Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
கீரை விற்கும் பள்ளி மாணவி
3 posters
Page 1 of 1
கீரை விற்கும் பள்ளி மாணவி
வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய முதல்படி என்றுதான் 10-ம் வகுப்பு பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், குடும்ப நிலைமை காரணமாக 10-ம் வகுப்புப் படிப்பை நிறுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளான திண்டுக்கல் மாணவி, வீதிவீதியாகச் சென்று காய்கறியும் கீரையும் விற்றுத் தனது அக்காவையும் தங்கையையும் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளப்பட்டி பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த விண்ணரசி (15), முருகன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். புத்தகப் பையுடன் சேர்த்துக் குடும்பப் பாரத்தையும் சுமக்கும் இந்த மாணவியின் வைராக்கியம் ஆச்சரியப்பட வைக்கிறது.
வீட்டு நிலைமை
இவருடைய அப்பா ஜெகநாதன், பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். விண்ணரசியின் அம்மா செல்வராணி, திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்குத் தினமும் அதிகாலையில் சென்று காய்கறி வாங்கிவந்து, கணவர் ஜெகநாதனுடன் சைக்கிளில் வீதிவீதியாகச் சென்று விற்றுவந்தார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானம்தான் அவர்களுக்கும், அவர்களுடைய நான்கு மகள்களான ஆரோக்கியமேரி, ஜெனித்தாமேரி, விண்ணரசி, குணசீலி பவித்ரா ஆகியோருக்கும் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. ஆரோக்கியமேரி திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ.யும், குணசீலி பவித்ரா 7-ம் வகுப்பும் படித்துவருகிறார்கள். வாழ்க்கை நடத்துவதற்கும், மகள்கள் படிப்பதற்கும் காய்கறி வியாபாரமே ஆதாரமாக இருந்துவந்தது.
செல்வராணியால் முன்புபோல் வியாபாரத்தையும் வீட்டையும் ஒருசேரக் கவனிக்க முடியவில்லை. மகள்களுக்கான படிப்புச் செலவையும் சமாளிக்க முடியாமல் திணறினார். அதனால் முதல் மகளை மட்டும் படிக்க வைத்துவிட்டு, ஜெனித்தாமேரியை 10-ம் வகுப்புடன் நிறுத்திவிட்டார். பிறகு, தனியார் மில்லில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.
வியாபாரம் செய்ய முடிவு
அடுத்த மகளான விண்ணரசியும் படிப்பை நிறுத்திவிட்டு, காய்கறி விற்கச் செல்ல வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டது. ஆனால், விண்ணரசிக்கு படிப்பைக் கைவிட மனமில்லை. தந்தைக்குப் பதிலாகத் தானே சைக்கிளில் சென்று காய்கறி வியாபாரம் செய்ய முடிவெடுத்தார்.
திண்டுக்கல் சந்தைக்குத் தினசரிக் காலை 5 மணிக்குச் சென்று அம்மா செல்வராணி வாங்கிவரும் காய்கறி, கீரை வகைகளைச் சைக்கிளில் வைத்துச் சின்னாளப்பட்டி, திரு.வி.க. நகர், முத்தமிழ் நகர், திருநகர் காலனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று விற்று வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, குடும்பச் சுமைகளைத் தாங்க பெற்றோருக்கு உதவியாக இருப்பதுடன் பள்ளிப் படிப்பையும் அவர் கைவிட வில்லை. தனது அக்காவும், தங்கையும் படிப்பதற்கும் உதவிவருகிறார்.
என்னால் முடியும்
"பல குடும்பங்கள் பெண் குழந்தைகளைச் சுமையா நினைக்கிற காலத்துல என் அப்பாவும் அம்மாவும் எங்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாங்க. அவங்களால முன்ன மாதிரி வேலைக்குப் போய் எங்களைப் படிக்க வைக்க முடியலை. நிறைய படிக்கணும், நிறைய சம்பாதிக்கணுங்கிறதுதான் என் ஆசை. எக்காரணம் கொண்டும் படிப்பை நிறுத்த நான் விரும்பலை. ரெண்டையும் சேர்த்துச் செய்ய முடியுங்கிற நம்பிக்கை எனக்கு இருந்துச்சு, செய்ய ஆரம்பிச்சுட்டேன்" வார்த்தைகள் உறுதியாக வருகின்றன விண்ணரசியிடம் இருந்து.
சகோதரிகளுக்கு உதவும் வகையில் அக்கா ஜெனித்தா மேரி சமையலைக் கவனிக்க, தினசரிக் காலை 6 மணி முதல் 8.30 மணிவரை காய்கறி வியாபாரம் செய்துவிட்டு 9 மணிக்குப் பள்ளிக்குப் போய்விடுகிறார் விண்ணரசி. சாயங்காலத்தைப் படிப்புக்காக ஒதுக்குகிறார்.
சகோதரிகளுக்கு உதவும் வகையில் அக்கா ஜெனித்தா மேரி சமையலைக் கவனிக்க, தினசரிக் காலை 6 மணி முதல் 8.30 மணிவரை காய்கறி வியாபாரம் செய்துவிட்டு 9 மணிக்குப் பள்ளிக்குப் போய்விடுகிறார் விண்ணரசி. சாயங்காலத்தைப் படிப்புக்காக ஒதுக்குகிறார்.
"எனக்கு இதுல எந்தக் கஷ்டமும் தெரியலை. அம்மா, அப்பாவுக்கு உதவியா இருக்கிறதையும் அக்கா, தங்கச்சிய படிக்க வைக்கிறதயும் சந்தோஷமா நினைக்கிறேன். படிப்பை நிறுத்தாமல் தொடர்றதும் குடும்பத்துக்கு ஆதரவா இருக்கிறதும் மனநிறைவும், தன்னம்பிக்கையும் தருது" எனத் தெளிவாகப் பேசுகிறார் விண்ணரசி.
புத்தகப் பையைச் சுமக்க வேண்டிய வயதில், அத்துடன் குடும்பப் பாரத்தையும் சுமக்கும் இந்த மாணவியின் தன்னம்பிக்கை, அவர் விற்கும் காய்கறிகளும் கீரையும் தரும் ஆரோக்கியத்தைவிடவும் மிகப் பெரிய வைட்டமினாக இருக்கிறது.
http://tamil.thehindu.com/
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கீரை விற்கும் பள்ளி மாணவி
பொறுப்பான பெண் வாழ்த்துகள் விண்ணரசி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கீரை விற்கும் பள்ளி மாணவி
இளமையில் வறுமை மிகப்பெரிய கொடுமை! அந்தந்த வயதில் கிடைக்க வேண்டியவை கிடைக்காது குடும்ப சுமையை தோளில் சுமக்கும் வலி நான் நன்குணர்வேன்.
பாவம் இந்தபெண்!
ஆனாலும் இந்த பெண்ணின் தாய் தகப்பன் மேல் கோபம் தான் வருகின்றது! பிறவியிலேயே வாய் பேச முடியாத நிலையான தொழில் இல்லா நிலையில் அவர்கள் எதை நம்பி அடுத்தடுத்து நான்கு பெண்குழந்தைகள் பெற்றெடுத்தார்கள்!
அவர்கள் குடும்ப சூழல் தெரிந்தது தானே! ஆசைக்கு ஒரு குழந்தை என திட்டமிட்டிருந்தால் இந்த வறுமையை சமாளித்திருக்க இயலுமே எனும் எண்ணம் வருகின்றது!
பாவம் இந்தபெண்!
ஆனாலும் இந்த பெண்ணின் தாய் தகப்பன் மேல் கோபம் தான் வருகின்றது! பிறவியிலேயே வாய் பேச முடியாத நிலையான தொழில் இல்லா நிலையில் அவர்கள் எதை நம்பி அடுத்தடுத்து நான்கு பெண்குழந்தைகள் பெற்றெடுத்தார்கள்!
அவர்கள் குடும்ப சூழல் தெரிந்தது தானே! ஆசைக்கு ஒரு குழந்தை என திட்டமிட்டிருந்தால் இந்த வறுமையை சமாளித்திருக்க இயலுமே எனும் எண்ணம் வருகின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» தூத்துக்குடியில் பள்ளி மாணவி பலாத்காரம்- எய்ட்ஸ் நோயாளி கைது
» பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்
» த்ரீ இன் ஒன் தையல் மிஷின் அரசு பள்ளி மாணவி அசத்தல்
» நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
» இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
» பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்
» த்ரீ இன் ஒன் தையல் மிஷின் அரசு பள்ளி மாணவி அசத்தல்
» நாக்பூரில் கற்பழித்து எரிக்கப்பட்ட 7-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
» இந்தியாவில் விற்கும் 85 சதவீத ஹெல்மெட்டுகள் 'டூப்ளிகேட்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|