சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை Khan11

முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை

2 posters

Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை Empty முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 14:27

முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை Ht3236
சிறுவர்கள் இருமலுடன் அவதிப்படும் போது பெரியவர்கள் ஒரு வேரையும் அதனுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சிதைத்து வாயில் அடக்கி கொள் என்பார்கள். அதை சுவைக்க காரமும் இனிப்பும் சேர்ந்து நம்மை அதை விரும்பச்செய்யும். வாயில் அடக்கி சாற்றை உள்ளுக்கு விழுங்குவது என்ன என்றே தெரியாமல் சாப்பிட்டு இருமலை போக்கிக்கொள்வோம். இன்றைக்கும் பல கிராமங்களில் இதை நாம் பார்க்க முடியும். அந்த வேருதான் அரத்தைகிழங்கு. அரத்தையானது இஞ்சி இனத்தை சேர்ந்த சிறு செடியினம். பார்ப்பதற்கு மஞ்சள் செடிபோலவே காட்சிதரும். 5 அடி உயரம் வளரும். 

குத்தாக பக்க இலைகள் விட்டு இருக்கும். அழகிய பூக்களும், சிவந்த பழங்களும் உடையது. அரத்தையின் மணம் குருமிளகு வாசனை போல் இருக்கும். கிழங்குகளுக்காக பயிரிடப்படுகிறது. கிழங்கு கடினத்தன்மை கொண்டது. இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரு இனம் உண்டு. பெரும்பாலும் கோழையகற்றவும், பசி மிகுத்தல் மருந்தாகவும் பயன்படுகிறது. நெஞ்சுக்கோழை, ஈளை, மார்புநோய், வீக்கம், பல்நோய், மார்புநோய், நாள்பட்ட ஐயம், கரப்பான், வாதசோணிதம், போக்கி பசியை உண்டாக்கும். மூட்டுவாத வீக்கம், வயிற்றுப்புண், தொண்டைப்புண் முதலியவற்றை குணப்படுத்தும்.

5 வயது முதல் 8 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு ஏற்படும் சளி மற்றும் பித்த நோய்கள், காய்ச்சல், சீதளக்காய்ச்சல் முதலியவற்றுக்கு 100கிராம் சிற்றரத்தையை பொடியாக்கி அதனுடன் 100கிராம் பனங்கற்கண்டை பொடித்து போட்டு இதில் சிறிதளவு வாயில் போட்டு சுவைத்து விழுங்கவேண்டும். அதன் பிறகு இளம் சூடான பசும்பால் 200 மிலி அருந்தினால் நோய்கள் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தம், கபம், கணை முதலியவற்றுக்கு சிறிய அளவிலான சிற்றரத்தை ஆமணக்கெண்ணெயில் நனைத்து விளக்கில் சுட்டு கரியாக்கி அதை எடுத்து தேனில் குழைத்து மிகச்சிறிய அளவில் கொடுத்தால் உடனடி குணம் ஏற்படும். 

சிற்றரத்தைப்பொடியை 2முதல் 4கிராம் வரை தேனுடன் கலந்து கொடுத்து வந்தாலும், சிற்றரத்தையை சிதைத்து 30மிலி வெந்நீரில்போட்டு 3 மணிநேரம் கழித்து வடிகட்டி 20 மிலி முதல் 45மிலி வரை தேன்சிறிது கலந்து கொடுத்தாலும் முன்சொன்ன நோய்கள் அனைத்தும் நீங்கும். சிற்றரத்தை பொடியை 1 கிராம் அளவில் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டுவர சுரம், சளி, ஈளை, அருமல், தொண்டைப்புண், நீர்க்கோர்வை, வாயு பீனிசம் தீரும். அம்மியில் அல்லது சிமெண்ட் தரையில் இஞ்சிசாறு விட்டு அதில் சிற்றரத்தையை தேய்த்தால் அரத்தை கரைந்து மென்மையாக விழுது வரும். அதனுடன் மேலும் சிறிது இஞ்சிசாறு கலந்து சூடாக்கி தாங்கும் பதத்தில் கீழ் முதுகு தண்டுபகுதியில் வலிக்குமிடத்தில் பற்றுபோட்டால் முதுகு வலி தீரும்.

ஒரு துண்டு சிற்றரத்தையை வாயிலிட்டு சுவைத்துவர தொண்டையிற்கட்டும் கோழை வாந்தி இருமல் தணியும். அதிமதுரம், தாளிசம், திப்பிலி, சிற்றரத்தை வகைக்கு 10 கிராம் அளவில் எடுத்து அம்மியில் தண்ணீர் விட்டு அரைத்து 75மிலி தண்ணீரில் கலக்கி பொங்கிவரும்வரை அடுப்பில் வைத்து ஆறியபிறகு தேன் கலந்துசாப்பிட இருமல், கோழைகட்டு, குத்திருமல், தலைவலி, சீதளம், காய்ச்சல் முதலியவை குணமாகும். வாயுகோளாறுகள், தொடர் இருமல், அடிக்கடி ஏற்படும் தலைவலி, வாந்தி, பித்த மயக்கம், சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டால் சிற்றரத்தை எடுத்து நசுக்கி 15கிராம் அளவு எடுத்து கொள்ளவேண்டும். 200மிலி தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைத்து ஆறியபிறகு வடிக்கட்டி அதனுடன் 50கிராம் கற்கண்டை பொடித்து போட்டு 50மிலி அளவில் குடித்து வந்தால் நோய் தீரும்.

அழலோடு உண்டாகும் கோழைகளுக்கு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடவேண்டும். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கப, வாயு பித்த நோய்கள் அனைத்திற்கும் சிற்றரத்தையை சுட்டு தேனில் இழைத்து தாய்பாலில் கலந்து கொடுக்கவேண்டும். இது குறித்து தேரையர் கூறும்போது,

இதேபோல் பேரரத்தையும் மருத்துவ குணம் வாய்ந்ததுதான். வளிநோய், உடல்வலி, புறவலி, அழலைப்பற்றி ஐயசுரம், தலையேற்றம், சூதகவலி, நஞ்சுகளை நீக்கும் ஆற்றல் கொண்டது. 
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3246


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை Empty Re: முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை

Post by பானுஷபானா Thu 29 Jan 2015 - 15:33

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum