சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை) Khan11

தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை)

3 posters

Go down

தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை) Empty தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை)

Post by சே.குமார் Sun 15 Mar 2015 - 19:51

கோதரர் ரூபன் மற்றும் திரு.யாழ்பாவாணன் இணைந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதை, இதை இங்கு பதியலாமா என்று யோசித்திருந்த வேளையில் இரண்டாம் இடம் பெற்ற திருமதி. சரஸ்வதி ராஜேந்திரன் அம்மா அவர்கள் தனது தளமான இலட்சிய அம்புகளில் பகிர்ந்திருந்தார். கொஞ்சம் வேலைப்பளுவின் காரணமாக எதுவும் எழுதவில்லை... மற்ற பதிவர்களின் பதிவுகளையும் படிக்கவில்லை... என்ற நிலையில் என்னை மறக்காமல் இருக்க இங்கு பகிர்கிறேன்.


சரஸ்வதி ராஜேந்திரன் அம்மா அவர்களின் கதை படிக்க "இங்கு"  சொடுக்கவும்.
-------------------------



தீபாவளிக்கு முதல் நாள் தனது நண்பர்களுடன் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தான் ஷங்கர். போதை ஏறவும் “மாப்ள பத்தாப்பு வரைக்கும் என்னோட படிச்சாடா... இந்தா இப்ப காலேசுல ஒண்ணாத்தான்டா படிக்கிறோம்... எத்தனை தடவை லவ்வைச் சொல்லியிருப்பேன்... எனக்கு எந்தப் பதிலும் சொல்லாம என்னை வெறுப்பேத்துற மாதிரி அந்த முத்துப்பய கூட சிரிச்சுச்சிரிச்சு பேசுறாடா..."

"விடு மாப்ள இந்த பொட்டச்சிங்களே அப்படித்தான்... அழகாயிருந்தா அவளுகளுக்குப் பிடிக்காது...." வாங்கிக் கொடுத்த சரக்குக்காக பேசினான் சுமன்.

அவர்களின் பேச்சில் அவளை வறுத்தெடுத்தார்கள். முடிவில் அவளது வீட்டுக்குப்போய் காதலிக்கிறாயா இல்லையான்னு கேப்பதென முடிவெடுத்தார்கள்.

"டேய்... ஓவராக் குடிச்சிட்டீங்க... எதாயிருந்தாலும் அவ காலேசுக்கு வரும்போது பேசிக்கலாம்... இந்த நேரத்துல ஒரு பொண்ணு வீட்டுக்குப்போயி கத்துறது நல்லதில்லை... அதுவுமில்லாம விடிஞ்சா தீபாவளி, ரெண்டு பேரும் ஒரே தெருவுல இருக்கீங்க... அங்கபோயி எல்லாரு முன்னாலயும் கேவலப்படணுமா? "  பீர் மட்டும் குடித்த ஆல்பர்ட் நிதானமாகப் பேசினான்.

"ஆமா... சாமியார் சொல்லிட்டாருடா... இவன் தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான்... எப்ப பாரு அட்வைஸ்... “ என்று பாண்டி சொல்ல, எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.

"இல்லடா அவன் சொல்றதையும் யோசிக்கணும்...  வேற ஏதாச்சும் ஐடியா சொல்லுங்கடா..." என்ற ஷங்கர் சிகரெட்டை பற்ற வைத்தான்.

அதை வாங்கி இழுத்தபடி "அவ மொபைல் நம்பர் இருக்குல்ல... அதுல கூப்பிட்டு பேசுவோம்டா..." என்றான் சுமன்.

"மாப்ள... செல் நம்பர் எதுக்குடா... வீட்டு நம்பரே இருக்கு... இந்தா பேசு..."

"இப்ப நான் சொன்னா நீங்க கேக்குற நிலமையில இல்லை... உன்னோட போனில் இருந்து பேசி ஏதாவது பிரச்சினையாகி போலீசுக்குப் போனா டிரேஸ் பண்ணி வீட்ல வந்து நிப்பானுக... பேசு.. எதாவது லோக்கல் பூத்ல இருந்து பேசு..." என்றான் ஆல்பர்ட்

"மாப்ள... மாமூ சொல்றதுதான் சரி...? வாடா காயின்போன்ல பேசுவோம்..."

"நீ பேச வேணாம்... நான் பேசுறேன்..." என்றான் சுமன்.

எதிர்முனையில் கரகரப்பாய் ஒரு ஆண் குரல்.

"தீபாவைக் கூப்பிடுங்க..."

"நீங்க...?"

"அவ பிரண்ட்ஸ்..."

"இந்த நேரத்துல பிரண்ட்ஸ்க்கு என்ன வேலை...?"

"என்னய்யா நீ... அவகிட்ட ஒண்ணு கேக்கணும்.. கூப்பிடுன்னா கூப்பிடுவியா... கிராஸ்கேள்வி கேக்குறே...?" உள்ளே போயிருந்த சரக்கு வேலைசெய்தது.

"ஏய் எவன்டா நீ... போலீசுல புடிச்சிக்கொடுத்துருவேன்..."

"என்ன மிரட்டுறே... கோத்தா நேர்ல வந்தேன்... மவனே பொழந்துருவேன்...?"

‘டேய் வேணான்டா’ என சைகைகாட்டிய ஷங்கரை அடக்கிய சுமன் " போ... போலீசுக்கு போ யாருக்கு கேவலம்... அங்க வந்து இவன் எல்லாம் பண்ணிட்டான் வேணுமின்னா செக்கப் பண்ணச் சொல்லுங்கன்னு சொன்னா... யாருக்குய்யா கேவலம்...?. முதல்ல உம்பொண்ணைக்  கேளு..." கத்திவிட்டு போனை வைத்தான்.

"டேய் என்னடா இப்படி பேசிட்டே...?“

"அந்தாளு ரொம்பப்பேசுறான்... என்ன நெனச்சிக்கிட்டான்... இப்ப மககிட்ட நோண்டிநோண்டிக் கேப்பான்... காலேசுல அவகிட்ட நல்லவன் மாதிரி பேசி கவுத்துடலாம்."

தீபா வீட்டில் எழுந்த அழுகுரலோடு விடிந்தது தீபாவளிக்காலை. தெருவே அங்குதான் நின்றது. ‘ராத்திரி யாரோ இவளைப்பத்தி போனில் தப்பாப்பேசியிருக்காங்க... உடனே பெத்தவங்க அவளைப்போட்டு டார்ச்சர் பண்ணி யாருடி அவன்... அவன்கூட படுத்தது உண்மையான்னு கேட்டு அடிச்சிருக்காங்க... மானஸ்தி பொறுக்கமுடியாம தூக்கை மாட்டிக்கிட்டா... எந்தப் பொறம்போக்கோ தண்ணியப்போட்டுட்டுப் பேசி, ஒரு வயசுப்புள்ளையோட வாழ்க்கையை அழிச்சிட்டான்... அந்த பொறம்போக்கு நல்லாவே இருக்கமாட்டான்... வெளங்காமப் போயிருவான்...’ என தெருவாசிகள் பேசிச்செல்ல, ஷங்கர் இடிந்து போய் உக்கார்ந்து விட்டான்.


‘இவன் வீட்டுக்கு ஒரே பையன்.. எங்க தெருவுல ஒரு புள்ளையை விரும்பியிருக்கான்... அவளை எவனோ ஒருத்தன் கேவலமாப் பேச தற்கொலை பண்ணிக்கிட்டா... அன்னைக்கு பித்துப்பிடிச்ச மாதிரி ஆனவந்தான் இன்னும் தெளியலை... பைத்தியமாயிட்டான்.  அந்த வருஷத் தீபாவளி ரெண்டு குடும்பத்தோட வாழ்க்கையை புரட்டிப் போட்டிருச்சு... அத்தோட அவங்க சந்தோஷமும் போயிருச்சு...’ என அவனைக் கடந்த இரண்டு பெண்கள் பேசிக்கொண்டுபோக, எதையோ பார்த்துச் சிரித்தபடி தலையைச் சொறிந்துகொண்டு வானத்தைப் பார்த்துச் சிரித்தவனை அவனின் அம்மா வீட்டுக்குள் இழுத்துச்சென்றாள். 
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை) Empty Re: தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை)

Post by நண்பன் Mon 16 Mar 2015 - 8:24

காதல் இனித்தது போதை கசத்தது கதை அருமை ஆனால் கதையாக இருந்தாலும் மது நாட்டுக்கும் கேடு வீட்டுக்கும் கேடு என்பதையும் இந்தக் கதை உணர வைக்கிறது. 

அன்று மட்டும் மது அருந்தாத நிலையில் நிதானமாக பேசி இருந்தால் யாருக்கும் எந்தப்பிரச்சினையும் இருந்திருக்காது தீபாவளியும் சந்தோசமாக கொண்டாடி இருக்கலாம் கதைதானே என்று விட முடிய வில்லை 

சின்னதாக ஒரு பிலிம் பார்த்த உணர்வு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை) Empty Re: தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை)

Post by Nisha Mon 16 Mar 2015 - 9:21

ஹைய்யோ!

விளையாட்டு வினையாகிப்போனதே! குடி மதியை மயக்கி உயிரை எடுக்கும் நிலைக்கு போகும் படியாய் குடியையும் கெடுத்து விட்டதே!

கதை எனினும் நிஜமாக இம்மாதிரி சம்பவங்களும் நடக்கத்தானே செய்கின்றது குமார்!?

பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் குமார். மேன்மேலும் பரிசில்கள், பாராட்டுகள் பெறுவீர்கள் குமார். ரோஜா  ரோஜா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை) Empty Re: தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை)

Post by நண்பன் Mon 16 Mar 2015 - 9:32

Nisha wrote:ஹைய்யோ!

விளையாட்டு வினையாகிப்போனதே! குடி மதியை மயக்கி உயிரை எடுக்கும் நிலைக்கு போகும் படியாய் குடியையும் கெடுத்து விட்டதே!

கதை எனினும் நிஜமாக இம்மாதிரி சம்பவங்களும் நடக்கத்தானே செய்கின்றது குமார்!?

பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் குமார். மேன்மேலும் பரிசில்கள், பாராட்டுகள் பெறுவீர்கள் குமார். ரோஜா  ரோஜா

நானும் பாராட்டுகிறேன்  மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை) Empty Re: தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை)

Post by Nisha Mon 16 Mar 2015 - 9:36

பரிசில் பாதியை எனக்கு தருவதா சொல்லிட்டார். நீங்க என் பின்னூட்டத்தை காப்பி செய்து  பால் விடாமல் ஆறவைச்சி கொடுத்ததால் உங்களுக்கு பரிசில்  ஒரு பர்செண்டும் தரகூடாது என சொல்லி விட்டேன்!

அதனால் தர மாட்டார்.நடனம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை) Empty Re: தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை)

Post by நண்பன் Mon 16 Mar 2015 - 9:37

Nisha wrote:பரிசில் பாதியை எனக்கு தருவதா சொல்லிட்டார். நீங்க என் பின்னூட்டத்தை காப்பி செய்து  பால் விடாமல் ஆறவைச்சி கொடுத்ததால் உங்களுக்கு பரிசில்  ஒரு பர்செண்டும் தரகூடாது என சொல்லி விட்டேன்!

அதனால் தர மாட்டார்.நடனம்

உங்களுக்குக் கிடைத்தால் அது எனக்கும் கிடைத்த மாதிரித்தான் அக்கா என்ஜாய்  ஐ ஜாலி ஐ ஜாலி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை) Empty Re: தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை)

Post by Nisha Mon 16 Mar 2015 - 9:42

அட! பட்டாசு புஸ்ஸூன்னு போச்சே!என்ன கொடுமை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை) Empty Re: தடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum