Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
துன்பம் தருதே தூசு!
3 posters
Page 1 of 1
துன்பம் தருதே தூசு!
‘நீயெல்லாம் எனக்கு தூசுடா’ என்று ஆக்ஷன் படங்களில் ஹீரோ பஞ்ச் பேசிக் கேட்டிருப்போம். ஆனால், அந்த தூசுதான் டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களுக்கு வில்லன். தூசுக்குப் பயந்து மூக்கை மூடும்படி கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு செல்பவர்களை அன்றாடம் பார்க்க நேர்கிறது. இந்த டஸ்ட் அலர்ஜி ஏன் வருகிறது? இதற்கு என்னதான் தீர்வு? விளக்குகிறார் நோய்த்தொற்று மருத்துவர் சுப்ரமணியன்.
‘‘தூசியை எதிர்கொள்ளும்போது இருமல், தும்மல், கண் எரிச்சல், மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாவதற்கு பெயர்தான் டஸ்ட் அலர்ஜி. இப்பிரச்னை உள்ளவர்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகள், கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள் மற்றும் அதிக அளவு தூசி வெளியாகும் பணியிடங்களுக்குச் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். டஸ்ட் அலர்ஜி உள்ளவர்களின் முன்னோர் எவருக்கேனும் இந்தப் பிரச்னை இருந்து
மரபணுக்கள் வழியாக அது தொடர்ந்திருக்கலாம். பிறப்பிலிருந்தே டஸ்ட் அலர்ஜிக்கான தன்மை உடலில் இருக்கும். அது எந்த வயதில் வேண்டுமானாலும் வெளிப்படலாம். இன்றைய சுற்றுச்சூழல் தூசிகள் நிறைந்து காணப்படுவதால் இந்த அலர்ஜி உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நல்ல வேளையாக, டஸ்ட் அலர்ஜி எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. இருமல், தும்மல், கண் எரிச்சல் போன்றவை வருவதால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும், விடுப்பு எடுக்க நேரிடும். வேலை நேர இழப்புதானே தவிர பயப்படும்படி எதுவும் இல்லை. ஆஸ்துமா, இளைப்பு தொந்தரவு உள்ளவர்களுக்கு டஸ்ட் அலர்ஜி இருந்தால், அத்தொந்தரவுகள் அதிகரிக்கக்கூடும்’’ என்கிறவர், டஸ்ட் அலர்ஜிக்கான தீர்வு குறித்துப் பேசினார்.
‘‘டஸ்ட் அலர்ஜியை முழுமையாகத் தீர்க்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த மாத்திரைகளும் ஸ்பிரேக்களும் இருக்கின்றன. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் இதற்கான முறையான நடவடிக்கை. முடிந்தவரை தூசி கிளம்பும் இடங்களுக்கு செல்லாமல் இருத்தல் நல்லது. அதையும் மீறி சென்றே ஆக வேண்டிய கட்டாயம் நேரிடும்போது, கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டும். நம் வசிப்பிடத்தில் தூசி தங்குவதற்கான வாய்ப்புகள் எவற்றில் இருக்கிறதோ, அவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். உதாரணமாக ஏ.சி. ஃபில்டரில் தூசி தேங்கும்... அது ஏசி காற்றோடு வெளியேறி தொந்தரவு ஏற்படுத்தும். வாரம் ஒரு முறை ஏசி ஃபில்டரை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். மெத்தை மற்றும் தலையணைகளில் அதிக அளவு தூசி தேங்க வாய்ப்பிருப்பதால், முறையாக பராமரித்தல் அவசியம்.
முக்கியமான ஒன்று... டஸ்ட் அலர்ஜி உள்ள எல்லோருக்கும் எல்லா தூசியாலும் அலர்ஜி ஏற்படாது. எந்தத் தூசியால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தவிர்த்து விடுதல் நல்லது’’ என்கிறார் சுப்ரமணியன். டஸ்ட் அலர்ஜியை முழுமையாகத் தீர்க்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த மாத்திரைகளும் ஸ்பிரேக்களும் இருக்கின்றன. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் இதற்கான முறையான நடவடிக்கை...
தேவை தூசு கட்டுப்பாட்டு கருவி!
பஞ்சாலைப் பகுதிகளில் பருத்தியிலிருந்து வரும் நெப்த் என்னும் தூசு பெருவாரியாக வெளியாகிறது. இதனால்தான் பஞ்சாலைகள் அதிகம் உள்ள திருப்பூரை ‘தூசு நகரம்’ என்றே சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். பஞ்சாலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் மர இலைகளில் கூட தூசு படிந்திருப்பதைக் காண முடியும். இந்தத் தூசு ஆஸ்துமா ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. போர்வெல் போடும் இடங்கள், கல்குவாரிகள், கிரஷர்களில் இருந்து அதிகளவில் மண் தூசு வெளியாகிறது, இந்தத் தூசுகள் வளிமண்டலத்தைச் சென்று சேர்ந்து புவிஈர்ப்பு விசை காரணமாகக் கீழே வந்தடைகிறது.
இந்தத் தூசுகளை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் மேலைநாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் பஞ்சாலைகள் போன்ற தூசு அதிகம் வெளியேறும் தொழிற்சாலைகள் நம் நாட்டில்தான் அதிக அளவில் இருக்கின்றன. இதுபோன்ற தொழில் மூலம் லாபம் ஈட்ட நினைக்கும் முதலாளிகள், செலவு செய்ய நேரிடும் என்பதற்காக தூசியைக் கட்டுப் படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வாகனங்கள் மற்றும் இயந்திரங்களில் ஒலி மற்றும் புகைத் தடுப்பான்கள் பொருத்துவது போன்று தூசு கட்டுப்பாட்டு கருவியும் பொருத்த வலியுறுத்தப்பட வேண்டும். பஞ்சாலைகள், குவாரி மற்றும் கிரஷர் என தூசு அதிகம் வெளியாகும் பகுதியைச் சுற்றிலும் சவுக்கு மரங்களை அதிக அளவில் நட்டு வளர்த்தல் நல்ல ஒரு தீர்வாக அமையும். தேக்கு மரத்தின் இலைகள் தூசுகளை வடிகட்டும் பண்புடையவை.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3005#
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: துன்பம் தருதே தூசு!
)(
-
தலைப்பில் துசு என உள்ளதை தூசு
என திருத்தலாம்..
-
-
தலைப்பில் துசு என உள்ளதை தூசு
என திருத்தலாம்..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: துன்பம் தருதே தூசு!
எங்க வீட்டில் அனைவருக்குமே இந்த டஸ்ட் அலர்ஜி பிரச்சனை உண்டு. அதனால் வீட்டை சூழலை எப்போதும் சுத்தமாய் வைத்திருப்பேன்!
நாய் பூனைகளின் முடி, பறவைகள் இறகு, கஜூ கச்சான் போன்றவை மகளுக்கும் மகனுக்கும் அலர்ஜி!
பிரபாவுக்கு பூக்களில் வரு மகரந்தம் அலர்ஜி. பூக்கும் காலங்களில் ரெம்ப சிரமப்படுவார். இப்போது பரவாயில்லை.
எனக்கு தங்கம் தவிர்த்து உடலில் எது அணிந்தாலும் அலர்ஜி.
நாய் பூனைகளின் முடி, பறவைகள் இறகு, கஜூ கச்சான் போன்றவை மகளுக்கும் மகனுக்கும் அலர்ஜி!
பிரபாவுக்கு பூக்களில் வரு மகரந்தம் அலர்ஜி. பூக்கும் காலங்களில் ரெம்ப சிரமப்படுவார். இப்போது பரவாயில்லை.
எனக்கு தங்கம் தவிர்த்து உடலில் எது அணிந்தாலும் அலர்ஜி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» திமிறல் துன்பம் தரும்..!
» பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள்
» பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள்
» துன்பம் வரும் போதும் சிரிங்க!
» துன்பம் வந்துவிடுமோ என்னும் அச்சம்
» பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள்
» பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள்
» துன்பம் வரும் போதும் சிரிங்க!
» துன்பம் வந்துவிடுமோ என்னும் அச்சம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|