Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
மரபணுச் சோதனை
Page 1 of 1
மரபணுச் சோதனை
மரபணுச் சோதனை ஏன்? எதற்கு? எப்படி?
புதிய உலகத்தைப் படைக்க முயலும் நவீன விஞ்ஞானத்தில் முக்கிய இடத்தை மரபியல்துறை (Genetics) பிடித்திருக்கிறது. புதிதாக உயிரினங்களை உருவாக் கவும் வழிவழியாக வருகிற நோய்களை அடியோடு களையவும் பல்வேறு ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகின் றன. கலப்பின தாவரங்கள், கலப்பின கால்நடைகள் என கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது மரபியல்துறை.
எதிர்காலத்தில் மரபியலின் தாக்கம் எப்படி இருக்கும்?
‘‘தாவரம், விலங்குகள், மனிதர்கள் என எந்த ஓர் உயிரினமும் எண்ணற்ற செல்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அந்த செல்களுக்குள் இருப்பவைதான்
ஜீன்கள். இன்னும் சொல்லப்போனால், அந்த செல்களாகவே இருப்பவைதான் ஜீன்கள். ஒரு உயிரினத்தின் குணத்தையும் ஆரோக்கியத்தையும் இந்த ஜீன்கள்தான் தீர்மானிக்கின்றன. ஜீன்களை பற்றிப் படிப்பதையும் ஆய்வு செய்வதையும்தான் மரபியல் (Genetics) என்று சொல்கிறோம்.’’
விளக்கத்துடன் ஆரம்பிக்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் மரபியல் துறைத் தலைவரும், பேராசிரியையுமான சந்தியா...
மரபியல் இன்று எந்த அளவுக்கு அவசியமானது?
‘‘நம்மைப் பற்றித் தீர்மானிக்கிற ஒரு செயல்திட்டம்தான் (Blue print) இந்த ஜீன்கள். ஜீன்கள் சரியான முறையில் இருந்தால் நாம் ஆரோக்கி யமாக இருப்போம். இதில் ஏதும் குறைபாடுகள் இருந்தால் பிரச்னைதான். இன்று மனிதர்களுக்கு இருக்கும் நோய்களில் 30 சதவிகிதம் ஜீன்
குறைபாடுகளால் ஏற்படுபவையே. இந்த நோய்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கும் போய்ச் சேர்கின்றன. இதைக் கண்டறிய மரபி யல் துறை உதவுகிறது. இதன் மூலம் பிரச்னை எங்கே இருக்கிறது என்று கண்டறிய முடியும்.’’
நோய்களுக்கான காரணங்களைக் கண்டறிந்த பிறகு குணப்படுத்திவிட முடியுமா?
‘‘18ம் நூற்றாண்டில் பிறந்த கிரிகர் மெண்டல் என்பவர்தான் மரபியலைக் கண்டுபிடித்தார். இத்தனை காலமாக எதனால் பிரச்னை வருகிறது என் பதே புரியாமல் இருந்தது. கிரிகர் மெண்டலின் ஆராய்ச்சிக்குப் பிறகு, ஜீன்கள்தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்று புரிந்திருக்கிறது. இந்த துறை இப்போதுதான் வளர்ந்து வருகிறது. அதனால், இந்த நோய்களை எப்படி குணப்படுத்துவது என்பது இன்னும் ஆராய்ச்சி அளவில்தான் இருக்கிறது. மரபியல் குறைபாடுகளைத் தீர்க்கும் வழி விரைவில் கண்டறியப்பட வேண்டும் என்றுதான் பலரும் போராடிக் கொண்டிருக்கிறோம்.’’
மரபியல் ரீதியாக வரும் நோய்களை ஒன்றும் செய்ய முடியாதா?
‘‘இன்றைய நிலவரப்படி இதனால்தான் நோய் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து, அதை சமாளிப்பதற்கான சிகிச்சை முறைகளையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிக் கொள்ள முடியும் என்பது ஆறுதல். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஜீன் குறைபாட்டால் ஒரு நோய் ஏற்பட்டிருக்கிறது என் றால், அதனால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படாமல் தவிர்க்க முடியும்.’’
அடுத்த தலைமுறைக்கு மரபியல் குறைபாடுகள் வராமல் தடுப்பதற்கு சிகிச்சை இருக்கிறதா?
‘‘சிகிச்சை இல்லை. ஆனால், தம்பதிகளில் இருவரில் ஒருவருக்கு ஏதேனும் பரம்பரை வியாதி இருந்தால் கர்ப்பமுற்ற 14 வாரத்துக்குள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையை Prenatal diagnosis என்று சொல்வோம். இதன்மூலம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு இருக்கிறதா என்பது தெரிந்துவிடும். பெற்றோர் விரும்பினால் அந்தக் குழந்தையைத் தவிர்ப்பதற்காக கருக்கலைப்பு செய்துகொள்ளலாம்.’’
இந்தக கருக்கலைப்பு
சட்டவிரோதமானதில்லையா?
‘‘உங்கள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஒரு குறைபாட்டோடு பிறக்கப் போகிறது... நீங்கள் விருப்பப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம், இல்லாவிட் டால் கருக்கலைப்பு செய்யலாம் என்று ஆலோசனையாகத்தான் ஜெனட்டிக்ஸ் பரிசோதனை செய்பவர்களும் டாக்டர்களும் சொல்வார்கள். ஆட்டி சம், டவுன் சிண்ட்ரோம் போன்ற குறைபாடு களோடு குழந்தைகள் பிறந்தால் அந்தக் குழந்தைகளை பராமரிப்பது பெற்றோர்களுக்கும் பெரிய போராட்டமாகத்தான் இருக்கும். கருணைக் கொலை செய்ய அனுமதி வேண்டும் என்று இப்போது சிலர் அரசிடம் மனு கொடுக்கிறார்கள். அது போன்றதுதான் இதுவும்!’’
அடிக்கடி செய்திகளில் மரபணு பரிசோதனை என்று வருகிறது. இதன் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியுமா?
‘‘ஒரு குற்றம் நடந்த பிறகு, சந்தேகப்படும் இடத்தில் கிடைத்த முடி, ரத்தம் போன்றவற்றிலிருந்து சந்தேகப்படும் நபர்களை டி.என்.ஏ. பரிசோதனை (Deoxyribonucleic Acid Test) என்ற மரபணு பரிசோதனை செய்து அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியும். பாலியல் குற்றங்களை நிரூபிப்பதிலும் டி.என்.ஏ. பரி சோதனை முக்கிய பங்கு வகிக்கிறது.’’
எதிர்காலத்தில் மரபியல் துறை எந்த அளவுக்கு மாற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
‘‘திருமணத்துக்கு பெண்ணோ, பையனோ பார்க்கும்போது படிப்பு, வேலை, சம்பளம், குடும்பம் போன்றவற்றுடன் எச்.ஐ.வி. டெஸ்ட் ரிப்போர்ட்டை யும் பார்க்க வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதுபோல், கர்ப்பமுற்ற காலத்தில் மற்ற பரிசோதனை செய்து கொள்வதோடு மரபியல் பரிசோதனையும் செய்து கொள்கிற விழிப்புணர்வு வர வேண்டும். மருத்துவமனைகளில் மரபியலுக்கு தனித்துறையும் சிறப்பு மருத்துவர்களும் வர வேண்டும்.’’
டி.என்.ஏ. பரிசோதனையின் மூலம் எப்படி இறந்தவர்களை அடையாளம் காண்கிறார்கள்?
‘‘இதற்கு இறந்தவரின் உடலிலிருந்து கொஞ்சம் திசுக்களும் எலும்பு மாதிரிகளும் தேவைப்படும். இறந்தவருடைய ரத்த சொந்தங்களிடமிருந்து ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இறுதியில், இரண்டு மரபணுக்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகளின் அடிப்படையில் அடையாளம் கூறுவார்கள்.’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2864
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» சோதனை வரும்போது…
» சோதனை - ஒரு பக்க கதை
» சோதனை வரும்போது…
» கைத்தொலைபேசியால் திருடனுக்கு வந்த சோதனை
» "ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு.
» சோதனை - ஒரு பக்க கதை
» சோதனை வரும்போது…
» கைத்தொலைபேசியால் திருடனுக்கு வந்த சோதனை
» "ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|