷம் என எதுவானாலும் அதை முழுமையாக அனுபவித்து உணர வேண்டும்.

அந்தந்த நிமிடங்களை அனுபவித்து உணர்கின்ற பொழுது வாழ்க்கையின் எல்லா நேரமும் இன்பமானதாய் அமையும். சாப்பிடும் போது.. சாப்பிட்டு தூங்கும் போது தூங்கி... எதையும் முழு ஈடுபாடு காட்டி செய்வது நம்மை உயர்த்தும். ஏனோதானோவென்று செய்கின்ற வேலையில் கவனமின்றி அக்கறையின்றி ஈடுபடுவது நம்மையும் நம் வாழ்க்கைச் சூழலையும் பெரிதும் பாதிக்கிறது.

ஆக, முறையான சிந்தனையுடனும் சரியான செயல் திறனுடனும் வாழ்க்கையை நம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது நம் கடமை. காரணம் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, வெறும் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதல்ல.


அகநாழிகை"
பொன்.வாசுதேவன்



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்திப்போமா ? Empty Re: சிந்திப்போமா ?

Post by ahmad78 Mon 30 Jun 2014 - 10:11

நல்ல சிந்தனைகள்

நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிந்திப்போமா ? Empty Re: சிந்திப்போமா ?

Post by jasmin Mon 30 Jun 2014 - 10:17

நன்றாக சிந்தித்து எழுதி இருக்கிறார் வாசுதேவன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சிந்திப்போமா ? Empty Re: சிந்திப்போமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum