Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா
2 posters
Page 1 of 1
உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா
கவனம்
கீழே விழுந்து அடிபட்டாலோ, வெட்டுக்காயம் உண்டானாலோ ‘செப்டிக் ஆகிடாம இருக்க உடனே ஊசி போடுங்க’ என்கிற அட்வைஸை பல முறைக் கேட்டிருப்போம். செப்டிக் என்பதன் அர்த்தமே தெரியாமல் சகஜமாகப் புழங்குகிற இந்த அட்வைஸ் அலட்சியப்படுத்தக்கூடியது அல்ல.‘சிறு காயமானாலும் உடனடியாக கவனித்து தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால், நாளடைவில் சீழ் பிடித்து உயிரைப் பறிக்கும் எமனாக மாறிவிடக்கூடும்’ என்கிறார் பொது மருத்துவர் எஸ்.சி.சாண்டில்யா.
செப்டிசீமியா (Septicemia) எனப்படுகிற இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான காரணம், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றை விளக்குகிறார் அவர்.
‘‘நமது உடலில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் என இரண்டு உள்ளன. வெள்ளை அணுக்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) உருவாக்குகின்றன. இடித்துக் கொள்ளல், தவறி கீழே விழுதல் போன்ற காரணங்களால் உடம்பில் அடிபடுதல், கை மற்றும் கால்களில் ஏற்படும் சிராய்ப்புகள் நாளடைவில் பெரிய காயங்களாக மாறுகின்றன. இந்தக் காயங்களை கிருமிகள் தாக்கும்போது, அவற்றின் நச்சுத்தன்மையை எதிர்த்து, நமது உடம்புக்குக் கவசம்போல வெள்ளை அணுக்கள் செயல்படுகின்றன. காயங்களில் உண்டாகும் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளபோது, வெள்ளை அணுக்கள் Phagocytes என மாற்றம் பெறுகின்றன.
இந்த நேரத்தில், இவை தன்னைத்தானே தியாகம் செய்து, தன் வடிவத்தை இழந்து, வெள்ளை அணுக்களாக நம் உடலில் இருந்து வெளியேறுகின்றன. அவ்வாறு வெளியேற்றப்படும் வெள்ளை அணுக்கள்தான் சீழ் என்று அழைக்கப்படுகின்றன. செப்டிசீமியா என்பதற்கு சீழ்பிடித்தல் எனப்பொருள். உடலின் எந்தப் பகுதியில் அடிபட்டாலோ, கிருமிகளின் தாக்கத்தினாலோ, தோலில் உண்டாகும் விளைவுகளினாலோ சீழ்பிடித்து சிவப்பாக மாறுவதோடு, வீக்கம், வலி, காய்ச்சல் எல்லாம் ஒன்றாக சேர்வதும், உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைத் தடுத்து, கிருமிகளின் நச்சுத்தன்மை பல மடங்கு வீரியத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி ரத்தத்தில் கலப்பதும் செப்டிசீமியா என்று அழைக்கப்படுகிறது.
கைகள் மற்றும் கால்கள் செயல் இழப்பு, காயம் ஏற்பட்ட இடங்களில் வலி, வீக்கம் போன்றவை எல்லாம் இதன் அறிகுறிகளாக அமையும். குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வெளியேறும் இடங்களை அடிக்கடி சுத்தப்படுத்தாமல் வைத்தல், மலம் மற்றும் சிறுநீர் கழித்த பிறகும் நாப்கின்களை பல மணிநேரம் மாற்றாமல் இருத்தல், நாப்கின்களில் அழுக்கு சேரவிடுதல் போன்றவற்றால் குழந்தைகளுக்கு செப்டிக் ஏற்படும். பெரியவர்களுக்கு முதுகில் உண்டாகும் வியர்க்குரு, ரத்தக்கட்டி போன்றவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் செப்டிக்காக மாறிவிடும். பல நாட்களாக இருக்கும் வியர்க்குரு, ரத்தக்கட்டி போன்றவை சீழ் பிடிக்க தொடங்குவதற்கு முன்பே, அதற்கான நச்சுத்தன்மை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பே ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், சர்க்கரை நோயாளிகள், காசநோய், டைபாய்டு நோயால் அவதிப்படுபவர்கள், பல நாட்கள் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள், தொழுநோயாளிகள் ஆகியோரின் உடலில் ஏற்படும் சிறு காயம் மற்றும் சிராய்ப்புகள் செப்டிக்காக மாறும் வாய்ப்புகள் உள்ளன.சர்க்கரை நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமான சூடு, அதிகமான குளிர்ச்சி தெரியாது. இவர்களுக்குப் பாதத்தின் அடிப்பகுதியில் உணர்ச்சி குறைவாக இருக்கும். நீண்ட நேரம் வெயிலில் நடந்து வரும்போதோ, முள் குத்தினாலோ, அடிபட்டாலோ இவர்களுக்கு எதுவும் தெரியாது.
வீட்டுக்கு வந்த பிறகுதான், காலின் அடிப்பாகம் பாளம்பாளமாக வெடித்து இருப்பதும், அடிபட்டு இருப்பதும், முள் குத்தி இருப்பதும் தெரிய வரும். இதை உடனடியாக கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால், சீழ்பிடிக்கும் ஆபத்து உள்ளது. இதைப் போன்று, தலையில் முடி அதிகமாக இருத்தல், வியர்வை அதிகமாக சுரக்கும் உடற்பகுதிகள், நமது உடலில் வெளிச்சம் அதிகம்படுவதற்கு வாய்ப்பில்லாத இடங்கள் போன்ற உடலின் பகுதிகளில் சொறி, சிரங்கு அதிகமாகி, செப்டிக் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையக் குறைய, சில நாட்களிலேயே கிருமிகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் பெருகும்.
இதன் காரணமாக, உடலின் முக்கிய உறுப்புகளான கிட்னி, நுரையீரல், கல்லீரல், மூளை ஆகிய உறுப்புகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி, உயிரிழப்பு கூட ஏற்படலாம். எலும்பிலும் சீழ் பிடித்தல் (Osteomyelitis) ஏற்படும். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் 4 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை இருப்பது இயல்பானது. சீழ் பிடித்தல் காரணமாக, நமது உடலில், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் வரை பெருகும். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை பெருக்கத்தை அடிப்படையாக வைத்து, மருத்துவர்கள் செப்டிசீமியா தாக்கத்தை தெரிந்து கொள்வார்கள்.
கல்ச்சர் டெஸ்ட் வழியாக கிருமியைப் பரிசோதித்து, அதன் இனம், தன்மையைத் தெரிந்து கொள்வார்கள். பின்னர், கல்ச்சர் மற்றும் சென்சிடிவிட்டி என்ன என்பதை கண்டுபிடித்து, அதற்குரிய ஆன்டிபயாடிக்கை மாத்திரை மூலமாகவோ, ஊசி மூலமாகவோ ரத்தத்தில் செலுத்தி, சீழ் பிடித்தலை உண்டாக்கும் கிருமிகளை அறவே ஒழித்து, செப்டிசீமியாவைக் குணப்படுத்தலாம்”.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3442
கீழே விழுந்து அடிபட்டாலோ, வெட்டுக்காயம் உண்டானாலோ ‘செப்டிக் ஆகிடாம இருக்க உடனே ஊசி போடுங்க’ என்கிற அட்வைஸை பல முறைக் கேட்டிருப்போம். செப்டிக் என்பதன் அர்த்தமே தெரியாமல் சகஜமாகப் புழங்குகிற இந்த அட்வைஸ் அலட்சியப்படுத்தக்கூடியது அல்ல.‘சிறு காயமானாலும் உடனடியாக கவனித்து தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால், நாளடைவில் சீழ் பிடித்து உயிரைப் பறிக்கும் எமனாக மாறிவிடக்கூடும்’ என்கிறார் பொது மருத்துவர் எஸ்.சி.சாண்டில்யா.
செப்டிசீமியா (Septicemia) எனப்படுகிற இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான காரணம், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றை விளக்குகிறார் அவர்.
‘‘நமது உடலில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் என இரண்டு உள்ளன. வெள்ளை அணுக்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) உருவாக்குகின்றன. இடித்துக் கொள்ளல், தவறி கீழே விழுதல் போன்ற காரணங்களால் உடம்பில் அடிபடுதல், கை மற்றும் கால்களில் ஏற்படும் சிராய்ப்புகள் நாளடைவில் பெரிய காயங்களாக மாறுகின்றன. இந்தக் காயங்களை கிருமிகள் தாக்கும்போது, அவற்றின் நச்சுத்தன்மையை எதிர்த்து, நமது உடம்புக்குக் கவசம்போல வெள்ளை அணுக்கள் செயல்படுகின்றன. காயங்களில் உண்டாகும் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளபோது, வெள்ளை அணுக்கள் Phagocytes என மாற்றம் பெறுகின்றன.
இந்த நேரத்தில், இவை தன்னைத்தானே தியாகம் செய்து, தன் வடிவத்தை இழந்து, வெள்ளை அணுக்களாக நம் உடலில் இருந்து வெளியேறுகின்றன. அவ்வாறு வெளியேற்றப்படும் வெள்ளை அணுக்கள்தான் சீழ் என்று அழைக்கப்படுகின்றன. செப்டிசீமியா என்பதற்கு சீழ்பிடித்தல் எனப்பொருள். உடலின் எந்தப் பகுதியில் அடிபட்டாலோ, கிருமிகளின் தாக்கத்தினாலோ, தோலில் உண்டாகும் விளைவுகளினாலோ சீழ்பிடித்து சிவப்பாக மாறுவதோடு, வீக்கம், வலி, காய்ச்சல் எல்லாம் ஒன்றாக சேர்வதும், உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைத் தடுத்து, கிருமிகளின் நச்சுத்தன்மை பல மடங்கு வீரியத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி ரத்தத்தில் கலப்பதும் செப்டிசீமியா என்று அழைக்கப்படுகிறது.
கைகள் மற்றும் கால்கள் செயல் இழப்பு, காயம் ஏற்பட்ட இடங்களில் வலி, வீக்கம் போன்றவை எல்லாம் இதன் அறிகுறிகளாக அமையும். குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வெளியேறும் இடங்களை அடிக்கடி சுத்தப்படுத்தாமல் வைத்தல், மலம் மற்றும் சிறுநீர் கழித்த பிறகும் நாப்கின்களை பல மணிநேரம் மாற்றாமல் இருத்தல், நாப்கின்களில் அழுக்கு சேரவிடுதல் போன்றவற்றால் குழந்தைகளுக்கு செப்டிக் ஏற்படும். பெரியவர்களுக்கு முதுகில் உண்டாகும் வியர்க்குரு, ரத்தக்கட்டி போன்றவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் செப்டிக்காக மாறிவிடும். பல நாட்களாக இருக்கும் வியர்க்குரு, ரத்தக்கட்டி போன்றவை சீழ் பிடிக்க தொடங்குவதற்கு முன்பே, அதற்கான நச்சுத்தன்மை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பே ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், சர்க்கரை நோயாளிகள், காசநோய், டைபாய்டு நோயால் அவதிப்படுபவர்கள், பல நாட்கள் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள், தொழுநோயாளிகள் ஆகியோரின் உடலில் ஏற்படும் சிறு காயம் மற்றும் சிராய்ப்புகள் செப்டிக்காக மாறும் வாய்ப்புகள் உள்ளன.சர்க்கரை நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமான சூடு, அதிகமான குளிர்ச்சி தெரியாது. இவர்களுக்குப் பாதத்தின் அடிப்பகுதியில் உணர்ச்சி குறைவாக இருக்கும். நீண்ட நேரம் வெயிலில் நடந்து வரும்போதோ, முள் குத்தினாலோ, அடிபட்டாலோ இவர்களுக்கு எதுவும் தெரியாது.
வீட்டுக்கு வந்த பிறகுதான், காலின் அடிப்பாகம் பாளம்பாளமாக வெடித்து இருப்பதும், அடிபட்டு இருப்பதும், முள் குத்தி இருப்பதும் தெரிய வரும். இதை உடனடியாக கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால், சீழ்பிடிக்கும் ஆபத்து உள்ளது. இதைப் போன்று, தலையில் முடி அதிகமாக இருத்தல், வியர்வை அதிகமாக சுரக்கும் உடற்பகுதிகள், நமது உடலில் வெளிச்சம் அதிகம்படுவதற்கு வாய்ப்பில்லாத இடங்கள் போன்ற உடலின் பகுதிகளில் சொறி, சிரங்கு அதிகமாகி, செப்டிக் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையக் குறைய, சில நாட்களிலேயே கிருமிகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் பெருகும்.
இதன் காரணமாக, உடலின் முக்கிய உறுப்புகளான கிட்னி, நுரையீரல், கல்லீரல், மூளை ஆகிய உறுப்புகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி, உயிரிழப்பு கூட ஏற்படலாம். எலும்பிலும் சீழ் பிடித்தல் (Osteomyelitis) ஏற்படும். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் 4 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை இருப்பது இயல்பானது. சீழ் பிடித்தல் காரணமாக, நமது உடலில், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் வரை பெருகும். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை பெருக்கத்தை அடிப்படையாக வைத்து, மருத்துவர்கள் செப்டிசீமியா தாக்கத்தை தெரிந்து கொள்வார்கள்.
கல்ச்சர் டெஸ்ட் வழியாக கிருமியைப் பரிசோதித்து, அதன் இனம், தன்மையைத் தெரிந்து கொள்வார்கள். பின்னர், கல்ச்சர் மற்றும் சென்சிடிவிட்டி என்ன என்பதை கண்டுபிடித்து, அதற்குரிய ஆன்டிபயாடிக்கை மாத்திரை மூலமாகவோ, ஊசி மூலமாகவோ ரத்தத்தில் செலுத்தி, சீழ் பிடித்தலை உண்டாக்கும் கிருமிகளை அறவே ஒழித்து, செப்டிசீமியாவைக் குணப்படுத்தலாம்”.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3442
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா
nalla thagaval nanri muhaideen
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» உயிரைப் பறிக்கும் உப்பு!
» உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்!
» உண்மை உயிரைப் பறித்தது - சுகிர்தராஜனின் நினைவுக் குறிப்பு.
» 9 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்தது மின்சாரம்! மட்டக்களப்பில் சம்பவம்!!
» சவூதி அரேபியாவில் உயிரைப் பணயம் வைத்து பெற்றோரைக் காப்பாற்றிய இளைஞன்!
» உயிரைப் பறிக்கும் “ரேபீஸ்” பயங்கரம்!
» உண்மை உயிரைப் பறித்தது - சுகிர்தராஜனின் நினைவுக் குறிப்பு.
» 9 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்தது மின்சாரம்! மட்டக்களப்பில் சம்பவம்!!
» சவூதி அரேபியாவில் உயிரைப் பணயம் வைத்து பெற்றோரைக் காப்பாற்றிய இளைஞன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|