சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Khan11

அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக

Go down

அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Empty அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக

Post by rammalar Sun 1 Jan 2017 - 8:20

அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக 7EsBzIgQly7mRzwSsNOo+meet1
-
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியைச் சேர்ந்த 43 எம்எல்ஏக்களில் 
32 பேர், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பாஜகவில் 
இணைந்தனர். இதையடுத்து, அங்கு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
-
முன்னதாக, முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் சோவ்னா மிய்ன் 
மற்றும் 5 எம்எல்ஏ-க்கள் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து 
வியாழக்கிழமை இரவு நீக்கப்பட்டனர். இதையடுத்து, மாநில அரசியலில்
பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 4 எம்எல்ஏக்கள் 
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

இவர்கள் அனைவரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கட்சித் 
தலைவர் காஃபா பென்ஜியா தெரிவித்தார்.

பாஜகவுக்கு தாவல்: இதனிடையே, பெமா காண்டு தலைமையில் 
32 எம்எல்ஏக்கள் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து விலகி 
பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனர். மொத்தம் 60 உறுப்பினர்களைக் 
கொண்ட அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையில் பாஜக உறுப்பினர்களின் 
எண்ணிக்கை 11-ல் இருந்து 44 ஆக அதிகரித்தது.

முதல்வர் பெமா காண்டு தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவைத் 
தலைவர் டென்சிங் நூர்புவைச் சந்தித்தார். அவர், பெமா காண்டு 
உள்பட 33 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததை ஏற்றுக் கொண்டார். 
இதையடுத்து, பாஜக அங்கு ஆட்சி அமைத்தது. பெமா காண்டு 
முதல்வராகத் தொடர்கிறார்.

முன்னதாக, அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று 
வந்தது. கடந்த செப்டம்பர் மாதம், காங்கிரஸில் இருந்து 44 எம்எல்ஏக்களில் 
43 பேர் முதல்வர் பெமா காண்டு தலைமையில் தனியாகப் பிரிந்து 
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தனர். 

இதையடுத்து, மாநிலத்தில் அக்கட்சி ஆட்சி அமைத்தது. 
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி, பாஜக கூட்டணியில் இருந்தது. 
இந்நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் 33 பேர் பாஜகவுக்கு தாவி, 
பாஜக தலைமையில் ஆட்சியை அமைத்துள்ளனர்.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் அருணாசலப் பிரதேசத்தில் 
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு அதனால் பெரும் சர்ச்சை 
எழுந்தது குறிப்பிட்டத்தக்கது.

மக்கள் நலன் கருதி...: பாஜக தலைமையில் ஆட்சி அமைத்தபிறகு முதல்வர் 
பெமா காண்டு கூறியதாவது:
-
இறுதியாக அருணாசலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி மலர்ந்துள்ளது. 
புத்தாண்டு முதல் மாநிலத்தில் சிறப்பான வளர்ச்சியை மக்கள் காணலாம்.
தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக மக்கள் நலன் கருதி பாஜகவில் 
நாங்கள் இணைந்துள்ளோம். 
-
மாநிலத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் வளர்ச்சி 
ஏற்படவில்லை. இதையடுத்து நாங்கள் அருணாசலப் பிரதேச மக்கள் 
கட்சியில் இணைந்தோம். ஆனால், அங்கும் கட்சித் தலைமை எம்எல்ஏக்களை 
ஜனநாயகமற்ற முறையில் நடத்தியது. 
-
கட்சியில் இருந்து எங்களை வேண்டுமென்றே நீக்கினர். எனவே, ஒட்டு
மொத்தமாக மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், மக்கள் 
நலனை மனதில் வைத்தும் பாஜகவில் இணைந்துள்ளோம் என்றார் அவர்.
-
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அருணாசல பிரதேச மக்கள் கட்சி 
எம்எல்ஏக்கள் 33 பேர் பாஜகவுக்குத் தாவியுள்ளதால், இக்கூட்டணி 
தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக வடகிழக்கு 
ஜனநாயக முன்னணியின் (பாஜக கூட்டணி) ஒருங்கிணைப்பாளர் 
ஹேமந்த பிஸ்வாஸ் முடிவெடுப்பார் என்று பாஜக வட்டாரங்கள் 
தெரிவித்துள்ளன.

பாஜக மீது குற்றச்சாட்டு: 
இதனிடையே, தங்கள் கட்சி எம்எல்ஏக்களைக் கடத்திச் சென்று பாஜக ஆட்சி 
அமைத்துள்ளதாக அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
-
இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் காஃபா பென்ஜியா கூறியதாவது:
-
மாநிலத்தில் மோசமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சி 
எம்எல்ஏக்களை கடத்திச் சென்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது. 
வடகிழக்கு ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஹேமந்த பிஸ்வாஸ், 
இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறார். 
பாஜக கூட்டணியில் இனி மேலும் நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து விரைவில் 
ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார் அவர்.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக Empty Re: அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக

Post by rammalar Sun 1 Jan 2017 - 8:20

6 மாதங்களில் 3 முறை ஆட்சி மாற்றம், ஒரே முதல்வர்
-
அருணாசலப் பிரதேசத்தில் கடந்த 6 மாதங்களில் காங்கிரஸ், 
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி, பாஜக ஆகிய 3 கட்சிகளிடம் ஆட்சி மாறியுள்ளது. 
ஆனால், மூன்று ஆட்சியிலும் பெமா காண்டு முதல்வராகத் தொடர்கிறார்.
-
38 வயதாகும் பெமா காண்டு, அருணாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் 
டோர்ஜி காண்டுவின் மகனாவார். டோர்ஜி காண்டு கடந்த 2011-ஆம் ஆண்டு 
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
-
அதன் பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் நபம் துகி முதல்வரானார்.
அமைச்சராக இருந்த கலிகோ புல் காங்கிரஸ் கட்சியை உடைத்தார்.
இதனால், அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவர் 
ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில்
இணைந்து கலிகோ புல் சுமார் 6 மாதங்கள் முதல்வராக இருந்தார்.
-
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட 
தீர்ப்புப்படி அங்கு காங்கிரஸ் மீண்டும் அமல்படுத்தப்பட்டு, நபம் துகி மீண்டும் 
முதல்வரானார். பெமா காண்டு, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக 
நியமிக்கப்பட்டார். இதனிடையே கலிகோ புல் தற்கொலை செய்து கொண்டார்.
இதன் பிறகு கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் சார்பில் நபம் துகிக்கு பதிலாக 
பெமா காண்டு முதல்வராக்கப்பட்டார்.
-
ஆனால், செப்டம்பர் மாதம் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த 44 எம்எல்ஏக்களுடன் 
அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்தார். 
அப்போது அவர்தான் முதல்வராக இருந்தார். இப்போது அங்கிருந்து பாஜகவுக்கு 
தாவி மீண்டும் முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
-
----------------------------------------------------
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25122
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
»  திபெத்தை சீனா கைப்பற்றியது; தலாய் லாமா, இந்தியாவில் அடைக்கலம்
» ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேசம் முயற்சி: கோத்தபாய
» நியுசிலாந்துக்கு எதிரான 20க்கு 20 தொடர்;: தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து
» மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது.....
» கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum