Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?
3 posters
Page 1 of 1
இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?
உடலியல் பற்றி கொஞ்சம் நுட்பமாக ஆராய ஆரம்பித்தால் பல ஆச்சரியங்கள் நமக்குக் காத்திருக்கும். ஒவ்வொரு உடல் உறுப்பும் எத்தனை புத்திசாலித்தனமாக செயல்படுகிறது என்பதும், தன்னைத் தற்காத்துக் கொள்கிறது என்பதும் முடிவில்லாத மகா மெகா ஆச்சரியம். சளித்தொல்லை என்று நாம் சாதாரணமாக நினைத்தாலும் உடலியலில் அதன் பங்கு எத்தனை முக்கியமானது என்பது நுரையீரல் மருத்துவர் திருப்பதியிடம் பேசியபோது இன்னும் தெளிவாகப் புரிந்தது.
‘‘நம் உடலில் சுவாசத்துக்கு என்று காற்றுக்குழாய்களும் உணவு செல்வதற்கு என்று உணவுக்குழாய்களும் இருக்கின்றன. காற்று, உணவு இரண்டும் சுலபமாக சென்று வருவதற்கு ஒரு ஈரத்தன்மை இந்தக் குழாய்களுக்குத் தேவை. அந்த ஈரத் தன்மையை அளிக்கும் வேலையையே சளி (Sputum) செய்கிறது. நாம் நினைப்பது போல் அது உடலுக்குத் தேவையில்லாதது அல்ல. இது மட்டும் அல்ல; காற்றில் இருக்கும் வைரஸ், பாக்டீரியா, தூசிகள் ஆகியவை சுவாசத்தின் மூலமோ, உணவின் மூலமோ உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கும் வடிகட்டியாகவும் சளி செயல்படுகிறது’’ என்று சளியின் முக்கியத்துவத்தை விளக்க ஆரம்பிக்கிறார் திருப்பதி.
பருவகாலத்தில்தான் சளி உண்டாகிறதா?
‘‘பொதுவாக மழை காலத்திலோ, பனிகாலத்திலோதான் சளி ஏற்படும் என்றும் நினைப்பார்கள். ஆனால், காற்றுக் குழாயிலும் உணவுக்குழாயிலும் இருக்கும் மியூகஸ் க்ளாண்ட்ஸ் (Mucus glands) வருடம் முழுவதும் சளியை உடலில் சுரந்து கொண்டேதான் இருக்கும். இல்லாவிட்டால் உணவு, சுவாசம் இயல்பாக நடைபெறாது. சளியின் அளவு அதிகமாகும் போதுதான் நமக்குத் தெரிகிறது.’’
சளி எப்போது பிரச்னைக்குரியதாகிறது?
‘‘நாளொன்றுக்கு 150 மி.லி. சளி வெளியேறுவது இயல்பானது. காலையில் எழுந்தவுடன் தொண்டை கட்டினாற்போல் இருப்பதும் சாதாரணமானதுதான். பருவகால மாற்றங்களால் ஒருநாள், இரண்டு நாள் சளி இருப்பதிலும் பயப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனால், வெளியேறும் சளியின் அளவு 150 மி.லி.க்கும் அதிகமாக இருந்தால் அது பிரச்னைக்குரியது. இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தாலும் அதை உடனடியாக கவனிக்க வேண்டும். இது காசநோயின் அடையாளமாக இருக்கும். அதேபோல் சளியின் நிறம் மாறுவதை வைத்தும் சில நோய்களைக் கண்டறிய முடியும். வெள்ளை, சாம்பல் நிறம், தண்ணீர் போன்ற நிறங்களில் இருந்தால் அது வழக்கமானது. ஆனால், அடர் பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருந்தால் அது நோயின் அடையாளமாக இருக்கும். உடலில் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால்தான் பச்சை நிறத்திலோ மஞ்சள் நிறத்திலோ மாறும். இதுபோல் நிறம் மாறும் போது காய்ச்சலுடன் கூடிய சளி உண்டாவதை வைத்து உஷாராகிவிடலாம்.’’
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?
என்னென்ன நோய்களைக் கண்டுபிடிக்க முடியும்?
‘‘பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் உடலில் ஏற்பட்டிருந்தால் சளி பரிசோதனையின் மூலம் பார்க்க முடியும். முக்கியமாக, காசநோயை எளிதாகக் கண்டு பிடிக்க உதவுவது சளி பரிசோதனைதான். முற்றிய காசநோய் என்பதைக் கண்டுபிடிக்க நிறைய பரிசோதனைகள் இருந்தாலும், அவைகளில் எளிதானது சளி பரிசோதனை. குறிப்பாக, ‘டி.பி. கல்ச்சர்’ என்ற செல் வளர்ப்பு மூலம் காசநோயைக் கண்டுபிடிக்க மூன்று மாதங்களாவது ஆகும். ஆனால், நான்கு மணி நேரங்களில் சளி பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம். சளியில் ரத்தம் கலந்து வருவது காசநோய், புற்றுநோய் போன்ற பெரிய பிரச்னைகளின் அடையாளமாக இருக்கும். சளியில் துர்நாற்றம் இருந்தாலும் உடலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கவும் சளி பரிசோதனை உதவுகிறது. இதை ‘ஸ்பூடம் சைட்டாலஜி’ என்பார்கள். அதிகபட்சமாக 300 ரூபாயில் சளி பரிசோதனையை செய்துவிடுவார்கள்.’’
இருமல் மருந்தைப் பயன்படுத்தலாமா?
‘‘சிலருக்கு சளி வெளியேற வேண்டியிருக்கும். சிலருக்கு அடங்க வேண்டியிருக்கும், சிலருக்கு வறட்டு இருமலாக இருக்கும். அதனால், சளி இருக்கிறது என்று உடனடியாக ஒரு இருமல் மருந்தை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. என்ன வகையான இருமல் என்பதைத் தீர்மானிக்க மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.’’
சளி பரிசோதனையின் முக்கியத்துவம் என்ன?
‘‘உடனடியாக இதயம் செயலிழந்து போகிறவர்களுக்கு சோப் நுரை போல வாயிலிருந்து சளி வெளிவரும். இதை ‘பல்மனரி எடிமா’ என்று சொல்வோம். இது ஆபத்தானது என்பதால் உடனடியாக கவனிக்க வேண்டும். சளியில் ரத்தம் வருவதும் ஆபத்தானது என்பதால் உடனடியாக கவனிக்க வேண்டும். இதுதவிர நாள்பட்ட இருமல் உள்ளவர்கள், புகைப்பழக்கம் இருப்பவர்கள், காசநோயாளிகள், காசநோய் என்பது எளிதில் மற்றவருக்குத் தொற்றக் கூடியது என்பதால் காசநோயாளிகளுக்கு அருகில் இருப்பவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், வயதானவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது!’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3236
‘‘பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் உடலில் ஏற்பட்டிருந்தால் சளி பரிசோதனையின் மூலம் பார்க்க முடியும். முக்கியமாக, காசநோயை எளிதாகக் கண்டு பிடிக்க உதவுவது சளி பரிசோதனைதான். முற்றிய காசநோய் என்பதைக் கண்டுபிடிக்க நிறைய பரிசோதனைகள் இருந்தாலும், அவைகளில் எளிதானது சளி பரிசோதனை. குறிப்பாக, ‘டி.பி. கல்ச்சர்’ என்ற செல் வளர்ப்பு மூலம் காசநோயைக் கண்டுபிடிக்க மூன்று மாதங்களாவது ஆகும். ஆனால், நான்கு மணி நேரங்களில் சளி பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம். சளியில் ரத்தம் கலந்து வருவது காசநோய், புற்றுநோய் போன்ற பெரிய பிரச்னைகளின் அடையாளமாக இருக்கும். சளியில் துர்நாற்றம் இருந்தாலும் உடலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கவும் சளி பரிசோதனை உதவுகிறது. இதை ‘ஸ்பூடம் சைட்டாலஜி’ என்பார்கள். அதிகபட்சமாக 300 ரூபாயில் சளி பரிசோதனையை செய்துவிடுவார்கள்.’’
இருமல் மருந்தைப் பயன்படுத்தலாமா?
‘‘சிலருக்கு சளி வெளியேற வேண்டியிருக்கும். சிலருக்கு அடங்க வேண்டியிருக்கும், சிலருக்கு வறட்டு இருமலாக இருக்கும். அதனால், சளி இருக்கிறது என்று உடனடியாக ஒரு இருமல் மருந்தை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. என்ன வகையான இருமல் என்பதைத் தீர்மானிக்க மருத்துவரின் ஆலோசனை முக்கியம்.’’
சளி பரிசோதனையின் முக்கியத்துவம் என்ன?
‘‘உடனடியாக இதயம் செயலிழந்து போகிறவர்களுக்கு சோப் நுரை போல வாயிலிருந்து சளி வெளிவரும். இதை ‘பல்மனரி எடிமா’ என்று சொல்வோம். இது ஆபத்தானது என்பதால் உடனடியாக கவனிக்க வேண்டும். சளியில் ரத்தம் வருவதும் ஆபத்தானது என்பதால் உடனடியாக கவனிக்க வேண்டும். இதுதவிர நாள்பட்ட இருமல் உள்ளவர்கள், புகைப்பழக்கம் இருப்பவர்கள், காசநோயாளிகள், காசநோய் என்பது எளிதில் மற்றவருக்குத் தொற்றக் கூடியது என்பதால் காசநோயாளிகளுக்கு அருகில் இருப்பவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், வயதானவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது!’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3236
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?
இருமல் வந்தாலும் கவனமா இருக்கணும் தான்.
எனக்கும் முன்னாடி மாதக்கணக்கில் இருமல் இருக்கும். ஹோட்டல் திறந்த புதிதில் இரண்டு மாதம் வரை இருமி இருமி நெஞ்சுக்கு கீழே ஒருவகை பிடிப்பு உருவாகி குனியவும் நிமிரவும் முடியாமல் ஆண்டியாபிட்டிக் மாத்திரைகள் மாதக்கணக்கில் எடுத்து தான் சுகமாச்சு.
இருமல் வந்தால் தூக்கமும் போயிரும். நெஞ்சும் வலிக்கும்.
எனக்கும் முன்னாடி மாதக்கணக்கில் இருமல் இருக்கும். ஹோட்டல் திறந்த புதிதில் இரண்டு மாதம் வரை இருமி இருமி நெஞ்சுக்கு கீழே ஒருவகை பிடிப்பு உருவாகி குனியவும் நிமிரவும் முடியாமல் ஆண்டியாபிட்டிக் மாத்திரைகள் மாதக்கணக்கில் எடுத்து தான் சுகமாச்சு.
இருமல் வந்தால் தூக்கமும் போயிரும். நெஞ்சும் வலிக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?
அவசியமான பகிர்வு நன்றி
அக்காவிடமும் சொல்லியிருந்தேன் எனது வீட்டில் இருமல் பிரச்சினையினால் அவதிப்பபடுகிறார்கள்
அக்காவிடமும் சொல்லியிருந்தேன் எனது வீட்டில் இருமல் பிரச்சினையினால் அவதிப்பபடுகிறார்கள்
Re: இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?
ஆமாம்! சொன்னீர்கள்! இப்போது எப்படி இருக்கின்றார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இரண்டு வாரங்கள் தாண்டியும் இருமலா?
இப்போது கொஞ்சம் பறவாயில்லைNisha wrote:ஆமாம்! சொன்னீர்கள்! இப்போது எப்படி இருக்கின்றார்?
Similar topics
» தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானது...
» குழந்தைங்களுக்கு இருமலா? மருந்து தராதீங்க!
» குழந்தைங்களுக்கு இருமலா? மருந்து தராதீங்க!
» வருமான வரி – இரண்டு வகை!
» இரண்டு தேவதைகள் .....
» குழந்தைங்களுக்கு இருமலா? மருந்து தராதீங்க!
» குழந்தைங்களுக்கு இருமலா? மருந்து தராதீங்க!
» வருமான வரி – இரண்டு வகை!
» இரண்டு தேவதைகள் .....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|