சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Today at 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Today at 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

மின்சார முதலுதவி Khan11

மின்சார முதலுதவி

Go down

மின்சார முதலுதவி Empty மின்சார முதலுதவி

Post by ahmad78 Tue 16 Jun 2015 - 14:14

முதல் உதவி
மின்சார முதலுதவி Ht3622
‘மின்சாரம் தாக்கி பலி’ என்பது நாளிதழ்களில் தவறாமல் இடம்பெறுகிற செய்தியாகி விட்டதைப் பார்க்கிறோம். வீடு, தொழிற்சாலை, சாலை எனப் பல இடங்களிலும் எதிர்பாராத நேரத்து மின்சார விபத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மின்சார தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியாக எவற்றை செய்ய வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? விளக்குகிறார் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் சத்யா காளியண்ணன்.

மின் தாக்குதலுக்கு உள்ளானவரை காப்பாற்ற போகிறவர்கள், முதலில் அவரை எந்தக் காரணம் கொண்டும் நேரடியாகத் தொடக்கூடாது.  மெயின் ஸ்வி ட்சை ஆஃப் பண்ணி மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். வோல்டேஜ் அதிகமாக இருக்கும்போது, பிளக் பாயின்ட், ஸ்விட்ச், எலெக்ட்ரிகல் சர்க்யூட் போன்ற மின்சார உபகரணங்களில் இருந்து அவரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு கண்டிப்பாக மரத்தால் செய்யப்பட்ட பொருட்களைத் தான் பயன்படுத்த வேண்டும். 

தாக்குதலுக்கு ஆளானவரைச் சுற்றி தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயர மான இடத்தில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழும்போது, கழுத்துப் பகுதியில் அடிபட நிச்சயம் வாய்ப்பு உள்ளது. எனவே, உயரமான இடங்களில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவரின் கழுத்தை அசைக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

அவருக்கு சுயநினைவு உள்ளதா? எந்தவித சிரமமும் இல்லாமல் சுவாசிக்க முடிகிறதா? இதையெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் உடலில் ஈரப்பதம் இருந்தாலும், பாதுகாப்பான காலணிகள் அணியாமல் இருந்தாலும் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் குறைந்த அளவு மின்சாரத்தாலும் ஆபத்து ஏற்படும்.  மின்சாரம் தாக்கி சுயநினைவு இழந்தவர்கள், சுவாசிக்க சிரமப்படுபவர்கள், நெஞ்சுவலி, படபடப்பு, தீக்காயங்களால் அவதிப்படுபவர்கள், மின்சார தாக்குதலுக்கு ஆளான குழந்தைகள், தாய்மை அடைந்த பெண்கள் ஆகியோரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

பொது இடங்களில் யாராவது மின்சாரம் தாக்கப்பட்டு கிடந்தால், உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.  அவர்களுக்கு மூச்சு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு சீராக இல்லையென்றால், முதலுதவி செய்ய தெரிந்தவர்கள் நெஞ்சை அழுத்திவிடுதல் என்ற Cardiopulmonary resuscitation என்ற C.P.R. முதலுதவி சிகிச்சையை செய்வது அவசியம். மயக்கமாக இருப்பவர்களுக்கு வாய் வழியாக சாப்பிட எதுவும் கொடுக்கக்கூடாது.அவ்வாறு கொடுக்கப்படும் உணவுப் பொருளால் சுவாசக் குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டு  நிலைமை இன்னும் மோசமாகும். 

மின்சார தாக்குதல் காரணமாக உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை துணியால் சுற்றக்கூடாது. தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைப்பதோடு, குளிர்ந்த நீரையும் மெதுவாக ஊற்றலாம்.  கரன்ட் ஷாக்கால் உள்ளுறுப்புகள் பாதிப்பு அடைய வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, இதயம், மூளை, சதைப் பகுதிகள் பாதிப்பு அடையும். கிட்னியும் பாதிக்கப்படலாம்.மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களின் முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. வலிப்பு மாதிரி அவர்களுக்கு ஏற்பட்டால், இரும்புப் பொருள் எதுவும் கொடுக்கக் கூடாது. 

அவர்களை இடதுபுறமாக படுக்க வைப்பது நல்லது. கரன்ட் ஷாக் காரணமாக கை, கால்களை உதறும்போது எலும்புகள் உடைய வாய்ப்பு உள்ளது. எனவே, கை, கால்கள் இயல்புக்கு மாறான நிலையில் இருந்தால் அவை அசையாமல் இருக்கும்படி நீளமான பொருளுடன் சேர்த்து கட்டி மருத்துவமனைக்கு கொண்டு வருவது நல்லது. முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு வந்த பிறகும் சுவாசம், இதயத்துடிப்பு சீராக இல்லையென்றால், C.P.R. முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து, உரிய சிகிச்சைகள் கொடுக்க வேண்டும். 

மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இதயத்துடிப்பில் (ECG) மாற்றம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். அடிப்படையான ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். மின்சார தாக்குதலில் சதை அதிக பாதிப்பு அடைந்து உள்ளதா என்பதை சிறுநீர் பரிசோதனை மூலமாகவே அறிய முடியும். முதலுதவி எனும் பெயரில் தவறாக எதுவும் செய்வதைவிட, நேரத்தை வீணாக்காமல் உடனே மருத்துவமனைக்கு கொண்டு வருவது நல்லது.’’


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3632


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum