சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!  Khan11

காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!

4 posters

Go down

காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!  Empty காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:20

காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!


இஸ்ரேலானது கிழக்கு மற்றும் வடக்கு காஸாவிலுள்ள சுமார் ஒரு இலட்சம் பாலஸ்தீனர்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு புதன்கிழமை எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.

காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரயேல் தொடர்ந்து 9 வது நாளாக வான் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையிலேயே மேற்படி எச்சரிக்கை பிறப்பிக்கபட்டுள்ளது. எகிப்தால் செவ்வாய்க்கிழமை முன்வைக்கப்பட்டிருந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்றை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டிருந்த போதும் அந்த உடன்படிக்கை பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளதும் ஏனைய குழுக்களதும் ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியதை அடுத்து இஸ்ரேல் காஸா மீதான வான் தாக்குதல்களை தொடர தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் செவ்வாய்கிழமை இரவு காஸா பகுதியின் மீது நடத்திய வான் தாக்குதல்களில் மூத்த ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் ஐந்து மாத குழந்தையொன்றும் உள்ளடங்குகிறது. கடந்த 8 ஆம் தேதி காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 205 பேர் பலியாகியுள்ளனர்.

காஸா பிராந்தியத்தில் ரபாஸ் நகரில் உள்ள வீடொன்றின் மீது இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 19 வயது இளைஞர் ஒருவர் உடன்பட இருவர் பலியாகியுள்ளனர். அதே சமயம் காஸா பிராந்தியத்தில் உள்ள தீவிரவாதக்குழுக்கள் தென் மற்றும் மத்திய இஸ்ரேல் மீது இதுவரை 1200 ஏவுகணைகளை ஏவியுள்ளனர். இஸ்ரேலின் எரெஸ் எல்லைக்கடவைக்கு அண்மையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலில் 38 வயது நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இது மேற்படி மோதல்கள் ஆரம்பித்தது முதற் கொண்டு இஸ்ரேல் தரப்பில் இடம்பெற்ற முதலாவது உயிரிழப்பாகும். எகிப்தால் முன்வைக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பான திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்ததை அடுத்து இஸ்ரேல் தனது வான் தாக்குதல்களை 6 மணிநேரம் நிறுத்தியிருந்தது. ஆனால் தீவிரவாதிகள் அந்த உடன்படிக்கையை அலட்சியப்படுத்தி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டான்யாஹூ விபரிக்கையில் இங்கு யுத்த நிறுத்தம் இல்லாதபோது எமது பதில் யுத்தமாகும். அதனால் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தவிர எமக்கு வேறு வழியில்லாதுள்ளது என்று தெரிவித்துள்ளார். காஸா பிராந்திய தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது 140 ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எகிப்தால் முன்வைக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை காஸா பிராந்திய தீவிரவாதிகள் நிராகரித்ததையடுத்து தாக்குதல்களை தொடரும் இஸ்ரேல்

tamizhulagam.com


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!  Empty Re: காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:22

17.07.2014

இஸ்ரேல் போர் விமானங்கள், காஸா முனையில் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில் 200க்கும் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் இயக்கத்தின் மீது நடப்படும் இந்த தாக்குதலில் அப்பாவிகளும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எகிப்து நடத்தி சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளின் பேரில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் 5 மணிநேர சண்டை நிறுத்தம் அங்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில் காஸா மீது மிகப்பெரிய அளவிலான தரைவழி தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து காசாவில் உள்ள மக்கள் பிழைப்போமா மாட்டோமா என்ற பயத்தில் உறைந்து போயுள்ளனர்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!  Empty Re: காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!

Post by Nisha Fri 18 Jul 2014 - 1:23

15.07.2014

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 172 பேர் பலி; 1230 பேர் காயம்!

பலஸ்தீன காசாவின் வட பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா பகுதியிலிருந்து தொடரும் ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்துவதற்காக அந்த பகுதியை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தவுள்ளதாக இஸ்ரேல் எச்சரித்ததையடுத்தே அந்தப் பிராந்திய மக்கள் இடம்பெயரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி, பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 17000 பேர் தம்மிடம் தஞ்சம் கோரியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. அதேசமயம், காசாவின் ஏவுகணைகள் ஏவப்பட்ட தளமென சந்தேகிக்கப்பட்ட பகுதி ஒன்றை இஸ்ரேல் படையினர் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியுள்ளனர்.

7 நாட்களுக்கு முன் இஸ்ரேல் காசாவிற்கு எதிரான நடவடிக்கையொன்றை ஆரம்பித்ததையடுத்து, இதுவரை குறைந்தது 172 பேர் பலியாகியுள்ளதுடன் 1230 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் இஸ்ரேல் தாக்குதலில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேரும் உள்ளடங்குகின்றனர். காசாவிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் மூத்த உறுப்பினர்களது வீடுகள் உள்ளடங்கலான தீவிரவாதத் தளங்களை இலக்கு வைத்தே தாம் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.

எனினும் காசாவில் உயிரிழந்தவர்களில் 77 சதவீதமானவர்கள் பொதுமக்கள் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை தெரிவிக்கிறது. பலஸ்தீன மேற்கு கரை நகரான ஹெபரோனிற்கு அருகில் திங்கட்கிழமை இஸ்ரேலியப் படையினர் மேற்கொண்ட தாக் குதலில் முனிர் அஹ்மெட் படறின் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அதேசமயம், இஸ்ரேலியப் படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கு கரையில் 23 பலஸ்தீனர்களை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஹமாஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான நயெப் ரஜுப், மொஹமட் ஜெயி ஷா, மொஹமட் அகெல் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவில் ஹமாஸ் ஆயுதப் பிரிவால் பயன்படுத்தப்பட்டு வந்த பயிற்சி நிலையங்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட தளங்கள்மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.

tamizhulagam.com





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!  Empty Re: காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!

Post by kalainilaa Fri 18 Jul 2014 - 7:13

இப்படி ஏவுகணை கொலை செய்தால் கொலையில்லை..இவர்கள் செய்தால் ராணுவம் 
அடுத்தவர் செய்தால் தீவீரவாதிகள்..அட பாவிகளா..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!  Empty Re: காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!

Post by நண்பன் Sat 19 Jul 2014 - 9:04

kalainilaa wrote:இப்படி ஏவுகணை கொலை செய்தால் கொலையில்லை..இவர்கள் செய்தால் ராணுவம் 
அடுத்தவர் செய்தால் தீவீரவாதிகள்..அட பாவிகளா..
 !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!  Empty Re: காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!

Post by ahmad78 Sat 19 Jul 2014 - 10:34

காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!  10525799_819521734733987_1083708677212910722_n

இவர்கள் அழியப்போவது நிச்சயம்தானே.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!  Empty Re: காஸா பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum