Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
முன்னோர் வழங்கிய மு்லிகை: இஞ்சி
3 posters
Page 1 of 1
முன்னோர் வழங்கிய மு்லிகை: இஞ்சி
இஞ்சியை தேவையான அளவு எடுத்து மேல் தோல் சீவி அரைத்து வைத்து கொள்ளவேண்டும். சர்க்கரையை தண்ணீர்விட்டு காய்ச்சி கொதி வந்ததும் அரைத்த இஞ்சிவிழுதை போட்டு பாகு பதம் வந்ததும் இறக்கி வைத்து தட்டில் ஊற்றி ஆறிய பிறகு துண்டு போட்டு வைத்து கொள்ள வேண்டும். இதுவே இஞ்சி மொரப்பா எனப்படும். செரிமானக்கோளாறு ஏற்படும் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அளவறிந்து அவ்வப்போது கொடுத்து வந்தால் சிறுவர்கள் நன்கு சாப்பிடுவார்கள்.
உயிர்வாழ்வதற்கு உணவை தேடிய பிறகு அதனையே மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தியவர்கள் நமது முன்னோர்கள். அந்த வகையில் இஞ்சியும் மருந்தாகும் உணவாக விளங்குகிறது. இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல் எனப்படும். உடலில் ஏற்படும் கெட்ட நீரை இழுத்து வெளியேற்றும் குணம் கொண்டதால் இஞ்சி என்று அழைக்கப்படுகிறது. பொங்கல் விழாவின் போது வைக்கப்படும் வெண்பொங்கல் பொங்கும் பானையில் இஞ்சி கொத்தை கட்டி அதன் பிறகே பொங்கல் வைப்பார்கள்.
இஞ்சிக்கு எரிப்பு கொண்டாட்டம்’ என்பது வழக்கு. இஞ்சி உண்பதால் செரிமானம் ஏற்பட்டு பசியின்மை, வயிற்று பெருமல், தொண்டைகம்மல் முதலியவற்றை போக்கும். பித்த வாயுவை கண்டிக்கும். இதனால்தான் அசைவை உணவு தயாரிக்கும் போது தமிழகத்தில் கண்டிப்பாக இஞ்சியை பயன்படுத்துவார்கள்.நாள்தோறும் இஞ்சி துவையல் சாப்பிட்டுவந்தால் வாத பித்த கப நோய்களை போக்கும். இடுப்பு முழங்கால் வலிகளை நிவர்த்தி செய்யும்.
இஞ்சிசாற்றுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 4 முறை சாப்பிட்டு வர இருமல் குறையும். தலை வலியுள்ளவர்கள் இஞ்சியை தண்ணீர்விட்டு உரசி தலையில் பற்றுபோட தலை வலி நீங்கும். முற்றிய இஞ்சியின் மேல் தோலை சீவி சிறு வில்லைகளாக நறுக்கி கொண்டு அதில் 30 கிராம் எடுத்து இரண்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் விட்டு அதன் மீது இந்துப்பை 5 கிராம் அளவில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். காலையில் அந்த துண்டுகளை எடுத்து மெல்லிய துணியால் மூடி வெயிலில் காய வைக்கவேண்டும் பிறகு மீண்டும் அந்த பழச்சாற்றில் போட்டு விட வேண்டும்.
நீர் முழுவதும் சுண்டி சுக்குபோல் காட்சி அளிக்கும். இதை இஞ்சி சொரசம் என்பார்கள். இதை கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து கொண்டு காலை மாலை 5 கிராம் அளவில் தின்றுவந்தால் பித்தம், புளியாப்பம், தலை கிறுகிறுப்பு, வாயுகோளாறு, செரிமானக்கோளாறு முதலியவை நீங்கும். நாள்தோறும் இஞ்சி துவையல் சாப்பிட்டுவந்தால் வாத பித்த கப நோய்களை போக்கும். இடுப்பு முழங்கால் வலிகளை நிவர்த்தி செய்யும்.
இஞ்சிசாற்றுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 4 முறை சாப்பிட்டு வர இருமல் குறையும். தலை வலியுள்ளவர்கள் இஞ்சியை தண்ணீர்விட்டு உரசி தலையில் பற்றுபோட தலை வலி நீங்கும். இஞ்சிச்சாறு மாதுளம்பூச்சாறு தேன் ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து வேளைக்கு 35மிலி வீதம் குடித்துவந்தால் ஈளை, இருமல் சாந்தியாகும். இஞ்சி, திரிகடுகு, ஏலம், அதிமதுரம், சீரகம் சந்தனத்தூள் வகைக்கு 4 கிராம் அளவில் சிதைத்து 1400 மிலி தண்ணீரில் போட்டு காய்ச்சி 130 மிலி அளவில் நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 வேளை சாப்பிட பித்தம் சாந்தியாகும்.
இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு ஒரு நாள் சென்று மறுநாள் அதில் ஒரு துண்டு வீதம் 48 நாட்கள் சாப்பிட ,இதயத்தில் உள்ள அடைப்புகள் நீங்கி நலம் பெறலாம். இஞ்சிசாறு, வெங்காயச்சாறு, சமஅளவில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து 35 மிலி அளவில் காலை மாலை குடித்துவர இரைப்பு இருமல் நீங்கும்.
இஞ்சி, சிவவதை, சீந்தில், நிலவாகை, கொடுவேலி, கழஞ்சிக்கொடி, முடக்கற்றான், முக்கடுகு, பூண்டு வகைக்கு 35 கிராம் எடுத்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் அரைபடியிட்டு கலக்கி காய்ச்சி வடிகட்டி அதில் வேளைக்கு உச்சிக்கரண்டி வீதம் குடித்தால் வளிநோய், குன்மம் குணமாகும்.மாறுபட்ட தண்ணீரை குடிப்பதாலும் தொற்று ஏற்படுவதால் சிலருக்கு தொண்டையில் புண் ஏற்படும்.
அவர்கள் இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீருடன் விழுங்கினால் தொண்டைப்புண், குரல்கம்மல் நீங்கும்.நீரிழிவு நோய் உள்ளவர்கள் இஞ்சிசாறும் கற்கண்டும் சேர்த்து குடித்து வந்தால் கட்டுப்படும்.இஞ்சியை தோல் நீக்கி தேனில் ஊறவைத்து நாள்தோறும் கற்ப முறைப்படி உட்கொண்டு வந்தால் நரை திரை நீங்கி நீண்டநாள் வாழலாம். இஞ்சி சொரசம்இஞ்சி, சிவவதை, சீந்தில், நிலவாகை, கொடுவேலி, கழஞ்சிக்கொடி, முடக்கற்றான், முக்கடுகு, பூண்டு வகைக்கு 35 கிராம் எடுத்து அதனுடன்
சிற்றாமணக்கு எண்ணெய் அரைபடியிட்டு கலக்கி காய்ச்சி வடிகட்டி அதில் வேளைக்கு உச்சிக்கரண்டி வீதம் குடித்தால் வளிநோய், குன்மம் குணமாகும்.
மாறுபட்ட தண்ணீரை குடிப்பதாலும் தொற்று ஏற்படுவதால் சிலருக்கு தொண்டையில் புண் ஏற்படும். அவர்கள் இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீருடன் விழுங்கினால் தொண்டைப்புண், குரல்கம்மல் நீங்கும்.நீரிழிவு நோய் உள்ளவர்கள் இஞ்சிசாறும் கற்கண்டும் சேர்த்து குடித்து வந்தால் கட்டுப்படும்.இஞ்சியை தோல் நீக்கி தேனில் ஊறவைத்து நாள்தோறும் கற்ப முறைப்படி உட்கொண்டு வந்தால் நரை திரை நீங்கி நீண்டநாள் வாழலாம்.
கற்ப முறையில் உண்ணும் போது நெற்பொறி மாவுடன் பசுவின் நெய் சேர்த்து உணவுக்கு பதிலாக சாப்பிட வேண்டும்.தேனில் இஞ்சியை கீற்றுகீற்றாக போட்டு நன்றாக ஊறியபிறகு மனத்திடத்துடன் கற்ப முறையில் உண்டுவந்தால் நரை திரை மூப்பு நீங்கி வாழலாம்.இஞ்சிசாறு 10 பங்கு பால் 1 பங்குடன் கற்கண்டு சேர்த்து மணப்பாகு செய்து தூங்குவதற்கு முன்பாக 2 கிராம் முதல் 8 கிராம் வரை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் சேர்த்து குடித்து வந்தால் பித்த மயக்கம் நீங்கும்.
இதைத்தான் இஞ்சிக் கிழங்குக் கிருமல் ஐயம் ஒக்காளம் வஞ்சிக்குஞ் சன்னீசுரம் வன்பேதி- விஞ்சுகின்ற சூலையறும் வாதம்போற் தூண்டாத தீபனமாம் வேலையுறுங் கண்ணாம் விளம்பு- என்கின்றார் அகத்தியர். அசைவ உணவுக்கும் ரசத்திற்கும் போடும் ஒரு உணவு என நினைத்து இஞ்சியை சுவைக்காதவர்கள் இனியாவது அதன் பெருமையை உணர்ந்து முன்னோர்கள் காட்டிய வழியில் பயன்படுத்தி வாழ்க்கையை நலமாக்கி வாழ்வோம்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3482
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» முன்னோர் வழங்கிய மூலிகை: கருவேல்
» முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை
» முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு
» முன்னோர் வழங்கிய மூலிகை இண்டு
» ஆசிரியர் வழங்கிய ஆசி!
» முன்னோர் வழங்கிய மூலிகை: அரத்தை
» முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு
» முன்னோர் வழங்கிய மூலிகை இண்டு
» ஆசிரியர் வழங்கிய ஆசி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|