Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம்.
2 posters
Page 1 of 1
செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம்.
செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம்.
சிறுகதை!
ஒரு ஊரில்
ஒரு செல்வந்தர்
இருந்தார்
அவர்
நல்ல
அறிஞரும்
கூட,
தனக்கு மரணம்
நெருங்குவதாக
உணர்ந்தார்.
தன்
மகனை அருகாமையில்
அழைத்தார்.
மரண
சாசனம் போல ஒன்றைச் சொன்னார் : என்
அருமை மகனே, விரைவில் நான் உங்கள்
அனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன்.
என்னுடலைக்
குளிப்பாட்டி சடலத்துணி சுற்றுவீர்கள்.அப்போது என்னுடைய
ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?”
என்று கேட்டார்.
என்னவென்று சொல்லுங்கள் தந்தையே என்றான்
மகன். அறிஞர் கூறினார் : என் சடலம் அதற்குரிய
துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய
பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில்
அணிவித்துவிடு. இதுதான் என் எளிய
கோரிக்கை” என்றார். ஊரில் மிகப் பெரும்
செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன
இது விசித்திரமான
கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும்,
எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக்
கொண்டான்.
அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன்
சொத்துகளையும், மனைவி மக்களையும்
விட்டுவிட்டு மௌத்தாகி போனார்.
அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப
உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர். உடல்
குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில்
சுற்றப்படும் நேரம் நெருங்கியது.
அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள்
நினைவுக்கு வந்தது.
மெல்ல எழுந்து, குளிப்பாட்டியவரிடம்
சென்று தந்தையின் ஒரு காலுறையைக்
கொடுத்து “இதனை என் தந்தையின் கால்களில்
அணிவியுங்கள்; இதுவே அவரின்
இறுதி விருப்பமாகும் என்று கூறினான்.
முடியாது,
முடியவே முடியாது என்று மறுத்தார்
குளிப்பாட்டும் பணியாளர். இல்லை, இது என்
தந்தையின் ஆசை, நீங்கள் செய்துதான்
ஆகவேண்டும் என்று சொல்லிப் பார்த்தான். ஆனால்
அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை.
இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை,
எனவே வாய்ப்பில்லை என்றார் உறுதியாக…
மகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான்.
அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். நான்
சொன்னது, சொன்னது தான். வேண்டுமானால், நீ
மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக்
கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான்
அவர்களும் சொல்வார்கள் என்றார்.
அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில்
அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக்
கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள்.
ஆமாம்! ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்!
இக்களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த
சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த
மகனை நெருங்கினார். தம்பி, உன் தகப்பனார்
அவரது சடலம் துணியிடும் வேளையில்
உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற
நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம்
தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம்
இதுவென்று நினைக்கிறேன்
என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம்
கொடுத்தார்.
இறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர்.
தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப்
படித்தான் மகன். அதில்
பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. என் மகனே…
அனைத்து செல்வங்களையும்
விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என்
நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய
சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய
காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன்
கொண்டு செல்ல முடியவில்லை; நாளை இந்த
நிலை உனக்கும் வரலாம்.
இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும்
இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை,
இந்தப் பொருட்களை நீ நேர்வழியில் ஈட்டி,
நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற
அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த
அருள்வளம் தான் மறு உலகிலும் உதவும்.
ஆகவே, இந்தச் செல்வங்களையும்,
சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின்
வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும்
உணவாகும் வகையில் செலவிடு.
அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம்
பெற்றவனாக ஆவாய்!” என்று எழுதியிருந்தது.
கடிதத்தை படித்த அந்த நிமிடம் உள்ளத்தில்
பெருகியிருந்த ஆணவம், மமதை சடசடவென
எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வு.
கண்களில் நீர் கோர்க்க, தந்தையின்
சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான்
மகன்.்
முகநூல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம்.
முன்பும் படித்திருந்தேன் பயனுள்ளதும் கூட நன்றி பகிர்ந்தமைக்கு..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அடிமை சாசனம்.
» குடிமக்கள் சாசனம்: ஹசாரே குழு கோரிக்கை
» பிரிட்டனின் நான்காவது செல்வந்தர் தன் பாதி சொத்தை நன்கொடையாக வழங்க உறுதி
» வாழ் நாள் முழுவதும் வத்தாளைக்கிழங்கையும் வெள்ளை அரிசிச் சோற்றையும் உண்ட பெரும் செல்வந்தர்
» அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….
» குடிமக்கள் சாசனம்: ஹசாரே குழு கோரிக்கை
» பிரிட்டனின் நான்காவது செல்வந்தர் தன் பாதி சொத்தை நன்கொடையாக வழங்க உறுதி
» வாழ் நாள் முழுவதும் வத்தாளைக்கிழங்கையும் வெள்ளை அரிசிச் சோற்றையும் உண்ட பெரும் செல்வந்தர்
» அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|